குலதெய்வ வழிபாட்டு முறைகள் ஸ்லோகங்கள்
நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியின்றி மனதில் ஏதோ குறை காண்பின் குலதெய்வ வழிபாடு சரியாக செய்யவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ...
வருடம் ஒரு முறை குலதெய்வகோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டி வந்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
நம்முடைய இல்லத்திலேயே இருந்தவாறு குல தெய்வத்தை நினைத்து குலதெய்வ வழிபாடு ஸ்லோகம் சொல்வது என்பது அற்புதமான பலனை தரும் .
குலதெய்வ வழிபாட்டிற்கான ஸ்லோகம் என்ன என்பதை விரிவாக காண்போம் .
தினமும் சொல்லக்கூடிய ஸ்லோகம்
ஓம் கணேஷாய நமஹ
ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ
ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ
தோஷங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கை சுபிட்சம் பெற கல்லுப்பிலே ஐந்து விதமான பரிகாரங்கள்
இந்த குலதெய்வத்திற்கான ஸ்லோகத்தினை ஒன்று அல்லது மூன்று முறை காலையில் சொல்லி வர வேண்டும் . ஒரே ஒரு நிமிடம் தான் ஆகும்.
ஒரேசமயத்தில் அனைத்துதெய்வங்களையும் வணங்கிய திருப்தி இந்த ஒரு ஸ்லோகத்தில் கிடைக்கும்.
குலதெய்வ ஸ்லோகத்தின் விளக்கத்தை காண்போம்..
ஓம் கணேஷாய நமஹ - முக்கண் முதல்வனான விநாயக பெருமானுக்கு நமஸ்காரம் .
ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ - தொன்று தொட்டு எங்கள் முன்னோர்கள் வணங்கி வரும் குல தெய்வத்திற்கு என் நமஸ்காரம்.
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ - சிறுவயது முதலே நமக்கு பிடித்தமான தெய்வம் என்பது நம் மனதில் கண்டிப்பாக இருக்கும்.. முருகபெருமான், ஏழுமலையான், அம்மன் அல்லது மற்ற தெய்வங்களாக இருந்தாலும் அந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்ற ஸ்லோகமே.. ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ.
ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ - நம் வாழ்வில் பல நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்போது 'நான் இந்த தெய்வத்தை வணங்கினேன். அதனால் நிகழ்வு நல்லதாக நடந்தது' என நினைைக்கிறோம் அல்லவா! அந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்ற ஸ்லோகமே.. ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ.
குலதெய்வ ஸ்லோகம் சொல்வதால் ஏற்படக்கூடிய பலன் என்ன ?
குலதெய்வ ஸ்லோகம் தினமும் நாம் சொல்வதால் வரவிருக்கும் தடைகள் அனைத்தும் விலகும்.
குலதெய்வத்தினை தினமும் நினைப்பதால் அதீக சக்தி நமக்குள் கிடைத்து நினைத்த காரியங்கள் யாவும் வெற்றி பெறும் .
வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறையான சக்திகள் வீட்டில் நிறையும். அதனால் நேர்மறை செயல்களும் நடக்கத் துவங்குவது நாம் கண்கூடாக காணலாம்.
திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு 🌹🍀🙏👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html
சொந்த வீடு மனை அமைய வழிபாட்டு தலங்கள் பரிகாரங்கள் 🌹🍀🌹👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3Mì
சிறப்பு-1 மனக்குறை அனைத்தும் நீங்கி மனம் தெளிவு பெற்று வாழ்க்கை சிறப்பு பெறும்.
சிறப்பு-2 நோய்நொடி அனைத்தும் விலகிவிடும்
சிறப்பு-3 சுப நிகழ்ச்சிகள் பல கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்..
சிறப்பு-4 மழலை செல்வம் குரல் வீட்டினில் ஒலித்திட விரைவான பலன் கிடைக்கும்
சிறப்பு-5 நவகிரக தோஷம் நீங்கி செல்வம் பல பெற்று சீரும் சிறப்புமாய் வாழ்ந்திடவே ..
அனைவரும் குலதெய்வ வழிபாட்டில் ஸ்லோகத்தை
தினமும் குலதெய்வத்தினை வணங்கி ஸ்லோகம் படித்து அதற்கான பலனை பெற்று வாழ்வில் வளம் பெற்று குடும்பத்தை மகிழ்ச்சி நிலவ வாழ்க்கை பயனை அடைந்து நிறைவு காணலாம்.
குழந்தை வரம் அருளும் திருக்கருகாவூர் அம்பிகையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகள்🙏🌹👇👇
https://balakshitha.blogspot.com/2020/06/blog-post_29.html
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
விரும்பினால் .கொரியரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
கொரியரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்🙏
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக