திங்கள், 14 அக்டோபர், 2019

காஞ்சிபுரம்- பஞ்சலோக பல்லிகளின் வரலாறு

பஞ்சலோக பல்லிகளின் வரலாறு..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் தேவராஜபெருமாளின் பின்புறம் பஞ்சலோக பல்லிகளாக தங்க பல்லி வெள்ளி பல்லிகளை பக்தர்கள் தொட்டு வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையிலே சிறப்பை பெறலாம்.
  
அறியாது‌  பிழை செய்தாலும் சாபத்திற்கு ஆளாக வேண்டும் என்று விதி இருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது ..விதியை மாற்றும் சக்தி உண்டா !என கேட்பின் தெய்வத்தின் நம் மீது நம்பிக்கை வைத்து- பாவத்திற்கு பரிகாரம் தேடினால் நிச்சயமாக முடியும் .அதே விதியை மாற்ற யாராலும் முடியாது என்று விட்டுவிட்டால்- துன்பத்தோடு உழன்று காலத்தை கழிப்பது தவிர வேறு வழி கிடையாது ..ஆனால் அந்த விதி பயனை மாற்றும் தீர்வை கண்டுபிடித்துவிட்டால் -இன்பத்தோடு உழன்று காலத்தை கழித்து இனிதான வாழ்க்கை வாழ்ந்து -வாழ்ந்த பயனை அடையலாம் அல்லவா! ‌


நம் முன்னோர்கள் செய்த பாவம் நம்மையே சாரும் ..அறியாது பிழை செய்தாலும் அதற்கான பலனையும் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும் ..ஆனால் தெய்வத்தின் அருளால் பாவ விமோசனம் பெற்ற தெய்வீக பதவியை அடைந்த பஞ்சலோகம் பல்லிகளின் வரலாறு அறிவோமே..


சிருங்கி முனிவர்களின் இரண்டு பிள்ளைகளும் -கௌதம முனிவரின் சிஷ்யர்களாக தத்தம் பணிகளை சிரத்தையோடு -தம் கடமையை இனிதே செய்துவர -நடந்த ஒரு சிறு தவறினால் விபரீதம் நடந்ததுவே. ஒருநாள் பூஜைக்கு கொண்டுவந்த தீர்த்தத்திலே இறந்த பல்லிகள் கிடக்கக் கண்டு -கோபமுற்ற முனிவரோ கொடுத்தாரே சாபம் ஒன்று ..அடுத்த கணம் பல்லிகளாக உருமாறிய சிஷ்யர்களும்" அறியாது தவறு இழைத்தாலும் குற்றம் குற்றமே.. இருந்தாலும் பாவத்திற்கு விமோசனம் கொடும் ஐயா" என இருவரும் வேண்ட -முனிவரும் மனமிரங்கி "காஞ்சிபுரம் செல்க வரதராஜ பெருமாள் கோவிலில் மோட்சத்திற்கு வழி கிடைக்கும் "என்று கூற ..

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app  டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇



பல்லிகளும் ஊர்ந்தவாறே காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளின் பாதம் தொட்டு பாப விமோச்சனம் தருமாறு வேண்டினரே.. மூலவர் பெருமாளும் காட்சி தந்து கிரக தோஷத்தினால் சாபம் பெற்ற சிஷ்யர்களுக்கு மோட்சத்தை அருள்கின்றார் ."உங்களுடைய சரீரம் எமக்கு பின்புறம் பஞ்சலோகத்தில் இருக்கப் பெற்று -என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் மிகுந்த பக்தியோடு உங்களையும் தொட்டு வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கையிலே சிறப்பை அடைவார்கள் "எனக் கூற -அதன்படி இன்றும் பஞ்சலோகத்திலே சிஷ்யர்கள் இருவரும் தங்க வெள்ளி பல்லிகளாக காட்சி தருகின்றனர். பெருமாளை தரிசித்து தங்க -வெள்ளி பல்லிகளையும் தொட்டு வணங்கி விதிப்பயனால் ஏற்படும் கிரக தோஷங்களை தெய்வீக அருளால் மாற்றி வாழ்க்கையில் சிறப்பை காணலாம்.

தோஷங்கள் கண்திருஷ்டி மனக்குழப்பம் அனைத்தும் விலகி வாழ்வினில் மகிழ்ச்சி நிலவ கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇



மிகவும் புகழ்பெற்ற  காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள தெய்வீகமான பஞ்சலோக பல்லிகளை தொட்டு வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள் ..
சிறப்பு -1 ‌ஜாதகத்தில் உள்ள கிரக தோஷம் அனைத்தும் நீங்கும் .
சிறப்பு- 2 ‌துஷ்ட சக்திகள் விலகி புதிய தெம்பு கிடைக்கும் .
சிறப்பு -3  நம்முடைய உடல் -மனம் உயிர் அனைத்திற்கும் பாதுகாப்பு கவசம் அளிக்கும் .
சிறப்பு- 4 ‌ தொட்டு வணங்கும் போது தெய்வீக மின் அதிர்வலைகளானது நல்ல சிந்தனையை தூண்ட செய்யும்.
சிறப்பு- 5  ‌தெய்வத்தின் அனுகிரகம் கிட்டும்.
என்பதை அறிந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு சென்று -மூலவர் தேவராஜ பெருமாளை தரிசித்து பின்புறம் உள்ள பஞ்சலோகத்தினால் ஆன தங்க பல்லியையும் வெள்ளி பல்லியையும் வணங்கி கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்

Copy rights at balakshitha




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக