நாகாத்தம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாகாத்தம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 மார்ச், 2021

திருமணம் விரைவில் நடக்க அடிப்பிரதட்சணம் வழிபாடு

  அடிப்பிரதட்சணம் வழிபாடு



 இந்த பூமி- கடல்- காற்று- வான் அனைத்தும் தமக்குள் அடக்கமாக தாமே ஆதிபராசக்தியாக  அன்னையின் அம்சமாக- தாய்மையில் சிகரமாக நம்முடைய உள்ளத்திலே குடி கொண்டிருக்கிறாள் அன்னை அபிராமி .


அவளை வணங்கினால் எப்படிப்பட்ட தோஷங்களும் இருந்தாலும் நம்மிடமிருந்து விலகி பரிபூரணமாக அம்மன் அருள் பெற்று திருமணம் உடனே நடைபெறும் ..அதற்கான வழிபாட்டினை காண்போம்.


குழந்தையாக ஒரு வயதில் ஓரடி வைத்து ஒன்பது வயது ஓடியாடி விளையாடி- பதினெட்டு வயதில் மங்கையாக பருவம் கொண்டு திருமண வயதை ஒத்தவள் ஆகின்றாள்‌ பெண்.

அன்று தொடங்குகின்றது பெற்றோரின் கடமை .ஒரு நல்ல இடத்தில் தன் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆதங்கம் என  அவர்கள்  எண்ணங்கள் மேலோங்கி இருக்கும்.

திருமணம் விரைவில் நடக்க அடிப்பிரதட்சணம் வழிபாடு

 வயது அதிகமாகி திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு மிக அருமையான பரிகாரமே அடிப்பிரதட்சணம் வழிபாடு..

முற்பிறவியில் செய்த பாவமொடு  முன்னோர் செய்த பாவமும் சேர்ந்து தோஷமாக நம்முடைய ஜாதக அமைப்பில் நம் தலையெழுத்து அதாவது விதி நிர்ணயிக்கப்படுகின்றது .


பிரம்மதேவன் விதித்து விட்டால் அவ்விதியை  மாற்ற தான் முடியுமா! தவறு செய்யாது ஏன் இந்த சோதனை! பழி பாவங்கள் ..என கவலையை விடுத்து துணிந்து  நிவர்த்திக்கான வழி தேடலை கண்டுபிடித்து வாழ்வினில் சிறப்பு பெற வேண்டும்.

நாக புற்றுகள்- நாக மூர்த்திகள் இருக்கும் அம்மன் ஆலயம்  அருகில் இருந்தால் அந்த கோவிலுக்கு செல்லவும் . நல்ல நாள் பார்த்து விரதத்தை ஆரம்பிக்கலாம். 


வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி திதி நாட்களில் ஒரு நல்ல நாளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்  அந்த அம்மன்  கோவிலுக்கு -மணம் ஆகவேண்டிய மகளை  அழைத்துச்சென்று -5 அகல் தீபம் ஏற்றி வைத்து தெய்வத்தை வேண்டி அடிப்பிரதட்சணம் செய்யலாம்.



புற்றுக்கு  பால் ஊற்றி நாக அம்மனை திருமணம் தடைபடாது விரைவில் நடக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளவும்.


ஒவ்வொரு அடியாக அடிப்பிரதட்சணம் செய்கின்ற போதும் மனம் தெய்வத்தோடு ஒன்றி திருமணம் நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு -கோவிலை சுற்றி வந்தால் எடுத்து வைக்கும் அந்த அதிர்வலைகளின் சக்தியில் தெய்வத்தின் மனம் கனிந்து- திருமண ஆசிகளை வழங்கி அருள் புரிவாள் என்பது ஐதீகம்.


தொடர்ந்து வெள்ளிக்கிழமை  ஒன்பது வாரங்களும் 5 சுமங்கலி பெண்களுக்கு நம்மால் முடிந்த வெத்திலை பாக்கு மஞ்சள் -குங்குமம் என தாம்பூலம் வைத்து கொடுக்க வேண்டும். முடிந்தவர்கள் ஜாக்கெட் பிட் சேர்த்து வழங்கலாம்.


தொடர்ந்து ஒன்பது வாரங்கள் கோவிலுக்கு சென்று தீபமேற்றி அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டால்

மூன்றே மாதத்தில் திருமணம் நிச்சயமாகி விரைவில் திருமணம் நடக்கும்.

திருமணம் கனிந்து -திகட்டாத வாழ்வு பெற்று -சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் வாழ்வினில் இனிமை பெற்று- செல்வங்கள் பல பெற்று மனமொத்த தம்பதியராக பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழிய வாழ்யவே.

முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html


திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

Copy rights at Balakshitha