சங்கடகர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை..
சங்கடங்கள் அனைத்தும்
தீர்ப்பவன்
விநாயகப்பெருமான் *
விரைவில் திருமணம் நடக்க சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇👇
விரைவில் திருமணம் நடக்க சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇👇
அவனே முக்கண் முதல்வனாக முப்பெரும் தலைவனாக
திகழ்பவன் *
அருகம்புல் மாலை சாற்றினால் ஆனந்தம் அடைபவன்*
சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பவர்களுக்கு அழியாத செல்வத்தை கொடுப்பவன் *
வேலை ஆயிரம் இருப்பினும் அரைமணிநேரம் போதுமே!
கணபதியை நினைப்பதற்கு ..
இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப்பெருமானை
எளிமையான முறையில்
வழிபடும் முறையை அறிவோமே..
சிறப்பு -1 *
தலையிலிருந்து
பாதம் வரை
ஸ்னானம் செய்து
புனிதம் அடைதல் *
சிறப்பு- 2 *
குரோமம் -காமம்
விடுத்து மனம்
முழுதும் அமைதி
வேண்டி சாத்வீகமான
உணவு எடுத்து
கொள்ளுதல்*
சிறப்பு- 3 *
மாலை வேளையில்
புதிய மலரால்
அலங்கரித்து ஐந்து முக
விளக்கை ஏற்றி
அருகம்புல்லும்
பால் கற்கண்டு வைத்து
அகமும் புறமும்
ஒளிமயமாக இருக்க
வேண்டும் என வேண்டி
விளக்கை ஏற்றுதல்*
சிறப்பு -4 *
வடக்கு நோக்கி
மனையிலே அமர்ந்து
கீழ்க்காணும் மந்திரத்தை
சொல்லி நம் மனதில் இருக்கும் வேண்டுதல்களை வைத்தல்*
ஸ்ரீ கணேஷ மந்திரம் *
.
ஓம் சுமுகாய நம*
ஓம் ஏக தந்தாய நம*
ஓம் கபிலாய கஜகர்ணிகாயநம
ஓம் லம்போதராய நம*
ஓம் விகடாய நம *
ஓம் விக்னராஜாய நம *
ஓம் கணாதிபாய நம *
ஓம் தூமகேதவே நம *
ஓம் கணாத்யஷாய நம*
ஓம் பாலசந்திராய நம*
ஓம் கஜானனாய நம *
ஓம் வக்ர துண்டாய நம*
ஓம் ஸூர்ப்பகர்ணாய நம*
ஓம் ஹேரம்பாய நம*
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம*
ஓம்* எனும் மந்திரத்தோடு
விநாயகரின் திருநாமங்களும்
சேர்ந்து உச்சரிக்கும்
போதினிலே -
தெய்வீக அதிர்வலைகள்- நம்
தெய்வீக அதிர்வலைகள்- நம்
ஆத்மாவின் உள் சென்று
தீய சக்திகள் விலகி
நல்ல சிந்தனை கிடைத்து
நேர்வழிப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கிடைக்கின்றது.
ஸ்ரீ கணேஸ மந்திரம்*
அது நம்மை மட்டுமல்ல!
நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும்
நன்மை செய்யக் கூடிய
சக்தியை கொடுக்கும்
வலிமை உண்டு. நாம் நினைக்கும் எண்ணங்கள் பூர்த்தியாகும்*
சிறப்பு -5 *
சந்திரனைக் கண்டு
மனம் முழுதும் நிறைவாக அவ்வொளியை
தான் வாங்கி நிறைவு
கொண்டு அதன் பின்
உணவு உண்டு
பால் கற்கண்டு
சேர்த்து அருந்தி
விரதத்தை முடித்தல்*
தொடர்ந்து
ஐந்து சங்கடஹரசதுர்த்தி
விரதம் இருப்பதாக
வேண்டி
சங்கடஹர சதுர்த்தி
அன்று
மாலை விளக்கேற்றி
வடக்கு நோக்கி
அமர்ந்து ஸ்ரீ கணேச
மந்திரத்தை*
உச்சரித்து வந்தால்
நினைத்தது
உடனே நிறைவேறும்.
எண்ணம் பூர்த்தியானதும்
விரதத்தை நிறுத்திவிடாமல்
ஐந்து சங்கடஹர
சதுர்த்தி முடியும் வரை
விரதம் இருந்து
விரதத்தை பூர்த்தி
செய்ய வேண்டும் .
ஸ்ரீ கணேஷ மந்திரம்*
நாமத்தை உச்சரிக்கும்
அந்நேரமே *
தடைகள்
அனைத்தும்
தகர்ந்து விடும்
அக்கணமே*
கணேசனின் அழகு
மந்திரத்திலே*
கணேசனின் நாமம்
மனதினிலே*
வாழ்க்கையின் ரகசியம்
வாக்கினிலே*
வருகின்ற சோதனையோ
விடுபடும் -விரைவினிலே*
என வேண்டி
ஸ்ரீகணேச நாமத்தை*
உச்சரித்து பெருமானின்
அருளை பெறுவோமே!
லக்ஷ்மி குபேர பூஜை🙏🌹👇👇
https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_21.html
அனைத்து திருஷ்டியும் விலக கல் உப்பு பரிகாரங்கள்🙏🌹👇👇
https://youtu.be/0p5op0-Zjwk
Copy rights at Balakshitha