மஹா மகா பிரதோஷம்
"தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே -ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்" - திருஞானசம்பந்தர்
மாதத்தில் சிவனுக்கு 2 பிரதோஷம் வருவது நியதி .நமக்கெல்லாம் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கக்கூடிய
அற்புதம் வழிபாடு இந்த பிரதோஷ வழிபாடு.
சிவனை நினைத்து உருகி -மெய்யாகி அவன் நாமம் 'ஓம் நமச்சிவாய' என பாடி- சிவனோடு ஒன்றி நற்கதி பெற்று -வேண்டிய வரங்கள் பெற்று சிந்தை குளிர்ந்து - கண்ட கனவு நிஜமாகி -செல்வச் சிறப்போடு வாழ்வதற்கு- இந்த பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.
பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று வழிபட்டால் மிகவும் சிறப்பு
இன்றைய சூழலில் வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டிலேயே பிரதோஷத்தை முறைப்படி விரதம் இருந்து வழிபடலாம் .
தெய்வம் கொடுத்த இந்த மனிதப்பிறவியில் கடந்த காலத்தில் வந்த துன்பங்களை முற்றிலும் மறந்து வரும்- நிகழ்காலம் மிகவும் சிறப்பான முறையில் அமைவதற்கு இந்த பிரதோஷ வழிபாடு மிகுந்த பலனை அளிக்கும்.
எளிமையான முறையில் விரதம் இருக்கும் முறை..
1 - பிரதோஷம் அன்று கங்கா ஸ்நானம் செய்வது சிறப்பு ( ஒரு குவளை நீரில் 'ஓம்' என எழுதி அந்த புனித நீரை தலையிலே கங்காஸ்நானமாக நினைத்து நீராடுதல்)
2 - பிரதோஷம் அன்று புலால் உணவை தவிர்ப்பது நல்லது
3 - பிரதோஷம் அன்று மாலை நான்கு முப்பது மணிக்கு மேல் ஆறு மணிக்குள் இந்த பூஜை செய்வது சிறப்பு.
4 - ஐந்து முக விளக்கு ஏற்றப்பட வேண்டும் -ஓம் நமச்சிவாய எனும் தெய்வீக ஓசை வீட்டிலே ஒலிப்பது தெய்வீக பலனை கொடுக்கும்.
5- தேவையான பொருட்கள் -மஞ்சள் குங்குமம்- விபூதி - சந்தனம்-மலர்கள் வில்வ இலை -தூபம் கற்பூரம்- நறுமண வத்திகள்- தேங்காய் வெற்றிலை பாக்கு- பால் பழம்.
பூஜை அறையை மலர்களால் மிக அழகாக அலங்கரித்து ஐந்து முக விளக்கை ஏற்றவும். நறுமண பத்திகள் வாசனையோடு சிவனின் நாமம் ஒலிக்க பூஜையை ஆரம்பிக்கலாம்.
பிரதோஷம் நேரத்திலே சிவபெருமான் என்ன செய்து கொண்டிருப்பார்! 🌹🍀👇
http://balakshitha.blogspot.com/2018/07/blog-post_15.html
சிவனுக்கு உகந்த வில்வஇலையின் சிறப்பு 🙏🙏🙏 🌹🍀🌹🍀🌹🍀👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/11/blog-post_8.html
ஒரு மனைவைத்து அதன் மேல் வில்வ இலைகள் மலர்களால் அலங்கரித்து
சந்தனத்தால் லிங்கம் செய்து குங்குமப் பொட்டிட்டு சிவபெருமான் ஆக மனதார வேண்டிக்கொண்டு லிங்கத்தை வில்வ இலையின் மேல் வைக்கவும்.
தேங்காய் உடைத்து இனிப்பு பிரசாதம் பால் பழம் வில்வ இலை அனைத்தும் வைத்து அந்த மங்கல பூஜையை கண்டு கண்களால் மகிழ்ந்து மனதால் நிறைவு கொண்டு..
வடக்கு நோக்கி அமர்ந்து சிந்தையை சிவனிடத்தில் செலுத்தி -இரு கை கூப்பி -கண்களை மூடி -ஓம் நமசிவாய எனும் நாமம் தனை 108 முறை சொல்லவும் .
அடுத்து உங்களுடைய நியாயமான எண்ணங்களை ஆசைகளை ஐந்து முக தீபத்தினை கண்களினால் உற்றுநோக்கி சிவனிடத்தில் வைக்கவும்.
கற்பூர ஆராதனை செய்து விரதத்தை முடிக்கலாம் .இதேபோன்று மூன்று பிரதோஷங்கள் பூஜையை நல்ல முறையில் நிறைவேற்றி சிறப்பாக செய்து உங்கள் வேண்டுதல்களை வேண்டிக்கொள்ளுங்கள் .
சொந்தவீடு மனை வாங்குவதற்கு 10 தெய்வீக வழிபாடுகள் 🙏🍀🌹🌹👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
நினைத்த காரியம் அத்தனையும் ஜெயமாகும் .சிந்தையிலே சிவனை நிறுத்தி -சித்தாந்த வேதங்கள் பாடி மனம் முழுதும் மங்களம் நிறைய தடைப்பட்ட திருமணம் கூட- கணவன் மனைவி இனிதே வாழ -குழந்தை பாக்கியம் நிலைக்க -கடன் பிரச்சனை விலக -செல்வ செழிப்போடு சிறப்பாக வாழ்வதற்கு பிரதோஷம் கை மேல் பலன்-வெற்றி கிடைக்கும்.
முறையாக பூஜை செய்து வாழ்வில் வளம் காண்கவே- காண்கவே கண்டு மனம் மகிழவே- செல்வச் சிறப்போடு வாழ்ந்து வாழ்க்கை பயனை
அடைகவே.
ஓம் நமசிவாய சரணம் சரணம் சரணம்
Copy rights at balakshitha