விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல் மாலையின் மகிமை தனை காண்போம்..
முக்கண் முதல்வனாய்-மும் மூர்த்தியின் அரசனாய்- முக்கோடி தேவர்களின் தலைவனாய்- முழுமுதல் கடவுளாய் காட்சிதரும் யானைமுக கணபதிக்கு ஆனந்தம் கொடுக்கக்கூட அற்புதமான மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம்.
விரைவில் திருமணம் நடைபெற சங்கடகரசதுர்த்தி விரதம் 🙏🌹🍀👇
ஓம் எனும் பிரணவ மந்திரத்தைை நம் மனம்் எப்பொழுதும சொல்லிக்கொண்்டே இருக்க வேண்டும் . வாழ்வு தழைக்கும் . வளங்கள் நிறையும் . பனி போல துன்பங்கள் விலகிிவிடும்.
மனமெல்லாம் மகிழ்ந்திடவே ஓராயிரம் புண்ணிய பலன் அனைத்தும் நான் பெற்றேன்' எனும் மிகப்பெரிய மகிழ்ச்சி நிறைந்த நிறைவு கணபதியை இரு கைகளையும் சேர்த்து வணங்கும்போது நிச்சயம் உண்டாகும்.
அதுபோலவே விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனைக்கு உரிய பொருள் வாழ்வினிலே குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய அருகம்புல்.
அருகம்புல் மாலை விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது என்பதற்கும் மிக அழகான ஒரு தத்துவம் உண்டு.
எமனுடைய மகன்தான் அனலாசுரன்- மிகவும் ஆணவம் கொண்டு தேவர்களை துன்புறுத்துகிறான்...
அவனை அழிப்பதற்காக தன்னுடைய பூதகணங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு விநாயகப் பெருமான் சென்று போர் புரிய..
தன்னுடைய அனல் எனும் தீயினால் பூதகணங்கள் அனைவரையும் அழித்து விடுகின்றான் அனலாசுரன்.
அதனால் விநாயகர் கோபம் கொண்டு அனலாசுரனை விழுங்கிவிடுகின்றார். ஆனால் அனலாசுரனின் அனலின் வெப்பத்தை தாங்க முடியாமல் விநாயகப்பெருமான் திண்டாடுகிறார்.
கங்கை நீரை குடம் குடமாக கொண்டுவந்து அபிஷேகம் செய்தும் அனல் குறையாமல் போக -முடிவிலே..
ஒரு முனிவர் அருகம்புல்லை விநாயகரின் தலையில் வைக்க- விநாயகரின் எரிச்சலும் அடங்கியது .
வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த அறுகம்புல்லின் சிறப்பினை அனைவரும் அறிந்து வழிபட வேண்டும்- என்பதற்காக..
தம்மை வழிபடும் அனைவரும் அருகம்புல் மாலையை எனக்கு சாத்தி வழிபட்டால் -வெப்பமெனும் துன்பத்தை நீக்கி குளிர்ச்சியான இன்பகரமான வாழ்க்கையை கொடுத்து அருள் புரிவேன்' என அருள் புரிந்தார் என்பதே அறுகம்புல்லின் வழிபாட்டிற்கான ஐதீகமாகும்.
விநாயகர் சதுர்த்தி விரத முறைகளும் அதற்கான பலன்களும் 🌹🍀🌹👇👇
அனைவருமே சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை தனை முழுமுதல் கணபதிக்கு சாற்றி..
'ஓம்' எனும் மந்திரத்தை 108 முறை ஓதுகையில்- துன்பம் எனும் வெப்பம்தனை போக்கி குளிர்ச்சியான மகிழ்வை நமக்கு அளிப்பான் முழுமுதல் கணபதியே.
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம் 64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்.
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
ஆர்டர் செய்தால் புத்தகங்கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால் நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும். 📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
எந்த காரியமும் தொடங்கினாலும் விநாயகரை தான் முதலில் வணங்க வேண்டும்.
நாம் ஒரு காரியத்தை மனதில் நினைக்கின்றோம்.. அந்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்றால் முதலில் விநாயகரை தான் வணங்க வேண்டும்.
நான் சொல்லும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.5 வாரத்திலேயே உங்களுக்கு அனுகூலமான பலன் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.
அமாவாசை முடிந்த வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கலாம். அல்லது சங்கடகரசதுர்த்தி அன்றும் ஆரம்பிக்கலாம்.
வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் நீங்கள் நினைக்கும் காரியம் வெற்றி அடைய கூடிய அற்புதமான நேரம் .
முதல் நாளே பூஜை அறையில் பூ போடுவதை தவிர மற்ற எல்லா வேலைகளையும் முடித்து வைத்து விடுங்கள் .
மறுநாள் ஸ்நானம் செய்த பிறகு பூஜை அறையில் மலர்களால் அலங்கரித்து ஐந்து முக விளக்கை ஏற்றி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வாசனை திரவியங்கள் வத்தி சாம்பிராணி தெய்வ பாடல்கள் அனைத்தும் தொடங்கிய பிறகு..
ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள் .வெற்றிலையின் மேல் நீர் தெளித்து -பூஜை அறையில் ஒரு சின்ன மனைப் பலகையின் மேல் வைத்து ..
சிறிது மஞ்சளை தூவி அதன் மேலே மஞ்சள் பிள்ளையார் பிடித்து வையுங்கள் .நீங்கள் நினைத்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என வேண்டிக் கொண்டு ..
பூ வைத்து வெற்றிலை பாக்கு தாம்பூலம் ஒரு இனிப்பு சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி வைத்து படைக்கலாம் .
வடக்கு நோக்கி மனையிலே அமர்ந்து 'ஓம் கம் கணபதயே நமஹ' எனும் கணபதியின் நாமத்தை 108 முறை கையில் உதிரி மலர்களோடு சொல்லுங்கள் .
பிறகு அந்த மலர்களை மஞ்சள் பிள்ளையாருக்கு அர்ச்சனையாக தூவி உங்கள் வேண்டுதலை வைத்து பூஜையை நிறைவு செய்யலாம்.
அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து அதேபோல படைத்துக்கொண்டு வந்தால்..
ஐந்து வாரத்திலேயே உங்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும்.
விரைவில் திருமணம் கைகூட சங்கடகரசதுர்த்தி விரதம் 🙏🌹👇👇
தொடர்ந்து ஒன்பது வாரம் கண்டிப்பாக வழிபடவேண்டும்.
நாம் நினைக்கும் காரியங்களை அனைத்தும் சுபமாக வெற்றியாக முடிவதற்கு விநாயகப் பெருமானை வழிபடுங்கள் .
சொந்தமாக வீடு மனை வாங்குவதற்கான 10 வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள் 🌹🍀🌹👇👇👇
அனைத்தும் நல்ல விதமாக முடித்து வைப்பார் விநாயகப்பெருமான்.
கணேசன் அழகு மந்திரத்தில் -கணேசன் நாமம் மனதினில் -வாழ்க்கையின் ரகசியம் வாக்கினில்- வருகின்ற சோதனை விடப்படும் விரைவினில் என உணர்ந்து ஸ்ரீ கணேச நாமம் உச்சரித்து வாழ்க்கையில் சிறப்பை காணலாம்.
ஆவணி மாதத்தில் வரக்கூடிய விநாயகர் சதுர்த்தி வணங்கும் வழிமுறைகள்
மனம் இனிக்க -மங்கல நிகழ்ச்சிகள் அனைத்தும் வீட்டினிலே இனிதேற-மாவிலை தோரணங்கள் மலர்களோடு சேர்ந்து இசைந்தாட நாதஸ்வர இசையோ கானமழை பொழிந்தாட -விநாயகப்பெருமானை இந்த விநாயகர் சதுர்த்தியிலே வருக வருக என வரவேற்போம்.
வருடம் முழுவதும் நாம் பெருமானை தேடி கோவிலுக்கு செல்கின்றோம் ..ஆனால் விநாயகப்பெருமானே வருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று நம் இல்லம் தேடி வருகின்றார் .
எப்படிப்பட்டகோலத்திலே வருகின்றான்! ஆடம்பரம் எதுவுமின்றி எளிமையான கோலத்திலே களிமண் என சொல்லக்கூடிய மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் பெருமானாக இல்லத்துக்குள் நுழைகின்றார்.
அதற்கான தத்துவத்தையும் மிக அழகாக கூறுகின்றார் ..
'மனிதபிறவியில் பிறந்த நாம் என்றாவது ஒரு நாள் முடிவு மண்ணிலே -என்பதை உணர்ந்து அகங்காரம் ஆணவம் அனைத்தையும் விடுத்து நல்லொழுக்கம் பக்தியோடு வாழ்ந்து முடிவில் என்னோடு ஐக்கியமாகுங்கள் 'என்று மிக அழகாக உணர்த்தவே களிமண் கோலத்தில் காட்சி தருகின்றார் விநாயகப் பெருமான் .
நினைத்த காரியம் ஜெயமாக மஞ்சள் பிள்ளையார் வழிபாடு🙏🌹🍀🌹👇👇
விநாயக பெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர்கள் - தும்பைப்பூ செம்பருத்தி மலர்- சங்குபுஷ்பம் எருக்கம்பூ -மாவிலை -அருகம்புல் வில்வ இலை -இவைகளால் விநாயக சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் ஆனந்த வாழ்க்கைக்கு அருள்புரியும் அனந்தனவன் அருள் பெற்று சிறப்புடன் வாழ்ந்திடவே ஏற்புடைய தருணம் இது.
அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த விநாயகப் பெருமானின் அவதார தினம் இன்று ..
விநாயகருக்கு பிடித்தமான நெய்வேத்தியம்- சர்க்கரை -கரும்பு அவரை- துவரை -பழங்கள் -பருப்பு-நெய்- இளநீர் -தேன் -பயிறு அப்பம் -பச்சரிசி புட்டு -வெள்ளரி பழம் -கிழங்கு -அன்னம் -எள்- பொரி அவல்- கொழுக்கட்டை -கடலை முதலியன வைத்து படைத்தால் விநாயகர் மனம் நிறைந்து வாழ்த்துவது மட்டுமல்லாது நாம் கேட்கும் பலன்கள் அனைத்துப் கொடுக்கும் நேரம் இது.
அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த விநாயகப் பெருமானின் அவதார தினம் இன்று..
திருமணம் விரைவில் நடைபெறுவதற்கான வழிபாடு🌹👇👇
பச்சரிசிமா எனும் உடல் தனிலே சிந்தையை தெளிய வைக்கும் எள்ளோடு - தெய்வீகம் எனும் தேன் பாகு மனதோடு கூடிய பூரணம் உள் வைத்து கொழுக்கட்டை தனை செய்து நான் வைத்து படைத்தேன் என் பெருமானே !கொழுக்கட்டைப் பிரியனே ! நீ எனக்கு துன்பமில்லா இன்பவாழ்வுதனை கொடுப்பாயே' என வேண்டுகின்ற நேரமிது..
விநாயகர்பெருமானின் அவதார தினம் இன்று.
செப்பு தகட்டில் வரைந்து விநாயகர்யந்திரம் -விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து பூஜை செய்து வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டனால் தோஷங்கள் திருஷ்டிகள் எதுவும் நெருங்காது என்பதால் ..
தோஷங்கள் அனைத்தும்
விலகிடவே-
கண்திருஷ்டி இல்லாது காத்திடவே தெய்வீக சக்தி வீட்டினில் நிறைந்திடவே சுபமான சுகம் அனைத்தும் கொடுப்பாயே. என விநாயக பெருமானை வேண்டி அவ்வாறு செய்து அதற்கான பலனையும் பெறலாம்.
அருகம்புல் மாலைக்கு ஒரு தனி சிறப்பு உண்டு ..
ஆணவம் கொண்ட எமனுடைய மகன் அனலாசுரனை விநாயகரும் கோபம்கொண்ட விழுங்கிவிட அனலின் வெப்பம் தாங்காது விநாயகரும் திண்டாட- கங்கை நீரால் குடம் குடமாக அபிஷேகம் செய்தும் பலனில்லாமல் போக..
முடிவில்அருகம்புல்லே வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை விநாயகருக்கு அளித்தது. அருகம்புல்லின் சிறப்பினை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக-
தம்மை வழிபடும் பக்தர்கள் அனைவரும் அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் வெப்பமெனும் துன்பத்தை நீக்கி குளிர்ச்சியான இன்பகரமான வாழ்க்கையை கொடுத்து நான் அருள் புரிவேன் என்கின்ற தத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்துகின்றார் விநாயகப்பெருமான் .
அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த விநாயகப் பெருமானின் அவதார தினம் இன்று..
பெருமானுக்கு மிக பிடித்தமான மந்திரம் ஸ்ரீ கணேச மந்திரம்.. விநாயகர் சதுர்த்தி அன்று ஐந்துமுக விளக்கேற்றி ஒளிர்கின்ற சுடர் தனிலே ..
விநாயகப்பெருமானின் முன்பு வடக்கு நோக்கி அமர்ந்து சொல்லக்கூடிய ஒரு முக்கியமான ஸ்லோகம் தான் ஸ்ரீ கணேச மந்திரம் தொடங்குகின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கக்கூடிய ஒரு மந்திரமே ஸ்ரீ கணேச மந்திரம் .
வாழ்க்கையில் இருள் நீக்கி ஒளியை கொடுக்க கூடிய மந்திரமே ஸ்ரீ கணேச மந்திரம் .ஓம் எனும் மந்திரத்துடன் விநாயகரின் திருநாமங்கள் சேர்ந்து உச்சரிக்கும் பொழுது -
அந்த தெய்வீக அதிர்வலைகள் நம் ஆத்மாவின் உள் சென்று தீய சக்திகள் விலகி நல்ல சிந்தனை கிடைத்து நேர்வழி பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கிடைக்கின்றது.
ஆதலால் கணேசன் துதிகள் அனைத்தும் விநாயகர் சதுர்த்தி அன்று பாடினாலும் -ஸ்ரீ கணேச மந்திரத்தையும் சொல்லி விநாயகனின் அருள் பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம் .
நம்முடைய நல்ல மனதில்
இறைவன் இருக்கின்றான் .
நாம் காட்டும் அன்பிலே
இறைவன் வாழ்கின்றான் .
நாம் காணும் அமைதியிலே
இரண்டற கலக்கின்றான்.
தான தர்மத்திலே நம்மோடு இறைவனும் இசைகின்றான். முடிவிலே நாம் விரும்பும் மோட்சத்தையே நமக்கு தருகின்றான்.
நம்முடைய மனம்-சிந்தை -புலன் அனைத்தும் கணேசனின் திருநாமம் பாடி விநாயக சதுர்த்தியை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வோமே.
ஞானத்தையும்- மோட்சத்தையும் நமக்கெல்லாம் தந்து தலைவன் ஆகின்றான் கணபதியே-
கணபதி யானை முகத்தவனாக காட்சி தந்தமைக்கு உரிய வரலாறு தனை காண்போமே..
பண்பிலே சிறந்தவனாய் நல்லொழுக்கம் நிறைந்தவனாய்..
தெய்வ பக்தி மிக்கவனாய் மகேசுவரன் என்றொரு அரசனோ பிரகஸ்பதி தேவரை தினமும் அன்புடன் பூஜித்து வர
பூஜையை ஏற்று பிரகஸ்பதி தேவர் மன்னனுக்கு காட்சி தந்து வரம் ஒன்று கொடுக்கின்றார்
"எம்முடைய பாதங்களில் அன்போடு வணங்கிய உம்முடைய சிரம் அதாவது தலை தேவர்கள் -முனிவர்கள் பெரியோர்கள் -அனைவராலும் வணங்கப்படுக"என்று மகிழ்ந்து வரம் கொடுக்க -
மகிழ்ந்த மன்னனோ இந்த திருவாக்கு எப்போது பலிக்கும் ? "என்று ஆர்வத்தோடு கேட்க -"நீ எப்போது யானை பிறவியில் பிறக்கிறாயோ அப்போது தப்பாமல் பலிக்கும்" என்று கூறி மறைகின்றார்.
சிலகாலம் கழிந்தன -ஒரு நாள் பரிவாரங்களுடன் - மன்னனோ உலா வருகையிலே ..
எதிரே வந்த நாரதரை கவனியாது போகையிலே -
கோபம்கொண்ட நாரதரோ" தன்னை மதியாமல் சென்று விட்ட காரணத்தால் -மறுபிறப்பில் யானையாக பிறந்து 'கயமுகாசுரன் ' என அழைக்கப்பட்டு ..
சிவபெருமான் அருளால் சிரமறுபட்டு அவன் அருள் பெறுவாயாக" என சபித்தார் .
அந்த மன்னன் மகேஸ்வரனே அடுத்த பிறவியில் 'கயமுகாசுரன்' ஆக பிறந்து -சிரமறுக்கப்பட்டு விநாயகப் பெருமான் தம்முடைய திருமேனியில் சேர்த்து காட்சி கொடுக்கின்றார்.
யானை முகனாக காட்சி அளித்ததால் யானை முகத்தவன் என்றும் 'கஜானனர்'
என்றும் பெயர் பெற்றவர் ஆகிறார்.
யானை முகன் நமக்கு உணர்த்துகின்ற கருத்தானது..
அனைவரிடத்திலும் அன்பு கொண்டு
அமைதிக்கு பெயர் கொண்டு
பண்புக்கு மனதில் இடம்கொண்டு -
புண்ணியபலன்அனைத்தும் தான்
கொண்டு -தெய்வத்திற்கே அர்ப்பணம் என மனம் கொண்டு..
'வாழ்கின்ற இப்பிறவி _நற்பிறவி எனும் நாம் செய்த தர்ம புண்ணிய பலன் அனைத்தும் -வீண் போகா அடுத்து வரும் அனைத்து பிறவியுமே-
ஆனந்தம் ஆட்கொண்டு பிறவி பயனை அடைந்து சிறப்பதற்கு ஆண்டவனே வழி வகுப்பான்' எனும் தத்துவத்தை மிக மிக அழகாக உணர்த்துகின்றான் கணபதியே.