சித்திரை வருடப்பிறப்பு
"பங்குனி போய் சித்திரை பிறக்கட்டும்.
ஏதாவது ஒரு நல்ல வழி கண்டிப்பாக பிறக்கும்" என பெரியவர்கள் சொல்வதுவெறும் வாய் வார்த்தை கிடையாது .முழுக்க முழுக்க உண்மை தான்
அந்த நம்பிக்கையானது உண்மையாக வேண்டும் என- விரும்பினால் மட்டும் போதாது .. அதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி நடந்தால்
அதற்கான பலனை நிச்சயம் பெறலாம்..
சித்திரை வருடப்பிறப்பு அன்று விரதமுறை
சித்திரை வருடப்பிறப்பு அன்று காலையில் எழுந்ததும் நீராடுவோம் .
தமிழ் வருடத்தின் முதல் நாள் வாழ்க்கை சுபிட்சமாக தொடர வேண்டும் -என தெய்வத்தை வேண்டி நீராடுதல் தொடரலாம்.
நீராட வேண்டிய மங்களகரமான பொருட்கள்..
1 - வாசனை மிகுந்த மலர்கள்*
2 - வேப்பிலை
3- மஞ்சள் தூள் *
4- அருகம்புல்*
5 - பசும் பால்*
என நீராடுகின்ற நீரிலே இட வேண்டும். முதல் நாளே இந்த மங்கல பொருட்களை ஏற்பாடு செய்து கொண்டு மறுநாள் பிரம்ம முகூர்த்தம்* என்று சொல்லக்கூடிய 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் மங்கள பொருள்கள் கலந்த
நீரிலே.. நீராட வேண்டும்*
இந்த மங்களகரமான பொருட்களை சேர்த்து நீராடுவதற்கான காரணம்..
வருடம் முழுவதும் .. மலர்களை -போன்று வாழ்க்கை வசந்தமாக ,வேப்பிலையின் மணம் போன்று நோய்நொடி இல்லாத வாழ்க்கையாக,
விநாயகருக்கு பிடித்தமான அறுகம்புல் போன்று- காரியங்கள் அனைத்தும் ஜெயமாக, அபிஷேகத்திற்கு உகந்த பசும் பால் போன்று -வெண்மையான
மனம் *நற்சிந்தனையாக * மஞ்சள் பொடி போன்று -வாழ்க்கை மங்களகரமாக வாழ்க்கை அமைவதற்கு தெய்வத்தை வேண்டி நீராட வேண்டும் .
நீராடுதலினால் ஏற்படக்கூடிய பயன்கள்..
எந்த பாவமும் செய்யாது ஏன் இந்த சோதனை ! என விரக்தி அடைந்தவர்களுக்கு இந்த நீராடுதல் நல்ல பலனை தரும் .
நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு -இந்த நீராடுதல் நல்லபலனை தரும்.
திருமணத்தடை நீங்க -வறுமை நீங்கி செல்வம் பெற -மழலை செல்வம் பெற -நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஜெயமாக *இந்த நீராடுதல் நல்ல பலனைத் தரும் .
தோஷம் அனைத்தும் விலகி மங்களம் உண்டாக - இந்த நீராடுதல் நல்ல பலனை தரும்.
வருடப்பிறப்பு அன்று நீராடுவதற்கான நேரம்.
பிரம்ம முகூர்த்தம் * என்று சொல்லக்கூடிய காலை 4 -30 மணியிலிருந்து
ஆறு மணிக்குள் நீராடுவது சிறப்பு*
பிரம்மமுகூர்த்தத்தில் 48 நாட்கள் வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும் * என்பது எல்லோருக்கும் தெரிந்ததே .. அந்த 48 நாட்கள் விரதமிருந்து அடைய வேண்டிய பலன் அனைத்தும் இந்த சித்திரை மாதத்திலே -மங்கலபொருட்களை கொண்டு நீராடும் -இந்த ஒரு நாள் நீராடுதலில் கிடைத்துவிடும்.
என அறிந்து சித்திரையில் நீராடி அதற்கான பலனை பெறுவோம்.
விட்டுக் கொடுப்பதில் வீம்பு எதற்கு.. விடாது முயற்சி செய்தால் இலக்கு நமக்கு வீண் பிடிவாதம் விலக்கி ஒதுக்கு... விரைந்து வரும் நல் வாழ்க்கை உனக்கு.
என்பதை மனதில் கொண்டு சித்திரை வருடப் பிறப்பை இனிதாக துவங்கலாம்.
தமக்கு மட்டுமன்றி நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஒளி கொடுக்கும்
தீபத்தின் தெய்வீக ஒளி * போல -நம் மனதில் இருக்கும் அறியாமை எனும் இருளை நீக்கி இனிதாக வாழ்வோம்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html
திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html
வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇
சொந்தமாக வீடு மனை அமைய தெய்வீக வழிபாடு🙏🌹👇👇
Copy rights at Balakshitha.