சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஏப்ரல், 2021

உடல் பலம் பெற கேழ்வரகு கூழ்

உடல் பலத்தினை  பெறுவதற்கு கேழ்வரகு கூழ்



குளு குளு வெயில்  என சொல்வாரும் உண்டோ ! சுட சுட மழை என வியப்பாரும் உண்டோ!  இல்லை என சொல்வீரோ ! ஐயமும் கொள்வீரோ !

சிந்திப்போம் சில நிமிடம் வாருங்கள் குளுகுளு வெயில் என்னும் உண்மையை உயிர்ப்பிப்போம் வாருங்கள்.

கேழ்வரகு  மாவு தனில் செய்த கெட்டியான கூழ் தனிலே, உடைந்த மணிலா பயிறு பிடிதனை  எடுத்து உடைத்தனை சேர்த்தனை ,அதில் கொஞ்சம் தயிர் தனை ஊற்றினை அப்பப்பா! ருசி தனை முகந்து குடித்தனை

குளு குளு வெயிலுக்கு ருசித்து, கூழ் தனை குடித்து முழு திருப்தி தனை நாம் பெறுவோம்.  அதுமட்டுமா !
சிறிது பனைவெல்லம் வாய்தனில் கடித்துகொண்டால் ருசி தனை நீரே சொல்வீர்  .அப்பப்பா!

உடலுக்கு ஆரோக்கியம் என்னவென்று அறிந்து கொண்டால் நம் வீட்டில் கேழ்வரகு கூழ்தனை குழந்தை முதல் பெரியவர் வரை மெனுகார்டில்  முதலிடம் என்று போடுவீரோ!


இதுவன்றோ உண்மை! உடல் சோர்வு மூட்டு, கை கால், உடல் வலி என அலுப்போடு சொல்வோரும்  தொடர்ந்து கேழ்வரகு  கூழோடு மணிலா பனைவெல்லம் என ருசித்து உண்டால் போயே போச்சு எனும் மந்திரத்தை சொல்வார். கேட்டு மகிழ்வீரே.

உடல் பலமாகும் .உற்சாகம் உருவாகும். அனைத்து ஆற்றலும் பெற்று புதிய பலம்தனை நீர் பெருவீர் என்பதையும் அறிவீரே.

அடுத்த  மெனு கார்ட் பகுதியில் சந்திப்போம் காத்திருப்பீர்.

உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு மிளகு சாம்பார் 

https://balakshitha.blogspot.com/2020/04/blog-post_16.html


Copy rights at Balakshitha

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

உடல் பிணி தீர்க்கும் இஞ்சியை பயன்படுத்தும் முறை

இஞ்சியின் பயன்கள் ..



இல்லத்தில் வீட்டு வைத்தியத்தில் இஞ்சி எந்த வகையில் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்..

உடலில் நோய் இருந்தால் மன உளைச்சல் உண்டாகி சோர்வு வருவது என்பது உண்மை. ..எல்லா பிணிகளுக்கும் ஒவ்வொரு தீர்வு உண்டு..


 அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக இஞ்சி பயனளிக்கும்.

நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்துபயன் அடைவதற்கு வீட்டிலேயே   நிறைய மூலிகை பொருட்களை போன்ற அற்புதமான பொருட்கள் பல உண்டு..

 அதில் மிகவும் முக்கியமானது இஞ்சி. இஞ்சியின் பயன் அனைவரும் அறிந்து கொண்டால் - உடலிலுள்ள அனைத்து பிணிகளையும் போக்கிக் கொள்ளலாம் .

இஞ்சியின் கார சுவையானது உடல் நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.

தினமும் ஏதாவது ஒரு வகையில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வாழ்வில் பயன் பெறுங்கள் இஞ்சி  எந்த விதத்தில் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. என்பதில் உள்ள விளக்கத்தைக் காண்போம்.

இஞ்சி- இல்லா இல்லத்தரசி வீடு இனிமை காணா.. என்பதை புரிந்து இஞ்சியின் மகிமை தனை அறிந்து கொள்வோம்.


 இஞ்சி பூண்டு விழுது -எல்லா பதார்த்தத்தின் கூட்டு பொரியல் குழம்பு வகைகள் அசைவ வகைகள் அனைத்திலும்  சேர்த்து நோய்நொடி பிணி அகன்று உடல்ஆரோக்கியம் பெருக.



 தினம் இஞ்சி சாறு அரை டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடித்து வர சளி- ஜலதோஷம்- கபம் -பித்தம் மயக்கம் அனைத்திற்கும் விடை கொடுக்க‌..

 இஞ்சி சுக்கு ஆகி அதனை நெருப்பில் சுட்டு கரியாக்கி- தட்டில் வைத்து அச்சாம்பலை தேனில் குழைத்து நாவினிலே 48 நாள் தொடர்ந்து தடவி வர..

 ஜலதோஷம்- அடுக்குத் தும்மல் தொண்டை கமறல்- ஆஸ்துமா அனைத்தும் பறந்து ஓடிவிடும் என்பதை அறிந்து கொள்க.

நன்றாக உமிழ்நீர் வரும்வரை வைத்திருந்து அதன் பிறகு உமிழ் நீரோடு சேர்த்து விழுங்கினால்   நல்ல பலனைத் தரும். 

 இஞ்சி தட்டி பாலில் சேர்த்து பிடித்து இருந்தால் டீத்தூளும் அதில்  கலந்து தினம் பருக.. தினம் உடல் புத்துணர்ச்சி பெற்று திங்கள் வளம் போல நம் உடல் வளம் காணும் நிலை மனம் அறிந்திருந்திடுமே..

 இஞ்சி சீவலோடு  முழு உளுந்து காய்ந்த மிளகாய் சிறிது புதினா சேர்த்து -நல்லெண்ணெயில் வதக்கி
சிறிது  புளி உப்பு வெல்லம் கலந்து அரைத்த துவையலில் நோய் தீர்க்கும் மருந்தாக தினம் அரை டீஸ்பூன் எடுத்து வர வயிற்று உபாதைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வு காணலாம்.

இஞ்சி நல்லெண்ணெயில் இஞ்சி தட்டி போட்டு சிறிது பால் தனை சேர்த்து சுண்ட காய்ச்சிய வாசனையோ  வீடு முழுதும் கமகமக்க ..

அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலை குளிக்க ..அடிக்கடி உடல் சூடு தணியும் .தலைவலி சம்பந்தப்பட்ட அனைத்தும் பறந்தோடும்.

 இஞ்சி மணம் வீசும் இல்லம் -நோய் நொடி பிணி யல்லா மணம் வீசும் இன்று என் அருமை தெரிந்து அதனுடைய பயனை புரிந்து வாழ்வியல் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பயன்பெறுவோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



ஒன்றல்ல -ஓராயிரம் கவலைகள் நாமே இழுத்துப் போட்டுக் கொள்கின்றோம். இந்த கவலைகள் அனைத்தும் மறந்து மன அமைதி வேண்டும் என்று விரும்புவோர் புத்தகம் படிப்பது நாட்டம் கொள்க. ரிலாக்ஸ்சேஷன் எனக்கூடிய மனதை  அமைதி படுத்தி கொள்ள தினமும் 10 நிமிடமாவது ஆன்மிக கதை வரலாறுகளை தெரிந்து அறிந்து நம் குழந்தைகளுக்கு சொல்லிக்  கொடுத்து பலருக்கு பகிர்ந்து நம்முடைய எண்ணங்களை விரிவுபடுத்த ஏற்ற அருமையான தலம்தான் அமேசான் kdp யில் இணைந்து கொள்க.


 பாலாக்க்ஷிதாவின் கீழ்காணும் இந்த புத்தகங்களை படித்து பயன்பெறலாம்.

குழந்தைகளுக்கு ஞானம் விநாயகரின்பெறுவதற்கான  மிக அரிதான தெய்வீக குறிப்புகள் வரலாறுகள்...🙏🌹🍀🌹🍀👇👇👇👇
https://www.amazon.in/dp/B07VQVTX2N/ref=cm_sw_em_r_mt_dp_U_kbSTEbPX7YJST

விரைவில் திருமணம்  நடக்க அதற்கான பரிகாரங்கள் 🌹🍀🌹🍀👇👇👇👇
https://amzn.in/ibYVUJD

 சொந்தமாக  வீடு மனை அமைய அதற்கான தெய்வீக வழிபாடுகள் பரிகார ஸ்தலங்கள்🙏🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha







வெள்ளி, 24 ஜூலை, 2020

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற மசாலா டீ


உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய ஆரோக்கியத்திற்கும் ஏற்றதான  அருமையான மசாலா டீ



நம் உடலுக்கு காலை எழுந்ததும் தூக்க கலக்கம் பறந்து உடலில் ஒரு சின்ன புத்துணர்ச்சி கிடைப்பது அவசியம் அன்றோ!

நாவின் சுவை கூடி- பெட்ரோல் இட்டால் வண்டி துள்ளி ஓடுவது போல -ஒரு பூஸ்ட் எனர்ஜி உடலில் ஏற்பட்டு பணிகள் விரைவாக நடந்தேற-
 தேனிர் என்று அழைக்கப்படும் சுவையான பானம் குடிப்பதும் அவசியம் அன்றோ!

அந்த டீ  எனும் தேனீரில் உடலும் ஆரோக்கியமாக -நோய்நொடி பிணி அகல- அதேசமயத்தில் வாய்க்கும் சூடாக ருசியாக குடிப்பதற்கு நாம் சேர்க்க போகும் சில பொருட்களை பார்க்கலாம்.

1- இஞ்சி அல்லது சுக்கு
 2 - ஏலக்காய்
3 -பட்டை
4-  கொத்தமல்லி
5 - மிளகு பொடி


இந்த ஐந்து பொருட்களும் எப்பொழுதும் ஒரு அஞ்சலை பெட்டியை வைத்து சமையலறையில் இருப்பது அவசியம்.

 காலையில் தூங்கி எழுந்ததும் இந்த நோய் தீர்க்கும் மூலிகை மருந்தாக இருக்கக்கூடிய எந்த 5 பொருட்களும் டீயில் கலந்து குடிக்கும் பொழுது..

 உடல் புத்துணர்ச்சியோடு எந்தவித நோயும் அணுகாது நம்முடைய உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இஞ்சியின் சிறப்பு..
இஞ்சக்கு  மிஞ்சிய வைத்தியம் இல்லை என்பது பழமொழி..
'இஞ்சி இல்லா இல்லத்தரசி வீடு இனிமை காணா' என்பது புது மொழி. இருந்தாலும் பொன் மொழி .


 நோய்நொடியின்றி ஓடியாடி இங்குமங்கும் புத்துணர்ச்சியோடு இருக்கும் குடும்பம் பொன்  குடும்பம் கலகலப்பு மாறாத இல் குடும்பம் - நல் குடும்பம் என திகழ ..இஞ்சிக்கு  பங்கு அதிகம். அதனால் தினமும் இஞ்சி ஏதாவது ஒரு வகையில் சேர்ப்பது அவசியம்.

உங்கள் விருப்பத்திற்கேற்ப டீ தூளை பாலில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு கொதிக்கும்போது சேர்க்கக்கூடிய ஐந்து பொருட்களை பார்ப்போம்..

நான்கு பேருக்கு தேவையான அளவு


1- இஞ்சி துண்டு சிறியதாக ஒன்று..
நல்ல மணம் தரும் இஞ்சியில்சுவை
 அதிகம்.. காரம் அதிகம் .. இனிப்பு சுவை காரத்தோடு நாவில் பட்டு தொண்டையில் இறங்கும்போது   சோர்வு நீங்கி புத்துணர்ச்சி  காணும் இவ்வுடல் என்பது உண்மை .

பித்தம் மயக்கம் கபம் சோர்வு செரிமான பிரச்சனை அனைத்தும் நீங்க - இஞ்சி சேர்ப்பது நல்லது.

கொத்தமல்லி -1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி   நன்றாக பசியை தூண்டும். ஜுரம் ஜலதோஷம் அனைத்தும் நீக்க வல்லது .உடலில் உள்ள தேவையற்ற  நீரை இறக்கும்.

 பட்டை - ஒரு சிறியதாக ஒரு பட்டை ஒடித்து போடலாம் .நல்ல மணம் கொடுக்கும் .தோல்நோய் அலர்ஜி அனைத்திற்கும் நிவாரணம் அளிக்கும்.
கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.

 ஏலக்காய் - இரண்டு நறுக்கிப் போடலாம் .நன்றாக பசியைத்தூண்டும். தலைவலி வாமிடிங் சென்சேஷன் பறந்து  போகும். நல்ல மணம் கொடுக்கும்.

 மிளகுப்பொடி 1/4  டீஸ்பூன் - மிளகு கைவசம் இருந்தால் எதிரிகள் வீட்டிலும் உணவு உண்ணலாம்- என்பது பழமொழி .உடலில் உள்ள கிருமிகளை கொல்லும். ஜீரண சக்தி அதிகரிக்கும். அனைத்து விதமான நோய்களையும் நீக்க வல்லது மிளகு.


நன்றாக கொதிக்கவத்து தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.



உடல் ஒரு மாயை என்று மனம் அறிந்த போதும்- உடல் இன்றிஉயிர் ஏது! அவ்வுடல் பிணியின்றி  வாழ்வதற்கு இந்த ஐந்து வகை பொருட்கள் அருமருந்தாக அமையும் என்பதை நினைவில் கொள்க.

இந்த ஐந்து பொருட்களையும் சேர்த்து தேனீர்  என்று சொல்லக்கூடிய டீயில் சேர்த்து நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்வோம்.

உடல் ஆரோக்கியம்  உண்பதில் கண்டு நல்ல செய்கையில் மன ஆரோக்கியம் கண்டு- பண்பு நிறைந்திட நோய் நொடியின்றி வாழ்ந்து  வாழ்ந்த பயனை அடைந்து -பலன் பெருகவே.

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பூண்டு மிளகு சாம்பார்🌹🍀🌹🍀🌹👇👇👇👇

Copy rights at balakshitha





புதன், 22 ஏப்ரல், 2020

சமையல் வகுப்பறை பகுதி -4 வரிசைப்படுத்துதல்

சமையல் அறைக்கு தேவையான மிக முக்கிய பொருட்களை இன்றைய சமையல் வகுப்பறையில் தெரிந்துகொள்ளலாம்.


சமையலறை பார்ப்பதற்கு மிக அழகாக தெரிய வேண்டுமென்றால் அதற்கு தேவையில்லாத பொருட்களை தவிர்க்க வேண்டும் .தேவையான பொருட்களை வைக்க வேண்டும்.

நம்முடைய சமையலறையில் வடிவத்தை மனதில் உருவாக்குங்கள். இந்தப் பொருள் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் -என்பது வரைமுறை ..இந்த வரைமுறைப்படி வரிசைப் படுத்திக் கொள்ளுங்கள்.

 வரிசை படுத்தும் முறை
1-கேஸ் அடுப்பு
2-மிக்ஸி
3-கிரைண்டர்
4 - பாத்திரம் அடுக்குவதற்கான செல்ஃப்
5 - மளிகை பொருட்கள் அடுக்குவதற்கான செல்ஃப்
  6-பாத்திரம் கழுவி வைப்பதற்கான பாத்திர ஸ்டாண்ட்.
7-  கழுவ வேண்டிய பாத்திரங்கள் சிதறாது ஒரே இடத்தில் போடுவதற்கு ஒரு பெரிய பக்கெட்
8-தட்டு வைப்பதற்கான ஸ்டாண்ட்
 9 -டம்ளர் வைப்பதற்கானஸ்டாண்ட்
10-கரண்டி  ஸ்பூன் ஸ்டான்ட்


இந்த முறைகளில் கிச்சனை பயன்படுத்தினால் நாம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் .டென்ஷன் இல்லாமல் சமைக்கலாம்.

 இந்த பொருட்களை தவிர தேவையில்லாத மற்ற பொருட்களை சமையல் அறையில் இருந்து தவிர்த்து விடுங்கள் .

கேஸ் அடுப்பை -கரண்ட் பாக்ஸ்  அருகில் வைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

 செல்ஃபில்  பாத்திரங்கள் ஒரு முறை வரிசை படுத்தினால் -அதே முறையில் மாற்றாது அழகாக  அடுக்கி வையுங்கள் .

மளிகை பொருட்கள் மிக அழகாக ஒரு முறை வரிசை படுத்தினால்- அதே முறையில்  அடுக்கி வையுங்கள்.

இந்த இரண்டு முறைகளும் நம்முடைய கிச்சனில்  முறைப்படி கையாள்வதில் மிக மிக அழகை தரும்.


 சிங்தொட்டியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள்.
சுத்தம் செய்வதற்கு ஹோம் க்ளீனிங்டிஷ்வாஷ் சொல்யூஷனோடு வினிகரை பயன்படுத்துங்கள். பூச்சுக்கள் எதுவும் அண்டாது .உங்கள் சமையலறை எப்போதும் நறுமணத்தோடு இருக்கும்.

கிச்சன் சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை

பாத்திரங்களை கழுவி பாத்திர ஸ்டாண்டில் கவிழ்த்து வைக்கும்பொழுது -அடியிலே ஒரு கனமான டவல் வைத்து விடுதல் நல்லது .


கவிழ்ந்த பாத்திரங்களில் வடியும் தண்ணீர் -கிச்சனில் சிதறாது ..அந்த டவல் நீரை உறிந்துகொள்ளும்.

 இரவு படுக்கப்போகும் முன்  பாத்திரங்களை உரிய இடத்தில் பிரித்து வைத்து விடுங்கள்.

இந்த முறைகளை முறைப்படி கையாள்வதில் கவனமாக இருங்கள்
 உங்களுடைய சமையலறை உங்களின் கையில் தான் உள்ளது.

 என்னுடைய அனைத்து சமையல் குறிப்புகளையும் குறித்துக்கொண்டு அதன்படி சமையலறையை கையாளுங்கள் .

 உங்களுடைய சமையலறை எப்போதும் புத்தம் புது பொலிவுடன் காட்சி தரும்.
Copy rights at balakshitha

திங்கள், 20 ஏப்ரல், 2020

சமையல் வகுப்பறை பகுதி- 3 சமையலறை சுத்தம் செய்யும் முறை

அம்மா சமையல் வகுப்பறை-  பகுதி 2


நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை ..

தினமும் சமையலறையை சுத்தம் செய்கின்ற நேரம்..
1- காலை எழுந்ததும் சுத்தப்படுத்தலாம் .
2 - மதியம் சமையலை முடித்த பின்பாகவும் சுத்தப்படுத்தலாம்.
3-   படுப்பதற்கு செல்லும் முன்பாக இரவு கிச்சனை சுத்தம் செய்யலாம்

இந்த நேரத்தில் நமக்கு வசதியான உரிய நேரத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.


கிச்சனை எளிதாக சுத்தம் செய்வதற்கான சில குறிப்புகள்..
 கிச்சனை சுத்தப்படுத்துவதற்கான நேரம் 15 நிமிடம்..


1- பரபரப்பாக அனைத்து பொருளையும் அதற்கான உரிய இடத்தில் வைக்கலாம் .

2 - ஸ்பான்ச் அல்லது கனமான துணி கொண்டு கிச்சனில் மேற்பரப்பை‌ அனைத்தையும் துடைத்து கிச்சனை பெருக்கி விட வேண்டும்.

3 -  ஒரு சிறிய கப் வினிகர்
 சோப்பு சொல்யூஷன் ஒரு சிறிய கப் 100 மில்லி தண்ணீரில் கலந்து வைத்துக்கொண்டு..

 கிச்சன் முழுவதையும் லேசாக தெளித்து ஊற விடவும்.


 இரண்டு க்ளாத் அல்லது ஸ்பான்ச் எடுத்துக் கொள்ளவும்.

 ஈரம் கொண்ட ஸ்பான்ச்.. மற்றொன்று ஈரம் இல்லாத ஸ்பான்ச் எடுத்துக் கொள்ளவும்

ஒருமுறை ஈரம் கொண்ட ஸ்பான்ச்- னால் நன்றாக துடைத்து அலசி பிழிந்து மறுமுறை ஒரு துடைத்தல்..

 பிறகு ஈரமில்லாத  ஸ்பான்ச் -னால் துடைத்து விட்டால் சமையலறை பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.
 வேலை எளிதாக முடிந்து விடும்.

 மொத்தம் 13 நிமிடங்கள் தான் ஆகும் கூடுதலாக 2 நிமிடங்கள் என்பது நம்முடைய ரிலாக்ஸ்காக.

 ஒரு முறை சுற்றிப் பார்க்கும் போது நமக்குள் ஒரு புத்துணர்ச்சி.. நம்முடைய கிச்சன் அழகாக இருக்கின்றது என்பதை தினமும் உணர்வோம்.

 அதுவே நாம் சமையல் செய்வதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும் .சோர்வு இருக்காது.

 நம்மால் சில சமயம் முடியாவிட்டால் நம் வீட்டில் உள்ள அங்கத்தினர் ஒவ்வொருவரும் இந்தக்ளீனிங் சுத்தம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்- என்பதில் கவனமாக இருங்கள்.

 இந்த கிச்சன் பராமரிப்பு முறையை கட்டாயமாக பின்பற்றி வந்தால் கிச்சனை பராமரிப்பதில் மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக கண்டிப்பாக திகழ முடியும்.
Copy rights at balakshitha

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சமையல் வகுப்பறை- பகுதி 2 முக்கியமான மூன்று விஷயங்கள்


சமையல் அறைக்குள் போவதற்கு முன்பு மனதில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய மூன்று விஷயங்கள்


 1-சமையலறை நல்ல சூரிய ஒளி கொண்ட வெளிச்சமாக இருத்தல்
இருக்க வேண்டும் .

2-கிச்சன் எப்பொழுதும் சுத்தமாக இருத்தல் வேண்டும் .

3- குறிப்பேடு ஒரு சிறிய பேனா  எப்போதும் கிச்சனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டும்.


சமையல் அறை என்றாலே புரியாது சிலசமயம் டென்ஷனாகி விடுகின்றோம்..

அதையெல்லாம் தவிர்த்து நான் சொல்லும் இந்த முறைகளை முறையாக பின்பற்றினால் நேரத்தையும் சேமிக்கலாம்.

டென்ஷன் இல்லாது சமைக்கலாம்

அனுபவம் பெற்று -நம் குழந்தைகளுக்கு நாளை நல்ல வழிகாட்டியாக திகழலாம்.


 இனி சமையலறையில் வெளிச்சம் கொண்ட அறையாக இருத்தல் வேண்டும் -என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்..

சமையலறை நல்ல சூரிய வெளிச்சம் இருக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் நல்ல ஒளி இருந்தால் செய்கின்ற சமையலறை சுவையாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.


 இரவிலும் சமையல் செய்யும்போது நல்ல ஒளி கொண்ட பல்புகள் இருந்தால் நல்லது.

 மாலை 6 மணிக்கு மேல் சமையலை தவிர்க்கும் நேரங்களில்- ஒரு சின்ன நைட்லாம்ப் பல்பு எரிந்து கொண்டிருந்தால் சுபிட்சம் நிலைக்கும்.


 மகாலட்சுமி வாசம் செய்ய கூடிய சமையல் அறையாக திகழும் என்பது ஆன்மீக பூர்வமான கருத்து..

 இதை மனதில் கொண்டு சமையலறைக்குள் செய்யும்போது நல்ல ஒளி கொண்ட வெளிச்சம் கொண்ட சமையல் அறையாக உருவாக்குங்கள்.

குறிப்பு ஏடு



சமையல் கிச்சனை பராமரிக்கும் அனைவரும் ஒரு சின்னடைரி  பேனா ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிச்சனில்  இருப்பது அவசியம் .

இந்த டைரி பேனா எந்தவிதமான குறிப்புகள் எடுக்கலாம் என்பதை பார்க்கலாம்

1-சிலிண்டர் மாற்றும் தேதி
 2 - வாங்கவேண்டிய மளிகைபொருட்களை மறந்துவிடாமல் இருப்பதற்கு குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் .


சிலிண்டர் மாத வரைமுறை நாள் அறிந்து கொண்டால் அடுத்து save செய்யக்கூடிய முறை நமக்கு தெரிந்துவிடும்- என்பதால் மாதாமாதம் சிலிண்டர் மாற்றும் தேதியை குறிப்பெடுத்துக் கொள்வது அவசியம்.

3-சுத்தம்
உயிருக்கு  அமுதூட்டும் உணவு செய்கின்ற இடம் -அதனை சுத்தமாக வைத்தல் அவசியம்.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று செல்வங்கள் குவிய வேண்டும்  எனும் சுபிட்சம் ஒவ்வொரு வீட்டிலும் அமைய வேண்டும்  புரிந்துகொண்டால் நாம் வாழ்ந்த வாழ்க்கையில்  சிறந்த குடும்பத் தலைவி என்னும் பூரிப்பு  நிச்சயம் இருக்கும்.

Copy rights at balakshitha

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

சமையல் வகுப்பறை பகுதி- 1சமையலில் ஆர்வம் வரும் வயது


சமையல் வகுப்பறை class-1 எனும் நிகழ்ச்சியில் படிப்படியாக எனக்கு தெரிந்த சமையல் டிப்ஸ் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று இருக்கின்றேன் நாம் ஒன்று ஒன்றாக நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் .


இந்த பகுதியில் சமையலில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது எப்படி!
சமையலறைக்கு போவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் ..

சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள்..

 மற்றவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சமைப்பது  எப்படி

சமையலறையில் சமைப்பதற்கு தேவையான மளிகை பொருட்கள்

உடல் ஆரோக்கியத்திற்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எப்படிப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுக்கலாம்


என பலதரப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் .

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .

இப்போது நான் சொல்லப் போகும் விஷயம் மிக முக்கியமாக எல்லா தாய்மார்களும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் .

 சமையல் கற்றுக்கொள்ளும் நமக்கு முதன்முதலில் சமையலில் ஆர்வம் வருவது என்பது 14 15 வயதில் தான்..

 மெல்ல சமையலறைக்கு சென்று அம்மா சமையல் செய்வதை எட்டி பார்ப்போம் ..அம்மாவை நகர சொல்லிவிட்டு -அம்மா கிளறிகொண்டிருக்கும் கரண்டியை நாம் வாங்கி  கிளறுவோம்.



அம்மாவிற்கு பயம்.. எங்கே நம்ம குழந்தை கையை சுட்டுக் கொள்ளப் போகிறாள் என்ற பயத்தோடு ' நீ போய் படிக்கிற வேலையை பாரு' என சொல்லிக்கொண்டு விரட்டுவாங்க..


 இந்த இடத்தில் இருந்து நாம் சமையலுக்கான  வகுப்பறையை ஆரம்பிக்கலாம் .

 இந்த 15 வயது என்பது- சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் வயது என்பதை எல்லா  அம்மாக்களும் தெரிந்துகொள்வது மிக அவசியம் .

15 வயதில் வரக்கூடிய சமையல் ஆர்வத்தை செய்ய விடாது தடுத்து விட்டால் -


அடுத்து நம் குழந்தைகளுக்கு ஆர்வம் வராமல் கூட போகலாம் படிப்பை முடித்து  காலேஜ் போன பிறகு- நமக்கு கைக்கு உதவாமல் கொஞ்சமும் பொறுப்பே இல்லாமல் தன் மகள் இருக்கிறாள் என்று அதே தாய் கஷ்டப்படுவதை நாம் நிறைய பார்க்கின்றோம்.


 அதனால் சமையல் கற்றுக் கொள்ள ஆர்வம் வரும் வயது -15 அந்த வயதில் அம்மாக்கள் படிப்படியாக தம்முடைய குழந்தைகளுக்கு சமையல் சொல்லித்தர கற்று கொடுக்கலாம்.
Copy rights at Balakshitha
.

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சிறப்பான வாழ்க்கைக்கு உப்புக்கல் பரிகாரம் part-1

உப்புக்கல் பரிகாரம்
கல்உப்பின் சிறப்பு ..


சூரிய தேவனின் அனுக்கிரகம் பெற்று கடல் நீரில் இருந்து பிரிந்து- வடிவம் பெற்று திகழ்கின்ற உப்பிலே
பஞ்சபூத சக்திகளும் அடக்கம்.

 கல்உப்பு -மகாலட்சுமியின் ஸ்வரூபமே
மகா லட்சுமியின் அருளைப் பெற்று வாழ்வினில் சுபிட்சம் பெற -கல்லுப்பு அகல் தீபம் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு.

பெரும் பாறாங்கற்களை போன்ற பல துன்பங்கள் நிறைந்த நம் வாழ்க்கையிலே- அனைத்தையும் தவிடு பொடியாக்கி பனிபோல் கரைக்கின்ற சக்தி -உப்பு கல்லுக்கு உண்டு .

கடல் நீரிலே தோன்றி அனைத்து
கண் திருஷ்டிகளும்
தான் கொண்டு -மீண்டும் நீரில் கரைந்து ..

நம்மை கண் திருஷ்டி- தோஷம் -பிணி பயம் -பாவம் அனைத்திலிருந்தும் விடுபட்டு- எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி -தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவதற்கு உப்புக்கல் பரிகாரம் என்பது மிக சிறந்த ஒரு பரிகாரம்.




உப்புக்கல் பரிகாரம்

சிறப்பு 1- கண் திருஷ்டி விலக..

ஒரு குவளையில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி ..

வாசற்கால் தாண்டி -கோலம் போடுகின்ற தெரு வாசலுக்கு
 உட்புறமாக ஒரு மூலையில் வைத்துவிடவும்.

 மாலை ஆறு மணிக்கு மேல்- கண்திருஷ்டி கொண்டவரை
கிழக்கு முகமாக பார்த்தவாறு உட்கார வைத்து நம்முடைய இரு கைகளாலும் கல் உப்பை அள்ளிக் கொள்ளவும்..

வலது புறமாக மூன்று முறையும்- இடது புறமாக மூன்று முறையும் அனைத்து  திருஷ்டிகளும்  போக வேண்டுமென்று -மனதிலே நன்றாக நினைத்து - நன்றாக சுற்றி ..

கொண்டு சென்று வெளியிலே வைத்திருக்கும் அந்த குவளையில் உப்புக்கல்லை கொட்டவும்..

பிறகு மறுநாள் தெருவிலே எடுத்துச்சென்று கால் படாத இடத்தில் ஓரமாக ஊற்றி விடலாம் . கண் திருஷ்டிகள் அனைத்தும் விலக இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும் .

எலுமிச்சை பழத்தில் பரிகாரங்கள்🌹👇
http://balakshitha.blogspot.com/2020/04/part-2.html


சிறப்பு - 2  பாவ-தோஷங்கள் அனைத்தும் விலக..

வீட்டிலே தீயசக்திகளும் தோஷமும் அதிகமாகி எதிர்மறை சக்திகள் நிறைந்திருந்தால் அந்த வீட்டினிலே  ஏதாவது துன்பமான செய்திகள் அடிக்கடி நிகழும்..

அதை தவிர்ப்பதற்கு மாதத்திற்கு ஒரு முறை -ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு பிடி உப்பு போட்டு வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்தால்..

 தீய சக்திகளும் தோஷங்களும் விலகி தெய்வீக அம்சம் வீட்டிலும் நிறைந்து இருக்கும்- என்பதற்காக இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும்.


சிறப்பு-3 குடும்பத்தில் ஒற்றுமை நிலவ..

குடும்பத்தில் ஒற்றுமையோடு இருந்தால்தான் அந்தக் குடும்பம் சுபிட்சம் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும்.

என்றும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ ஒரு கிண்ணத்திலே கல்லுப்பைக் கொட்டி  கால்கள் படாத கதவுக்குபின்னால் வைத்தோமானால்  ஒற்றுமை பலப்படும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.

 சிறப்பு - 4 கெட்ட கனவுகள் விலக ..

தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு தூக்கம் வராது- அதனால் மன உளைச்சல் உண்டாகி  நிம்மதியின்றி இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் மிக சிறந்த ஒரு பரிகாரம்..

ஒரு கிண்ணத்திலே கல்லுப்பு கொட்டு நாம் படுத்து உறங்கும் அறையில் ஓரமாக வைத்தால்  கெட்ட கனவுகள் நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.


சிறப்பு-5‌  மகாலட்சுமியின்அருளைப் பெற்று செல்வச் சிறப்போடு வாழ்வதற்கு..

வெள்ளிக்கிழமை தோறும்  பித்தளை அல்லது செம்பு தாம்பாளம் தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து ..

அதன் மேல் கல்உப்பு பரப்பி  வைக்கவும். ஒரு  அகல்  எடுத்து மஞ்சள் குங்குமம் இட்டு -பஞ்சு திரி போட்டு -நல்லெண்ணெய் ஊற்றி  சுற்றிலும் மலர் வைத்து ..

தென்மேற்கு அல்லது வடகிழக்கு மூலையில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அகல் தீபம் ஏற்ற வேண்டும்.

 காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு ஏற்றுவது சிறப்பு.

 பௌர்ணமி அன்றும் இந்த தீபம் ஏற்றி வைக்கலாம் .

கோவிட்19 நோய் தொற்றில் இருந்து நம்மைகபாதுகாத்துக் கொள்ள கூடிய முக்கியமான உணவு முறைகள்

🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_15.html

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


வறுமை நீங்கி செல்வ கடாட்சம் பெறுவதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனை தரும்.மேலும் நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் படிப்படியாக ஜெயமாகும்.


சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அதற்கான பரிகார முறை அறிந்து அதன்படி செய்தோம் என்றால் நம்மிடம் இருக்கும் எதிர்மறைகள் மறைந்து நமக்கு சாதகமான சூழ்நிலை உண்டாக்கி தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது திண்ணம்.

மேலும் படிக்கலாம் ..

வாழ்க்கை சுபிட்சம் பெற்று வளம்பெற சூரிய நமஸ்கார வழிபாடு 🙏🌹🍀👇👇


வாழ்வினில் செல்வம் 
சேர்வதற்கு மூன்றாம் பிறை 
வழிபாடு🌹🍀🌹👇👇👇


Copy rights at balakshitha



திங்கள், 22 ஏப்ரல், 2019

கோவில் கேசரி*


எந்த ஒரு சுப காரியங்கள் தொடங்கும் பொழுதும் ..

தெய்வத்தை வணங்கி ஒரு பாரம்பரியமான இனிப்பு செய்து இறைவனுக்கு
படைத்து ஆரம்பித்தால் அந்த காரியம் சுபமாக முடியும் என்பதால் தெய்வத்திற்கு உகந்ததான கோவில் கேசரி செய்முறையை அறிந்து கொள்வோமே..


தேவையான பொருட்கள்
ரவை -1கப்
சர்க்கரை 1 -1/2 கப் (ஒன்றை கப்)
தண்ணீர்- 3 கப்
நெய்  - 3/4கப்
முந்திரிப்பருப்பு -6 அல்லது ஏழு கலர் பவுடர்
அலங்கரிக்க- சீவிய
பாதாம் பருப்பு 4
வாணலியில் ரவை *
நெய் * உடைத்த
முந்திரிப் பருப்பு *
அனைத்தையும்
சேர்த்து கிளறி
அடுப்பை மீடியமாக
வைத்து  ரவாவை நன்றாக கிளறவும் . ர

ரவா நெய்யிலே நன்றாக வெந்த பிறகு  வாசனை வந்ததும் 3 கப் தண்ணீரை
அதில் சேர்த்து கிளறி தண்ணீர் முழுவதுமாக  சுண்டியதும் -அடுப்பை அணைத்து விட்டு அதன் பிறகு கேசரி பவுடர் * சர்க்கரை  * ஏலக்காய் பொடி  *
சேர்த்து கிளறி ஒரு தட்டில் ஊற்றி விடவும். மேலே ஒரு டீஸ்பூன் சர்க்கரை* ஒரு டீஸ்பூன் நெய் *ஊற்றி அதன் மேல் சீவிய பாதாம் பருப்பு * தூவினால் கோவில் கேசரி தயார்.
ரவா கேசரியின் சிறப்பு *

தெய்வத்திற்கு மிகவும் உகந்த இனிப்பு *
செய்வது மிக மிக எளிது *(10 நிமிடம் போதும் )
வாயில் போடும் போதே நாவில் கரைந்து மேலும் சாப்பிட ஆவல் பிறக்கும் *

 தெய்வத்திற்கு
பிரசாதம் வைத்து *
பிறகு நாம் குடும்பத்தோடு
சேர்ந்து ஆனந்தமாய்
சுவைத்து  *தெய்வத்தின்
அருளை பெறுவோமே.