sankadasathurthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sankadasathurthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 செப்டம்பர், 2018

சங்கடகர சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை


சங்கடகர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை..

சங்கடங்கள் அனைத்தும்
தீர்ப்பவன்
 விநாயகப்பெருமான் *

விரைவில் திருமணம் நடக்க சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇👇


அவனே முக்கண் முதல்வனாக முப்பெரும் தலைவனாக 
திகழ்பவன் *

அருகம்புல் மாலை சாற்றினால் ஆனந்தம் அடைபவன்*

 சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பவர்களுக்கு அழியாத செல்வத்தை கொடுப்பவன் *

 வேலை ஆயிரம் இருப்பினும் அரைமணிநேரம் போதுமே!
 கணபதியை நினைப்பதற்கு ..

இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப்பெருமானை
எளிமையான முறையில்
 வழிபடும் முறையை அறிவோமே..

சிறப்பு -1 *

தலையிலிருந்து 
பாதம் வரை
 ஸ்னானம் செய்து 
புனிதம் அடைதல் *

சிறப்பு- 2 *

குரோமம் -காமம்
 விடுத்து மனம் 
முழுதும் அமைதி 
வேண்டி சாத்வீகமான
 உணவு எடுத்து 
கொள்ளுதல்*

 சிறப்பு- 3 *

மாலை வேளையில்
 புதிய மலரால் 
அலங்கரித்து ஐந்து முக 
விளக்கை ஏற்றி 
அருகம்புல்லும் 
பால் கற்கண்டு வைத்து
 அகமும் புறமும் 
ஒளிமயமாக இருக்க 
வேண்டும் என வேண்டி
 விளக்கை ஏற்றுதல்*

சிறப்பு -4 *

 வடக்கு நோக்கி
 மனையிலே அமர்ந்து 
 கீழ்க்காணும் மந்திரத்தை
 சொல்லி நம் மனதில் இருக்கும் வேண்டுதல்களை வைத்தல்*

ஸ்ரீ  கணேஷ மந்திரம் * 
.
ஓம் சுமுகாய நம* 
ஓம் ஏக தந்தாய நம*
 ஓம் கபிலாய கஜகர்ணிகாயநம
 ஓம் லம்போதராய நம* 
 ஓம் விகடாய நம * 
ஓம் விக்னராஜாய நம * 
ஓம் கணாதிபாய நம * 
ஓம் தூமகேதவே நம *
 ஓம் கணாத்யஷாய நம*
 ஓம் பாலசந்திராய நம* 
 ஓம் கஜானனாய நம * 
ஓம் வக்ர துண்டாய நம* 
ஓம் ஸூர்ப்பகர்ணாய நம* 
 ஓம் ஹேரம்பாய நம* 
 ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம* 

 ஓம்* எனும் மந்திரத்தோடு 
விநாயகரின் திருநாமங்களும் 
சேர்ந்து உச்சரிக்கும் 
போதினிலே -


தெய்வீக அதிர்வலைகள்- நம் 
 ஆத்மாவின் உள் சென்று
 தீய சக்திகள் விலகி
 நல்ல சிந்தனை கிடைத்து
 நேர்வழிப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கிடைக்கின்றது. 

             ஸ்ரீ கணேஸ மந்திரம்* 
      அது நம்மை மட்டுமல்ல! 
          நம்மை சுற்றி இருக்கும்                அனைவருக்கும் 
     நன்மை செய்யக் கூடிய 
   சக்தியை கொடுக்கும் 
வலிமை உண்டு. நாம் நினைக்கும் எண்ணங்கள் பூர்த்தியாகும்*

சிறப்பு -5 *

சந்திரனைக் கண்டு
 மனம் முழுதும் நிறைவாக அவ்வொளியை 
தான் வாங்கி நிறைவு 
கொண்டு அதன் பின் 
உணவு உண்டு 
பால் கற்கண்டு 
சேர்த்து அருந்தி
விரதத்தை முடித்தல்*


தொடர்ந்து
 ஐந்து சங்கடஹரசதுர்த்தி
 விரதம் இருப்பதாக 
வேண்டி

 சங்கடஹர சதுர்த்தி 
அன்று
 மாலை விளக்கேற்றி 
வடக்கு நோக்கி 
அமர்ந்து ஸ்ரீ கணேச 
மந்திரத்தை* 
உச்சரித்து வந்தால் 
 நினைத்தது
 உடனே நிறைவேறும்.


 எண்ணம் பூர்த்தியானதும் 
விரதத்தை நிறுத்திவிடாமல் 
ஐந்து சங்கடஹர 
சதுர்த்தி முடியும் வரை 
விரதம் இருந்து 
விரதத்தை பூர்த்தி
 செய்ய வேண்டும் .


ஸ்ரீ கணேஷ மந்திரம்*
நாமத்தை உச்சரிக்கும் 
அந்நேரமே * தடைகள் 
அனைத்தும்
 தகர்ந்து விடும் 
 அக்கணமே*


 கணேசனின் அழகு 
மந்திரத்திலே*
 கணேசனின் நாமம்
 மனதினிலே* 
 வாழ்க்கையின் ரகசியம்
 வாக்கினிலே*
 வருகின்ற சோதனையோ 
விடுபடும் -விரைவினிலே*
 என வேண்டி 
 ஸ்ரீகணேச நாமத்தை* 
 உச்சரித்து பெருமானின் 
அருளை பெறுவோமே!




லக்ஷ்மி குபேர பூஜை🙏🌹👇👇

https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_21.html

அனைத்து திருஷ்டியும் விலக கல் உப்பு பரிகாரங்கள்🙏🌹👇👇

https://youtu.be/0p5op0-Zjwk



Copy rights at Balakshitha