நமசிவாய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நமசிவாய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஜூலை, 2020

பிரதோஷம் வழிபாடு

                                          மஹா மகா பிரதோஷம் 

"தேவா   சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே -ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்" - திருஞானசம்பந்தர்


மாதத்தில் சிவனுக்கு 2 பிரதோஷம் வருவது நியதி .நமக்கெல்லாம் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கக்கூடிய
அற்புதம் வழிபாடு இந்த பிரதோஷ வழிபாடு.


சிவனை நினைத்து உருகி -மெய்யாகி அவன் நாமம் 'ஓம் நமச்சிவாய' என பாடி- சிவனோடு ஒன்றி நற்கதி பெற்று -வேண்டிய வரங்கள் பெற்று சிந்தை குளிர்ந்து - கண்ட கனவு நிஜமாகி -செல்வச் சிறப்போடு வாழ்வதற்கு- இந்த பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.

 பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று வழிபட்டால் மிகவும் சிறப்பு

இன்றைய சூழலில் வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே பிரதோஷத்தை முறைப்படி விரதம் இருந்து வழிபடலாம் .


தெய்வம் கொடுத்த இந்த மனிதப்பிறவியில்  கடந்த காலத்தில் வந்த துன்பங்களை  முற்றிலும் மறந்து வரும்- நிகழ்காலம் மிகவும் சிறப்பான முறையில் அமைவதற்கு இந்த பிரதோஷ வழிபாடு மிகுந்த பலனை அளிக்கும்.


எளிமையான முறையில் விரதம் இருக்கும் முறை..

1 - பிரதோஷம் அன்று கங்கா ஸ்நானம் செய்வது சிறப்பு ( ஒரு குவளை நீரில் 'ஓம்' என எழுதி அந்த புனித நீரை  தலையிலே  கங்காஸ்நானமாக நினைத்து நீராடுதல்)

2 - பிரதோஷம் அன்று புலால் உணவை தவிர்ப்பது நல்லது

3 -  பிரதோஷம் அன்று மாலை நான்கு முப்பது மணிக்கு மேல் ஆறு மணிக்குள் இந்த பூஜை செய்வது சிறப்பு.

 4 -   ஐந்து முக விளக்கு ஏற்றப்பட வேண்டும் -ஓம் நமச்சிவாய எனும் தெய்வீக ஓசை வீட்டிலே ஒலிப்பது தெய்வீக பலனை கொடுக்கும்.

 5- தேவையான பொருட்கள் -மஞ்சள் குங்குமம்- விபூதி - சந்தனம்-மலர்கள்  வில்வ இலை -தூபம் கற்பூரம்- நறுமண வத்திகள்- தேங்காய் வெற்றிலை பாக்கு- பால் பழம்.

 பூஜை அறையை மலர்களால் மிக அழகாக அலங்கரித்து ஐந்து முக விளக்கை ஏற்றவும். நறுமண பத்திகள் வாசனையோடு சிவனின் நாமம் ஒலிக்க பூஜையை ஆரம்பிக்கலாம்.

பிரதோஷம் நேரத்திலே சிவபெருமான் என்ன செய்து கொண்டிருப்பார்! 🌹🍀👇
http://balakshitha.blogspot.com/2018/07/blog-post_15.html

சிவனுக்கு உகந்த வில்வஇலையின் சிறப்பு 🙏🙏🙏 🌹🍀🌹🍀🌹🍀👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/blog-post_8.html

ஒரு  மனைவைத்து அதன் மேல் வில்வ இலைகள் மலர்களால் அலங்கரித்து 
சந்தனத்தால் லிங்கம் செய்து குங்குமப் பொட்டிட்டு சிவபெருமான் ஆக மனதார வேண்டிக்கொண்டு லிங்கத்தை வில்வ இலையின் மேல் வைக்கவும்.


தேங்காய் உடைத்து  இனிப்பு பிரசாதம் பால் பழம் வில்வ இலை அனைத்தும் வைத்து அந்த மங்கல பூஜையை கண்டு கண்களால் மகிழ்ந்து மனதால் நிறைவு கொண்டு..

 வடக்கு நோக்கி அமர்ந்து சிந்தையை சிவனிடத்தில் செலுத்தி -இரு கை கூப்பி -கண்களை மூடி -ஓம் நமசிவாய எனும் நாமம் தனை 108 முறை சொல்லவும் .




அடுத்து உங்களுடைய நியாயமான எண்ணங்களை ஆசைகளை ஐந்து முக தீபத்தினை கண்களினால் உற்றுநோக்கி சிவனிடத்தில் வைக்கவும்.

கற்பூர ஆராதனை செய்து விரதத்தை முடிக்கலாம் .இதேபோன்று மூன்று பிரதோஷங்கள் பூஜையை நல்ல முறையில் நிறைவேற்றி சிறப்பாக செய்து உங்கள் வேண்டுதல்களை வேண்டிக்கொள்ளுங்கள் .

சொந்தவீடு மனை வாங்குவதற்கு 10 தெய்வீக வழிபாடுகள் 🙏🍀🌹🌹👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

நினைத்த காரியம் அத்தனையும் ஜெயமாகும் .சிந்தையிலே சிவனை நிறுத்தி -சித்தாந்த வேதங்கள் பாடி மனம் முழுதும் மங்களம் நிறைய தடைப்பட்ட திருமணம் கூட- கணவன் மனைவி இனிதே வாழ -குழந்தை பாக்கியம் நிலைக்க -கடன் பிரச்சனை விலக -செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ்வதற்கு  பிரதோஷம் கை மேல் பலன்-வெற்றி கிடைக்கும்.

 முறையாக பூஜை செய்து வாழ்வில் வளம் காண்கவே- காண்கவே  கண்டு மனம் மகிழவே- செல்வச் சிறப்போடு வாழ்ந்து வாழ்க்கை பயனை
 அடைகவே.

ஓம் நமசிவாய சரணம் சரணம் சரணம்

Copy rights at balakshitha

சனி, 28 மார்ச், 2020

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று திருப்பதிகம் part- 3

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம்


ஈசனின் திருப்புகழை பாடிய திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் பாடிய  தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று பதிகம் தொடர்ந்து21 நாட்கள் படித்து வர- நோய்கள் அனைத்தும் குணமாகும்..


எரிவது  அட்டது நீறு
இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கியமாவது நீறு.

 துயிலைத் தடுப்பது நீறு
 சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு
 சூலத்து ஆலவாயான் திருநீறே .

இராவணன் மேலது நீறு
எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு
பாவம் அறுப்பது நீறு

 தராவணமாவது நீறு
 தத்துவ மாவது நீரு
அரா வணங்கும் திருமேனி
ஆலவாயான் திருநீறே .

மாலொடு அயன் அறியாத
வண்ணமும் உள்ளது நீறு
 மேலுறை தேவர்கள தங்கள்
 மெய்யது வெண்பொடி நீறு

 ஏல உடம்பு இடர் தீர்க்கும்
இன்பம் தருவது நீரு
ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

குண்டிகை கையர்களோடு
சாக்கியர் கூட்டமும் கூட
கண் திகைப் பிப்பது நீறு
 கருத இனியது நீறு

 எண்டிசை பட்ட பொருளார்
ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர்  பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே

ஆற்றல் அடல் விடை ஏறும்
ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னன் உடல் உற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் நல்லவர் வல்லவர் தாமே.

வெள்ளி, 27 மார்ச், 2020

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம் part - 2


தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்று பதிகம்


ஈசனின் திருப்புகழைப் பாடிய திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறை பாடிய தீராத நோய்களையும் தீர்க்க உதவும் திருநீற்றுப்பதிகம்

தொடர்ந்து 21 நாட்கள் படித்து வந்தால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.


 காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணந்தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந்தருவது நீறு
திரு ஆலவாயான் திருநீறே .


பூச இனியது நீறு
புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு
பெருந்தவத்தோர்களுக்கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு
அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திரு ஆலவாயான் திருநீறே.

 அர்த்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு
 வானம் அளிப்பது நீறு

பொருத்தமதாவது நீறு
 புண்ணியர் பூசும் வெண்ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த
திரு ஆலவாயான் திருநீறே.

Copy rights at balakshitha

வியாழன், 26 மார்ச், 2020

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம் part -1

தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம்

 ஈசனின் திருப்புகழை பாடிய திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் பாடிய தீராத நோய்களையும் தீர உதவும் திருநீற்றுப்பதிகம்  தொடர்ந்து 21 நாட்கள் படித்து வந்தால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.


நாள் -1

 மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு
 சுந்தரமாவது நீறு
 துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு
 சமயத்தில் உள்ளது நீறு
 செந்துவர் வாயுமை பங்கன்
திரு ஆலவாயான் திருநீறே

 வேதத்தில் உள்ளது நீறு
 வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
 ஓதத் தகுவது நீறு
 உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

 முத்தி தருவது நீறு
முனிவர் அணிவது நீறு
 சத்தியமாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
 பத்தி தருவது நீறு
 பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
திரு ஆலவாயான் திருநீறே.

வெள்ளி, 8 நவம்பர், 2019

பிரதோஷம் அன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை சிறப்பு

பிரதோஷம் 


சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையில் அர்ச்சனை செய்யும் போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

 கற்பக மரம்- சுபிட்சம் மரம் -தெய்வீக மரம் என மிகவும் புகழ்பெற்ற சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த மரமே வில்வமரம் .


 வில்வமரம் பிறந்த வரலாறு..


மனிதர்களின் தலையெழுத்தை எழுதுகின்ற பிரம்மன் இடத்திலே அவ்வெழுத்து அனைவருக்கும் இனிதாக அமைந்திட வேண்டி- வில்வமரத்தை பிரம்மனோ உருவாக்க " தெய்வீக மரத்தை வணங்குவோர் அனைத்து செல்வமும் பெற்று சிறப்போடு வாழியவே "என  வேண்டி அன்னை மகாலட்சுமியானவள்  தம்முடைய திருக்கரங்களால் அந்த தெய்வீக மரத்தை நட்டாள்.


 அம்மரமே சுபிட்சமாகி தெய்வீக மரமாக உயர்ந்து நிற்க -அந்த வில்வ மரத்தின் இலைகளை பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வாழ்க்கையில் அனைத்து சிறப்புகளையும் பெறலாம்.

 வில்வ மரத்தின் சிறப்புகள்..



   சிறப்பு -1 மும்மூர்த்திகளும் ஒன்றிணைந்து காட்சிதரும் வில்வத்தை அர்ச்சனை சிவனுக்கு செய்கையில் செய்த வினைகள் யாவும் விலகி விடும் .

சிறப்பு- 2  மும்மூன்று இலைகள் சேர்ந்தவாறு காட்சி தரும் வில்வ இலையிலே இடதுபக்கம் பிரம்மா வலதுபுறம் விஷ்ணு -நடுவில் சிவன் என காட்சிதரும் வில்வ இலையால் பிரதோஷத்திலே அர்ச்சனை செய்து வழிபட்டால் குறைகள் யாவும் அகன்று விடும் .

சிறப்பு -3   லட்சம் தங்க மலர் கொண்டு அர்ச்சனை செய்த பூஜா பலன் அனைத்தும் பிரதோஷத்திலே சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கிடைத்து- தங்கமலர் கொண்ட தாமரையாள் மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்கும்.

சிறப்பு -4 வாழ்க்கையில் சுபீட்சம் கிடைத்திடவே - பிரதோஷத்தில் வில்வ இலையால் சிவனுக்கு சிவார்ப்பணம் செய்கையிலே 108 சிவாலயங்கள் சென்ற புண்ணிய பலனை அடையலாம். 

 சிறப்பு- 5 வில்வ இலை எனும் தெய்வீக இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே கங்கா என்னும் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்த பலனை அடையப் பெற்று நோய் நொடிகள் அனைத்தும் அகன்றுவிடும். 

சிறப்பு -6 வில்வ மரத்தில் உள்ள கிளைகளே வேதங்களாக- இலைகளே சிவ ரூபமாக -வேர்களே கோடி கோடி ருத்ரர்கள் ஆக உயர்ந்து நிற்கும் வில்வ மரத்தின் இலைகளை சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே மூன்று ஜென்மபாவம் விலகி புண்ணியம் பலன்கள்தான் பெற்று வாழ்க்கையில் நாம்  சிறப்பை அடையலாம்.


 சிறப்பு -7 ‌ அனைத்து செல்வமும் பெறுவதற்கு அஸ்வமேதயாகம் செய்ய வேண்டுமெனில் -இருகை சேர்த்து வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைத்து விடும் .

பிரதோஷம் அன்று செய்யக்கூடிய வழிபாட்டு விரத முறைகள் 🙏🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/07/1-8-2020.html

திருமண தடைகள் நீங்க அற்புதமான சிவன் பிரதோஷ வழிபாடு 🙏🌹🍀🌹👇
http://balakshitha.blogspot.com/2019/05/blog-post_30.html


 சிறப்பு - 8 ‌ பிரதோஷ தினத்தில்- கணப்பொழுதும் மறவாது சிவாயநம எனும் மந்திரம் ஜெபித்து -வில்வ இலைகளை சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே -காசி ராமேஸ்வரம் சென்ற பலன் அனைத்தும் கிடைத்துவிடும் . 

 சிறப்பு-9 108 சிவாலயங்கள் சென்ற பலன் கிடைத்திடவே -சிறப்பான வாழ்க்கை வாழ்க்கை நல்கிடவே பிரதோஷ தினத்தன்று -வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்து -புண்ணியப் பலனை அடையலாம்.

சொந்த வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் 🙏🌹🍀👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

சிறப்பு-10 ‌மனதிலே பல சலனங்கள் இருப்பினும் -குடும்பத்தில் பல குறைகள் இருப்பினும் -சிந்தையிலே பல குழப்பங்கள் இருப்பினும் -மனதில் பல காயங்கள் இருப்பினும் பிரதோஷத்தன்று தளராத உறுதியோடு -ஓம் சிவாய நமஹ திரும்பத் திரும்ப சொல்லி வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே வாழ்க்கையில் வழி நடத்தும் பாதைதனை அவன் காட்டி மலர்கின்ற வாழ்வுதனை கொடுப்பான்- எம்பெருமானின் பாதமே சரணம் சரணம் சரணம்

உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்க 🌹🍀🙏🙏

Copy rights at balakshitha

சனி, 2 மார்ச், 2019

மகா சிவராத்திரியின் விரத முறை



Maha Shivaratri viratham murai
மகா சிவராத்திரி என்றால் என்ன?

மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மஹாசிவராத்திரி ஆகும்.  மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைப்போம்.   சிவராத்திரிகள் ஐந்து  விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 


ஐந்து சிவராத்திரிகளின் சிறப்பு அம்சம் என்ன ?


 ஐந்து முகங்களைக் கொண்டவன் சிவபெருமான் . ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 


இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்; மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும், தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தவருமான அகத்தியர். 


மகா சிவராத்திரி விரதம் இருப்பதின் பலன்களை தெரிந்து கொள்வதற்கு முன்பாக மகா சிவராத்திரி என்றால் என்ன என்பது பற்றி முதலில் காண்போம் வாருங்கள்!


 உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனை மறந்து இறைவழிபாட்டை மறந்து பாவம் எது !புண்ணியம் எது !என்று பகுத்தறிவிலாது  தவறுகள் செய்கின்ற போது பலவிதமான தீய செயல்களும்  அதர்மங்களும் அதிகமாக ஏற்படுகின்றன..

அதர்மங்கள் அதிகமாக அதிகமாக அழிவுகளும் அதிகமாக ஏற்படுகின்றது.

இந்த அழிவுகள் மட்டுமல்லாது உலகத்தில் இயற்கை பேரழிவுகளும் அதிகமாகி..உலகமே இருள் சூழ்ந்து சுடுகாடு மயமாகி விடுகின்றது  ..

இதனைத்தான் உலகத்தின் முடிவு காலம் அதாவது அழிவுகாலம் என்கின்றோம் .

அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஒளிமயமான ஒப்பற்ற இறைவன் ஆதிக்காதியாய்  முடிவுக்கு முடிவாய்..

  மறைகளும் கடந்து நின்ற  இறைவனாகிய சிவபெருமான்* சினம் கொண்டு  ஊழி கூத்தாடுகின்றார் ..

அவ்வாறு அருள் நடம் புரியும் இறைவனை அன்னை உமாதேவி ஆனவள்..

உயிர்களிடத்திலே இரக்கம் கொள்ளுமாறு வேண்டி பூஜை செய்கின்றார் ..

பூஜைகளை ஏற்றுக்கொண்டு சிவபெருமானும் உயிர்களிடத்தில் கருணை கொண்டு மறுபடியும் புதிய உலகத்தை படைக்கின்றார்.

புதிய உலகத்தை படைக்கும் அந்த தினமே மகா சிவராத்திரி  ஆகும்.

தனித்து நின்ற உமையானவள் சிவபெருமானை பூஜித்து சிவ பெருஞ்சோதியில்  சுடரொளியில்* ஐக்கியமாகி சிவசக்தி சொரூபமாக காட்சி தருகின்றார்.

புதிய உலகத்தை படைத்து சிவபெருமான் சக்தியோடு சேர்ந்து காட்சி தருகின்ற அந்த தினத்தில் ..

 நாம் இறைவனோடு இரண்டற கலந்து இறைவனோடு ஐக்கியமாகி தூய மனதோடு பக்தியோடும் வழிபட்டால்

நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி  புண்ணியத்தை பெறும் பாக்கியத்தை சிவபெருமான் நமக்கெல்லாம் அருளுவார் என்பதே  மகா சிவராத்திரியின் சிறப்பாகும்.

தனித்து நின்ற உமையானவள் சிவபெருமானை பூஜித்து சிவ பெருஞ்சோதியில்* சுடரொளியில்* ஐக்கியமாகி சிவசக்தி சொரூபமாக காட்சி தருகின்றார்.







Copyrighs at Balakshitha

மஹா சிவராத்திரி *பிறந்த கதை

  
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனை மறந்து இறைவழிபாட்டை மறந்து பாவம் எது !புண்ணியம் எது !என்று பகுத்தறிவிலாது  தவறுகள் செய்கின்ற போது பலவிதமான தீய செயல்களும்  அதர்மங்களும் அதிகமாக ஏற்படுகின்றன..

அதர்மங்கள் அதிகமாக அதிகமாக அழிவுகளும் அதிகமாக ஏற்படுகின்றது

இந்த அழிவுகள் மட்டுமல்லாது உலகத்தில் இயற்கை பேரழிவுகளும் அதிகமாகி..உலகமே இருள் சூழ்ந்து சுடுகாடு மயமாகி விடுகின்றது  ..
இதனைத்தான் உலகத்தின் முடிவு காலம் அதாவது அழிவுகாலம் என்கின்றோம் .


அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஒளிமயமான ஒப்பற்ற இறைவன் ஆதிக்காதியாய்  முடிவுக்கு முடிவாய்..


  மறைகளும் கடந்து நின்ற  இறைவனாகிய சிவபெருமான்* சினம் கொண்டு  ஊழி கூத்தாடுகின்றார் ..

அவ்வாறு அருள் நடம் புரியும் இறைவனை அன்னை உமாதேவி ஆனவள்..

 *உயிர்களிடத்திலே இரக்கம் கொள்ளுமாறு வேண்டி பூஜை செய்கின்றார் ..

பூஜைகளை ஏற்றுக்கொண்டு சிவபெருமானும் உயிர்களிடத்தில் கருணை கொண்டு மறுபடியும் புதிய உலகத்தை படைக்கின்றார்.

புதிய உலகத்தை படைக்கும் அந்த தினமே மகா சிவராத்திரி* ஆகும்.

தனித்து நின்ற உமையானவள் சிவபெருமானை பூஜித்து சிவ பெருஞ்சோதியில்* சுடரொளியில்* ஐக்கியமாகி சிவசக்தி சொரூபமாக காட்சி தருகின்றார்.


புதிய உலகத்தை படைத்து சிவபெருமான் சக்தியோடு சேர்ந்து காட்சி தருகின்ற அந்த தினத்தில் ..

 நாம் இறைவனோடு இரண்டற கலந்து *இறைவனோடு ஐக்கியமாகி*தூய மனதோடு பக்தியோடும் வழிபட்டால்

நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி  புண்ணியத்தை பெறும் பாக்கியத்தை சிவபெருமான் நமக்கெல்லாம் அருளுவார் *என்பதே  மகா சிவராத்திரியின் சிறப்பாகும்.

Copy rights at balakshitha

புதன், 27 பிப்ரவரி, 2019

திருஞான சம்பந்தர் வரலாறு

பசுமை தவழும் சோழ நாட்டிலே சீர்காழி என்னும் ஊரிலே
திருவாதிரை நட்சத்திரத்திலே பகவதி அம்மையின் -மணி வயிற்றிலே  உதித்தவர்தான் ஆளுடைய பிள்ளையார்
என்னும் திருஞான சம்பந்தர்*
மூன்று வயது நிரம்பிய மழலையவன் -பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய தந்தை முகம் காணாது கண்களிலே  நீர் ததும்ப பவளவாய் அழும் ஓசை குரல் கேட்டு ஓடிவந்த எம்பெருமானின் உமையவளோ! சிவனின் ஆணைப்படி வெள்ளிக் கிண்ணததிலே தாய்ப்பால்தனிலே ஞான அமிர்தம் குழைத்து ஊட்டிவிட- அறிவுச் செல்வத்தை அன்றுமுதல் பெற்றவன்தான் திருஞான சம்பந்தர்*
நீராடி முடித்த தந்தை சிவபாதர் மகன் அருகே வந்தார் ." யார் கொடுத்த  பாலை நீ உண்டாய்
என கோபமாக 'கோல் 'கொண்டு கேட்க- வந்தது உமையவளோடு ஈசனே என  கூறி புகழ்ந்து பாடல் ஒன்று பாடுகின்றார் ..

'தோடுடைய செவியன் விடை ஏறி' பாடலை கணீரென்று அந்த மூன்று வயது பாலகன் பாடுகின்றான்*
அறிவும் ஞானமும்     சிவன்கொடுத்தது *
சொல்லும் குரலும்
சிவன் கொடுத்தது *
பெயரும் புகழும்
சிவன் கொடுத்தது *

அதை அறிந்த பாலகனோ பாட்டும் பக்தியும் மிகுதியாக வேதநெறி  தழைத்தோங்க அர்த்தநாரீஸ்வரர் சிவனின் பாதம் பணிந்து  புனிதவாய் மலர்ந்தழ பெருமானை போற்றி பன்னிரு திருமுறைகளில்  முதல் மூன்று திருமுறைகளைப் பாடி சிறுவயதிலேயே தெய்வத்திற்காக திருத் தொண்டு புரிந்தார் திருஞான சம்பந்தர்*

வெள்ளி, 16 நவம்பர், 2018

சோம வாரமே வருக

குழந்தையாய்  
  இருந்து விட்டால்
 துக்கம் ஏது! துவள்வதேது!
 கலக்கமேது! துயரமேது!
துன்பமில்லா வாழ்வு தனை
 அனுபவிக்க நேரமின்றி.. 

வளர்ந்த பிறகு 
'விதிபயனை 'அனுபவிக்க 
இறைவனோ ஆசிகூற 
'கனவு' பல சுமந்தவாறு 
அனைத்தையுமே சுமப்பதற்கு எதிர்கொண்டு நின்ற
 நம் வாழ்வு தனில் ..

முள்ளும் மலருமாய்
காயும் கனியுமாய்
 புயலும் தென்றலுமாய்
 அழுகையும் சிரிப்புமாய்
 சூழ்ந்த  நம் வாழ்வு தனில்
  தளராத முயற்சி செய்து

நமச்சிவாய* மந்திரத்தை 
இடைவிடாது சொல்வதற்கு 
ஏற்ற நேரமே கார்த்திகை மாதம் திங்கட்கிழமையிலே
சிவனை நினைத்து
 வழிபடும்
சோமவாரம்* 
என புரிந்து விட்டால்..

தீமை அகன்றிடுமே
 அல்லல் நீங்கிடுமே
 செல்வம் ஓங்கிடுமே
நன்மை பெறுகிடுமே*

ஓம் அப்பா போற்றி *
ஓம் அரனே போற்றி*
 ஓம் அரசே போற்றி *
ஓம் அழகே போற்றி *
ஓம் இறைவா போற்றி *
ஓம் ஈசா போற்றி*
 ஓம் உணர்வே போற்றி*
ஓம்  உயிரே போற்றி*
 ஓம் ஒளியே போற்றி *
ஓம் கடம்பா போற்றி *
ஓம் குருவே போற்றி*
 ஓம் சங்கரா போற்றி*
 ஓம் சுந்தரா போற்றி *
 ஓம் திங்களே போற்றி*
 ஓம் நமசிவாயா*
போற்றி*
 போற்றி*

கார்த்திகை மாத
 திங்கள்கிழமைகளில்
 சோமசுந்தரரை நினைத்து
 வழிபடும் விரதம் 
சோமவாரம் அன்று

சந்திர ஓரை *தனிலே
காலை(6-7)  மதியம்(1-2)
இரவு(8-9)
நம்மால் முடிந்த 
நேரத்திலே..

திருவிளக்கு ஏற்றி
 ஆசனத்தில்  வடக்கு திசை
 நோக்கி அமர்ந்து 
விரதமிருந்து வழிபட்டு
ஐந்தெழுத்துமந்திரத்தில்
 அனைத்தும் அடங்கும்
'ஓம் நமசிவாயவே'
 எனும் திருநாமம்

 மனமும் நாவும் ஒன்றிடவே
பக்தி பரவசம் சிந்தையிலே
சிவனின் அருளை 
பெறுவோமே*

ஆதியாய் நடுவுமாகி
 அளவிலாஜோதியுயாய்
 உணர்வுமாகி
 தோன்றிய பொருளுமாகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகி
உயர்ந்து நிற்கும் 
தில்லைப் பெருமானே!
உயிரோடு கலந்து நிற்கும் எம்பெருமானே*

நின் பாதமே சரணம்
 சரணம்  சரணம் * என்றிட்ட
எம்மை மட்டுமின்றி
சுற்றி இருக்கும் 
அனைவரையும்
அருள்கூர்ந்து 
வாழ்த்துவாயே
நடராஜனே*

ஓம் நமசிவாய*

Copy rights at Balakshitha

ஞாயிறு, 15 ஜூலை, 2018

பிரதோஷம் வழிபாடு சிவனை தேடி..



பிரதோஷ வழிபாடு


பிரதோஷம் அன்று சிவபெருமான் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதற்கான விளக்கத்தைக் காண்போம்..


உலகத்தை படைத்து அருள்பவன் இறைவன்  ஆகின்றான் 

 உலகமக்களை காப்பாற்றி  அருள்பவனும் அவனே. 

கடவுளின்  திருவருட் துணையின்றி  ஒருஅணுவும்  அசையாது. கடவுளின் திருவருள் துணை இன்றி  நமக்கு வேறு கதியில்லை வாழ்க்கையில்லை .

 இறைவனின் மனம் குளிர்வதற்கு எத்தனையோ முறைகளில் பூஜைகள்  செய்கின்றோம். 

அப்படிப்பட்ட பூஜை வழிபாடுகளில் மிகவும் சிறந்த ஒரு வழிபாடு தான் பிரதோஷ வழிபாடு

  

அமாவாசை
  பவுர்ணமி இரண்டிலுமேஅடுத்து வரும் பதின்மூன்றாம்நாள்  திரியோதசி திதி அன்று தான் பிரதோஷம் என்கின்றோம் மாலை 5 .45 மணியிலிருந்து  6.30மணிக்குள் பிரதோஷ காலம்

சூரிய அஸ்தமனத்தின் தொடக்கம்- பிரதோஷம் காலத்தின் ஆரம்பம் .
பகலின்  முடிவு-
 சந்தியா காலத்தில் தொடக்கம்.

 சிருஷ்டி முடிவு பெற்று- தன் 
ஸ்வ ரூபத்தில் அடங்கி கொள்ளும் நேரம். மனதும் ஈஸ்வரனுடன்  ஒடுங்க -அதுவே நல்ல காலம் .


 அந்த நித்திய பிரளய நேரத்தில்- நாம் அனைவரும் வணங்கி வழிபடும் அந்த நேரத்திலே, சிவபெருமான் என்ன செய்து கொண்டிருக்கிறார்?


 கயிலாயத்தில் பிரதோஷம் வேளையிலே நடக்கும் அற்புதமான காட்சி  இது!


 சரஸ்வதி தேவியோ தமது மலர் கைகளால் வீணையை மீட்டிகொண்டிருக்க *


 இந்திரனோ மிக அழகாக புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருக்க ..


பிரம்மனின் விரல்களோ தப்பாமல் தாளம்  தட்டிக் கொண்டிருக்க.. 

அதுமட்டுமல்லாது- திருமாலின்
திருக்கரங்கள்  மேளம் கொட்ட
 லக்ஷ்மி தேவி  தன் இன்னிசையால் கானமழை பொழிகின்றாள்.. 

 சிவபெருமானோ நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவசக்தி சொரூபமாக காட்சி தந்து  நடனமாட.. 


பிரதோஷ வேளையிலே -அந்த அற்புதமான நிகழ்வு கைலாயத்தில் நடந்து கொண்டிருக்க- 

நாமோ  அந்த புண்ணிய வேளையிலே சிவாலயங்களில் சிவனை தரிசனம் கண்ட தருணத்திலே -

 சிவபெருமானது சக்தியானது நம்மை ஆட்கொண்டு, பாவங்கள் அனைத்தும் கரைந்து பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் கிடைக்கப்பெற்று
 அவன் அருளை பெறுகின்றோம்.

பிறப்பு -இறப்பு ஆகிய கடலிலே அழுந்துகின்ற  எம்மை-
 அக்கடலில் அழுந்தா வண்ணம்..

 கருணைகையால்  கையில் எடுத்து -என் அறிவில்  தன் சொரூபத்தை காட்சி தந்து அருள்கின்ற எம்பெருமானே! ‌

நான் வாழ்கின்ற  இந்த வாழ்க்கையில் குறை ஏதுமில்லாத- நிறை கொண்ட வாழ்க்கையாக ,மகிழ்ச்சி கொண்ட  வாழ்க்கையாக  வாழ்வதற்கு அருள் செய்வாயே எம்பெருமானே!


 என்று இறைவனை வேண்டுகின்ற  ஒரு அற்புதமான வழிபாடுதான் பிரதோஷ வழிபாடு

Copy rights at balakshitha