பெற்றோர்களுக்கான நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெற்றோர்களுக்கான நேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஏப்ரல், 2025

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமா ?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டியது அவசியமா?

ஒவ்வொரு பெற்றோரும் "  நீராரும் கடலுடுத்த நிலமடந்தை..."  எனத் தொடங்கும் தேசிய பாடல் ஆன தமிழ்த்தாய் வாழ்த்து பிள்ளைகளுக்கு கற்றுத் தருவது மிகவும் முக்கியமானது ஆகும்.

 ஏன் தமிழ் தாய் வாழ்த்து கற்றுத் தர வேண்டும்?

1. தமிழ் மொழி மீதான பற்று நம் பிள்ளைகளுக்கு ஏற்படுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து கற்றுத் தருவது மிகவும் அவசியமானதாகும். 

2. தமிழ் மொழியின் இனிமையும் மரபும் குழந்தைகளுக்கு மனதில் பதிகிறது.

3. பண்பாட்டை சுமந்த பாடலாக கவிதை அமைந்துள்ளது .

4. இந்த பாடல் தமிழர்களின் பழமை,  நிலம், மொழி , கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி பேசுகிறது.  இது குழந்தைகளுக்கு தமிழர் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைகிறது. 

5.  முன்னோர்களின் பெருமை  உணர்த்துகின்றது.

 6. பாடலின் வரிகள் தமிழர்களின் வீரமும் நாகரீக வளர்ச்சி செய்யும் புகழ்கின்றன இது நாட்டுப் பெருமையை உணர்த்தும்.