பட்டினத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டினத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஜூலை, 2021

அமாவாசை அன்று நினைக்கக்கூடிய மகான்

 பட்டினத்தார் வரிகள் 



பட்டினத்தார் பாடல் வரிகளை  இறந்த ஆத்மாவை  நினைக்கும் தினமாகிய  அமாவாசையான  அன்று பாடி அறிந்து புரிந்து  புண்ணியத்தை யாம்  பெறுவோம்.


கல்லா பிழையும் கருதாபிழையும் கசிந்துருகி -நில்லாப் பிழையும் நினையா பிழையும்,

நின்னெஞ்செழுத்தை - சொல்லாப் பிழையும், துதியா பிழையும்

 தொழா பிழையும் -எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்- கச்சியேகம்பனே


 தெரிந்து பிழை செய்தேனோ! தெரியாமல் பிழை செய்தேனோ! நினைத்து நினைத்து கசிந்து உருகுகின்றேன் -அறியேனே 

தில்லை அம்பலத்தவனே!

நினைவில் நின்ற பிழை செய்தேனோ! நினைவே இல்லாது‌ பிழை செய்தேனோ !அனைத்தும் அறியேனே அம்பலத்தவனே - 

சிவாயநம

 எனும் ஐந்தெழுத்தை சொல்லாத பிழை செய்தேனோ! கைகூப்பி வணங்காத பிழை செய்தேனோ! மனதாலும் நினைக்காத பிழை  செய்தேனோ! எல்லாப் பிழையும் பொறுத்து எமை  காத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.


இந்த  பட்டினத்தாரின் பாடல் வரிகள் நம் வாழ்க்கையிலும் இருந்திருக்கலாம்.


 ஜீவ சமாதி அடைந்த பட்டினத்தார் பாடல் வரிகளை நினைத்து  'நமச்சிவாய' என்னும் ஐந்தெழுத்து சொல் இதனை மனம் உருகி, மனம் உவந்து ,மெய்மறந்து, மெய்கனிந்து ,தெய்வ மணம் கமழ்ந்து சொல்லி சொல்லி நாஇனித்து  நமச்சிவாயத்துள்  ஐக்கியமாகி மனிதனாய்  பிறந்த பயனை அடைவோம்.


ஜீவ சமாதி அடைந்தமகான்களின் அபரீத சக்தி,  இறந்த மூதாதையரை நினைத்து வழிபட கூடிய சிறப்புவாய்ந்த  அமாவாசை தினத்தன்று அதிகம் நமக்கு கிடைக்கும் .இந்த நாளில் மகான்களை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். 

ஓம் சிவாய நமஹ ‌


அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் ஏற்படக்கூடிய நன்மைகள் 🙏🙏🙏🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/08/blog-post_31.html

.கோபம் எனும் இருள் விலகட்டும் அறியாமை எனும் பொருள் விளங்கட்டும். கற்ற கல்வி கை கொடுக்கட்டும். செல்வக் களஞ்சியம் நிறைவாகட்டும். பெற்ற மனம் கனிவா கட்டும் .பிள்ளை மனம் சிந்து பாடட்டும் தெய்வ அருள் உருவாகி,மலராகி மகிழ்வாகி  மனிதப் பிறவியின் பயனை அடைகவே.

தமிழ் மீது பற்று உள்ளவர்களுக்கு 

ஒரு அன்பான வேண்டுகோள்🙏

 நீங்கள் வீட்டில் திருமணம் செய்யவேண்டிய பிள்ளையோ பெண்களோ  இருந்தால் உங்கள் மனமார்ந்த நிறைவான ஒரு விஷயம் செய்யலாம் .🌹


திருமணத்தின் போது வரும் விருந்தினருக்கு அன்பளிப்பாக புத்தகம் அளியுங்கள்🌹


குறைந்தசெலவில்_புத்தகம்அன்பளிப்பு 

நற் கருத்துக்களை நம்மால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினோம் எனும் மகிழ்ச்சியான மன நிறைவு தங்களுக்கு நிச்சயம் உண்டாகும்.🍀🌹


தம்பதிகள் வாழ்வினில் வழிநடத்தக் கூடிய  16  விதமான அறிவுரைகள் கொண்ட அழகிய புத்தகம்.🙏

Cell- 8124152666