Maha Shivaratri viratham murai
மகா சிவராத்திரி என்றால் என்ன?
மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மஹாசிவராத்திரி ஆகும். மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைப்போம். சிவராத்திரிகள் ஐந்து விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து சிவராத்திரிகளின் சிறப்பு அம்சம் என்ன ?
ஐந்து முகங்களைக் கொண்டவன் சிவபெருமான் . ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்; மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும், தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தவருமான அகத்தியர்.
மகா சிவராத்திரி விரதம் இருப்பதின் பலன்களை தெரிந்து கொள்வதற்கு முன்பாக மகா சிவராத்திரி என்றால் என்ன என்பது பற்றி முதலில் காண்போம் வாருங்கள்!