நம் குடும்பத்திற்காக நாம் உழைக்கின்றோம் ஒருநாள் சோர்ந்து படுத்தால் கூட எல்லா வேலைகளும் அப்படியே நின்று விட்டால் நமக்கு தெரியும். 'இந்த வீட்டை கிளீன் பண்ணனும் -சமைக்கணும் -வீட்டில் உள்ளவர்களை கவனிக்க வேண்டும்' எனும் பல கவலைகள் ..
'எப்பொழுது உடம்பு சரியாகும்- அதற்கு என்ன செய்யலாம்- என்ன மாத்திரை போட்டு சரிசெய்யலாம்' என்று யோசிப்போம் .
அது மேலும் உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தாலும் தற்சமயம் நிவாரணத்திற்கு அவசியம் என போட்டுக் கொள்வோம். அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
எப்பொழுதுமே நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே- நாம் நம்முடைய உடலை சரி செய்து கொள்ளலாம் -என்பதை தெரிந்து கொள்வோம்.
உடலை பராமரிக்க வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களுக்கான வார அட்டவணை
1- எலுமிச்சை பழ ஜூஸ்
எலுமிச்சை பழச்சாற்றுடன் ஒரு துண்டு இஞ்சி சாறு- தேன் கலந்து குடிக்கலாம் .இதனால் ஏற்படும் பலன்கள்..
ரத்தத்தை சுத்தப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். பித்தம் -களைப்பு -சோர்வு என அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கொடுக்கும் .
வயிற்றுக் கோளாறுகள்- வாய்வுத் தொல்லை - செரிமான பிரச்சனை அனைத்திலும் இருந்து நிவாரணம் பெறலாம்.
உடல் நலமாக இருந்தால் மனம் நலமாக இருக்கும் -மனம் நலமாக இருந்தால் சுறுசுறுப்பு தானாக வரும். சுறுசுறுப்பும் தானாக வந்தால் அனைத்திலும் வெற்றி காண வேண்டும் எனும் ஆவல் பிறக்கும். ஆவல் பிறந்துவிட்டால் வாழ்க்கையில் வெற்றி என்றும் நிச்சயமே.
ஆதலால் உடல் நலத்தைப் பேணிக் காத்து வாழ்க்கையில் வளத்தைக் கண்டு- என்றென்றும் சிறப்பை அடையலாம்.
சமூக விலகல் உள்ள தனித்திருக்கும் இந்த சூழலில் -சுடுதண்ணீர் எப்பொழுதும் குடிப்பது நல்லது. வெதுவெதுப்பான சுடுநீரில் எலுமிச்சை பழ ஜூஸ் எடுத்துக்கொள்ளவும்.
.
ராஜகனி என அழைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இஞ்சியும் தேனும் சேர்த்து பருகி வர வெயில் காலத்தில் தப்பித்து கொள்ளலாம்.
நாவின் சுவை யறிந்து நோய் நொடி
பித்தமெனும் களைப்பொடு
சோர்விடுத்து புத்துணர்ச்சிபெற்று பொலிவோடுவாழ் வாங்கும்
வாழ்வினரே.
Copyrights at balakshitha