பங்குனி விரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்குனி விரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 மார்ச், 2020

பங்குனி செவ்வாய் உப்பில்லாத விரதம் சிறப்பு

அம்பாளுக்கு உகந்த பங்குனி செவ்வாய்



பங்குனி மாதம் தெய்வீக மாதம். தெய்வங்களின் திருமணம் நிகழ்ந்த சிறப்பான மாதம் . அனைத்து தெய்வங்களும் ஆசி வழங்கும் அற்புத மாதம் .

புத்தாண்டின் வருகைக்கு ஒளி கொடுக்கும் மாதம் . இனிவரும் தொடக்கம் இனிதாக அமைய -மனதைத் தூய்மைப்படுத்தும் மாதம்



இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து உப்பில்லா விரதமிருந்து விளக்கேற்றி வந்தால் அனைத்து துன்பங்களும் விலகும்.

மனதில் ஒரு காரியத்தை நினைத்துக்கொண்டு துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று செவ்வரளி மாலை தானே சாற்றி..

 எலுமிச்சை பழ தீபம் ஏற்ற வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் விலகி சிறப்பும் உண்டாகும்.


வாழ்க்கையில்  விரக்தியோடு பேசுபவர்களுக்கு  இந்த பங்குனி செவ்வாய் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

மற்றவர் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் இருந்தும்..


தன் வாழ்க்கையில் உள்ள சங்கடம் நினைத்து மன நிம்மதி இல்லாது இருப்பார்கள் - அவர்களுக்கு இந்த பங்குனி செவ்வாய் விரதம் நல்ல பலனைக் கொடுக்கும். இனிமையான வாழ்வை பெறுவார்கள்.



விதியின் வசத்தால் சிக்குண்டு பொன்னான மனம் இருந்தும் போதுமென்று குணம் இருந்தும் -தவிக்கின்ற வாய்க்கு தண்ணீர் ஊற்றிய கைகள் இருந்தும்- அகத்தில் ஆயிரம் வலிகள் தாங்கி
 சிரிக்கின்ற மனம் இருந்தும்..

வழி தெரியாது தவிப்பவர்கள் இந்த பங்குனி மாதம் செவ்வாய் விரதம் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிந்திக்கும் தெளிவு இருந்தும்.. தொய்வில்லாத உழைப்பு இருந்தும்
சோதனையில் சிக்குண்டு விரக்தியோடு பேசுபவர் அனைவரும்..

 இந்த பங்குனி மாதம் வரக்கூடிய ஐந்து செவ்வாய்க்கிழமையும் உப்பில்லா விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடலாம் .


பங்குனி செவ்வாய் அன்று விரதம் இருக்கும் முறைகள்..

பங்குனி செவ்வாய் கிழமை அன்று நீராடி பூஜை அறையை அலங்கரித்து காலையில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு.

 அன்றைய தினம் முழுவதும் பால் பழங்கள் -உப்பில்லாத உணவுகள் ஜூஸ் பால் என எடுத்துக்கொள்வது சிறப்பு.

 அவல் -சேமியா- ஜவ்வரிசி பாயாசம் பச்சரிசி பொங்கல் என அனைத்திலும் உப்பு சேர்க்காது  உண்பது சிறப்பு.


மதியம் ராகுகாலம் 3 மணியிலிருந்து நாலரை மணிக்குள்- துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி ..

எலுமிச்சைபழ தீபம் ஏற்றி கோவிலில் அமர்ந்து துர்க்கை அம்மன் போற்றி பாடல்கள் பாடுவது சிறப்பு.


அகத் தூய்மை மற்றும் புறதூய்மையோடும்  துர்க்கை அம்மனை நினைத்து மனதார விரதம் இருந்து வழிபட்டால்..

அவர்களுடைய துன்பங்கள் விலகி வரப்போகும் சித்திரையில் இனிதாக இல்லம் முழுதும் நிறைவாக -குடும்ப ஒற்றுமை மேலோங்க -செல்வ கடாட்சம் சிறப்பாக -சிந்தை முழுதும் குளிராக தெய்வத்தின் அனுகிரகம் என்றும் நமக்கு கிடைத்து விடும்.


மேலும் கிடைக்கக்கூடிய அனுகூலமான பலன்கள்..


1 -நினைத்த காரியம் ஜெயமாகும்

2-திருமணத் தடைகள் நீங்கி அடுத்துவரும் சித்திரையில் திருமணம் நடக்கும் .

குழந்தைகளின் நலன் வேண்டி விளக்கேற்ற -குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 கணவன் மனைவி ஒற்றுமை I பலப்படும் .
மாங்கல்ய பலம் உண்டாகும்.

 நோய் நொடி அகலும்.

 தோஷம் -தீய சக்தி -மனக்குழப்பம் அனைத்தும் விலகும் தெய்வ கடாட்சம் உண்டாகும் உயர்ந்த எண்ணங்கள் உண்டாகும் தெய்வ அனுகிரகம் கிட்டும்.

பங்குனி மாதம் தெய்வீக மாதம். தெய்வங்களின் திருமணம் நிகழ்ந்த சிறப்பான மாதம் . அனைத்து தெய்வங்களும் ஆசி வழங்கும் அற்புத மாதம் .

புத்தாண்டின் வருகைக்கு ஒளி கொடுக்கும் இந்தப் பங்குனி மாதத்தில் 

 இனிவரும் தொடக்கம் இனிதாக அமைந்து திருமண வாழ்க்கை திகட்டாது மழலையின் அன்பு குறையாது வாழ்வின் வளம் அனைத்தும் கிடைத்து மகிழ்வோடு வாழ்ந்து வாழ்வில் பிறந்த பயனை காணுங்கள்

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


Copy rights at balakshitha

வெள்ளி, 8 மார்ச், 2019

பங்குனி திங்களே வருக -பங்குனி மாத விசேஷங்கள்


பங்குனி மாதம் வரக்கூடிய விசேஷ தினங்கள்


விசேஷ தினங்கள்  முன்கூட்டியே அறிந்துகொண்டு  தெய்வ பக்தியோடு வழிபட்டு அதற்கான பலனை அடையலாம்.

காரடையான் நோன்பு *
பங்குனி செவ்வாய்*
பங்குனி உத்திரம் *
ஸ்ரீராமநவமி *

என பல விசேஷ தினங்கள் இந்த பங்குனி மாதத்தில் வருகின்றது.



சிறப்பு -1 காரடையான் நோன்பு *அம்பாளை நினைத்து வழிபட கூடிய விசேஷ தினமாகும்.


சுமங்கலி பெண்கள் வழிபடக்கூடிய மிக அற்புதமான பூஜை இது ..

பாரம்பரியமாக நோன்பு எடுத்து படைத்து நோன்பு கயிறு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பூஜையாகும் .

நோன்பு எடுக்காதவர்கள் கூட இந்த நாளில்- முறைப்படி அன்றைய தினத்தில் தாலி சரடு மாற்றிக் கொண்டால் கணவனுடைய ஆரோக்கியம் ஆயுள் கூடும்.


வாழ்க்கையில் என்றும் தீர்க்க சுமங்கலியாக இருப்பதற்கு சுமங்கலிப் பெண்கள் இந்த பூஜையை செய்யலாம்.

பங்குனி உத்திரம் வழிபாடு மற்றும் மகத்துவம்🌹🍀🌹🍀🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_19.html

சிறப்பு -2 பங்குனி செவ்வாய் *என்பது துர்க்கை அம்மனுக்கு உப்பில்லா விரதம் இருந்து விளக்கேற்றி வழிபடும் ஒரு விசேஷ தினமாகும்.

பங்குனி உத்திரம்* முருகப்பெருமானுக்கும் ,


ஸ்ரீராமநவமி *திருமாலின் அவதாரமாகிய ராமபிரான் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ஒரு விஷேச தினமாகவும் ..

பங்குனி மாதத்தில் வருவது மிகச்சிறப்பு.


ஒரு விசேஷ தினம் வருகின்றது என்றால் -வருவதற்கு முன்பு ஓரிரு நாட்களில் தெரியும் போது விரதத்தை அவசரமாக கடைப்பிடித்து தெய்வத்தை வழிபடுவது என்பது சரியான நிறைவு கிடைக்காது ....

அதே சமயத்தில் அடுத்து வரும் தமிழ் மாதத்தில் வரக்கூடிய விசேஷ தினங்கள் என்ன என்பதை முன்பே தெரிந்து கொண்டால் ...

வரப்போகும் இந்த விசேஷ தினத்தில் நாம் இந்த தெய்வத்திற்கு எளிமையான என்னென்ன விரதத்தை கடைபிடிக்கலாம்..

எந்த கோவிலுக்கு சென்று வரலாம் - நாட்கள் ஒத்துவருமா ! 

நீண்ட தூரம் உள்ள கோவிலுக்கு போக முடியுமா !அல்லது அருகாமையில் உள்ள இந்த கோவிலுக்கு போய் வரலாம்.

அதற்கு என்ன முன்னேற்பாடுகள் செய்து கொள்ளலாம் -அல்லது வீட்டிலேயே ஒரு சின்ன பிரசாதம் செய்து  என் னென்ன ஸ்லோகங்கள் சொல்லி தெய்வத்தை வழிபடலாம்*

என முன்கூட்டியே மனதில் ஏற்பாடு செய்து தெய்வத்தை பயபக்தியோடு வணங்கும் போது -நாம் விரதம் இருப்பதற்கான முழுபலனும் கிடைக்கும் *என்பதால் ..

வரக்கூடிய விசேஷ தினங்களை முன்பே தெரிந்து கொண்டு -தெய்வத்தை வழிபட்டு அதற்கான பலனை பெறுவோம்


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


Copyrighs at Balakshitha