அம்மனுக்கு உகந்த வேப்பிலை வழிபாடு
படிக்க -படித்த பின் நுகர்க- நுகர்ந்த பின் சிந்திக்க- சிந்தித்த பின் சித்தம் தெளிக- தெளிந்த பின் நடக்கும் செயல் அனைத்தும் இனிதே
வேப்பிலை பல நோய்கள் தீர்க்கும். மன வேதனை மாற்றும். மங்கல மணம் வீசும் பசுமையான வாழ்க்கை தரும் அம்மனுக்கு உகந்த வேப்பிலையின் புகழ் இந்த ஆடி மாதத்தில் படிப்பது நாம் செய்த பாக்கியம்.
நம் கண்ணெதிரே தெய்வீக பலன் கிடைக்க பல வழிகள் இருந்தாலும்- அதை காணாது மனம் தளர்வதும் துன்பத்தில் துவண்டு விழுவதும் இயல்பு.
தெய்வீக வழிபாடு செய்து வழிபட்டால் நிச்சயம் துன்பத்தில் இருந்து விடுபடலாம்.
தெய்வீக பலன் கிடைப்பதற்கு அம்மனுக்கு மிக உகந்த பிடித்தமான வேப்பிலையை பற்றி தெரிந்து கொள்ளலாம்..
ஆடி மாதம் ..அம்மனுக்கு உகந்த மாதம் இந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு பிடித்தமான பொருட்களை பற்றி அதிகமான செய்திகள் தெரிந்துகொண்டு அம்மனின் அருள் பெறலாம்..
கோவில் குளம் என போக முடியாத இந்த சூழ்நிலையில் வீட்டிலேயே அம்மனை கண்டு இனிது காணலாம்.
நம்முடைய வீட்டில் அம்மனை ' வருக வருக ' வென வரவேற்று நம் இல்லத்தில் தெய்வீக மணம் மணப்பதற்காக தேடல்தான் தெய்வீக மணம் கொண்ட வேப்பிலை.
எலுமிச்சை பழத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் 🌹🍀🌹🍀🌹🍀👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/part-1.html
குடும்பம் சுபிட்சம் பெற காயத்ரி மந்திரம் வழிபாடு 🍀🌹🍀🌹🍀🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/04/part-1_4.html
வேப்பிலையின் வாசம் இருந்தால் போதும்.. அவளே ஆனந்தமாய் வந்து நம் வீட்டினில் குடிபுகுவாள். இந்த ஆடிமாதம் முழுவதும் நம்மால் முடிந்த அளவு வேப்பிலை தோரணங்கள் பூஜை அறையில் வேப்பிலை வழிபாடு அம்மனுக்கு வேப்பிலை மாலை என வேப்பிலையில் மனம்(மணம்)காணுங்கள்.
எதிர்மறை எண்ணங்கள் மறைந்து வாழ்க்கையிலே நேர்மறை சக்திகள் அனைத்தும் கைகூடும்.
ஆங்கில மருத்துவம் காணாத அன்று மக்கள் அறிந்த பெரும் மருத்துவம் வேப்பிலை. அம்மனின் தெய்வீக அம்சமாக நோய் கண்ட மருந்தாக திகழ்கின்ற அற்புத மூலிகை வேப்பிலை.
வேப்பிலை மரம் வீட்டினில் இருந்தால் தெய்வீக மணம் வீசும். அந்த வீடு சுபிட்சம் பெற்று திகழும்.
வெள்ளிதோறும் சுமங்கலி பெண்கள் வேப்பிலை மரத்தை மஞ்சள் குங்குமம் இட்டு அம்மனாக வழிபடும் அற்புதமான தமிழ் கலாச்சாரம் இன்றும் கிராமத்தில் பார்த்து மகிழலாம் .
மரம் அமைக்க வசதி இல்லாது இருந்தாலும் ஒரு தொட்டியில் வேப்பிலை கன்று வைத்து வழிபட நம்முடைய வாழ்க்கையும் படிப்படியாக வளம் பெற்று வாழ்வினில் சிறப்பு பெறுவதை பார்க்கலாம்.
வேப்பிலை மரத்தை அம்மனாக நினைத்து வழிபடும் முறை..
சிறப்பு -1 வெள்ளிக்கிழமை இளம் காலை சுப ஓரையில் சுமங்கலிப் பெண்கள்- திருமணமாகும் பெண்கள் இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும்.
சிறப்பு-2 வேப்பிலை மரமாக நினைக்காது அம்மனாக நினைத்து மனதால் வழிபட வேண்டும்.
சிறப்பு -3 கிழக்கு முகமாக நின்று இந்த வழிபாட்டை செய்வது உத்தமம் .
சிறப்பு -4 வேப்பிலை வைத்த தொட்டியிலும்- மரத்திலும் குளிர்ந்த நீர் ஊற்றி..மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மலர் சூடி பயபக்தியோடு அம்மனை வழிபடவும்.
சிறப்பு -5 'சர்வ மங்கள மாங்கல்யே ஸிவே சர்வார்த்த சாதகே -சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே' என ஐந்து முறை கூறி சுற்றி வந்து வணங்கவும்.
'ஆயுள் முழுக்க தீர்க்க சுமங்கலியாய் சிந்தை குளிர்ந்தவளாய்- அகம் மகிழ்ந்தவளாய் -குடும்பம் தழைத்தவளாய் - ஆனந்த வாழ்வு வாழ்வாயாக' என ஆசி கூறுவாள் வேப்பிலை அம்மன் .
அளவில்லா துயர் கொண்டு இன்னலில் சிக்குண்டு -மனம் தளர்ந்து வேண்டுவோர்க்கு கூட.. மழலை செல்வம் இல்லாது மனம் வருந்துவோர்க்கும்- திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டுவோர்க்கும் ..
வீட்டினில் வேப்பங்கன்று வைத்து இந்த தெய்வீக வழிபாட்டை ஐந்து வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்து
வர ..
அம்மனின் அருள் பெற்று என்றும் சுமங்கலி பெண்ணாக- செல்வ வாழ்வு கைகூட- பிள்ளைகள் வளர்ந்து புகழ் கூட்ட- வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
சொந்த வீடு மனை அமைவதற்கு பத்து தெய்வீக வழிபாடுகள் 🍀🌹🍀🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
விரைவில் திருமணம் கைகூட தெய்வ வழிபாடுமற்றும் பரிகாரஸ்தலங்கள்🌹👇
https://amzn.in/ibYVUJD
வீட்டை ஆலயமாக மாற்ற வேப்பிலை ஒன்று போதும்.. ஓராயிரம் நன்மைகள் பயக்கும். ஆதலால் வெள்ளிக்கிழமைதோறும் வீட்டினில் வேப்பிலை வைத்து வழிபடுவது சிறப்பு.
வேப்பிலையால் கிடைக்கும் மேலும் பல நன்மைகள்..
தீர்த்தத்தில் ஐந்து வேப்பிலை இலைகள் போட்டு வழிபாடு முடிந்ததும் அந்த நீரை பருகினால் நோய் நொடி அகலும்.
வேப்பிலை கன்று தொட்டியில் வைத்து வெள்ளிதோறும் அந்த மரத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு கிழக்கு நோக்கி விழுந்து வணங்கினால்- நம்முடைய குடும்பம் சுபிட்சம் பெறும்.
வேப்பிலை மாலை கட்டி ஆலயத்தில் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு கொடுத்தால் அவளுக்குப் பிடித்தமான வேப்பிலையால் குளிர்ந்து அம்பாள் வேண்டியதை அருள்வாள் .
ஜாதகத்தில் எப்படிப்பட்ட தோஷங்கள் இருந்தாலும் -தோஷத்தால் மனம் தொய்வு கண்டாலும் துவளாதீர்.. வேப்பிலையின் மணமும்- 108 அம்மன் திரு போற்றியும் அனைத்து தோஷங்களும் விலகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து ஒரு கை கொத்து வேப்பிலையை கையில் வைத்துக்கொண்டு- அம்பாளின் 108 போற்றி சொல்லி வழிபட அளவில்லாத செல்வம் பெருகும்.
வேப்பிலையின் பலன்களை அறிந்து வழிபாடுகளை செய்து பயன் பெறுக.
கல்லுப்பிலே ஐந்து விதமான பரிகாரங்கள் 🌹🍀🌹🍀🌹👇👇👇👇
அம்மன் உங்கள் எண்ணங்களை அகம் ஏற்று -அந்த எண்ணங்கள் வளர்வதற்கான வழி வகுத்து நினைத்த காரியத்தை நிறைவேற்றுவாள்.
அம்மனை நினைத்து ஆடி மாதம் வணங்கினால் மனம் ஆனந்தம் உருவாகி மனம் முழுதும் நிறைவாகி- மங்கல நிகழ்ச்சிகள் அரங்கேறி- நினைத்த காரியம் சித்தி பெறும்.
மூக்குத்தி பல்லாக்கு ஜொலி ஜொலிக்க ஏந்திய சூலம் கண்டு ஏழேழு ஜென்ம பாவ வினைகள் அனைத்தும் வெகுண்டோட..
தாயே நின் கருணையால் இந்த பிறவி தனில் இனிது கண்டு வாழ்ந்திட -வாழ்வில் வளம் கண்டு மகிழ்ச்சியில் மனம் நிறைந்திட- நிறைந்தவாழ்வு முழுதும் கனியாய் இனித்திட வாழ்த்தும் அம்மா- தாயே நின் பாதமே சரணம் சரணம் சரணம்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
Copy rights at balakshitha