கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கண்களால் காண கோடி கோடி புண்ணியம்
தமக்கை மீனாட்சி அழைப்பு விடுக்கின்றாள்.. அடுத்த நொடி புறப்பட்டார் எம்பெருமான் மதுரையை நோக்கி.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண காட்சிதனை ஆனந்தமாய் காண எம்பெருமான் புறப்பட்டார்.. அதை காண யாமும் புறப்படுவோம் பெருமானின் தரிசனம் பார்க்க பார்க்க கோடி கோடி புண்ணியமே.
கள்ளழகர் எனும் திருக்கோலம் எதிர்சேவை என காண்போர் கண்கள் மகிழ்ந்திடவே - புறப்பட்டார் புகழ் மணக்கும் மதுரைக்கு
பெருமானின் தரிசனம் பார்க்க கோடிகோடி புண்ணியமே.
பல பல மண்டபம், ஆனந்த சயனம் அழகிய சயனம் ,அமிர்தயோகம் அனைத்தும் யாம் பெறவே என்ன தவம் செய்தேனோ ! கள்ளழகர் தேரில் பவனிவரும் கோலம் நாம் காண கோடி கோடி புண்ணியமே.
அம்பலக்காரர் மண்டபத்தில் பெருமானின் தரிசனம், புண்ணிய தரிசனம், பூரிப்பு தரிசனம், பரவச தரிசனம் பார்க்க பார்க்க கோடி கோடி புண்ணியமே.
வானவேடிக்கையில் மயங்காதோர் உண்டோ ! கூத்து கண்டு களிக்காதோர் உண்டோ! கொட்டும் மேளங்கள் கண்டு மகிழாதோர் உண்டோ! பெருமானின் தரிசனம் பார்க்க பார்க்க கோடி கோடி புண்ணியமே.
ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடிக்கொடுத்த மலர்க்கொடியாள் சூடிக்கொடுத்த மாலைதனை தன் கழுத்தில் சாத்திக்கொண்டு...
ஆண்டாள் நாச்சியாரின் அன்புக்கு பாத்திரமாய் கள்ளழகர் களிப்புடனே பவனிவர - பெருமானின் தரிசனம் புண்ணிய தரிசனம் பார்க்கப்பார்க்க கோடி கோடி புண்ணியமே.
வைகை ஆறு வரவேற்க ..வெட்டிவேர் சப்பரத்தில் ,மைசூர் மண்டபத்திலோ ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் சிரித்தமுக கள்ளழகர் தரிசனம் நாம் காண கோடி கோடி புண்ணியமே.
வைகை ஆற்றில் கள்ளழகர் பெருமானை , மதுரை ஸ்ரீ வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்க..
வைபவமோ வைகையாற்றிலே ,பக்திப் பரவசமோ ஆனந்த அலை
மோத , இருகரம் கூப்பி 'கோவிந்தா' எனும் நாமம் நாம் கூற -பெருமானின் தரிசனம் பார்க்க பார்க்க கோடி கோடி புண்ணியமே.
மதுரையில் இவ்விழா மாபெரும் திருவிழா காணக் கிடைக்கா பெருவிழா வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா -பெருமானின் தரிசனம் காண்போர் கண்களுக்கு கோடி கோடி புண்ணியமே.
ஏழுமலையான் எம்பெருமான் கள்ளழகர் மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் விழா இதனை நாம் நம் இரு கண்களால் கண்டு சேவித்து பாவம் அனைத்தும் விலகி புண்ணியங்கள் பலகோடி பெற்று பிறந்த பயனை அடைந்தேன்.
தட்டுத் தடுமாறும் குழந்தையென நானிருந்தேன் பெருமானே! வைகையாற்றில் திருவிழா கண்டேன். மெய்யுருகி பெருமாளே நின் திருவடி பற்றி சேவித்தேன். அகத்தில் நினையே பூஜித்தேன். அகக் கண்ணை நீ திறந்தாய். இது போதும் ஐயனே !நான் கண்ட இம் மகிழ்ச்சி, பேரானந்தம் அனைவரும் அடைவதற்கு வழி செய்வாய் பெருமானே.
பெருமானே கோவிந்தா நின் பாதமே சரணம் சரணம் சரணம் .
திருப்பதி ஏழுமலையானின் தரிசனம்
https://balakshitha.blogspot.com/2019/09/blog-post_20.html
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்.
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
ஆர்டர் செய்தால் புத்தகங்கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde
சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கான யோகம் பெறுவதற்கான பத்து தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசான் kindle app ல் படித்து பயன் பெறவும்🙏🌹👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at Balakshitha