வெள்ளி, 24 ஏப்ரல், 2020

மங்கல வாழ்விற்கு இளநீர் அபிஷேகம்

இளநீர் அபிஷேகம்

வற்றாத ஜீவ நதி போன்று என்றென்றும் காலமாய் தென்னைமரம் கொடுத்த அற்புத காய் இளநீரின் மகத்துவம் அறிந்து வாழ்க்கையில் இனிது பெறுவோம்.


பக்தியிலே ஏற்றத்தாழ்வு என்பது ஏது! தூய மனதோடு உள்ளன்போடு பக்தியோடும் கொடுக்கின்ற பொருளை தெய்வம் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும். அந்த தெய்வீக பொருளில் ஒன்றுதான் இளநீர்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் -தெய்வத்திற்கும் மிக உகந்த ஒரு பொருள் -தென்னை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய தேங்காய் இளநீர் எனும் அனைத்துமே தெய்வ காரியத்திற்கு பயன்படுத்தலாம்

தென்னை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றுபெயர் உண்டு.
 அதில் இருந்து நமக்கு கிடைக்கும் இளநீர் தெய்வத்திற்கு அபிஷேகம் கொடுக்கலாம்.


 எப்போதெல்லாம் நம்மால் முடிகிறதோ அப்போதெல்லாம் இரண்டு இளநீர் வாங்கி கோவிலுக்கு கொடுக்கலாம்.

சகல சௌபாக்கியம் தரும்
வெற்றிலை இனிப்பு தீர்த்தம்🌹🍀👇
http://balakshitha.blogspot.com/2020/04/blog-post_27.html

இளநீர் அபிஷேகத்திற்காக வாங்கி கொடுக்கக்கூடிய நாட்கள்..

செவ்வாய்க்கிழமை-முருகப்பெருமான்  பலன் -வீடு கட்டும் யோகம் செல்வச்செழிப்பு

புதன்கிழமை- பெருமாள்
 பலன் -நோய்நொடி பிணி அகலும்

வியாழன் கிழமை- குரு பகவான் பலன்- குழந்தைகளின் அறிவாற்றல் படிப்பு கூடும்.

வெள்ளிக்கிழமை -அம்பாள் துர்க்கை   பலன்-கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம்- விரைவில் திருமணம் நடக்கும் -எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும் .


சனிக்கிழமை- நவகிரகங்கள்
 பலன்- நம்முடைய தோஷங்கள் யாவும் விலகும்.

 பிரதோஷம் -சிவபெருமான்
 சஷ்டி கிருத்திகை -முருகப் பெருமான்

குலதெய்வம் -பலன் ஏழேழு தலைமுறைக்கும் வம்சம் தழைத்தோங்கும்.



இப்படி நம்முடைய வேண்டுதலை வைத்து நம்முடைய இஷ்ட தெய்வங்களுக்கு இளநீரால் அபிஷேகம் செய்வதற்கு இரண்டு இளநீர் கோவிலில் கொடுக்கலாம்.

நாம் கொடுக்கும் இளநீரை அபிஷேகம் செய்து- அதில் பஞ்ச பூத சக்திகளையும் உள்ளடக்கிய தெய்வங்களை குளிர்விக்கும் போது அந்த குளிர்ச்சியான சக்தி அதிர்வலைகள் வலுப்பெற்று தீய சக்திகளை போக்கி-  நம் குடும்பத்தை குளிர்விக்கும்.

நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாக நிலவும். நம்முடைய வம்சங்கள் நலமாக இருக்கும். பொருளாதாரம் வளர்ச்சி ஆகும்.

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app  டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇

அதனால் நம்முடைய வாழ்க்கை நலமாக இனிதாக அமைந்திட..

 இடைவிடாது நம்முடைய இஷ்ட தெய்வங்களுக்கு இளநீர் வாங்கி கொடுங்கள்.

 இப்போது நடக்கின்ற துயரங்கள் அனைத்தும் மறைந்து இனிமேல் நடப்பதெல்லாம் நல்ல நிகழ்வாக நடக்கும்.
Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக