கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 செப்டம்பர், 2021

அறிவோம் ஆன்மீகம் -2 திருச்செந்தூர்

திருச்செந்தூர் சிறப்பு



 முருகப்பெருமானின் தினம் இன்று

இன்று திருச்செந்தூர் மகிமை தனை தெரிந்துகொள்வோம்..

முருகப்பெருமானின் இரண்டாவது ஆறு படை வீடே திருச்செந்தூர். சொந்தமாக வீடு கட்ட விரும்புவோர்  ஒரு முறை திருச்செந்தூர் சென்று வாருங்கள்.  அங்கு குடி கொண்டுள்ள முருகப் பெருமானை தரிசித்து அந்த கடல் நீரை  வீட்டில் கொண்டுவந்து தெளித்தால்... அல்லது சொந்த பூமி வாங்கி வீடு கட்ட முடியாது இருக்கும் இடத்தில் தெளித்தாலும்  வீடு கட்டும் யோகம் இனிதே நடக்கும் .

குழந்தை வரம்

குழந்தை வரம் வேண்டி நிற்போர் திருச்செந்தூர் சென்று வாருங்கள். கோவிலின் இடது பக்கத்தில் வள்ளி குகை காணலாம். அந்த குகைக்கு முன்பாக சந்தன மலையில்‌‌...

குழந்தை வரம் வேண்டி முருகப்பெருமானின் மனமுருக வேண்டிக் கொண்டு , தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும்.

தாலாட்டு பாடுவதற்கான நேரம் கைகூடி குழந்தை பாக்கியம் இனிதே நடக்கும்.

திருச்செந்தூரில்  பஞ்சலிங்க தரிசனம்

செல்வம் தழைத்தோங்க ஆரோக்கியமான வாழ்வு பெற , குலம் தழைக்க ,  பாவம் விலகி  புண்ணிய பலன்கள் அனைத்தும் பெறுவதற்கு திருச்செந்தூர் செல்லுங்கள்.

முருகப்பெருமானை வணங்கி ,  வலது புறத்தில் பஞ்சலிங்க சன்னதி உள்ளது.

மூலவர் முருகனின் இடது புறம்  சிறு  வழியே நுழைந்து... சுற்றி வலது புறமாக வந்து பஞ்சலிங்க தரிசனம் செய்வது  கோடி புண்ணியம் .

ஒருமுறை திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வாருங்கள் தெய்வீக கடல் அலையில் ஸ்நானம் செய்து  முருகப் பெருமானை வழிபட்டு நல்லருள் பெற்று அனைத்து வளமும் பெற்று பிறந்த பயன் அடைவோம்.

பழையன கழிதலும்- புதியன புகுதலும்

நிச்சயமாக தீர்மானம் எடுக்க பழகுவோம். லட்சியம் இல்லையேல் வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லை. 

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நல்ல எண்ணங்களின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கர்ணன் போல முடியாவிட்டாலும் ,தான தர்மங்கள் நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம். 

மற்றவர்களுக்கு முடிந்தவரை உதவிகள் செய்ய வேண்டும் தீர்மானம் எடுக்கலாம். இயற்கை வளங்களை உருவாக்குவதில் நம்முடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கலாம். இவை அனைத்தும் பொது தீர்மானம் .

சுய தீர்மானம் என்பதிலும் கண்டிப்பாக நம்மிடத்தில் ஒரு லட்சியம் இருத்தல் அவசியம் . நம்முடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் . நாம் ஒரு சொந்த வீட்டில் வாழ வேண்டும். சொந்த தொழிலில் முன்னுக்கு வரவேண்டும் என்பதும் ஒரு லட்சியம். 

இப்படி நம்முடைய குடும்பத்தை சார்ந்த வகையில் எடுக்கக்கூடிய லட்சியத்திற்கு ஒரு தீர்மானம் வகுத்துக் கொள்ளலாம்.

மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாது உபத்திரவம் நேராது அமையக்கடிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள் .

 வாழ்க்கை என்பது வாழ்வதற்கே.. அந்த வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கையாக, ஆனந்தமான ஒரு வாழ்க்கையாக வாழ்வதற்கு ஒரு நல்ல தீர்மானம் எடுத்து வாழ்வினில் வெற்றி பெறுக. சிறப்பு பெறுக . பிறந்த வாழ்வின் பயன் பெறுக.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha



 

புதன், 18 செப்டம்பர், 2019

கிருத்திகை விரதம் இருக்கும் முறை




ஆடி கிருத்திகை
கார்த்திகை தீபம் தனில் அழகு முருகன் அவன் -சிரிக்கின்றான்

 தாமரை மலரில் பூத்த மோகன முகத்தவன்- மிளிர்கின்றான் 

உமையவளின் மடியிலே தவழ்கின்ற மழலையவன் -மலர்கின்றான் 

ஈசன் பெற்ற ஆசை மைந்தன் அவன் -இனிக்கின்றான். 


குன்று இருக்கும் இடத்திலே குடிகொண்ட  குருபரன் அருள்கின்றான்.

நம் அனைவரும் அவன் புகழ் பாடும் தருணமே கார்த்திகை சிறப்புமிக்க இந்த நன்னாள் ..

இரண்டு மணி நேரம் மனம் முழுதும் இறைவனை நினைத்து மவுனமாக இருந்து வழிபட்டால் விரதம் அடைந்த பலன் கிடைக்கும்.

காரியம் ஜெயமாகும் விரதம்இருக்கும் முறை 🌹🍀👇👇👇

http://balakshitha.blogspot.com/2019/10/blog-post_15.html


கந்தர் சஷ்டி கவசம்பிறந்த வரலாறு🙏🙏🌹🍀👇👇👇

http://balakshitha.blogspot.com/2020/05/blog-post.html


மௌனம் கடைபிடித்தால் சிறப்புகள்..


சிறப்பு-1  மனதில் மிகப் பெரிய பலம் கிடைக்கும்.

‌ சிறப்பு-2 ‌ மனதிற்கு தெளிவு தரும் 

சிறப்பு-3 ‌ உடல் பிணி அகலும் 

சிறப்பு -4 ‌ புதிய தெம்பு பிறக்கும் 

சிறப்பு -5 ‌துன்பத்திற்கு தீர்வு கிடைக்கும் 

சிறப்பு -6 ‌ வாழ்வதற்கான வழி பிறக்கும்



முருகனின் கோவில் தனில்
நான் சென்று- நின்முகம்
நான் கண்டு -நின் பாதம்
நான் பணிந்து -கோவிலை
வலம் வந்து -மௌனமாய்
நான் அமர்ந்து -கண்களை மூடுகின்றேன் -முருகையா

நின் முகம்தெரிய கண்டு -கண்களில்
கண்ணீர் பெருக -கண்முன்னே
நின் முகம் -தெரியுதய்யா
அந்த பேரின்பம் நான் காண அவ்வின்பம் -இவ்வையகமே பெற்றிடவே அருள்வாயே முருகா முருகையா -கந்தா -கடம்பா கதிர்வேலா -சரணம் சரணமய்யா.

நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று அனைத்து துன்பமும் நீங்கி முருகனின் அருள் பெற்று வளமோடு வாழ்வோம்.


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


Copy rights at Balakshitha


ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

கிருத்திகை விரதம்


கிருத்திகை விரதம் முறைப்படி விரதம் இருக்கும் முறை

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் -மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்- கருவாய் உயிராய் கதியாய் விதியாய்- குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

மயில் மீது அமர்ந்த 
கோலத்தில் முருகன் காட்சி தருகின்றான். மலையின் 
மீது நின்ற கோலத்தில்

 கந்தன் காட்சி தருகின்றான். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் காட்சி தருகின்றான்.

யாமிருக்க பயமேன் என்று சிரித்தவாறு கதிர்வேலன் காட்சி தருகின்றான். 

தாமரை மலரில் குழந்தை 
வடிவத்திலே கார்த்திகேயன் 
காட்சி தருகின்றான். 
இப்படிப்பட்ட அற்புத 
காட்சிகள் மட்டுமா
  தருகின்றான்! 

முருகனின் ஆடலிலும்  தனி அழகுண்டு என்று  குமரகுருதாசர்  மிக  அழகாக வர்ணிக்கிறார் ..

அழகிய அரைஞான் 
ஆட -மார்பினில் உள்ள 
பூணூல் ஆட- மணம் 
நிரம்பிய கடம்ப மாலை 
ஆட -இடையாட- தோள் 
வளையாட- விளங்கும் 
குழை ஆட -பன்னிரு 
கைகளும் ஆட -தாமரை 
மலர் போன்ற பன்னிரு 
விழிகளோடு நெற்றிக்கண் 
ஆறும் சேர்ந்தாட- மலர்ந்த 
அழகிய வாய்இதழ் 
ஆட- வேலாட- மயிலாட-
நான்கு வேதங்களும் ஆட -அதைக்கண்டு நம்மையும்
 ஆட வைக்கும் முருகனின் 
அழகுக்கு ஈடு இணை ஏது!


முருகப்பெருமானின்
முகமோ ஆறு *
அழகிலே கனிந்த முகம் ஒன்று*
 அன்பிலே சிவந்த முகம் ஒன்று* செல்வச்செழிப்பிலே கவர்ந்த 
முகம் ஒன்று *
அறிவிலே சிறந்த  முகம் ஒன்று* ஆற்றலின் மகிமைபெற்ற முகம் ஒன்று *
கருணையில் வந்த முகம் ஒன்று *
என ஆறுமுகன் ஆனந்த 
கோலத்தில் காட்சி 
தருகின்றான்*

எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு  எம் முருகப்பெருமானுக்கு உண்டு 

 முருகனை நினைத்து கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை மாதம் வீதி எங்கும் விழாக்கோலமாக மேற்றி வழிபடுவது மிக மிக தனி சிறப்பன்றோ..

ஐந்துமுக தீபம்

ஆறுமுகனை வரவேற்று 
 படைக்கின்ற கிருத்திகை
நட்சத்திரத்திலே தீபத்தின்
மகிமைதனை அறிவோம்...    

சூரியன் *சந்திரன் *அக்கினி * என ஒன்று சேர்ந்து மூவரின் பிரதிபலிப்பில்
ஏற்றுகின்ற தீபத்திற்கு மிகப்பெரிய சக்தி உண்டு * தாம் மட்டுமன்றி தம்மை சுற்றி இருக்கும்  அனைவருக்கும் ஒளியை கொடுப்பதுதான் தீபத்தின் சிறப்பு *

ஐந்து முக தீபம் ஏற்றுவது  மூலமாக வாழ்க்கையில்  உள்ள இருள் விலகி தீபமான ஒளிமிகுந்த வாழ்க்கையை முருகப்பெருமான்  நமக்கெல்லாம் 
அளிக்கின்றான்* என்பதே  தீபத்தின் சிறப்பு.



கார்த்திகை அன்று..

அதிகாலை நீராடி *
அகமும் புறமும்
பக்தி மயமாகி *
ஐந்து முக
விளக்கை ஏற்றி *
ஏற்றிய சுடர் தனிலே
மனம் ஒன்றாகி  *திருநீறு
பூசிய நெற்றி நிறைவாகி *
முருகா முருகா சரணம் *
உன் பாதமே சரணம் என 
வேண்டுகின்ற வேண்டுதலுக்கு 
குரல் கேட்டு ஓடிவந்து 
அருள்கின்ற அனுதினமுமே
கார்த்திகை விரதம்.

கந்த சஷ்டி கவசம் வரலாறு வழிமுறைகளும் 🌹🍀🌹🙏👇👇

https://balakshitha.blogspot.com/2020/05/blog-post.html



கந்தர் சஷ்டி விரதம் இருக்கும்

 முறை🌹🍀🌹🙏👇👇👇

https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_30.html


திருநூறு* என சொல்லப்படும் விபூதியின் சிறப்பு ‌..
வி*   பூ*   தி* வினைகள் அனைத்தும் விலகி அனைத்து நன்மைகளும் பெறுவதற்கு நெற்றிதனில்) பூசுகின்ற திகட்டாத இன்பம் தரக்கூடிய திருநீறே *

பசும் சாணியின் சாம்பலால் தயார் செய்த வெண்மை நிறம் கொண்ட கோமாதாவின் அருள்கொண்ட விபூதியை நெற்றி நிறைய பூசிக்கொண்டு 'என்றும் இந்த ஒரு சாண் உடம்பு முடிவிலே சாம்பல் என அறிந்து நாம் வாழ்கின்ற வாழ்க்கையை நல்லமுறையில் வாழவேண்டும் -எனும்                  மணம்கொண்டு நற்கருத்தை உணர்த்துகின்ற முருகப்பெருமானை கார்த்திகை விரதத்தை  மேற்கொண்டு அன்றைய  தினம் நினைத்து வேண்டி புண்ணியத்தை அடைவோமே.

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


சொந்தமாக வீடு கட்ட முருகனின் அற்புதமான இரண்டு பரிகாரங்கள் 🌹👇👇

https://youtu.be/pJIjgbDhT_4


 மேலும் படிக்கலாம்...

சிறப்பான வாழ்க்கை பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html



Copy rights at Balakshitha