தெய்வீக கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்வீக கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

நாரதரின் ஆணவம் நமக்கு தந்த பாடம்

 தெய்வீக கதைகள் -1 

 நாரதரின் ஆணவம் நமக்கு தந்த பாடம்

நம்முடைய மனமும் உடலும் தூய்மை பெற்றால் தெய்வத்தின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும். ஆணவம் இன்றி வாழ்ந்து தெய்வத்தின் தரிசனம் கிடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்! ஆணவம் இன்றி  எப்படி வாழ்வது! 

அதற்காக தெய்வம் தந்த பாடம் இதோ..


 ஒருமுறை நாரதர்  , கிருஷ்ணனைக் கண்டு கேள்வி கேட்டார் அன்று..


' உமது மாயையால் மற்றவரை வேண்டுமானால் கட்டிப் போடலாம் ஆனால் தேவரிஷி ஆகிய என்னிடம் செல்லாது' என விளையாட்டாய் கேட்டிட அதில் ஒளிந்திருந்த ஆணவத்தைக் கண்டு கொண்ட கிருஷ்ணன் ..


எதிரே தெரிந்த அழகிய நெளிந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்த நீரோடையில் சென்று- நீராடி வருமாறு புன்சிரிப்பு மலர்ந்தவராய் முத்துதிற..


 பேஷாக சென்ற நாரதர் நீராடிய அக்கணத்தில்- அனைத்தும் மறந்தார் அழகிய பெண்மணியாய் திரும்புகிறார். கடந்த காலம் காணாமல் போக- அவ்வழியே வந்த மன்னன் பார்வையில் அழகிய பெண்மணி பட்டுவிட ..



அடுத்தது என்ன! திருமணம் இரண்டு குழந்தைகள் என இனிதாய் போனது நாட்கள். அந்தோ பரிதாபம் அடுத்த நாட்டின் படையெடுப்பில் அனைத்தும் பறிபோக -தப்பியோடிய அரசி முன்பு திரும்பிய அது காட்டினில் அதே அழகிய நீரோடையில்.. அதே கிருஷ்ணனின் எதிரில்   வந்து விழுகின்றாள். 


'வாழ்க்கை என்பது என்ன! ஏன் இந்த பிறவி! இன்பத்தில் ஆட்கொண்டு அடுத்து துன்பத்தில் மாட்டிக் கொண்டு நாட்டை இழந்து- கணவனை இழந்து தப்பி ஓடி வரும் வழியில் பிள்ளைகளை இழந்து- கல்லிலும் முள்ளிலும் உடல்பட்டு குறுதியோடு ,இனியும் நான் வாழ்வதில்  என்ன பலன்!



 இறைவா முடிவிலே நின் பாதமே சரணம் சரணம்- என சரணாகதியாய் நிற்கின்றேன் ' என்று சரணடைகின்றாள்.


  அந்த நீரோடையில்  சென்று நீராடி வருமாறு கிருஷ்ணர் உரைக்க .. அடுத்தது என்ன!  அக்கணமே மீண்டும் நாரதராய் நடந்தவற்றை காண்கின்றார். ' நாராயணா நாராயணா ' மாயக் கண்ணனோ சிரிக்கின்றான்.


 'உம்முடைய மாயையே மாயை' என நாரதர் தன்னுடைய நாமம் தன்னை தொடர்கின்றார். 

சரணாகதி ஒன்றே  தீர்வுக்கு வழி


மனிதப் பிறவயில்  கண்ணன் செய்கின்ற  மாயையால் வாழ்வில் நாம் கட்டுண்டு கிடக்கின்றோம். முன்ஜென்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றோம் .




விடையில்லாத கேள்விகள் பலரிடத்தில்உண்டு. தீர்வு இல்லாத பிரச்சனைகள் இவ்வுலகில் உண்டு. எல்லோருடைய வாழ்விலும் எதிரும் புதிருமாய் இன்பம் துன்பமும் உண்டு.


 அனைத்தையும் கடந்து செல்கின்ற தருணத்தில் விதி பயனை ஏற்று ஆணவத்தை அழித்து, அமைதியை காத்து சரணாகதி எனும் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க..


 வரும் துன்பத்திலிருந்து நம்மை காத்து மனிதப்பிறவியின் நிறைவை காண செய்கின்றான் எம்பெருமான்.


கோபத்தை தணித்து- பாசம் மட்டும் மனதில் வைத்து தெய்வத்தன்மை பெற்று நடப்பதெல்லாம் நன்மைக்கே எனும் தெளிவு பெற்று வாழ்ந்து வாழ்வின் பயன் நிறைவு செய்வோம்.

மேலும் படிக்கலாம்..

வாழை மரத்தின் ரகசியம் ஒரு பெண்ணின் உயிர் காக்கும் அதிசயம்

🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_30.html


சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha