6 வயது வரை ஒரு குழந்தைக்கு ஒன்றும் தெரியாது..சுட்டியாக விளையாடும்- அங்குமிங்கும் ஓடும் அம்மாவை தன் பக்கத்திலேயே இருக்கச் சொல்லி அழும். அப்பாவோடு வெளியே நானும் போவேன் என்று அடம் பிடிக்கும்.
ஆனால் 6 வயதிற்கு மேல் அந்த குழந்தையின் பாவனை செய்து மாற ஆரம்பிக்கும் .
நல்ல மெச்சூரிட்டி தமக்கு வந்தது போல ஒரு பாவனை பண்ண ஆரம்பிக்கும். எல்லோரையும் அதிகாரம் பண்ண ஆரம்பிக்கும் .
நாம் பேசுகின்ற பேச்சை மற்றவர்கள் கவனிக்கிறார்களா ! என்று ஆர்வத்தோடு கவனிப்பார்கள்.
அப்பொழுதும் கவனிக்கவில்லை என்றால் முகமெல்லாம் கவலையோடு வைத்துக் கொண்டு -பேசாமல் இருப்பார்கள்.
அப்பொழுதாவது நம்மை கவனிப்பார்கள் -என்று ஒரு நம்பிக்கை .அப்போதும் நாம் கவனிக்க வில்லை -என்றால் கோபம் வந்துவிடும்..
எந்தப் பொருளையாவது தூக்கிப் போடுவார்கள்- இல்லை என்றால் காரணமில்லாமல் அழுவதும் சாப்பாடு வேண்டாம் என பிடிவாதம் பிடிப்பார்கள்.
அப்போதுதான் குழந்தையின் பிடிவாதம் ஆரம்பமாகின்றது. அதுவே படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகபிடிவாதமாக மாறி கடைசியில் வீம்பு என்று சொல்லக்கூடிய அந்த நிலைமைக்கு குழந்தைகளின் மனநிலை மாறிவிடும்
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
6 வயதிலிருந்து தான் குழந்தைகளின் அறிவை தூண்டுகின்ற மூளையின் நரம்புகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும்.
அதிகமாக பிடிவாதம் செய்கின்ற குழந்தையின் மனதை மாற்ற கூடிய ஒரு முக்கியமான விஷயங்கள் பார்ப்போம்..
நம்முடைய குழந்தையின் மனம் மென்மையானது. பிடிவாதம்- கோபம் இல்லாத நல்ல குணத்தோடு வளர வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெற்றோர்கள் அனைவரும் மிக மிக முக்கியமாக கவனிக்க..
குழந்தைகளுக்கு செடி வளர்க்க கற்றுக்கொடுங்கள் .செடிகளுக்குஎப்பொழுதும் ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு. குழந்தைகளின் மனநிலையை கிரகிக்கக் கூடிய சக்தி பசுமையான செடிகளுக்கு உண்டு .
குழந்தைகளுக்கு பூச்செடிகள் வளர்ப்பதற்கு கற்றுக்கொடுங்கள். அதற்காக பெரிய பூந் தோட்டம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது ..
நான்கு அல்லது ஐந்து பூந்தொட்டிகள் இருந்தால் போதும் .அதை பராமரிக்க கற்றுத் தாருங்கள் .தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சொல்லித்தாருங்கள் பூ பறிப்பதற்கு கற்றுக்கொடுங்கள் அந்த செடியின் அருகில் அமர்ந்து அந்தக் குழந்தையோடு மனம் திறந்து பேசுங்கள்
மிகவும் சந்தோஷமாக மிகப்பெரிய மாற்றத்தோடு இருப்பதை நாம் கண்டிப்பாக பார்க்கலாம் .
6 வயதில் நாம் எதைச் சொல்லிக் கொடுத்தாலும் அப்படியே குழந்தைகள் மனதில் பதிந்துவிடும்.
குழந்தைகளின் பேச்சுக்கு உற்சாகம் கொடுங்கள் .ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் குழந்தை சொல்லும்போது அதை கவனமாக கேளுங்கள்.
மேலும் மேலும் உற்சாகம் கொடுக்கக்கூடிய வார்த்தைகளை பேசுங்கள் .எந்த விஷயத்தில் ஆர்வத்தோடு இருந்தாலும் அதை ஊக்கப்படுத்துங்கள் .
வேலை வேலை என்று இருந்து விடாமல் தன் குழந்தைகளோடு அறிவூட்டும் விதத்தில் விளையாட்டுகளை சொல்லிக்கொண்டு -உபயோகமாக நேரத்தை மாற்றங்கள் .
உங்கள் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக வருவதற்கு பெற்றோர்களின் பராமரிப்பு மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து குழந்தைகளின் நலனை பேணி காப்போம்.
Copy rights at balakshitha