தெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்வம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஏப்ரல், 2020

வெற்றிலை இனிப்பு தீர்த்தம்

வெற்றிலை இனிப்பு தீர்த்தம்

வீட்டில் எப்போதும் வெற்றிலை இருந்து கொண்டிருந்தால் அந்த வீடு சுபிட்சமாக இருக்கும்-  சித்தர்களுடைய மூலிகை மருத்துவம் எனும் புத்தகத்தை படித்துப் பார்த்தால் நமக்கு பல ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் அதில் இருப்பது தெரியும்.

 வெற்றிலை என்பது வெற்றியை  கொடுக்கக் கூடிய இலை.

 வாழ்க்கையில் ஒரு பெரிய சக்சஸ் கொடுக்கும்.

வீடு எப்போதும் சுபிட்சமாக இருப்பதற்கு -நாட் கிழமைகளில் விசேஷ நாட்களில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து படைப்போம் எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலத்தில் வெற்றிலையை தான் முதலில் வைக்கின்றோம் .


இதற்கான காரணம் எந்த செயல் செய்தாலும் அந்த செயல் வெற்றியோடு முடிய வேண்டும் என்பதற்காக -வெற்றிலை எனும் மங்கல மூலிகை இலையை வைக்கின்றோம் .


அதேபோல ஆரத்தி  சுற்றுவதற்கு வெற்றிலை பயன்படுத்துகின்றோம்.

 அந்த வெற்றிலையை அப்படியே வாடவிடாமல் அதை இனிப்பு தீர்த்தமாக செய்து உள்ளுக்கு கொடுக்கலாம் .

அந்த வெற்றிலை வாடும்படி விட்டால் அது குடும்பத்திற்கு நல்லது கிடையாது.

 முதல் விஷயம் படைத்த பொருள் குப்பைக்கு போகக்கூடாது இரண்டாவது வெற்றிலை என்பது தெய்வீக மூலிகை என்பதால் -அதை நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் தெய்வத்தின் பலன் நமக்கு கிடைக்கும்.

 அதை ஒரு இனிப்பு தீர்த்தமாக நாம் உள்ளுக்கு குடிக்கும்போது  நம்முடைய தோஷங்கள் -துயரங்கள்- உடல் கோளாறுகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம் .


இனிப்பு தீர்த்தமாக எப்படி தயாரிக்கலாம்.. இரண்டு வெற்றிலை ஏலக்காய் ஒன்று- கிராம்பு இரண்டு இரண்டு கிளாஸ் தண்ணீர்

 பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி வெற்றிலையை கிள்ளி போடவேண்டும். ஏலக்காய் கிராம்பு நன்றாக இடித்து பொடி செய்து அதையும் இந்த தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடலாம்.

 தண்ணீர் கொதித்து ஒரு டம்ளர் ஆனதும் எடுத்து ஆற வைக்கலாம்.

 இரண்டு டீஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும் ..நன்றாக கலந்துவிட வேண்டும் .இப்போது வெற்றிலை இனிப்பு தீர்த்தம் தயாராகி விட்டது.

 வீட்டில் இருக்கும் அனைவரும் குடிக்கலாம். தெய்வீக மூலிகை வெற்றிலை இனிப்பு தீர்த்தம் வாரந்தோறும் செய்து உள்ளுக்குக் குடிக்கலாம். தெய்வ கடாட்சம் சுபிட்சம் நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நிலைத்து இருக்கும் .

மங்கல வாழ்வு தரும்
 இளநீர் அபிஷேகம்🌹🍀🙏👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/blog-post_24.html


மனம் பசுமையாக -பார்க்கின்ற காட்சி பசுமையாக- பவள வாய் சொல் பசுமையாக- நினைக்கின்ற நினைவுகள் பசுமையாக- வெற்றிலையின் மனம் போல் என்றும் பசுமை நிறைந்திடவே ..

 இனியாவது வெற்றிலையை வாடவிடாமல் அதை தீர்த்தமாக அருந்தி வாழ்க்கையில் சிறப்புகள் பல பெற்று வாழ்க்கையில் பலனை அடையலாம்.

நம் முன்னோர் சொன்ன சொல் முற்றிலும் ஏற்று -அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டு பாரம்பரியமாய்..

மங்கள காரியம் சிறப்பு பெற முதன்மை பெற்ற- வெற்றிலை பாக்குப் பழம் தாம்பூலம் ..

கொடுப்பதும் பெறுவதும் சிறப்பு

விரைவில் திருமணம் கைகூட வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகார ஸ்தலங்கள் மின்னணு புத்தகமாக அமேசான் டவுன்லோட் செய்து படித்து பயன் பெறலாம்🌹🍀🌹🙏👇👇👇👇👇
https://amzn.in/ibYVUJD


கொரோனா எனும் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முக்கியமான உணவு முறைகள்🌹🍀🌹👇

வாழ்த்து பெரும் பொழுதும் தாம்பூலம் பெறுக.. வாழ்த்து  கொடுக்கும்பொழுதும் மற்றவருக்கு தாம்பூலம் தந்து- மங்கள வாழ்வு
 பெற்று சிறப்பு பெறுக.

Copy rights at balakshitha

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

மங்கல வாழ்விற்கு இளநீர் அபிஷேகம்

இளநீர் அபிஷேகம்

வற்றாத ஜீவ நதி போன்று என்றென்றும் காலமாய் தென்னைமரம் கொடுத்த அற்புத காய் இளநீரின் மகத்துவம் அறிந்து வாழ்க்கையில் இனிது பெறுவோம்.


பக்தியிலே ஏற்றத்தாழ்வு என்பது ஏது! தூய மனதோடு உள்ளன்போடு பக்தியோடும் கொடுக்கின்ற பொருளை தெய்வம் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும். அந்த தெய்வீக பொருளில் ஒன்றுதான் இளநீர்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் -தெய்வத்திற்கும் மிக உகந்த ஒரு பொருள் -தென்னை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய தேங்காய் இளநீர் எனும் அனைத்துமே தெய்வ காரியத்திற்கு பயன்படுத்தலாம்

தென்னை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றுபெயர் உண்டு.
 அதில் இருந்து நமக்கு கிடைக்கும் இளநீர் தெய்வத்திற்கு அபிஷேகம் கொடுக்கலாம்.


 எப்போதெல்லாம் நம்மால் முடிகிறதோ அப்போதெல்லாம் இரண்டு இளநீர் வாங்கி கோவிலுக்கு கொடுக்கலாம்.

சகல சௌபாக்கியம் தரும்
வெற்றிலை இனிப்பு தீர்த்தம்🌹🍀👇
http://balakshitha.blogspot.com/2020/04/blog-post_27.html

இளநீர் அபிஷேகத்திற்காக வாங்கி கொடுக்கக்கூடிய நாட்கள்..

செவ்வாய்க்கிழமை-முருகப்பெருமான்  பலன் -வீடு கட்டும் யோகம் செல்வச்செழிப்பு

புதன்கிழமை- பெருமாள்
 பலன் -நோய்நொடி பிணி அகலும்

வியாழன் கிழமை- குரு பகவான் பலன்- குழந்தைகளின் அறிவாற்றல் படிப்பு கூடும்.

வெள்ளிக்கிழமை -அம்பாள் துர்க்கை   பலன்-கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம்- விரைவில் திருமணம் நடக்கும் -எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும் .


சனிக்கிழமை- நவகிரகங்கள்
 பலன்- நம்முடைய தோஷங்கள் யாவும் விலகும்.

 பிரதோஷம் -சிவபெருமான்
 சஷ்டி கிருத்திகை -முருகப் பெருமான்

குலதெய்வம் -பலன் ஏழேழு தலைமுறைக்கும் வம்சம் தழைத்தோங்கும்.



இப்படி நம்முடைய வேண்டுதலை வைத்து நம்முடைய இஷ்ட தெய்வங்களுக்கு இளநீரால் அபிஷேகம் செய்வதற்கு இரண்டு இளநீர் கோவிலில் கொடுக்கலாம்.

நாம் கொடுக்கும் இளநீரை அபிஷேகம் செய்து- அதில் பஞ்ச பூத சக்திகளையும் உள்ளடக்கிய தெய்வங்களை குளிர்விக்கும் போது அந்த குளிர்ச்சியான சக்தி அதிர்வலைகள் வலுப்பெற்று தீய சக்திகளை போக்கி-  நம் குடும்பத்தை குளிர்விக்கும்.

நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாக நிலவும். நம்முடைய வம்சங்கள் நலமாக இருக்கும். பொருளாதாரம் வளர்ச்சி ஆகும்.

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app  டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇

அதனால் நம்முடைய வாழ்க்கை நலமாக இனிதாக அமைந்திட..

 இடைவிடாது நம்முடைய இஷ்ட தெய்வங்களுக்கு இளநீர் வாங்கி கொடுங்கள்.

 இப்போது நடக்கின்ற துயரங்கள் அனைத்தும் மறைந்து இனிமேல் நடப்பதெல்லாம் நல்ல நிகழ்வாக நடக்கும்.
Copy rights at balakshitha

வியாழன், 28 நவம்பர், 2019

ஐயப்பன் வரலாறு

ஐயப்பன் வரலாறு


மகிஷி  என்னும் அரக்கி அனைவரையும் நடுங்க வைத்து துன்புறுத்தவே -அவளை அழிப்பதற்கு ..

மோகினி அவதாரத்தில் விஷ்ணு சிவனோடு ஐக்கியமாகி பிறக்கின்றான் மணிகண்டன்.


பால் வதன நெற்றியிலே திலகம் கொண்டு கன்னங்கள்  இரண்டும் வெண்ணை உருண்டை களாக ..

இதழ்களோ சிவந்த மாதுளை முத்துக்களாக  -கழுத்திலே அழகிய மணியோடு பிறக்கின்றான் மணிகண்டன்.

அழுகுரல் கேட்டு கேரள பந்தள மகாராஜா- ஓடிவந்து அந்த அழகிய மழலையை அள்ளி தூக்கி மகிழ்கின்றார். 

கை கால்கள் துள்ள  மகாராஜா குழந்தையை அள்ளி அணைத்ததும் அழுத குழந்தை சிரிக்கின்றான் . அவன் கழுத்தில் இருந்த மணியும் அந்த நேரத்தில் மிக அழகாய் ஒளிர்ந்தது கண்டு பரவசப்பட்டு ராஜன் , மணிகண்டன் என்று அவனுக்கு பெயர் சூட்டுகிறாகின்றார்


 மகனாக அன்போடு வளர்க்கின்றார்  அடுத்துஅரசிக்கு ஒரு மழலை பிறக்க மழலையின் பாசமோ அரசியின்  கண்களைம றைக்கமணிகண்டன்
 எங்கே  ராஜ்ஜியத்தில் பங்கு கேட்பானோ -என பயந்து மனதில் நஞ்சு கொண்டு வஞ்சக செயல் புரிகின்றாள்.

தமக்குவயிற்றுவலி போல் பாசாங்கு செய்து- புலிப்பால் கொண்டு வர- அதை பருகினால்  வலி குணமாகும் என்று பொய்யுரை உரைக்கின்றாள்.


தன் வளர்ப்பு தாயின் பொய்யுரை நாடகநோய்  தீர்க்க -வீரம் பெற்ற புலி சுரந்த பால் தனை பெறுவதற்கு ஐயப்பன் செல்கின்றான்.

தவறுசெய்யும் நெஞ்சந்தனை  நல்வழி பாதையில் -தன் வழிபடுத்தவே- காடு மலை நோக்கி விஷ்ணு மைந்தன் செல்கின்றான்.


வஞ்சம் நினைப்போர் நெஞ்சத்திலே பாசம் எனும் நெய்யூற்றி எமையே தஞ்சம் பெற வேண்டுமென சபரிநாதன் செல்கின்றான்.

"ஆபத்துணராது -தான் புலிப்பார்வை கொண்டுவர சம்மதம் என உரைத்த தன் மகன் நலமாய் திரும்பி வர வேண்டும் "என கலக்கமுற்ற தந்தையின் கைகளை தன் நெஞ்சுதனில் வைத்து தைரியம் கூறிவிட்டு மலர்வனம் புன்னகைக்க சபரிநாதன் செல்கின்றான் .

ஒருபருத்தி துணி எடுத்து இரு வகைகளாய்  பிரித்து -ஒரு பகுதி
சிவ அம்சம் உடைய முக்கண் தேங்காயில் ஒரு கண் துளையிட்டு நீர் அகற்றி -சுத்தமான பசும் நெய் தனை ஊற்றி அடைத்து நெய்தேங்காய், மஞ்சள்- குங்குமம் -நெய் -பொறி அவல் - திரி வைத்து

இருமுடியிலே  அடுத்த பகுதியில் -காடு மலையில் பசியாற பருப்பு அரிசி சில உணவுப் பொருட்களும் சமைப்பதற்கு வைத்து
என்றும் சிவன் உனக்கு துணை இருப்பான் என் மகனே போய் வா- என கண்ணீர் மல்க அனுப்பிவைத்த தந்தையின் துயர் நீக்க -நலமோடு திரும்புவேன் என சபதம் கொண்டு சிவ விஷ்ணு அம்சத்துடன் புன்னகை பூக்க செல்கின்றான்.

தீய சக்திகள் நம்மை சூழ்ந்தாலும்  நல்மனம் கொண்டு -இரு முடி  அணிந்து கல்லும் முள்ளும் தைத்தாலும் எமைப் போல் தாங்களும் காடு மலை கடந்து வந்து எமை தரிசித்தால் 'உன் குடும்பம் சிறப்போடு வாழ்வதற்கு யாம் அருள் புரிவோம்' என எடுத்துக் காட்டவே
திருமுடி அணிந்தவனே காடு மலை நோக்கி செல்கின்றான்.


மனித இனத்தவன் நம்மை தேடி வருகிறான் -என்றுணர்ந்த புலியோ சீற்றம் கொண்டு -சீறிப்பாய்ந்து ஓடிவர -ஐயப்பன் முகம் கண்டு

அடங்கி -ஒடுங்கி அமர்கையில் அதன் மீதேறி ஐயப்பன் நகருக்கு திரும்புகின்றான்.

புலியின் மீது புவிமைந்தன் அமர்ந்து வர -அங்கமெல்லாம் மலர்ந்தவனாய் வானமோ வரவேற்க ..

சூரியன்சந்திரரோ- சிவப்பான இதழ் விரித்து சிரித்தவாறு வரவேற்க ..
காடு மலை யாவும் -பசுமையான பாய் விரித்து வரவேற்க..

பறவைக் கூட்டங்களோ- பவளவாய்

திறந்து கானம் பாடி ஆர்ப்பரிக்க..
விலங்கு கூட்டங்களோ கூடி நின்று குதுகலமாய் வரவேற்க..

நீரோடைகள்- ஆரவாரத்தோடு ஆனந்தமாய் வரவேற்க..

 சிந்தை குளிர்ந்தவனாய்- சிரிப்பு உதிர்த்தவனாய் - சிங்கார அழகன் அவன் நகரத்துக்குள்  நுழைகிறான்.

புலியின்மீதேறி புவனேஸ்வரன் வருகின்றான்.அந்த அற்புதக் காட்சியை அதிசயம் மேலோங்க ஊர்மக்கள் பார்த்திடவே- ஓடிவந்த அரசியோ தன் செயல் கண்டு வெட்கி தலைகுனிந்து  மன்னிப்பு கேட்கின்றாள்.

தாயை அரவணைத்து -தந்தையின் ஆசி பெற்று தவக்கோலம் பூண்டவனாய் சபரிமலை செல்கின்றான். எம்மெயப்பன் மலைமேலே அமர்கின்றான்.

கண் திருஷ்டி தோஷம் அனைத்தும் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇👇





பாவத்தைநீக்கும் நதியான பம்பை நதி அருகே ..

மகிஷ முனிவரின் மேல் பகவான் நர்த்தனம் ஆடி தன் வெற்றிக்களிப்பு சூடிய -அற்புத காட்சி தனை காண வந்த சிவபெருமான்- தன் காளையை கட்டிவைத்த இடமான காளைகட்டி  கடந்து 

அழகா நதியின் வழி சென்று சபரிமலையிலே  சாந்தமாய் அமர்கின்றான். 

அன்று அமர்ந்தவன் இன்றுவரை தமை பார்க்க வரும் பக்த கோடிகளை ஆனந்தமாய் வரவேற்று அருள்தனை புரிகின்றான்.

ஐயப்பனை தரிசனம் காண்போர் வாழ்வில் -சங்கடங்கள் தீருமே.

சாமி சரணம் என்போர் வாழ்வில் அனுதினமும் சுபதினமே.

இருமுடி அணிவோர்

மனதில் நீங்காத துயர் தீருமே.

கல்லும் முள்ளும் கடந்து வருவோர் வாழ்வில் வசந்தம் கூடுமே.


ஐயப்பன்நம்மை வாழ வைப்பான் வளர வைப்பான்-சிந்தை குளிர வைப்பான்- சிறந்த வாழ்வளிப்பான் புண்ணியம் கூட வைப்பான் சொர்க்கத்திலே நமக்கு இடம் அளிப்பான்


சபரிநாதனே நின் பாதமே சரணம் சரணம்

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=


Copy rights at balakshitha

சனி, 10 ஆகஸ்ட், 2019

குல தெய்வ வழிபாட்டு ஸ்லோகம்


குலதெய்வ வழிபாட்டு முறைகள் ஸ்லோகங்கள்



வாழ்க்கையில் நிம்மதியின்றி மனதில் ஏதோ குறை காண்பின் -குலதெய்வ வழிபாடு சரியாக செய்யவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் ...

வருடம் ஒரு முறை குலதெய்வகோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டி வந்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும் * என்பது ஐதீகம்.

வீட்டிலேயே குலதெய்வ வழிபாடு ஸ்லோகம் சொல்வது என்பது அற்புதமான பலனை தரும் *

தினமும் சொல்லக்கூடிய ஸ்லோகம்


ஓம் கணேஷாய நமஹ *

ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ*

ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ*

ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ*


தோஷங்கள் துன்பங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கை சுபிட்சம் பெற கல்லுப்பிலே  ஐந்து விதமான பரிகாரங்கள்


இந்த குலதெய்வத்திற்கான ஸ்லோகம் ஒன்று அல்லது மூன்று முறை சொல்வதற்கு ஒரே ஒரு நிமிடம் தான் மேலும் ஆகும்.


ஒரேசமயத்தில்அனைத்துதெய்வங்களையும் வணங்கிய திருப்தி இந்த ஒரு ஸ்லோகத்தில் கிடைத்துவிடும் 

குலதெய்வ ஸ்லோகத்தின் விளக்கத்தை காண்போம்..




ஓம் கணேஷாய நமஹ* முக்கண் முதல்வனான விநாயக பெருமானுக்கு நமஸ்காரம் .

ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ *தொன்று தொட்டு வரும் குல தெய்வத்திற்கு என் நமஸ்காரம்.

ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ* சிறுவயது முதலே நமக்கு பிடித்தமான தெய்வம் என்பது நம் மனதில் கண்டிப்பாக இருக்கும்.. முருகபெருமான்-ஏழுமலையான் அம்மன் அல்லது மற்ற தெய்வங்களாக இருந்தாலும்  அந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்ற ஸ்லோகமே.. ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ.




 ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ* நம் வாழ்வில் பல நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் எந்த தெய்வத்தை வணங்கையிலே நிகழ்வு நல்லதாக நடந்தது என நினைத்தால் அந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்ற ஸ்லோகமே.. ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ.

இந்த ஸ்லோகம் தினம் நாம் சொல்லி வேண்டினால்  குலதெய்வத்தை தினமும் வணங்கிட - சக்தி நிறைந்து- நம்முடைய குறைகள்  அனைத்தும்  நீங்கிவிடும் .

திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு 🌹🍀🙏👇

http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html


சொந்த வீடு மனை அமைய வழிபாட்டு தலங்கள் பரிகாரங்கள் 🌹🍀🌹👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


இந்த ஸ்லோகத்தை தினமும் நாம் சொல்ல சொல்ல அதனால் ஏற்படும் நன்மைகள்..

சிறப்பு-1  மனக்குறை அனைத்தும் நீங்கி மனம் தெளிவு பெற்று வாழ்க்கை சிறப்பு பெறும்.

சிறப்பு-2 நோய்நொடி அனைத்தும் விலகிவிடும்

சிறப்பு-3  சுப நிகழ்ச்சிகள் பல கூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்..

சிறப்பு-4  மழலை செல்வம் குரல் வீட்டினில் ஒலித்திட  விரைவான பலன் கிடைக்கும்

சிறப்பு-5  நவகிரக தோஷம் நீங்கிடவே செல்வம் பல பெற்று சீரும் சிறப்புமாய் வாழ்ந்திடவே ..

அனைவரும் குலதெய்வ வழிபாட்டில் ஸ்லோகத்தை 
தினமும் பாடி அதற்கான பலனை பெற்று வாழ்வில் வளம் பெற்று குடும்பத்தை மகிழ்ச்சி நிலவ வாழ்க்கை பயனை அடைந்து நிறைவு காணலாம்.

குழந்தை வரம் அருளும் திருக்கருகாவூர் அம்பிகையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகள்🙏🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/06/blog-post_29.html


இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

விரும்பினால் .கொரியரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

 புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்

நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.

கொரியரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்🙏


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde


Copy rights at Balakshitha