மூன்றாம் பிறை
நினைத்த எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற மூன்றாம் பிறை தரிசன வழிபாடு
![]() |
மூன்றாம் பிறை நிலவின் சக்தியை தெரிந்து கொள்வதற்கு முதலில் பவுர்ணமி திதியின் சிறப்பு தனை அறிந்து கொள்வோம்.
அப்படிப்பட்ட அம்பிகை யின் முழுமையான தெய்வீக சக்தி தனை உள்வாங்கிய சந்திர எழுச்சி பெறும் அற்புத நாளன்று மூன்றாம் பிறை சந்திரனை பார்ப்பது பதினாறு செல்வங்கள் சேர்க்கைக்கான வழிவகுக்கும்.
தொடர்ந்து செய்துவர செய்துவர உங்கள் முன்னேற்றம் பலமடங்கு உயர்வதை நீங்களே பார்க்கலாம். வெளியே போக முடியாத இந்த சூழ்நிலையில் வீட்டிலேயே மிக முக்கியமாக செய்யக்கூடிய வழிபாடுகள் இரண்டு..
ஒன்று சூரிய நமஸ்காரம் வழிபாடு மற்றொன்று மூன்றாம் பிறை தரிசன வழிபாடு .எப்படி வழிபட வேண்டும் என்பதை தெளிவாக காணலாம்..
நன்றாக ஒளியை கொடுக்கக்கூடிய கிரகங்கள்- சூரியன்- சந்திரன்
சந்திரனுடைய கிரக அமைப்பு நன்றாக குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியவர். பிரகாசமான ஒளியை கொடுக்கக் கூடியவர் . செல்வ செழிப்பை கொடுக்கக் கூடியவர் .சந்திர பகவானின் அந்த தரிசனத்தை நாம் வழிபாடு செய்யும்போது வாழ்க்கைக்கு தேவையான அத்தனை செல்வங்களும் நிச்சயமாக கொடுப்பார்
அமாவாசைக்கு மூன்றாம் நாள் வளர்பிறை நாளான அன்று மூன்றாம் பிறை கண்களுக்கு தெரியும். அன்றைய தினத்தில் தோஷம் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் மறைய வேண்டும் -என கங்கா ஸ்நானம் செய்து கொள்ளுங்கள்.
![]() |
(கங்கா ஸ்நானம் என்பது ஒரு ஜலம் நீரை எடுத்து ஓம் என்று எழுதி அந்த நீரை கங்காஸ்நானம் ஆக தலையிலே நீராடுதல்)
மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் மலரினால் அலங்காரம் செய்து - இரண்டு அகல் தீபம் நெய் தீபம் ஏற்றிக் கொள்ளவும்.. வத்தி வாசனை வீட்டினில் தெய்வீக சக்தி பெருகும்.
குடும்ப ஒற்றுமை வளர கூடிய அருமையான நாள் இந்த மூன்றாம் பிறை தரிசனம் ..அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மொட்டை மாடிக்கு சென்று தரிசனத்தைக் காணலாம
சில சமயம் மேகத்தில் சந்திரன் மறைந்து இருந்தால் நம் கண்களுக்கு தெரியாது ..அதற்காக வருத்தப்பட வேண்டாம் .. கண்களுக்கு தெரிந்தால் தரிசனத்தை கண்டு வணங்கலாம்.
இல்லை என்றாலும்..
மேற்கே பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கை கூப்பி வணங்குங்கள்.
![]() |
சந்திரனை நினைத்துக் கொள்ளுங்கள்.
ஓம் சந்திர மௌலீஸ்வரர் நமஹ எனும் 108 முறை சொல்லுங்கள்.
உங்களுடைய மனதில் இருக்கும் குறைகள் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் .அந்த நேரத்தில் ஒரு புத்துணர்ச்சி பெற்றது போல் நிச்சயமாக உணர்வீர்கள். அனைவருக்கும் கற்கண்டு கொடுக்கலாம் .சந்தோஷமாக அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தால் உங்களுடைய ஒற்றுமை வளம்பட நல்ல தருணம் இது ..
சந்திரனின் பூரண அருள் கிடைக்கின்ற நேரமும் இதுதான். பிறகு வீட்டிற்கு வந்து நேரில் சென்று கண்ணாடியில் முகம் பார்க்கவும்.பூஜை அறையில் விழுந்து நமஸ்காரம் செய்யவும்.
மூன்றாம் பிறை தரிசன வழிபாடு காண்பதற்கான வீடியோ லிங்க் 🙏🌹🍀🌹👇👇👇👇👇👇
சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்வதற்கான வீடியோ லிங்க் 🙏🌹🍀🌹👇👇👇👇👇👇
அதன் பிறகு உங்கள் வேலைகளை மேற்கொள்ளலாம் எந்த ஒரு பூஜை செய்யும் பொழுதும் சந்தனமும் கற்கண்டும் முதன்மையாக இருக்கட்டும் .உடனே நாம் நினைக்கும் எண்ணங்களை கிரகித்துக் கொண்டு உடனே நிறைவேற்றும் மகிமை சந்தானத்திற்கும் கற்கண்டுக்கும உண்டு.
இதனால் ஏற்படக்கூடிய பலன்கள்..
சிறப்பு- 1 இந்த மூன்றாம் பிறை தரிசனம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
சிறப்பு-2 உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
சிறப்பு-3 குழந்தைகளுக்கு நல்ல படிப்பாற்றல் கிடைக்கும்.
சிறப்பு-4 செல்வங்கள் சேரும் .
சிறப்பு-5-குடும்ப ஒற்றுமை மேம்படும்.
அதனால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்த மூன்றாம் நாள் நிலவின் தரிசனம் கண்டு அதற்கான முழு பலனையும் பெற்று வாழ்வின் இனிமை காணலாம்.
ஓய்ந்து படுக்கும் நேரத்தில் சுற்றி இருக்கும் உறவுகள் என்றும் பலப்பட வேண்டும் என்பதில் உறுதிகொள்க.. ஆயிரம் இடர்பாடுகள் வந்தாலும் உறவுகளை என்றும் அனுசரிக்க கற்றுக்கொள்வது ஒவ்வொரு ஆத்மாவின் கடமை என்பதை உணர்ந்து கொள்க .
ஒற்றுமை என்பது ஒவ்வொருவரின் ஆழ் மனதிலும் கிரகித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் சந்திர பகவான் இடத்தில் உண்டு .அந்த ஆற்றலைப் பெறுவதற்கு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டு அந்த ஆற்றல் வளம் அனைத்தும் நாம் பெறலாம்.
இதையும் படிக்கலாம் ..
தோஷங்கள்-கண்திருஷ்டி அனைத்தும் விலக கூடிய கல் உப்பு பரிகாரம்🌹👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html
Copy rights at balakshitha