family லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
family லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

குடும்பம் எனும் நந்தவனத்தில் part-4

 

குடும்பம் எனும் நந்தவனத்தில் part-4

எதிர்காலத்தை முன்பே யோசித்து செயல்படுத்துக



திருக்கடையூரே  திருவிழா கோலத்தில் காட்சி அளிக்கின்றது. நூற்றுக்கணக்கான கார்கள் வந்து கொண்டிருக்க.. ஊரே களைகட்டி இருந்தது.


  திருச்சியிலிருந்து வந்திருந்த தம்பதியருக்கு சதாபிஷேகம்.  80 வயது பூர்த்தியாகும் போது நடத்தப்படும் மிகப் பெரிய விசேஷம். மிகப்பெரிய பிராப்தம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் .


 இந்த தம்பதியருக்கு கிடைத்திருக்கின்றது முகத்தில் ஆனந்தம் தொனிக்க மாலையும் கழுத்துமாக காட்சி தருகின்றனர். அமிர்தகடேஸ்வரர் ஆலயம் சொந்தபந்தங்களால்  நிரம்பி வழிந்தது.


 இரண்டு பெண்கள்.. மூன்று பிள்ளைகள் ...அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என பெரிய குடும்பம். சொத்துக்களும் ஏராளம் . பிள்ளைகள் அனைவரும் பெற்றோரை ஆனந்தத்தோடு கொண்டாட கோலாகலமாய் இனிதே விசேஷம் முடிந்தது .


இரண்டு வருடத்திற்கு முன் திருக்கடையூரில் விசேஷம் நடந்தது. இன்றோ.. அந்த முதியவர் படுத்த படுக்கையில். ஒருகாலத்தில் உழைத்து உழைத்து சம்பாதித்து பிள்ளைகளுக்காக நிறைய சொத்துக்கள் சம்பாதித்துக் கொடுத்தார். சொத்துக்களின் மதிப்பு ஏராளம் .

பெரியவரின் நிலைமை

 வயது முதிர்ச்சி காரணமாக படுக்கையில் இன்று  சாய்ந்து கிடக்கின்றார். தந்தை முன் நின்று பேசக்கூட தெரியாத மகன்களும் ,மகளும் இன்று சொத்து பிரித்துக் கொள்ளும் வேகத்தில்.. 


 தந்தையின் உடல்நிலையை கூட மறந்து, தீவிரம் காட்ட ...குடும்பத்தில் நடக்கும் சூழ்நிலையைப் பார்த்து கவலைப்படுகிறார் முதியவரின் மனைவி.


 நிம்மதியாக உயிர் பிரிகின்ற நிலையில் இறைவனிடம் மனம் ஒன்றி இருக்க வேண்டியவர் .. பிள்ளைகளின் வாக்குவாதங்களை கண்டும்  இயலாமையில் தவிக்கிறார். பல குடும்பங்களில் இந்த பிரச்சனை நடக்கின்றது.


 அழகான பாரம்பரிய குடும்பங்களில் கூட இந்தப் பிரச்சனை மட்டுமன்றி சராசரி நடுத்தர குடும்பத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை காண்கின்றோம்.


 இந்த சொத்துக்களால்  சொந்தம் பாசம் பந்தம் அனைத்தும் காணாமல் போய்விடுகின்றது . பல குடும்பங்களின் நிம்மதி தொலைகிறது.


 இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கும் பொழுது முதியவரின் கவனக் குறைவாக இருக்கலாம்.சில குடும்பங்களில்  கோர்ட் வாசல் படியில் நிற்பதையும் பார்க்கிறோம்.


 உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை நம் பிள்ளைகள் நம் கட்டுப்பாட்டில் . அப்படி இருக்கும் போதே சொத்துக்களை இவ்வாறு பிரித்து இருக்கின்றேன் என்று சொல்லி முறையாக எழுதி வைத்திருந்தால்  இந்த பிரச்சனை வந்திருக்காது.


 என்னுடைய காலத்திற்குப் பிறகு என் மனைவிக்கும் , பிறகு இந்த சொத்துக்கள் பிள்ளைகளுக்கு என...  சொத்துக்களை பிரித்து பிள்ளைகளுக்கு  அடைய வேண்டும். என்று உயில் எழுதி இருக்க வேண்டும்.


பிள்ளைகளிடம் கண்டிப்போடு சொத்துக்களின் பிரித்த விவரங்களை சொல்லி இருந்தால்.. அதிக எதிர்பார்ப்பு சொத்தின் மீது இல்லாது பாசத்துடன் ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.


  40 வயதிற்குள் இருக்கும் வரை பிள்ளைகள்,  தம்முடைய பெற்றோர் அண்ணன் தம்பி தங்கை மேல்  பாசம் அதிகமாக இருப்பது இயல்பு .

தன்னுடைய அண்ணனின் வரவுக்காக சாப்பிடாமல் காத்திருப்பது படிக்கவில்லை என்று திட்டும் தங்கைக்காக,  அப்பாவிடம் தங்கைக்காக பரிந்து பேசி திட்டு வாங்கிக் கொள்வது

வளர்ந்த பிள்ளை என்றாலும் தாயின் மடி மீது தலை வைத்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பது, தந்தையின் மீதுஅன்பும் மரியாதையும் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பது என இருக்கும் பிள்ளைகள் கூட..,

40 வயதிற்கு மேற்பட்ட  பிறகு  தன் மனைவி ,தங்கள் பிள்ளைகள் ,தங்கள் குடும்பம் என பாகுபாடு அவர்களுக்குள் ஏற்படுவதும்  இயல்பு .


அந்த நேரத்தில் சொத்துக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கக் கூடிய  சூழ்நிலை  பிள்ளைகளுக்கு உருவாகும். 


 பெரியவர் ஆரோக்கியமாக இருக்கும்போதே சொத்து எழுதி வைக்கும் விவரத்தை சொல்ல தவறியதால் ..இன்று பிள்ளைகள் நிம்மதி இல்லாது ....


 பெரியவருக்கும் தன்னுடைய பேச்சை எடுத்துச் சொல்லும் இயலாமையால் நிம்மதி இல்லாது தவிக்கின்ற குடும்பமாய் இருக்கின்றது.


 எதிர்காலத்தைப் பற்றிய யோசனை மனிதனாய் பிறந்த நம் அனைவருக்கும் இருக்கவேண்டும் . அறுபது வயதிற்கு பிறகு ஒவ்வொருவருக்கும் ஓய்வெடுக்கும் தருணம் .நிம்மதியோடு படுக்கையில் சாய்கின்ற  தருணம்.


 அந்த நேரத்தில் நிம்மதியாய் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரத்தை நாம் தான் கணக்கிட வேண்டும் . அதற்கான முயற்சிகளை சரியாகவும் செய்யவேண்டும்.


 மற்றவரை எதிர்பார்க்காது வாழ்வதற்கான சூழலை பற்றி முன்பே யோசித்து... அதேநேரத்தில் வருங்காலத்தில் பிள்ளைகள் நலமாய் ஒற்றுமையாய் இருப்பதற்கான வழிகளையும் யோசித்து செயல்படுத்துக.


என்னுடைய வாழ்க்கையில்  நான் கண்ட அனுபவங்களை ஐந்து பதிவுகளாக பதிவிட்டு உள்ளேன். தங்களுக்கு இந்த பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .சராசரி வாழ்க்கையை அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான பதிவுகள் என்பதால் நீங்களும் படித்து மற்றவருக்கும் பகிருங்கள்

குடும்பம் எனும் நந்தவனத்தில்...

part-3 எதிர்காலத்தை முன்பே யோசித்து செயல்படுங்கள்🌹🍀🌹👇👇👇👇

https://balakshitha.blogspot.com/2021/08/part-3.html


Copy rights at Balakshitha

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

குடும்பம் எனும் நந்தவனத்தில் part-3


குடும்பம் எனும் நந்தவனத்தில் part 3



மகாலஷ்மியின் தெய்வீக முத்திரை 

என்னுடைய குடும்பம் அழகான நந்தவனம். பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை .அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் என்னுடைய சொந்தங்கள்.

வேலைக்கு செல்கின்றேன் .தினமும் காலை போனால் ,மாலை வரை வேலை. அலுத்து வருகின்றேன். வேலை சுமை.

வீட்டில் வந்தால் அம்மா எனக்கு அன்போடு தான் காப்பி கொண்டுவந்து கொடுக்கின்றார்.
தங்கை ஆசையோடு ஓடி வந்து பக்கத்தில் அமர்கின்றாள்.
எனக்காக அப்பா வேகமாக சென்று காற்று விசிறியை தட்டுகிறார்.

இருந்தாலும் எனக்கு மன அமைதி இல்லை .சந்தோசம் இல்லை. எதிர்பார்ப்பு.. என்னிடத்தில் தேவை என்பதற்காக நம்மிடத்தில் அன்பு வைக்கின்றார்கள்.

அடுத்து ஏதாவது கேட்பதற்காக   இந்த அன்போ! என என் மனம் சொல்கின்றது .வாழ்க்கை வெறுத்துப் போகின்றது. நிம்மதி இல்லை .

இது என் மகள் வீட்டிற்கு அழைத்து வந்த தோழியின் புலம்பல் ..மேலும் அவளுடைய பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது...

நான் நினைப்பது தவறு தான். எனக்கு தெரிகின்றது. இருந்தாலும் குடும்ப சுமை ...என்னை மீறிய வெறுப்பு மனவலி .

திருமணத்தை நினைத்தால் அதைவிட பயம். இப்படித்தானே வாழ்க்கை இருக்கும் .அங்கு சென்றாலும் மாமியார் மாமனார் நாத்தனார் அவர்களுக்கான காலமெல்லாம் உழைத்து உழைத்து.. என்ன வாழ்க்கை இது ! அலுத்துக் கொள்கின்றாள்.

இதையெல்லாம் நினைத்தால் திருமணமே  வேண்டாம் என தோன்றுகின்றது. விரக்தியோடு சிரிக்கின்றாள் அந்த இளம் தளிர்.

நடுத்தர குடும்பம் .சிறுவயதிலிருந்து வாழ்வில் கஷ்டங்கள் நிறைய பார்த்து எதிர்காலத்தை நினைத்து பயப்படுகின்றாள்.

இது பெண்களுக்கு மட்டும் நடக்கக் கூடிய விஷயம் அல்ல... ஒரு இளைஞனுக்கும் மன ரீதியாக ஏற்படக் கூடிய விஷயம் .  இதற்கான மன தெளிவு பெறுவதற்கான பதிலை அவள் என்னிடம் எதிர்பார்க்கின்றாள்.

ஒரே ஒரு நிமிடம் அவளிடம் பேசினேன். அவளிடம் நான் பேசிய பதிவுகள் அவளுக்கு மட்டுமல்ல. இந்த சூழலில் உள்ள அனைவருக்கும் பகிர்கின்றேன்.

" காலை முதல் இரவு வரை வேலை சுமை என்று மனதில் பாரத்தை சுமந்து ஓடுகின்ற உன் உடலுக்கு ஒரு நிமிடம் ஓய்வு கொடு ..

அந்த ஒரு நிமிடம் உன்னை சுற்றி யாரும் கிடையாது. மூச்சை நன்றாக இழுத்து வெளியேற்றும் பொழுது உன்னுடைய மனதிற்கு ஒரு இதம்.. ஒரு நிம்மதி.. ஒரு ஆனந்தம் .

மகாலட்சுமி தாமரை முத்திரை

இந்த சமயத்தில் கைகளை மார்புக்கு மேலே குவித்து தாமரை மலர் இருப்பது போன்றும் நன்றாக அகல விரித்துகொள்.

எங்கிருந்து வந்தது இந்த ஆனந்தம் சந்தோஷம் ...உமை மீறிய ஒரு புன்னகை பிறக்கும் .அந்த சமயத்தில் உன்னுடைய உள்மனம் இவ்வாறு சொல்கின்றது...

" நான் யார்! இந்த வீட்டில் குடும்ப தலைவி. தெய்வத்திற்கு அடுத்த பதவி எனக்கு  என்பது எவ்வளவு மிகப்பெரிய பெருமிதம். சில நேரங்களில் இன்பம் தாங்கும் இதயம் துன்பத்தையும் தாங்க தானே வேண்டும். இதிலும் ஒரு சுகம் உண்டு ...

அதோ... எனக்காக ஒரு அழகிய ஏணி . மெல்லமெல்ல முயற்சி செய்து ஒரு நாள் ஏணிபடியின்  உச்சிதனை தொட்டு விடுவேன். அதுவரை  மனமே எனக்கு உற்சாகத்தை கொடு "

என்பதை சொல்லிவிட்டு அடுத்த ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு உன் வேலையை தொடங்கு .

நிச்சயம் உன் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும்.

ஆனந்தம் இருக்கும்.புன்னகை இருக்கும். குடும்ப சூழல் இதமாக இருக்கும். குடும்பத்தில் பாசம் பற்று அனைத்தும் உண்டாகி  ,திருமணம் இனிதாக நடந்து குழந்தை செல்வங்களோடு  வாழ்வாய். எதிர்காலத்தில் புகழ்  ஏணியில் உச்சிதனில்  நின்று புன்னகையோடு பார்க்கும்போது...

அனைவரும் பார்த்து பெருமையோடு பெருமிதத்தோடு கைகளை தட்டுவார்கள் .அதில் நானும் ஒருத்தியாக நின்று கைகளை மகிழ்ச்சியோடு தட்டுவேன் "



நான் சொன்னதை ஐந்து வருடமாக கடைபிடிக்கின்றாள்.

இன்று குடும்ப தலைவியாக ... ஒரு குழந்தைக்கு தாயாக ...நல்ல அந்தஸ்து பெற்ற   பெண்ணாக ..  தன்னுடைய பதவியில் பெரிய போஸ்டிங் இருக்கும் பெண்மணியாக திகழ்கின்றாள்.

இதற்கு வயது கிடையாது. யார் வேண்டுமானாலும் மகாலட்சுமியின் தெய்வீக முத்திரையான இந்தப் பயிற்சியை செய்யலாம் . நீங்கள் அனைவரும் தினமும் ஒருமுறை என தினந்தோறும் செய்து பாருங்கள். நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

பெண் ஆண் இருவரும் குடும்பத்தின் இரு கண்கள் .ஒரு குடும்பத் தலைவனும் தலைவியும் உற்சாகமாய் இருந்தால் மட்டுமே, குடும்பத்தை முன்னேற்றத்துடன் கொண்டுவந்து ஆலம் விழுதுகள் போல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த பயிற்சியை தினந்தோறும் செய்து வாழ்க்கையில் வெற்றி காணுங்கள்

இதில் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டால் எழுதிய எழுத்திற்கு நிறைவு காண்பேன்.🙏


Copy rights at Balakshitha

குடும்பம் எனும் நந்தவனத்தில்..

part -1


கணவன் மனைவி அன்பு என்பது...🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2021/08/part-1.html


குடும்பம் எனும் நந்தவனத்தில் part -2 



ஒரு பெண்ணுக்கு பெற்றோர் செய்யக்கூடிய முதல் கடமை 🌹🍀🌹👇👇

புதன், 11 ஆகஸ்ட், 2021

குடும்பம் எனும் நந்தவனத்தில்- பெற்றோர்களின் கவனத்திற்கு

 

குடும்பம் எனும் நந்தவனத்தில் part -2 

ஒரு பெண்ணுக்கு பெற்றோர் செய்யக்கூடிய முதல் கடமை



 ஒரு பெண் கண்ணுக்குள் கண்ணாக பெற்றோரால் வளர்க்கப்படுகின்றாள்  .கண்ணை இமை காப்பது போல் அன்பும் பாசமும் கொடுத்து பெற்றோர்கள் தம் மகளை  வளர்ப்பதற்கு  ஈடு இணை ஆகாது.

'நல்ல முறையில் வளர்த்து  பெண்ணை ஒருவன் கையில்  பிடித்து கொடுத்து விட்டோம் 'என்று நினைப்பது அனைத்து பெற்றோர்களின் கருத்து .

நம் கடமை முடிந்து விட்டது, என நினைக்கும் பெற்றோர்களுக்கு ஒரே ஒரு பதிவை சொல்லவேண்டும் என்று நினைக்கின்றேன்.

ஒரு பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது! என பெற்றோர் கவலைப்படும் நிலை மாறி, இன்று பெண் குழந்தை என்றாலே மகிழ்வோடு ...

ஆண்மகனுக்கு நிகராக நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்து வைத்து கடமையை நிறைவேற்றி அதில் நிறைவு காணும் பெற்றோர்களை பார்க்கின்றோம்.

ஆனால் அந்த திருமண பந்தம் நல்ல விதத்தில் அமைந்து விட்டால் பெற்றோர்களுக்கு நிம்மதி.

அதே.. ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அதற்காக அந்த பெண் வாழ்க்கை முழுவதும் துயரப்படும் சோகம் அமைய பெற்றவர்கள் காரணமாக இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பூங்காவில் பெரியவர் ஒருவர்‌
கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருக்கிறார் .அவருடைய பார்வை வானத்தை பார்த்துக் கொண்டிருக்க..‌ அவருக்குள் பல சிந்தனைகள் .

அந்த முதியவருக்கு இரண்டு பெண்கள். நடுத்தர குடும்பம் அழகான நந்தவனம் .மூத்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இனிதான வாழ்க்கை .அவர்களுக்கு மகள் மகன் என அழகான குழந்தைகள்.

அடுத்ததாக இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கின்றார். நல்ல இடம் .தன் மகள் வாழ்க்கை சிறப்பாக அமையும்- என பலவித எதிர்பார்ப்புகளுடன் பெற்றோர் செய்து வைத்த திருமணம்.. ‌

ஒரு வருடத்திற்குள் துயரங்கள் பல சுமந்து பெண் பெற்றோர் இடத்தில் வந்து விடுகின்றாள். காலம் ஓடுகின்றது . அந்த பெண் செய்வதறியாது பெற்றோரின் பாதுகாப்பில் இன்று.

20 வருடம் ஓடுகின்றது.அவள் வயது இன்றோ  40 . முதியவருக்கும் வயதாகி விட்டது .தன்னுடைய சொந்த காலில் நிற்க தெரியாத அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்து,  இன்று கண் கலங்குகிறார் .

அந்த பெண்ணிற்கு என்று நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் தினந்தோறும் அந்தப் பெரியவரின் மனதை காயப்படுத்துகிறது .பெரியவரின் கருத்தை என்னிடம் பகிர்கின்றார் .

அந்த பெண்ணின் முகம் என் கண்முன்னே நிற்கிறது .ஏதாவது அந்தப் பெண்ணுக்கு செய்தாகவேண்டும் .பெரியவரின் மனம் நிம்மதி பெற வேண்டும்.

அந்தப் பெண்ணோ... வயது 40 இனி என்னால் என்ன செய்ய முடியும் என்பது அந்த பெண்ணின் கணிப்பு. ஒருமணிநேரம் அவளோடு பொழுதுபோக்காக உரையாடினேன். அந்த நேரம்  வீட்டில் பூத்த மலர்களை நுணுக்கத்தோடு  வேகமாக கட்டிய விதம் என்னை கவர்ந்தது .

அடுத்தது போனில்  யூட்யூப் மூலமாக கலர்கலரான மலர்கள் வைத்து மாலைகள் , கொண்டை வளைவு என கற்றுக் கொடுப்பவர்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பதற்கு சொல்லிக்கொடுக்க...



ஆர்வத்தோடு கற்றுக் கொண்டாள் மூன்று மாதத்தில் அவளுடைய கைவண்ணம் ஆன்லைனில் அலங்கரிக்க  அடுத்தடுத்து பல ஆர்டர்கள் குவிய குவிய..

  இன்றோ 6 பெண்களுக்கு வேலை கொடுக்கும்   பிஸியாக இருக்கும் சொந்தக்காலில் பணம் சம்பாதிக்கும் சிறப்பான பெண்மணியாக திகழ்கின்றாள்.

பெரியவருக்கும் நிம்மதி.

இப்பொழுது என்னுடைய எழுத்துக்கு ஒரு வடிவம் கொடுக்கலாம். 

தம்முடைய குழந்தைகளுக்கு நல்ல முறையில் வளர்த்து சீர்செய்து..  சொத்து கொடுத்து திருமணம் செய்து வைத்து விடுவது- என்பது பெற்றோரின் கடமை என நினைக்காதீர்கள் .

ஒரு பெண்ணின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்குவது பெற்றோர்களின் கடமை .

அனைத்து திருமணங்களும் இறுதிவரை இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம் .திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை பட்டமரமாகி விட கூடாது.

மறுமணம் என்பது அவரவர் விருப்பப்படி அமையலாம் .

ஆனால் மற்றவரை நம்பி வாழாது தன்னுடைய காலில் சுயமாக சம்பாதித்து வாழ்ந்தால் மட்டுமே அந்தப் பெண் கடைசிவரை கௌரவமாக சுயமரியாதையோடு வாழ முடியும். வாழவும் வேண்டும்.

அதற்கான படிப்பு ,தைரியம் ,வேலை என இவற்றை  பெண்களுக்கு வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்து வையுங்கள் .உங்கள் பெண் நிச்சயமாக வாழ்வில் சிறந்த பெண்மணியாக திகழ்வாள்.

பெண்கள் எந்த நிலையிலும் தைரியமாக எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தவளாக அமைய வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் எழுதிய எழுத்துக்கான நிறைவு கண்ட மகிழ்ச்சி காண்பேன்.

அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு ,நான் எழுதுகின்ற பதிவுகள்..  சராசரி குடும்பத்தில் நடக்கின்ற சூழல்கள் அதற்கான தீர்வுகள் . 

அனைவருக்கும் பகிருங்கள்🙏

குடும்பம் என்னும் நந்தவனத்தில் pat-1 கணவன் மனைவி அன்பு என்பது🌹🍀🌹👇👇https://balakshitha.blogspot.com/2021/08/part-1.html

அன்போடு சேர்ந்த மனம் அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு மேலும் அழகான சில குறிப்புகள் ...🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2021/08/blog-post_7.html


குடும்பம் எனும் நந்தவனத்தில் part-3

மிகப் பெரிய பலத்தை அளிக்க கூடிய மகாலட்சுமி தாமரை முத்திரை🙏🌹👇👇 https://balakshitha.blogspot.com/2021/08/part-3.html

Copy rights at Balakshitha

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

குடும்பம் எனும் நந்தவனத்தில் part-1

 

குடும்பம் எனும் நந்தவனத்தில்..

part -1


கணவன் மனைவி அன்பு என்பது...

பெண் என்பவள் மிகப் பெரிய ஆலமரத்தின் வேர் என்று சொல்வார்கள் . அந்த பெண்ணின் மனதிற்குள் எத்தனை கஷ்டங்கள்...

வாழ்க்கை தலைவி எனும் அங்கம் வகிப்பவள் . குழந்தை ஈன்று குலத்தை வாழ வைப்பவள்.  குடிக்கும் கணவனை கூட தாங்கி பிடிப்பவள். கண்கள் குளமாயினும் கவலையை மறைத்து சிரிப்பவள் என்ன மரத்திற்கு வேராக தாங்கி பிடிப்பவள் பெண்.

ஏன் ஆண்கள் மட்டும் என்ன! அவர்களுக்கு மனம் இல்லையா! அவர்கள் குடும்ப பாரத்தை சுமக்க வில்லையா! அவர்களுக்கு கவலை கிடையாதா.. அவர்களுக்கும் பாசம் தெரியாதா!  என  பல கேள்விகள் அவர்களிடத்திலும் உண்டு.

கணவன்-மனைவி என ஆரம்பிக்கும் குடும்ப வாழ்க்கையில் நட்பு எனும் மலர் மலர்வதற்கு கடினம் என்று பலர் சொல்வதுண்டு.

நீயா-நானா எனும்  ஈகோ எங்களுக்குள் தடுக்கிறது என்றும் சிலர் சொல்வதுண்டு.

கணவன் தன்னிடத்தில் பாசம் காட்ட மாட்டாளா ! என பல குடும்பத்தில் பெண்கள் நினைப்பதுண்டு .மனைவி நம்மை சரியாக புரிந்து கொள்ளவில்லையே ..என்று கணவன் வருந்துவதும் உண்டு.

  நான் படுகின்ற கஷ்டம் எங்கே தெரிகின்றது.. நாள் முழுக்க ஓடுகின்றேன் உழைக்கின்றேன். யாருக்காக.. குடும்பத்துக்காக- என புரிந்து கொள்ளாது,  முழு நேரமும் சண்டை என்ன வாழ்க்கை இது என புலம்புகிறது கணவன் மனம்.

ஏன் புரியவில்லை புரிந்து கொண்டுதான் நடந்தாலும் என்னை அடிமைப் போல நடத்தும் மனசாட்சி இல்லாத இவரோடு எப்படி வாழ்வது! என கண்களை துடைத்துக் கொள்ளும மனைவிக்கும் துயரம் உண்டு.

மனைவியின் முழு  அன்பையும்  பெற வேண்டும் என ஆசைப்படுவதில் தவறேது? அதை ஏன் 'ஆணாதிக்கம் அடிமைத்தனம்' என்று நினைக்க வேண்டும்-  ‌ கணவனுடைய கேள்வி.



  இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு விடை தான் .விடை சொல்வதற்கு முன் நான் இதுவரை பேசிய கணவன் மனைவி உரையாடலை முழுமையாக.கேளுங்கள் கேள்வியிலேயே விடை கிடைக்கும்.

இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும்.

இனி  என்னுடைய எழுத்துக்கு  வடிவம் கொடுக்கலாம் . திருமணம் எனும் பந்தத்தில் எடுத்ததும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது கடினம்.

சின்ன சின்ன பூசல்கள் வந்தாலும் தடுமாற்றம் இல்லாத வாழ்க்கை எனும் இரும்புதூணை  கெட்டியாக இருவரும் பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள் .

விதைகள்தூவிய நந்தவனம்.
செடி வளர்ந்து வரும் வரை பொறுமையாக கைகோர்த்து நீர் ஊற்றுங்கள்.  ஆங்காங்கே வளரும் தேவையில்லாத பதர்களை  அப்புறப்படுத்துங்கள்.

கணவன் மனைவி சண்டையில் துன்பத்திலும் ஒரு இன்பம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

ஈகோ எனும் கொடிய நோயில் இருந்து மீண்டு வாருங்கள் .மனம்விட்டு பேசி உங்களுக்கும் பரஸ்பரம் நிலவ முயற்சி செய்யுங்கள்.


ஐந்து வருடத்தில் ஒரு அழகிய பிஞ்சு குழந்தையின் கைகளை பிடித்தவாறு நந்தவனத்தில் ஆனந்தமாய் நடைபோடுங்கள்.

 மேலை நாடுகளே  நம் இந்திய கலாச்சாரத்தில் கண்டு பெருமிதம் கொண்டு, நம்முடைய பண்பாடுகளை நம்முடைய பழக்கவழக்கங்களை நம்முடையதெய்வீக  ஸ்லோகங்களை அவர்களுடைய  நடைமுறைக்கு கொண்டுவருவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய இந்த நிலையில்..


 நம்முடைய கலாச்சாரத்தை  பண்பாடுகளை மதிப்போம். பின்பற்றுவோம். தெய்வீக மணம் கொண்ட வாழ்வினில் வெற்றி காண்போம்.

குடும்பம் எனும் நந்தவனத்தில் part -2 

ஒரு பெண்ணுக்கு பெற்றோர் செய்யக்கூடிய முதல் கடமை 🌹🍀🌹👇👇

Copy rights at Balakshitha


சனி, 7 ஆகஸ்ட், 2021

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

 

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்



அன்பு எனும் வார்த்தைக்கு ஓராயிரம் அர்த்தங்கள் .

ஆனந்தம், பூரிப்பு ,சிரிப்பு ,அமைதி, சாந்தம், சமரசம் ,சாதனை ,வெற்றி அப்பப்பா எத்தனை வார்த்தைகள் அடக்கம்.

" அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!"

கோபம் உள்ள இடத்தில் சாந்தம் கிடைக்காது. அனைவரிடத்திலும் அன்பு கொள்ளுங்கள்.

அன்புக்கு பாகுபாடு கிடையாது‌ மொழி பேதம் கிடையாது .உயிரினங்களில் ஏற்றத் தாழ்வும் கிடையாது. அனைத்து உயிரினத்திலும் அன்பு காட்டுவது என்பது அன்புக்குரிய மிகப்பெரிய மேன்மை ..

எப்படி அன்பு காட்டலாம் ? என்பதற்கான விடை இதோ...

ஒரு பூனை நம் வீட்டு வாசலில் வருகின்றது ...ஓடிச்சென்று சிறிது பால் இருந்தால் வையுங்கள்.

உங்கள் அருகாமையில் ஒரு நாய் வருகின்றது ...பிஸ்கட் போடுங்கள்.

நதிக்கரைக்கு செல்கின்றீர்கள்... சிறிது பொரி   வாங்கி செல்லுங்கள் மீன்களின் பசி தீரும் .

பக்கத்தில் மாடு இருக்கின்றதா.. மீதமுள்ளதை வீணாக்காது மாட்டுக்கு இடுங்கள். மனம் நிறையட்டும்.

கோவிலுக்கு செல்கிறீர்...கையேந்தி நிற்பவர்களுக்கு ஒரு பழம் கொடுங்கள். தெய்வத்தின் ஆசி கிட்டும்.

இதை மட்டும் செய்யுங்கள் அன்பை தேடி நீங்கள் போக வேண்டாம்.. உங்களை தேடி அன்பு வரும .தெய்வீக மணத்தின் வாசத்தை உணர்வீர்கள்.

அடுத்து நான் முன்பு சொன்ன ஆனந்தம், பூரிப்பு,  சிரிப்பு,, அமைதி, சாந்தம், சாதனை ,சமரசம் ,வெற்றி அனைத்தும் வரும். வாழ்வு கண்ட மகிழ்ச்சி கிடைக்கும்.

 

இதற்கு அதிக செலவும் இல்லை சிரமப்படுவதற்குமில்லை.

அன்போடு சேர்ந்த மனம் அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு மேலும் அழகான சில குறிப்புகள் ...



நமக்கு அழகு எது!


 பால் போன்ற முகம் அழகு

 கபடமில்லாத சிரிப்பழகு

கடிந்து கொள்ளாத உதடு அழகு 

தீது பேசா‌ நா அழகு

 துன்பம் வந்தாலும் சுருங்காத நெற்றி அழகு 

நெற்றியில் குங்குமப் பொட்டு அழகு

 தான தர்மங்கள் அழகு அதனால் சிவக்கின்ற கைகள் அழகு 

சோதனை சந்தித்தாலும் சாயாது நிமிர்தல் அழகு 

பொய் பொறாமை கலவாமை இலா மாசற்ற மனம் அழகு 

அந்த மனதில் இறைவனை நினைத்தால் அதைவிட அழகு.

இவை அனைத்தும் புரிந்து கொண்டு

அன்பு என்பதற்கு அர்த்தம் புரிந்தால் எழுதிய மகிழ்ச்சிக்கு நிறைவு காண்பேன்.

குடும்பம் என்னும் நந்தவனத்தில் part -1 கணவன் மனைவி இடையே உள்ள அன்பு பரஸ்பரம் ஒற்றுமை அதிகமாக🌹🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2021/08/part-1.html


Copy rights at Balakshitha



வெள்ளி, 16 ஜூலை, 2021

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு ‌

 என்றும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு

ஆன்மீக வழிமுறைகள்

பிரம்ம முகூர்த்தம் என்பது தெய்வீகமான நம்முடைய மனதிற்கு  புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய நேரம்.

 அந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 7 மணிக்குள் எழுந்திருப்பது உத்தமம் .

முதலில் நம்முடைய கைகளை கண்களால் பார்த்துவிட்டு, தெய்வத்தை நினைத்து வணங்கி விட்டு பிறகு மற்ற வேலையை தொடர்வது உத்தமம்.

காலையில் கண்ணாடியில் முகம் பார்ப்பது நம்முடைய முகத்திற்கும் அகத்திற்கும் மேலும் பலம் தரும். சக்தி கிடைக்கும்.


மகாலட்சுமியின் அம்சம் கொண்ட நம்முடைய கைகளை  காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் நாம் காண்பது மிகச்சிறப்பு 


புத்தகத்தை பிரித்து படிப்பது போல்  நம்முடைய இரு கைகளையும நம்முடைய முகத்திற்கு நேராக  வைத்தவாறு நம்முடைய சிந்தனையை ஒரு முக ப்படுத்தலாம்.

அந்த நேரத்தில் நம்முடைய எண்ணங்கள் இவ்வாறு அமைந்துவிட்டால் இனிது இனிது வாழ்க்கை  என்றும் இனிது அன்றோ!

நம்முடைய மனம் கீழ்க்கண்டவாறு நினைக்க வேண்டும்...

 இந்த கைகள் பொன்னானது.

 இரு கை கூப்பி  தெய்வத்தை வணங்கும் இந்த கைகள் ,

உயிர் வாழக்கூடிய  அமுதத்தை எடுத்து உண்ணக்கூடிய இந்த கைகள், உழைத்து உண்ணக்கூடிய இந்த கைகள்,  தெய்வ சன்னதியில் திருநீறு குங்குமம், சந்தனம், பிரசாதத்தை பெறக்கூடிய இந்த புனிதமான கைகள்...

 தவறே செய்யாத கைகளாக, தான தர்மங்கள் செய்யக்கூடிய கைகளாக, மங்கள ஆரத்தி சுற்றும் கைகளாக, மகாலட்சுமியின் அருள் பெற்ற கைகளாக,  வாழ்க்கையில் சிறப்பை கொடுக்கும் புண்ணியம் பெற்ற கைகளாக, பூஜா பலன்கள் அனைத்தும் பெற்ற கைகளாக, மேன்மை பெற்று திகழட்டும் என்று தினமும் நினையுங்கள்.

 நேர்மறையான சிந்தனைகள் என்றுமே மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலையை வாழ்வினில்  உருவாக்கி வளமோடு வாழக்கூடிய மேன்மையை கொடுக்கும்.


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha