ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

மண்ணச்சநல்லூர் ஸ்ரீ பூமிநாதர் திருத்தலம் -சொந்த மனையில் விரைவில் வீடு கட்ட பரிகார பூஜை

 


மண்ணச்சநல்லூர் ஸ்ரீ பூமிநாதர் திருத்தலம்

மனையில் வீடு கட்ட முடியாத தடை ஏற்பட்டால் செய்யக்கூடிய பரிகார பூஜை

ஒரு சொந்தமாக மனை வாங்கி -அந்த மனையில் வீடு கட்ட பூமி பூஜை போடுவோம் .அந்த பூமி பூஜை செய்வதற்கு நாம் குறிப்பிடும் நல்ல நாள்- வாஸ்து எனும் சொல்லக்கூடிய அற்புதமான நாள்.


 அந்த நாளில்  வாஸ்து புருஷரை வணங்கி பூமி பூஜையை ஆரம்பிப்போம் .வாஸ்து புருஷன் என்பவர் யார் என்பதற்கான வரலாறு தெரிந்து கொள்வோம்..


ஆணவம் என்னும் சொல்லுக்கு அந்தகாசுரன் எனும் அசுரன் -அவன் ஆடும் ஆட்டத்தில் கதிகலங்கிய தேவர்களோ ..சிவனே தஞ்சமென பாதம் பணிந்தனர் .


தம் பாதம் பணிந்த பக்தர்களை காப்பாற்றுவது தன் சித்தம் -என்று சிந்தைக்கிணைந்து சிவபெருமானும் அந்தகாசுரனோடு கடும் போர் புரிகின்றார். 


< /p>

 ஆணவத்திற்கு ஒருநாள் அழிவு உண்டு -என்பதனை அக்கணமே நிரூபித்த சிவபெருமானின் நெற்றியில் இருந்து விழுந்த வியர்வைத் துளி ஒன்று- பூமிதனில் விழுந்தது ..துள்ளி எழுந்தது சிவகணமாய் மண்ணச்சநல்லூர் எனும் சிற்றூரில். அவரே பூமி பூஜைக்கு தேர்ந்தெடுத்த வாஸ்து புருஷனாக எழுந்தருளுகின்றார்.



 பசிக்கு விருந்தாக பூமிதனில் பல உடல்கள் அமைந்திடவே-  அவ்வாறு  கூடாதென தேவர்களும் வாஸ்துவை இழுத்துப் பிடிக்க ..அப்போது வரையறுக்கப்பட்டது வாஸ்து நேரம்.


 பூமி பூஜைக்கு ஏற்ற சிறப்பான நேரம் அந்த நேரத்தில் பூமி பூஜைக்காக படைக்கும் பொருட்கள் வாஸ்து பகவானுக்கு அர்ப்பணம் என்று ஈசனே ஆணையிட -ஏற்றுக்கொள்கின்றார் வாஸ்து புருஷர். 



வாஸ்து நேரத்தில் வாஸ்து பகவானை நினைத்து பூமி பூஜை செய்வது சிறப்பு -என்பதனை ஆத்மார்த்தமாக புரிந்து கொண்டு அந்த நாட்களில் அவரை நினைத்து பூஜித்தால் மகிழ்வோடு ஆனந்தத்தோடு ஏற்றுக்கொள்வார் படையல் தனை.

புதுமனை கிரகப்பிரவேசத்தின் போது மிக முக்கியமாக செய்ய வேண்டிய வழிமுறைகள் 🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2019/12/blog-post.html

வாஸ்து தேவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கூறும் திருத்தலத்தின் மகிமை தானே காண்போம்..


 திருச்சியிலே துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் எனும் திருத்தலம் பூமிநாதர் சுயம்பு வடிவத்தில்  அமைந்தது காண கிடைக்காத பாக்கியம் .


சமயபுரம் டோல்கேட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம் . சிவபெருமான் ஸ்ரீ பூமிநாதராக  அம்பிகையும்  வீற்றிருக்கும் அற்புதமான தலம்.



சொந்தமாக வீடு மனை வாங்க வேண்டும் என்று விரும்புவோர் ஆழமாக சிந்திக்க வேண்டிய  முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் ஐந்து.


1-  நம்முடைய வருமானம்.வருமானத்தை 

விருத்தி செய்யும் மன உறுதி .அதற்கேற்ப வீடு கட்டுவதற்கான  முதலீடு பற்றி தீர்மானம் செய்து கொள்க.

2-  வீட்டில் எதிர்மறை சக்திகள்-எண்ணங்கள்  இருக்க கூடாது. 

3-  தெய்வ வழிபாடு. ஸ்ரீ கணேச வழிபாடு- குலதெய்வ வழிபாடு -இஷ்ட தேவதை வழிபாடு -அதிர்ஷ்ட தேவதை வழிபாடு என்று தொடர்ந்து இடைவிடாது பூஜைசெய்க.

4-  பாவ காரியங்கள் செய்ய கூடாது.

5 -  நம்முடைய ஜாதகத்தின்படி நவகிரகத்தில் அனுகூலமான பொருட்கள் நம் வசம் வைத்திருக்க வேண்டும் .


இந்த ஐந்தும் முறைப்படி நாம் கடைபிடித்தால் கூடிய விரைவில் நாமும் சொந்தமாக வீடு மனை வாங்கி வாழ்வில் மகிழ்ச்சி பெறலாம்.


மனம் போன போக்கில் வாழ்க்கை அமைந்து விட்டால் மனிதப் பிறவியில் வாழ்ந்து என்ன பயன்!  என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். வாழ்வில்  இலட்சியம் இல்லையேல் வாழ்ந்தும் பயனேதும் இல்லை ..


 இளம் வயதில் நேர் வழியில் நடந்து நல்ல விதத்தில் பணம் ஈட்டி- நல்கும் வழியில் மனை வாங்கி-  நலமாய் வீடு கட்டி -சொந்த பந்தம் வாழ்த்திட கிரகப்பிரவேசம் செய்வது -என்பது கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனாலும் முடியும்.


 அப்படி ஒரு செயல் ஆக்கம் நிறைந்திட முக்கியமாக ஆணித்தரமாக மனதில் பதித்திட வேண்டிய விஷயம்.. மன உறுதி . என்னால் முடியும் எனும் மன உறுதி இருந்தால் கண்டிப்பாக நம்மால் சொந்தமாக ஒரு வீடு மனை வாங்க முடியும் . முடியும் முடியும் என நினைக்க நினைக்க அந்த நேர்மறை எண்ணங்களே  நமக்கு சாதகமான பலன் அளிக்கும்.


தெய்வீக அருளால் முயற்சி செய்து மன உறுதியோடு ஒரு மனை வாங்கிவிட்டோம் ..ஏதோ ஒரு சூழ்நிலை வீடு கட்டுவது தள்ளிப் போகின்றது -என்றால் வீடு கட்டும் யோகம் தங்குதடையின்றி நடப்பதற்கான பரிகார பூஜை தனை காண்போம்.


நாம் வாங்கிய மனையில்  வடகிழக்கு மூலையில் ஒரு பிடி மண்ணை தெய்வமாக நினைத்து எடுத்து மஞ்சள் துணியில் கட்டி பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். 


பிறகு வாஸ்து நாள் பார்த்து அந்த பிடி மண்ணை எடுத்துக்கொண்டு மண்ணச்சநல்லூர் திருத்தலத்திற்கு செல்வது சிறப்பு.


 அங்கே சுயம்பு வடிவில் எழுந்தருளி இருக்கும் பூமி நாதருக்கு பூஜைசெய்து

வாஸ்து புருஷரை வணங்கி  கோவிலை சுற்றி வந்து அங்கே உள்ள மணி மண்டபத்தில் - நாம் கட்டும் மஞ்சள் துணியில் அடையாளம் இட்டு கட்ட வேண்டும்.

பிறகு இல்லத்திற்கு வந்து குலதெய்வத்தை வணங்க 

கூடிய விரைவில் வீடு கட்டுவதற்கான பணிகள் துவங்கும் சூழ்நிலை ஏற்படும்.


மீண்டும்  இந்த திருத்தலத்திற்கு வந்து அந்த மண்ணை துணியிலிருந்து எடுத்து கோவிலில் வில்வ மரத்தடியில் கொட்டிவிட்டு வணங்கினால்..


 பிரச்சனைகள் விலகி வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வதற்கான அனைத்து மகிழ்ச்சிகரமான அம்சங்களும் நடந்தேறி ..


 மண்ணச்சநல்லூர்  பூமிநாதர் அருள் புரிவார் என்பது இத்தலத்தின் சிறப்பு. 


பங்குனி மாதத்தில் 9ஆம் தேதி 10ஆம் தேதி 11ஆம் தேதி சூரிய ஒளி பூமிநாதர் மேல் படுவது தனிசிறப்பு.


 வாஸ்து தேவரை  வரவேற்று  வாஸ்து நாளில் பூமி பூஜை செய்து -அதிர்ஷ்டம் மனையாய் மாற்றி -அதில் அழகாய் ஈடுகட்டி ஆனந்தமாய் சொந்த பந்தங்கள் சூழ்ந்திட கிரகப்பிரவேசம் செய்து பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்வின் பயன் அடைகவே.

மேலும் படிக்கலாம்..

வாழ்வினில் கண்திருஷ்டி தோஷம் விலகி சுபிட்சம் பெறுவதற்கு கல் உப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇

https://youtu.be/0p5op0-Zjwk

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக