சிவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜனவரி, 2022

ஜாதகப் பலனை மாற்றக்கூடிய வலிமை யாருக்கு உண்டு

 ஜாதக பலனை மாற்றக்கூடிய வலிமை

சிவனை நித்தமும் நினைத்தால் நினைத்தது நிறைவேறும் என்பதற்கான வரலாறு



கணித்து சொன்னால் நடவாதது உண்டோ!  என பெயர் புகழ் பெற்ற ஜோதிட வித்வான் இடத்தில் அன்பன் ஒருவன்  வரிசையில் காத்திருந்தான் மணிக்கணக்கில் ...


பொற்காசு முடிப்பு இல்லையேல் அவரை நெருங்க தான் முடியுமோ! அதனால் பல நாள் முயற்சி செய்து பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பணம் அல்லவா .. பத்திரமா!  என தொட்டு பார்த்தவனின் நேரம் நெருங்கியது ஜாதகமும் இந் நிமிடம் ஜாதகர் கையிலே...


 புரட்டுகின்றார் அவனை நிமிர்ந்து பார்க்கிறார் . மீண்டும் புரட்ட,  அவனை மறுபடியும் அவனை பார்க்க இப்படியே நேரம் போனது. புரியாத மானிடன் ஜாதகரின் முகத்தையே பார்க்க ' இன்று போய் நாளை வா ' எனும் எதிர்பாரா ஜோதிடரின் பேச்சை கண்டு எதிர் பேச்சு பேசாது கிளம்பிவிட்டான் விரக்தியோடு.


ஜோதிடரின் மௌனத்திற்கு காரணம் என்ன !  யோசிக்க விடாது எதிர்பாராத மழை வர  அடைக்கலமாய் கோவில் ஒன்றில்  அவன் ஒதுங்க... அந்தோ தன்னிலை போல் சிவனும் தன்னந்தனியாய் கூரை எல்லாம் ஆங்காங்கே தூரிகை இட்டு எம்பெருமானும் நனைய  கண்டு அருகே ஓடுகின்றான்.


 'அய்யகோ!  என் செய்வேன் என்னப்பனே நீர் மழையில் நனையலாமோ ! என் செய்வேன் என தன்னிலை மறந்து மனம் தாளாது மேலாடையை கழற்றி  தன்  ஆடையால்  மழையை தடுக்கின்றான்.  தன் நிகரில்லா மனம் பெற்றான். 

 'இக்கோவில் தளம்  நான் அமைப்பேன் அதற்கு செல்வம் சேர்க்கும் வழி என்ன!  கொத்தனார் யார் ! கட்டுமான பணிக்கு தேவைகள் என்ன! ' என  சிந்தித்துக்கொண்டே பொழுது கழிய,  மறு பொழுது புலர ஜாதகரின் வீட்டில் அன்பனவன்.


 எதிர்பாரா அவன் முகம் கண்ட ஜோதிட வித்வானோ' நேற்றோடு அவன் இறந்து போவான் என என் கணிப்பு பொய்யானதா! '  ஆவல் மேவிட அவன் ஜாதகத்தை மீண்டும் பிரித்தார் .


என்னே ஆச்சரியம்!  ஜாதகத்தின் எண்கள் கட்டம்  கணிப்பு அத்தனையும் மாற்றம்.  நீண்ட ஆயுள் பெற்ற காரகன் திருப்பணிபுரியக்கூடிய உத்தமன் என்ற அமைப்பை கண்டு  நடந்தது என்ன ! என்று கேட்க,  விவரித்தான் அன்பன் . 


 ஆரத் தழுவிக்கொண்டார் ஜோதிட வித்வான் 'மார்கண்டேயன் அன்று  இன்று அவனாக உன்னைக் காண்கின்றேன் இறைவன் அருள் பெற்ற நேசா ' என ஆரத்தழுவிக் கொண்டார் . 


கோவில் கட்ட மனதால் நினைத்த அக்கணமே ‌ அவனுடைய பாவங்கள் கரைந்தன.  புண்ணிய பலன்கள் கூடின . திருப்பணி அவன் கையால் நடந்தது .பொருட்செல்வம் வளம் பெற்று புகழ் யாவும் அவன் பெற்று  நூறாண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்தான். 


காலம்‌ போடும் கணக்கை அவனன்றி மாற்றத்தான் முடியுமோ!  நல்லவே  நினைத்து,  நலமே காண  இறைவன் வழி நாம் நடப்போம்.


மனதால் கோவில் கட்ட நினைத்ததற்கே இறைவன் மனம் கனியும்பொழுது இறைவனுக்காக கோவில் திருப்பணிகளுக்கு நம்மால் முடிந்த கொடையளித்தால்  மகிழ்வது இறைவன் அன்றோ!  


அவன் பார்வை நம் மீது படவேண்டும் . பாவ கணக்கு கரைந்து புண்ணிய பலன்கள் யாவும் நாம் பெற்று,  வாழ்வில் 'ஓம் நமச்சிவாயா ' எனும் நாமம் தனை நாம் மொழிந்து  ,  சீரும் சிறப்புமாய் வாழ்வதற்கு நம்மால் முடிந்த திருப்பணிகள் அனைத்தும் நாம் செய்து வாழ்வில் இனிது கண்டு மனிதப்பிறவியின் நிறைவு காண்போம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

வியாழன், 22 ஜூலை, 2021

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு_1

 சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு 



முற்பிறவியில் செய்த பாவங்கள் வினைகள் அனைத்தும் இப்பிறவியில் நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும் என்பது இறைவன் நமக்கு கொடுத்த நியதி ..என்பதை விளக்கக்கூடிய சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு.


 சிவத்தொண்டு புரிந்து சிவனடியாராய் சிவனுக்காகவே வாழ்ந்து சிவனடியார் சுந்தரமூர்த்தி நாயனார் எனும் புகழ்பெற்ற அவருடைய பிறந்த வரலாறு காண்போம்.


விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பெரிய சாலையில் பரிக்கல் எனும் இடத்தில் இருந்து கிழக்கு பண்ருட்டி செல்லும் பாதை திரு நாவலூர் .

தோஷங்கள் அனைத்தும் விலகி குடும்பம் சுபீட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇👇



அந்த ஊரில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் .அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்பது இதுதான் போலும். ஆரூரன் அந்தணர் குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஆடி ஓடி விளையாடும் அழகோ அழகு. கண்டான் அரசன்... கண்டனன் கவர்ந்தது குழந்தை முகம்.


 அடுத்து வளர்ந்ததோ  ராஜ் வம்சம் தலையெழுத்து மாறியது. அதிர்ஷ்டம் எனும் மழை அடித்தது. அந்தணன் வீட்டு சிறுவன் ராஜ வீட்டு குடும்பத்தில் பிள்ளையாய்  மாறினான்.


 இப்படித்தான் ஆரம்பித்தது சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு. சிவனடியார் தொண்டனாய் வருங்காலத்தில் சிவ நாமம் பாடி அறுபத்து மூன்று நாயன்மார்களில்  தலைவனாக முதல் சிவனடியார் எனும் புகழ் பெற்றார் சுந்தரமூர்த்தி நாயனார்.


ஆரூரன் என்கிற அந்தண குடும்பத்து பிள்ளை சிவனடியாராக மாறிய வரலாறு...



பிறப்பிலே அந்தணராய் வளர்ப்பிலே ராஜகுமாரனாய்  ஆனந்த வாழ்வு கண்ட ராஜகுமாரன் ஆரூரன்..

காதலியை மணமுடிக்க கனவு கண்ட காதலனாய் அந்தோ  திருமணம் தடைப்பட்டு  சிவனடியார் கோலத்தில் நின்ற சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு கேளீரே..

பீதாம்பரம் பளபளக்க ராஜ கிரீடம் தலையிலே அலங்கரிக்க
வெண்பட்டு குடை கொண்டு வெள்ளை குதிரையிலே வீற்றிருக்கும் மணமகன் ஆரூரன் எனும் சுந்தரன்  பவனி வர...

ஆயிரம் கனவுகள் மனதிலே சுமந்து, காதலி பறவையாரை காணும்  துடிப்போடு ,சற்று நேரத்தில் சம்சார பந்தத்தில் இணைந்து- இனிது
கண்டு வாழ்ந்திடும் நினைவுகள் மலர்ந்து,  மலர்ந்த கற்பனையை அனைத்தும் நிஜத்தில் காண துடித்தவனாய் பவனி வருகின்றான் ஆரூரன் .

திடீரென்று எங்கிருந்தோ வந்தார் முதியவர் ஒருவர். கையிலோ எழுத்து ஓலை. திருமணத்தை நிறுத்து என்றார். ஆரூரா நீ என் அடிமை . இதோ அடிமை சாசனம் என்றார். அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவரோ  உன் பாட்டன் என்றார்.

அதிர்ந்தனர் அனைவரும. மணக்கோலம் கலையைக் கண்டான் ஆருரன். மலர்ந்த முகம் வாட்டம் கொண்டான். இதற்கு யார் சாட்சி ? . என்றான் .அது மட்டுமன்றி ஓலையை  பிடுங்கி கிழித்து விட்டு" இனி எது அத்தாட்சி "என்று சொல்லி சாதித்தோம் என்று சிரிக்கின்றான். முகத்திலோ வெற்றி கண்டான்.

அதிர்ந்தார் முதியவர். சுற்றி  இருந்தவர்களிடம் நியாயம் கேட்க அனைவரும் சொல்வதறியாது திகைத்தனர். முதியவரோ  கோபம் கொண்டு ஆரூரன்  கையை பிடித்து அழைத்து (அதாவது) . இழுத்து சென்றார் .


அடுத்த ஒரு சில நேரத்தில் திருவாரூர் கோவிலில் 'அனைவரும் நின்றிருக்க முதியவர் கையிலோ அதே ஓலைசுவடி உண்மை சுவடி என மறைத்திருந்த சுவடி தனை காட்டி .. ஆரூரனை பார்த்து சிரிக்கின்றார்.


" முதியவரே நீ யார் ?எங்கிருந்து வருகின்றாய் !  ஏன் விளையாடுகிறாய் என் வாழ்வினை சோதிப்பதில்  உனக்கு என்ன மகிழ்ச்சி ! உம்முடைய இருப்பிடம் தான் எது?" என அடுத்தடுத்து கோபத்துடன் ஆரூரன் வினவ ..

என்னுடைய இடத்தை பார்க்க துடிப்பவனே.. இதோ பார் என்று சிரித்தபடி கோவிலுக்குள் கர்ப்ப கிரகத்துக்குள் மூலவர் இருக்கும் இடத்தில் நுழைகிறார்.

அனைவருக்கும் ஆச்சரியம் முதியவரோ  திரும்பி வரவில்லை. 'சிவபெருமானே நீயா என்னிடம் விளையயாடியது' சாஷ்டாங்கமாக விழுகிறான் ஆரூரன்.

அசிரீரி ஒலிக்கின்றது. ஆம் வந்தது  நானே . முற்பிறவியில் செய்த பாவ வினை தீர யாமே விளையாடினோம். இப்பிறவி எமக்காகவே வாழ்ந்து உன்னுடைய பிறவிபயனைனை நிறைவு செய்வாயாக .என ஒலிக்க..

ஆனந்தத்தோடு ஆரூரன் ஏற்றுக்கொண்டு அன்றுமுதல்  சிவனுக்காக தொண்டு செய்துசிவனடியாராய் தொண்டு புரிந்து பல கோவில்களுக்கு சென்று சிவனை வழிபட்டு பல பாடல்கள் பாடி புகழ் பெற்ற 63 சிவனடியார்களில் முதன்மையான சிவனடியாராக புகழ்பெற்று  வாழ்ந்தவர்தான் சுந்தரமூர்த்தி நாயனார்.

சிவனடியார்களை வணங்கி பக்தியோடு வழிபட்டாலே சிவனின் பூரணமான அருள்   நமக்கு கிடைத்து வாழ்க்கை சிறப்பாகும்.


முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html

திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇

https://youtu.be/0p5op0-Zjwk

சொந்தமாக வீடு மனை அமைய தெய்வீக வழிபாடு🙏🌹👇👇

https://youtu.be/pJIjgbDhT_4

Copy rights at Balakshitha





ஞாயிறு, 10 நவம்பர், 2019

மகா அன்னாபிஷேகம் சிவனுக்கு மிக உகந்த தினம்


                                                        மகா அன்னாபிஷேகம்

அன்னை பராசக்ததி  பரமனிடத்திலே 'ஓரறிவு ஜீவனை சிறு பேழைக்குள் மறைத்து வைத்து' திருவிளையாடல் நாடகத்தை நடத்துகையில் -பேழையினுள்  சிற்றெரும்பு  ஒரு அன்ன பருக்கையை ஆனந்தமாய் சுவைத்து எம்மப்பன் பார்வையிலே எதுவுமே தப்பாது என உணர்த்திய நாளே மஹா அன்னாபிஷேகம்.

 சிவன்- பிரம்மனின் செருக்கை ஒடுக்க  ஒரு தலையை கொய்து விட அக்கபாலமோ  சிவனின் திருக்கரங்களை விட்டு அகலாது பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட- அந்தப் பாவத்திலிருந்து நீங்க கபாலத்தில் யார் இடும் அன்னம் நிறைகின்றதோ அன்று கபாலம் கைவிட்டுப் போகும் தோஷமும்  விலகும் என -சிவனோ பல இடம் சென்றும் நிறையாது போக முடியவிலே  காசிக்குச் சென்று அன்னபூரணி அன்னையவள் அன்னமிட  நிறைந்த கபாலமும் தோஷமும் விலகிய அற்புதமான நாளே மஹா அன்னாபிஷேகம் .

இன்றைய புனிதமான தினத்தில் நாம் மற்றவர்களின் வயிறு நிரம்பும்  அளவிற்கு அன்னமளித்தால் - நம்மிடம் உள்ள அனைத்து தோஷமும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து வளமும் பெறலாம் .

சந்திரனின் அழகை முழுதும் நாம் உள்வாங்கி வாழ்க்கையில் ஒளி பெற்று மகிழ்கின்ற  நாள் இன்று ...தட்சனின் சாபத்தால் சந்திரனோ ஒளி இழந்துபோக சிவனை நினைத்து விரதமிருந்து வேண்டி - மிகப் பிரகாசமாக சந்திரன் மீண்டும் ஒளி பெற்று இன்பமான நாளே மஹா அன்னாபிஷேகம்.



மகா அன்னாபிஷேக தரிசனம்

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சந்திரனின்  ஒளி எழும்பும் வேலையிலே -சிவனுக்கு அன்னாபிஷேகம் .

சந்தனம்- விபூதி -மாப்பொடி- மஞ்சள் இளநீர் -கரும்புச்சாறு -பசும்பால் என முடிவிலே அன்னாபிஷேகத்தில் சிவன் காட்சி தர  பக்தி பரவசத்தில் கண்களும் பனிக்க நிற்கின்ற அற்புதமான நாளே மஹா அன்னாபிஷேகம்.

அன்னம் என்னும் அமுதத்தை  பரப்பிரம்மமாய் காட்சி தரும் சிவன் மேனி முழுவதும் பூசி அளவிலாத காய்கறி பொருட்கள் அலங்கரித்து பரம ஜோதியாய் காட்சி தரும் சிவலிங்கத்திற்கு ஆராதனை காட்டுகின்ற அற்புத நாளே மஹா அன்னாபிஷேகம்.

' ஓம் நமசிவாய ஓம் நமசிவாய' என தரிசிக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் பக்தியோடு கரகோஷம் எழுப்பக்கூடிய பொன்னான நாளே வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா அன்னாபிஷேகம்.

நோய் நொடிகளை -நம்முடைய பாவத்தை -தோஷத்தை- துன்பத்தை துயரத்தை -வறுமையை -நீக்கி இந்த சிவபெருமானின்  மகா அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் பெறுவோம்  மகிழ்வு காண்பார் என்பது திண்ணமே .


யஜூர் -வேதம்- ருத்ரம் -சமகம் என அனைத்து மந்திரங்களும் அந்நேரத்தின்போது  ஒலிக்கையில் நம் அறியாமையை நீங்கி 'அனைவரிடத்திலும் அன்பு கொண்டு தானதர்மங்கள் நிறைய செய்க' என உணர்த்துகின்றன அற்புத நாளே மஹா அன்னாபிஷேகம் .

ஆவுடையார்  மீதுள்ள அன்னம்- கடலில் நீர்வாழ் பிராணிகளுக்கும் மேல்பாகம் சாத்தப்பட்ட அன்னம்- பிரசாதமாக நமக்கும் வழங்குவதே ஐதீகம் .


குழந்தை பாக்கியம் வேண்டுவோர்
இந்த அன்னத்தை புசிக்க குழந்தை பாக்கியம் கிடைக்கும் .நோய்நொடி அகன்று உணவுப்பஞ்சம் இன்றி தோஷங்கள் விலகி வறுமை நீங்கி செல்வம் பெருகி அனைத்து வளமும் பெற்று மகிழ்ச்சியான  வாழலாம்.

அன்னாபிஷேகத்தில் கண்டு தரிசிப்போர் வாழ்க்கையில்..

நல்லதே நடக்கும்- நல்லதே நடக்கும்- நன்மையே பயக்கும் 
அகங்காரம் மறையும்
ஆணவம் தொலையும் 
அகம் மலரும் 
மனம் உவக்கும்
 தானம் பெருகும் 
அன்னதானம் பெருகும் 
கைகள் சிவக்கும்
 பாவம் தொலையும் 
புண்ணியம் கூடும் 
செல்வம் பெருகும் 
சிந்தை தெளியும் 
நற்பயன் விளையும்
 நினைத்தது கைகூடும்
 நீங்காத புகழ் நிறையும்
 உடல் பிணி அகலும்
 உள்ளம் மகிழும் 
வாழ்ந்த பயன் அனைத்தும் 
கிடைத்து முக்தி கிடைக்கும் 
இறைவன் அருள் கிட்டும் 

என்பதால் அனைவரும் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் மகா அன்னாபிஷேகம் கண்டு தரிசித்து பிரசாதம் பெற்று வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெறுவோம்.