10-4-2022 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீராமநவமி🙏🌹
மகாவிஷ்ணு எவ்வளவோ அவதாரம் எடுத்து இருந்தாலும் பெரிதும் போற்றப்படுவது ஸ்ரீ ராம அவதாரமே *
மனிதனாக பிறந்து விட்டால்'
எவ்வளவோ சோதனைகள்வந்தாலும் நீதிமுறை தவறாது வாழவேண்டும் 'என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக ,மகாவிஷ்ணு இந்த பூமியில் அவதாரம் எடுக்கின்றார்.
ஸ்ரீ ராம அவதாரம்* என்பது
தெய்வமே மனிதனாக பிறந்து வந்த ஒரு அவதாரம்
உண்மையை உணர்த்துகின்றஒர்அவதாரம்
சத்தியத்தைக் காக்கவந்த ஒரு அவதாரம்
மனதை நெகிழ வைக்கும் ஒரு அவதாரம்
நாட்டு மக்களுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்த ஒரு அவதாரம்
தேவர்களையும், மனிதர்களையும், முனிவர்களையு,ம் கொடுமைப்படுத்தி வந்த அகம்பாவம் பிடித்த அசுரனாகிய இராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு ராம அவதாரம்* எடுக்கின்றார். இராவணனை அழிக்கும் பொருட்டு 'மண்ணில் தோன்றி மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம்தான் ராமநவமி **என அனைவரும் கொண்டாடுகின்றோம்.
புகழ்பெற்ற ரகுவம்ச ராஜகுலத்திலே ராமபிரான் சூரியகுல உதயமாக பிறக்ககின்றார்*
கோசலை பெற்ற மகன் ராமனென* கைகேயி பெற்ற மகன் பரதனென* சுபத்ரா பெற்ற மகன் லட்சுமணன்* ,சத்ருக்கனன் என அழகு பெயரிட்டு தங்க தொட்டிலில் இட்டு வெள்ளிக் கிண்ணத்தில் சோறு ஊட்டி பஞ்சு மெத்தையில் நடக்க வைத்து தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றனர் .
நாடெல்லாம் விழாக்கோலமாக* மக்களெல்லாம் மகிழ்ச்சி பொங்க* ராமாயணத்தின் அத்தியாயம் மிக இனிதாக தொடங்குகின்றது.
தெய்வமே -குழந்தையாக. ரகுவம்சத்தின் கோசலையின் வயிற்றில் பிறந்ததால் ரகுகுல ராமனாகக் காட்சி தந்து மிக அழகாக வளர்கின்றார்*
தாய் தந்தை குரு பக்தியில் சிறந்தவனாய் ,சகோதர பாசம் நிறைந்தவனாய் ,
நட்பிலே உயர்ந்தவனாய் ,
ஒருவனுக்கு ஒருத்தி என்ற இலக்கணத்தை கற்றுக் கொடுப்பவனாய்...
ஒரு சராசரி மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை நமக்கு கற்று கொடுத்து -வழிகாட்டியாய் திகழ்கின்ற ஒரு அவதாரமே ஸ்ரீ ராம அவதாரம்*
அப்படிப்பட்ட ராமர் பிறந்த நாளை ஸ்ரீராமநவமி என நாம் அனைவரும் கொண்டாடுகின்றோம்.
பங்குனி மாதம் வளர்பிறை நவமி அன்று ராமரின் பிறந்த நாள் ஆகிய ஸ்ரீராமநவமி* வருகின்றது.
இந்த சிறப்பான நாளில் பகவத்கீதை படிப்பது மிகவும் சிறப்பு.
பக்தி எனும் சுவாசத்தை நுகர்ந்தாலே போதும் -சூரிய பலம் சந்திர பலம் சகல பலமும் கூடிவிடும் .
பெருமாளின் சகஸ்ரநாமம் எனும் இனிய கானத்தை கேட்டாலே போதும் சகல ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் பெற்ற பலன் கிடைத்துவிடும்.
ஸ்ரீ ராமரின் பாதத்தினை கரங்களால் தொட்டு வணங்க வேண்டும் என மனம் நினைத்தாலே போதும் நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் .
இன்றைய தினம் விரதமிருந்து ஸ்ரீராமரின் வரலாறு கேட்டு, அறிந்து அதன்பட நடந்து, ஸ்ரீராமநவமி கொண்டாடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக