moondram pirai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
moondram pirai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

மூன்றாம் பிறை தரிசன ஆன்மீக பூஜை வழிபாடு

மூன்றாம் பிறை

 நினைத்த எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற மூன்றாம் பிறை தரிசன வழிபாடு



 மூன்றாம் பிறை நிலவின் சக்தியை தெரிந்து கொள்வதற்கு முதலில் பவுர்ணமி திதியின் சிறப்பு தனை அறிந்து கொள்வோம்.


அப்படிப்பட்ட அம்பிகை யின் முழுமையான தெய்வீக சக்தி தனை உள்வாங்கிய சந்திர எழுச்சி பெறும் அற்புத நாளன்று மூன்றாம் பிறை சந்திரனை பார்ப்பது பதினாறு செல்வங்கள் சேர்க்கைக்கான வழிவகுக்கும்.


வாழ்க்கையில்  படிப்படியாக உயர்ந்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் தெய்வத்தின்அனுகிரகம் பெற வேண்டும் என்று விரும்பும் அனைவரும் வழிபடக்கூடிய மிி க அருமையான வழிபாடு இந்த மூன்றாம் பிறைச் சந்திர தரிசன வழிபாடு.


 தொடர்ந்து செய்துவர  செய்துவர உங்கள் முன்னேற்றம் பலமடங்கு உயர்வதை நீங்களே பார்க்கலாம். வெளியே போக முடியாத இந்த சூழ்நிலையில் வீட்டிலேயே மிக முக்கியமாக செய்யக்கூடிய வழிபாடுகள் இரண்டு..

ஒன்று சூரிய நமஸ்காரம் வழிபாடு மற்றொன்று மூன்றாம் பிறை தரிசன வழிபாடு .எப்படி வழிபட வேண்டும் என்பதை தெளிவாக காணலாம்..

நன்றாக ஒளியை கொடுக்கக்கூடிய கிரகங்கள்- சூரியன்- சந்திரன்

சந்திரனுடைய கிரக அமைப்பு நன்றாக குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியவர். பிரகாசமான ஒளியை  கொடுக்கக் கூடியவர் . செல்வ செழிப்பை கொடுக்கக் கூடியவர் .சந்திர பகவானின் அந்த தரிசனத்தை நாம் வழிபாடு செய்யும்போது வாழ்க்கைக்கு தேவையான அத்தனை செல்வங்களும் நிச்சயமாக கொடுப்பார்

அமாவாசைக்கு மூன்றாம் நாள் வளர்பிறை நாளான அன்று மூன்றாம் பிறை கண்களுக்கு தெரியும். அன்றைய தினத்தில் தோஷம் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் மறைய வேண்டும் -என கங்கா ஸ்நானம் செய்து கொள்ளுங்கள்.



(கங்கா ஸ்நானம் என்பது ஒரு ஜலம் நீரை எடுத்து ஓம் என்று எழுதி அந்த நீரை கங்காஸ்நானம் ஆக தலையிலே நீராடுதல்)

மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில்  மலரினால் அலங்காரம் செய்து - இரண்டு அகல் தீபம் நெய் தீபம் ஏற்றிக் கொள்ளவும்.. வத்தி வாசனை வீட்டினில் தெய்வீக சக்தி பெருகும்.

குடும்ப ஒற்றுமை வளர கூடிய அருமையான நாள் இந்த மூன்றாம் பிறை தரிசனம் ..அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மொட்டை மாடிக்கு சென்று தரிசனத்தைக் காணலாம

சில சமயம் மேகத்தில் சந்திரன் மறைந்து இருந்தால் நம் கண்களுக்கு தெரியாது ..அதற்காக வருத்தப்பட வேண்டாம் .. கண்களுக்கு தெரிந்தால் தரிசனத்தை கண்டு வணங்கலாம்.

 இல்லை என்றாலும்..

மேற்கே பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கை கூப்பி வணங்குங்கள்.


சந்திரனை நினைத்துக் கொள்ளுங்கள்.

 ஓம் சந்திர மௌலீஸ்வரர் நமஹ எனும் 108 முறை சொல்லுங்கள்.

உங்களுடைய மனதில் இருக்கும் குறைகள் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் .அந்த நேரத்தில் ஒரு புத்துணர்ச்சி பெற்றது போல் நிச்சயமாக உணர்வீர்கள். அனைவருக்கும் கற்கண்டு கொடுக்கலாம் .சந்தோஷமாக அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தால் உங்களுடைய ஒற்றுமை வளம்பட நல்ல தருணம் இது ..


சந்திரனின் பூரண அருள் கிடைக்கின்ற நேரமும் இதுதான். பிறகு வீட்டிற்கு வந்து நேரில் சென்று கண்ணாடியில் முகம் பார்க்கவும்.பூஜை அறையில் விழுந்து நமஸ்காரம் செய்யவும்.

மூன்றாம் பிறை தரிசன வழிபாடு காண்பதற்கான வீடியோ லிங்க் 🙏🌹🍀🌹👇👇👇👇👇👇

https://youtu.be/iOtPSPTbTRg

சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்வதற்கான வீடியோ லிங்க் 🙏🌹🍀🌹👇👇👇👇👇👇

https://youtu.be/ITFlG45xScc

 அதன் பிறகு உங்கள் வேலைகளை மேற்கொள்ளலாம் எந்த ஒரு பூஜை செய்யும் பொழுதும் சந்தனமும் கற்கண்டும் முதன்மையாக இருக்கட்டும் .உடனே நாம் நினைக்கும் எண்ணங்களை கிரகித்துக் கொண்டு உடனே நிறைவேற்றும் மகிமை சந்தானத்திற்கும் கற்கண்டுக்கும உண்டு.

இதனால் ஏற்படக்கூடிய பலன்கள்..


சிறப்பு- 1 இந்த மூன்றாம் பிறை தரிசனம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.

சிறப்பு-2  உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். 

சிறப்பு-3 குழந்தைகளுக்கு நல்ல படிப்பாற்றல் கிடைக்கும். 

சிறப்பு-4 ‌செல்வங்கள் சேரும் .

சிறப்பு-5-குடும்ப ஒற்றுமை மேம்படும்.

அதனால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்த மூன்றாம் நாள் நிலவின் தரிசனம் கண்டு அதற்கான முழு பலனையும் பெற்று வாழ்வின் இனிமை காணலாம்‌.

இன்றைய சிந்தனை

ஓய்ந்து படுக்கும் நேரத்தில் சுற்றி இருக்கும் உறவுகள் என்றும் பலப்பட வேண்டும் என்பதில் உறுதிகொள்க.. ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் உறவுகளை என்றும் அனுசரிக்க கற்றுக்கொள்வது ஒவ்வொரு ஆத்மாவின் கடமை என்பதை உணர்ந்து கொள்க .

ஒற்றுமை என்பது ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் கிரகித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் சந்திர பகவான் இடத்தில் உண்டு .அந்த ஆற்றலைப் பெறுவதற்கு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டு அந்த ஆற்றல் வளம் அனைத்தும் நாம் பெறலாம்.


இதையும் படிக்கலாம் ..

தோஷங்கள்-கண்திருஷ்டி அனைத்தும் விலக கூடிய கல் உப்பு பரிகாரம்🌹👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html

Copy rights at balakshitha


ஞாயிறு, 19 ஜூலை, 2020

வாழ்வின் தலைவிதியை மாற்றக்கூடிய மூன்றாம் பிறை


வாழ்வின் தலைவிதியை மாற்றக்கூடிய
அமாவாசை முடிந்து மூன்றம் பிறை பார்க்கும் வழிபாடு



ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி -தந்நோ சந்திர ப்ரசோதயாத்


மலர் மலர்ந்தால் மாலையாகி பயனளிக்கும் -அதுபோல சிந்தையை குளிரவைக்கும்  இவ்வுரை தெய்வத்திற்கு   மாலையாய் சூட்டுகிறேன் . இம்மாலை நீர்  கண்டு மெய் உருகி -பாமாலையில்  பயன் பெறுக

தாயின் மடியில் அமர்ந்து அமுதுண்டு வானில் நிலவைப் கண்டு ரசித்த காலம் அன்று- பாட்டி வடை சுடுவது தாத்தா கோல் ஊன்றி வருவது என நிலவுக்குள் ஆயிரம் கதைகள் ஒளிந்து
கொண்டிருக்க ..

 அம்மாவிடம் ஒவ்வொன்றாக சுவாரசியமாக கதை கேட்டு இனிக்கும் காலம் அன்று..
 இன்றைய தலைமுறைகளோ கம்ப்யூட்டர்கேம்விளையாடிக்கொண்டு உணவின் ருசி அறியாது உண்ணும் காலம் இன்று..

அதை சற்றே மாற்றி  மாதத்திற்கு ஒரு முறையாவது  குடும்பத்தோடு மொட்டை மாடிக்குச் சென்று  நிலாவைப் பார்த்து வணங்கக்கூடிய அற்புத நான் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரக்கூடிய வளர்பிறை எனும் மூன்றாம் பிறை .

அனைத்து வரங்களையும் கேட்டதும் கொடுக்கும் சிவபெருமானின் தலையிலே மகுடமாய்..

 காஞ்சி காமாட்சியின் அழகுக்கு மெருகூட்டும் அம்சமாய் காட்சி தரும் மூன்றாம் பிறை சந்திரனின் பார்வை நம் மீது பட்டால் நம்முடைய தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கை பலம் பெறும்.


ஒற்றுமை எனும் வார்த்தைக்கு ஓராயிரம் கோடி மகிழ்வுகள் அகத்தினில்  புகும் பாக்கியம்  ஒருசிலருக்கு மட்டும்தான் கிடைக்கும்.

அந்த பாக்கியம் கொண்டவராக நீங்கள் இருங்கள் .

பிரதோஷம் அன்று முறையாக விரதம் இருக்கும் முறை 🌹🙏🍀🌹🙏🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/1.html

வாழ்வில் தோஷம் விலக- குடும்பத்தில் சுபிட்சம் பெருக கல்உப்பு பரிகாரம்🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html

  மூன்றாம் நாள் பிறை தோன்றி வளர்ந்து முழு பௌர்ணமி நிலவாக காட்சி தருவது போல -நம் வாழ்வில் உயர்ந்து வளர்வதற்கு மூன்றாம் பிறை தரிசனம் மிகுந்த பலன் கொடுக்கும் .



அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள்..

சிறப்பு -1 நம்முடைய மனம் சுத்தமாகும் சிறப்பு -2  புத்துணர்ச்சி கிடைக்கும் சிறப்பு -3 முகப்பொலிவு கிடைக்கும் சிறப்பு -4 ஒற்றுமை மேம்படும்
சிறப்பு -5செல்வம் பெருகும் வாழ்க்கை மேன்மை பெறும்.

 வீட்டில் இருந்தவாறே எளிமையாக வழிபடும் முறை ..

மூன்றாம் பிறை அன்று மாலை விளக்கேற்றவும்.  ஊதுபத்தி நறுமண வத்திகள்  ஏற்றி வைக்கவும்

6 -45 மணிக்கு மேல் பூஜை அறையில்  வைத்து  ஒரு கற்கண்டு பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள் .

மொட்டை மாடிக்கு குடும்பத்தோடு அனைவரும் செல்வது சிறப்பு.
மூன்றாம் பிறை தரிசனம் காண்பது மிக உத்தமம்.

சந்திரனை மேகம் மறைத்தாலும் மேற்கு திசை நோக்கி அமர்ந்து பயபக்தியோடு மூன்றாம் பிறை சந்திரனை நினைத்து வழிபட சந்திர பகவானின் சக்தி நமக்கு கிட்டும்.



 மேற்கு நோக்கி அனைவரும் அமர்ந்து 'ஓம் சந்திர மௌலீஸ்வரா  போற்றி' என 108 போற்றி கூறுங்கள் .மனம் முழுதும் சந்திர பகவானை நினைத்து கொள்ளுங்கள் .முடிவில் அம்மனை- நம் குல தெய்வத்தை நினைத்து உங்கள் வேண்டுதலை வையுங்கள்.

 மனம் உருக வேண்டி கொண்டால் நினைத்த ட காரியம் ஜெயம் ஆகும்.
எப்பொழுதும் பூஜை அறையில் ஒரு டப்பாவில் கற்கண்டு இருப்பது சிறப்பு.

சொந்த மனை வீடு அமைவதற்கு ஏற்றும் தெய்வீக வழிபாடு பரிகார ஸ்தலங்கள் அமேசானில் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள் 🌹🍀🌹🙏🌹👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


தெய்வத்திற்கு உகந்தது- தேனினும் இனியது -கல்லினும் கொடும் மனதையும் கரைய வைக்கும் பிரசாதம் கற்கண்டில் உண்டு.

அந்த கற்கண்டை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்  பிரசாதமாக கொடுங்கள் .

பிறகு வீட்டிற்கு வந்து நம் முகத்தை பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடியில் முகம் பார்க்கவும்.


என்றும் அகம் குளிர- அனைத்தும் இனிதாக- முகம் ஒளி பெற- வாழ்க்கை வளம்பெற -செல்வ கடாட்சம் கைகூட- வேண்டி வழிபடும் அற்புதமான வழிபாடு இந்த  மூன்றாம் பிறை நிலவு பார்த்து கண்ணாடியில் முகம் பார்க்கும் வழிபாடு .

பூஜை அறையிலே தங்கம் அல்லது வெள்ளி பொருள் பார்த்து வணங்கவும் .

உங்கள் இந்த எளிமையான விரதத்தை தொடர்ந்து 5 மூன்றாம் பிறை பார்த்து தரிசியுங்கள் .

நீங்கள் நினைத்தது நடக்கும். எண்ணங்கள் நிறைவேறும். மகிழ்ச்சி கிட்டும். செல்வங்கள் பெருகும் -வாழ்க்கையில் வளம் காணலாம்.

தங்கள் கருத்தை பதிவு செய்க

Copy rights at balakshitha