திருமணம் விரைவில் கைகூட ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்வது நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு மலர் நன்றாக பூத்து மலர்ந்து இருக்கும்போது- உரிய இடத்தில் சென்று சேர வேண்டும். அதுபோன்றுதான் இளமை என்பதும்.. மலருக்கு இணையானதே .
நம்முடைய வாழ்க்கை என்னும் பயணத்தில் இளமையிலேயே திருமணம் எனும் அழகிய வட்டத்தில் திருமணபந்தத்தில் இணைந்திட வேண்டும்.
மலர் வாடிய பிறகோ அல்லது இளமை வயது கடந்த பிறகோ உரிய இடத்தில் சென்று சேர்வது என்பது பயனற்ற செயலுக்கு வித்தாகும்- என்பதை உணர்ந்து..
பெண்ணுக்கு 20 வயதும் ஆணுக்கு 25 வயதும் நடக்கும்போதே வருடத்திற்கு முன்பாகவே திருமணத்திற்கு நிச்சயம் ஏற்பாட்டுக்கு ஆயத்தமாவது அவசியம் .
ஜாதக அமைப்பில் தோஷம் திருமணத்தடை -திருமணம் தள்ளிப் போவது கீழே குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கோவில் சுற்றும் பரிகாரங்களை மேற்கொள்ளலாம
திருமணம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி விரைவில் கை கூட - ஆலங்குடியில் அமைந்துள்ள சுயம்பு வடிவில் காட்சித் தரும் ஆபத்காயேஸ்வரர் திருக்கோவில் திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வரலாம். அங்கே குருபகவான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகின்றார்.
குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டாகும். .நல்ல அறிவாற்றல் அழகு -ஆயுள்- ஆரோக்கியம் அனைத்தும் கூடிய ஒரு வரனை அருள்கின்ற சக்தி குருபகவானுக்கு உண்டு. 16 செல்வங்களும் பெற்று வாழ்க்கையில் சிறப்புமிக்க ஒரு வாழ்க்கையை அருள்கின்ற சக்தி குரு பகவானுக்கு உண்டு.
திருமணம் விரைவில் கை கூட சங்கடகர சதுர்த்தி விரதம் 🙏🌹🌹🍀🌹👇👇👇👇
குருபகவானின் பார்வை ஒரு ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே- அந்த ஜாதகம் சிறப்பான முறையில் திருமணம் கைகூடும். சாத்வீக குணம் குணம் கொண்டவர் குரு பகவான்.இனிப்பு என்றால் கொள்ளை பிரியம்கொண்டவர்.
கொண்டைகடலை தானியத்தை கண்டால் மகிழ்ந்து ஆசிகளை அள்ளி வழங்கும் குருபகவானுக்கு திருமணத்திற்கு தடையை ஏற்படுத்தும் களத்திர தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி உண்டு.
நல்ல உயரம் உயரத்திற்கேற்ற அழகோடு மிக பொலிவோடு திகழும் குரு பகவானின் பார்வை ஜாதகத்தில் பார்ப்பதற்கு- நாம் செய்யக்கூடிய பரிகாரத்தை காண்போம்.
திருமணம் விரைவில் நடப்பதற்கு வீட்டில் இருந்தவாறே மரப்பாச்சி பொம்மை வழிபாடு👩🦰👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html
திருமணம் விரைவில் பிரம்ம முகூர்த்த வழிபாடு 🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/05/blog-post_29.html
ஆலங்குடியில் குருபகவான் தட்சிணாமூர்த்தியாக அற்புத கோலத்தில் காட்சி தருகின்றார்.
அன்பு எனும் பந்தம் புரிவதற்கு ஆனந்தம் என்னும் பெருவாழ்வு வாழ்ந்து- வாழ்க்கையை இனிது காண வருகை புரிந்து எமை மணம் முடிப்பாய் ஈசனே' என அம்பிகை தவம் இருந்து பெருமானை கரம்பிடித்த அற்புதமான தலம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.
வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்கு ஏற்ற நாள் ..அந்த கிழமையில் நல்ல நாள் பார்த்து அன்றைய தினத்திலே அந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபடலாம். கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சாவூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது -ஆலங்குடி .
திருமணம் இனிதே கைகூடி நடந்த
பிறகு தம்பதி சமேதராக திருத்தலத்திற்கு சென்று தட்சிணாமூர்த்திக்கு புதிய வஸ்திரம் சாற்றி வழிபட்டு பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆலகால விஷத்தையே தாம் குடித்து தேவர்கள் அனைவரையும் காத்த தலம் என்பதால் ஆலங்குடி என பெயர் பெற்ற- எம்பெருமான் ஈசனின் திருத்தலமாகிய ஆலங்குடிக்கு சென்று தோஷங்கள் அனைத்தும் நீங்கி சிறப்பாக திருமணம் நடைபெற்று வாழ்க்கையில் இனிது காண்க.
Copy rights at balakshitha