கந்தசஷ்டி விரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்தசஷ்டி விரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

சூரசம்ஹாரம் தத்துவம்


சூரசம்ஹாரம் தத்துவம்



ஏறு மயில் ஏறி -விளையாடும்
 முகம் ஒன்று * ஈசனுடன் 
ஞான மொழி பேசும்
 முகம் ஒன்று *கூறும் 
அடியார்கள் வினை 
தீர்த்த முகம் ஒன்று *குன்றுருவ
 வேல் வாங்கி வந்த முகம் ஒன்று* மாறுபடு சூரரை வதைத்த
 முகம் ஒன்று*வள்ளியை 
மணம் புணர வந்த முகம் ஒன்று* ஆறுமுகம் ஆன பொருள்
 நீ அருள வேண்டும் 
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே*

ஐப்பசி மாதத்தில்
 அமாவாசையை
 அடுத்து வரும்
 பிரதமை தொடங்கி
 ஆறு தினமும்
கந்தனை நினைத்து 
கவலையெல்லாம்
தீர்ந்திட விரதமிருந்து
 அனுஷ்டிப்பது
 கந்தர் சஷ்டி விரதம்*

 முடிவிலே ஆறாவது நாளிலே
 சூரனை தம் மறகருணையால் முருகப்பெருமான் ஆட்கொண்ட தினமே சூரசம்ஹாரம் *

சூரசம்ஹார தத்துவம்


 நம்முடைய செயல்களே
 நாம் நடந்துகொள்ளும் விதமே
 நம்மை நல்லவர்களா!
 தீயவர்களா!


என்று மற்றவர்களுக்கு 
அடையாளம் காட்டுகின்றது..
சூரபத்மனின் செயல்களே
 அவனுடைய அழிவிற்கும்
 காரணமாய் அமைகின்றது..

இறைவனுடைய கருணை  இரண்டு வகைப்படும் 

1- அறக்கருணை

 2 -மறக்கருணை 


ஒரு பாவமும் செய்யாது
 நல்ல மனம் படைத்தவர்களை தூய்மையான குணம்
 கொண்டவர்களை
 இறைவன் தம் அறகருணையால் ஆட்கொள்கின்றான்.


 ஆணவம் கொண்டவன்
 ஒருபொழுதும்
 இறைவனை காண முடியாது..

 ஆணவத்தை ஒடுக்குபவன்
 இறைவன் ஒருவனே
 சூரபத்மனுக்கு 
எவ்வளவோ புத்திமதி
 எடுத்துக் கூறியும்
 அதை கேட்காது 
ஆணவம் அடங்காது
 அனைவரையும்
 இம்சித்து வந்தான்..


உயிரை எடுத்தால் அன்றி
 சூரபத்மனின் ஆணவம்
 அடங்காது என்று உணர்ந்த முருகப்பெருமான்
 சூரனின் உடம்பை கொன்று ஆத்மாவாகிய உயிரை தன்னோடு சேர்த்து கொள்கின்றான்.



பாவம் செய்பவனை கூட 
அருள் பாவித்து
 ஏற்றுக்கொள்கின்ற 
தயாள குணம் 
முருகப்பெருமானுக்கு உண்டு..

 அதனால்தான் -சூரனை
 தம்முடைய வேலாயுதத்தால் ஆட்கொண்டு 
உடலினை இரு கூறாக்கி
 ஒரு கூறு மயிலாகவும்
 மற்றொன்று சேவலாகவும்
 மாற்றி தம்மோடு சேர்த்து
 காட்சி தருகின்றான்.



 சூரனை- கந்தவேலன் சம்சாரம் செய்யவில்லை சம்ஹரிக்கவில்லை .சூரனை  தம் மறகருணையால் தம்வசப்படுத்தி கொள்கின்றான் -அதாவது ஆட்கொள்கிறார் என்பது சூரசம்ஹாரத்தின் தத்துவமாகும்.




ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்து ஆறு நாட்கள்  முருகப்பெருமானை நினைத்து  கந்த சஷ்டி விரதம் இருப்பதற்கான மிக சிறப்பான நாட்கள் .


முருகன் அசுரன் சூரபத்மனுடன் போரிட்டு சம்ஹாரம் செய்த அந்த நாட்களை தான் கந்தர் சஷ்டி விரத நாட்களாக வழிபடுகின்றோம். அந்த ஆறு நாட்களிலும் முருகா என்னும் நாமத்தை சொல்லி வந்தால் முருகப் பெருமான் நம்மை முழுமையாக ஏற்றுக்கொள்வார் -முருகனின் அருளை முழுமையாகப் பெறலாம்.


விரதம் இருக்க வேண்டும் என்று நாம் மிகவும் ஆசைப்படுவோம். சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேலை அதிகமாக இருக்கலாம் .குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் -உடல் நிலை கூட சில சமயம் சரி இல்லாமல் போகலாம் 

சிலருக்கு எல்லாமே சாதகமாக இருந்தாலும் -விரதம் இருந்து பழக்கமே இல்லை எளிமையான முறையில் எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கும்  இந்த  சஷ்டிவிரதம் எளிமையான முறையில் எப்படி அனுஷ்டிக்கலாம் எனும் முறையை பற்றி பார்க்கலாம்..

 இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்கலாம் அல்லது ஆறாவது நாளான சஷ்டி திதியில் மட்டும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அனுஷ்டிக்கும் முறை 


சிறப்பு - 1  


தினமும் காலையில் கங்காஸ்நானம் நம்முடைய பாவங்கள் தோஷங்கள் விலகுகின்ற அற்புதமான ஸ்னானம். ஸ்னானம் செய்வதற்கு முன்பாக ஒரு குவளை நீரை எடுத்து புனிதமான கங்கை நீராக மனதால் நினைத்து நம்முடைய மோதிரவிரலால்' ஓம்' எனும் எழுத்தை எழுதி தலையிலே ஸ்நானம் செய்யும் போது கங்கை நீரில் ஸ்நானம் செய்த சக்தியையும் அருளும் நமக்கு கிடைக்கும்.

சிறப்பு- 2  

அசைவம் இல்லாத அளவான உணவு .காலை பழம் பால் எடுத்துக்கொண்டு 12 மணி வரை விரதம் இருந்த பிறகு உணவு எடுத்துக்கொள்ளலாம் .இரவு பழம் பால் அல்லது டிபன் சாப்பிடலாம் 

சிறப்பு- 3  

காலையில் மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும் தீபத்திற்கு நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் உள்வாங்கி நிறைவேற்றும் சக்தி உண்டு அதனுடன் நாம் கந்தசஷ்டிகவசம் புத்தகத்தை வடக்கு நோக்கி மனையிலே அமர்ந்து படிப்பது தான் விரதம் முழுமையாக நாம் அனுஷ்டிக்கும் முறை .

சிறப்பு- 4  

நம்மை சுற்றி வாசனை திரவியங்கள்- ஊதுபத்தி நறுமணம் முருகருடைய பாடல்கள் இந்த மூன்றுமே தெய்வீக சக்தி கிடைத்து நம்முடைய விரதம் மேலும் சிறப்பு அடைவதற்கும் வழிவகுக்கும்.
 முழுமையாக விரதம் இருந்த முழு திருப்தி நமக்கு கிடைக்கும்.

சிறப்பு -5    

முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து பத்துநிமிடம் அமைதியான முறையில் முருகனுடைய நாமங்களை சொல்லலாம் .

முருகப்பெருமானை  நினைத்து கொண்டாடக்கூடிய ஒரு விழா கந்த சஷ்டி திருவிழா .


மனதை தூய்மைப்படுத்தும் பெருவிழா 
சிந்தையை இறை இடத்திலே கட்டிப்போடும் கலைவிழா 

அந்த அற்புதமான நாட்களில் விரதமிருந்து முருகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

சூரசம்ஹாரம் முடிந்ததும் அடுத்த நாள் முருகப்பெருமானின் திருமண விழா.

முருகப்பெருமானின் திருமண விழாவிற்கான செலவை ஏற்று  எடுத்து நடத்தினால் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு சுபிட்சமாக இருப்பர்.

 அந்த திருமண வைபவத்திற்கு புத்தகம் அன்பளிப்பாக கொடுப்பதாக விருப்பப்பட்டால் தாங்கள் அணுகலாம்.

Cell - 8124152666


மிகவும் குறைந்த விலையில் புத்தகம் ஆர்டர் செய்தால்  கொரியரில் அனுப்பி வைக்கப்படும் .

புத்தகத்தோடு தாங்கள் மஞ்சள் குங்குமம் தாலி சரடு மலர் வைத்து வழங்க ஏற்ற சுபிட்சமான புத்தகம்.

கீழ்கண்ட Amazon Kindle app link 👇 கிளிக் செய்து புத்தகத்தை படித்து பார்த்து தாங்கள் பிடித்திருந்தால் ஆர்டர் செய்யலாம்..

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha