திருப்பாவை பாசுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பாவை பாசுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாசுரம் பாடல்கள் 29 , 30

 ஆண்டாள் அருளிய திருப்பாவை

 பாடல் -  29



சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


பொருள் விளக்கம் ;

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பொற் பாதங்களை வணங்க காத்துக்கொண்டிருக்கும் எங்களின் காரணத்தைக் கேட்பாயாக ! 

ஆயர் குலத்தில் பிறந்த எங்கள் பரந்தாமா!  நோன்பு மேற்கொண்டு வந்திருக்கும் எங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் எங்களின் நிலை என்ன ! 


நீர் கொடுக்கும் பொருள் வேண்டேன் ஆனால் நாங்கள் பாவை நோன்பு மேற்கொண்டு வேண்டி நிற்பது ஏற்றுக் கொள்வாயாக . ஏழு பிறவியிலும் ஆயர் குலத்தில் எங்களோடு நீ பிறக்க வேண்டும் .  எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.  என்று மனமுருக கண்ணனை அழைக்கின்றாள் ஆண்டாள்.

 கண்ணனின் அருளைப் பெறுவது எப்படி! என  நமக்கு சற்று அழுத்தமாகவே இந்த பாசுரத்தில் எடுத்துரைக்கின்றாள் ஆண்டாள். அவனிடம் நம்முடைய வேண்டுதல் கேட்பதை முதலில் விடுத்து கண்ணனின் மனதில் இடம் பிடிப்பதற்கான பக்தி வழிபாடு கடைப்பிடிக்க அவனே வேண்டிய அனைத்தையும் நமக்கு நிறைவேற்றுவான் என்பதே  இந்தப் பாசுரத்தின் கருத்து.


திருப்பாவை பாடல் -  30



வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


பொருள் விளக்கம்;

அலைகள்நிறைந்த அமுதமெனும் பாற்கடலை கடைந்த மாதவனும்,  கேசி என்ற அரக்கனைக் கொன்று தீமை தனை அழித்த  கேசவனுமான கண்ணனை, தங்கம் எனும் அங்கம் கொண்ட சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட  மங்கையர் அணிகலனோ அழகு பெற ஆதவன் ஆன மாதவனை  சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்றனர்.


ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், தான் நோன்பின் பலன் பெற்ற அனைத்தும் இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.


 இதனை படிப்பவர்கள், உயர்ந்த  நிமிர்ந்த  திட தோள்களை யுடையவனும், அழகிய கனிந்த அருள்பெரும் கண்களைக் கொண்ட திருவதனம் உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் பெருமாளின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர் இத்துடன் திருப்பாவை பாசுரம் முடிவடைகின்றது.




தெய்வ பக்தி நிறைந்திட எம்பெருமானை என்றும் வழிபட்டு  தினமும் பத்து நிமிடம் ஸ்லோகம் படித்து, முடிந்த நேரங்களில் தெய்வீக வரலாறு கேட்டு , பக்தி பாசுரங்கள் பாடி விரத நாட்களில் வேண்டிய தெய்வத்தை அகத்தினில் இருத்தி வழிபட்டால்  , மகாலஷ்மி வாசம் செய்யும் இல்லம்தனை நாம் பெறுவோம்.


 அவளுக்குப் பிடித்தமான ஏலக்காய் மாலை தனை பெருமாளுக்கு நாம் சாற்றி  பக்தி மணம் நுகர்ந்து பெருமாளின் அருள் பெறுவோம்.


வெண்ணிற பாலின் மனம் கொண்டு, தேனின் சுவையென குணம் கொண்டு , முக்கனியில் தித்திக்கும் சிந்தை இனித்து ,  மாசில்லா நெஞ்சம் கொண்ட சுற்றம் அமைந்து,  பொற்குவியலாய்  குவிந்த  செல்வம் பெற்று,  தேவாமிர்தமான  வாழ்வுதனை நீர்  பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே ! வாழ்வின் பிறந்த பயனில் இனிது கண்டு நிறைவு காண்கவே.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


செவ்வாய், 11 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 28

 ஆண்டாள்  அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 28



கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னைபிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைசிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்:

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா நாங்கள் அறிவிலா பேதைப் பெண்கள் .எங்களுக்கு என்ன தெரியும்! பசுக்களின் பின்னால் சென்று பசு தனை மேய்த்து தயிர் சாதம் உண்ணும் பெண்களாகிய எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நின் திருமுகமே கண்ணா !  எங்களை பார்ப்பதற்கு எழுந்திராய் என்கின்றாள் திருப்பாவையில் கோதை.

எங்களுக்கும் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியும் பரந்தாமா உமையே  நினைத்து உமையே தலைவனாக ஏற்றுக் கொண்டு உன் வழியே  செல்கின்ற எங்களுக்கு வைகுண்ட பதவி நிச்சயம் பெருமானே!

உன்னை நினைத்த பலன் பிறவிப் பயன் அடைந்த  திருப்தி பெற்றோம் வைகுண்டா!  என்று மகிழ்ச்சி மேலோங்க  கண்ணனை அழைக்கின்றாள் கோதை.



உன்னோடு எங்களுக்குள்  உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடம் உள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக என்று எம்பெருமான் கோவிந்தனை  அன்போடு அழைக்கின்றாள் கோதை.

உயர்வு தாழ்வு நிலை இல்லா அனைவரையும் சமமாக பார்ப்பவன்  இறைவன்  என்பதை இந்தப் பாசுரத்தில் தெளிவுபடுத்துகின்றாள்  கோதை .

அறிவிலா மாடு மேய்க்கும் தயிர்சாதம் உண்டு வாழும் நிலை  இருந்தாலும் ஸ்ரீனிவாசனை  நினைத்து விட்டால் போதும் ! பிறவிப்பயன் அடைந்த திருப்தி பெற்று வைகுண்ட பதவி நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்கின்றாள் ஆண்டாள்.

உண்மைதானே!



பால் வடியும் குழந்தையின் முகம் தனிலே- சாதி மத பேதமை பார்ப்போமா !தினம் வணங்கும் தெய்வத்தின் முன்தனிலே - ஜாதி மத பேதமை பார்ப்போமா !அன்பு கனிந்த தாயின் அகம் தனிலே -ஜாதி மத பேதமை பார்ப்போமா !பண்பிலே  சிறந்த நம் மனதினிலே ஜாதி மத பேதமை பார்ப்போமா!

பழையன போய்விடுக , புதியன என் மனதில் தோன்றிய எழுந்திடுக  என்று ஒரு புத்துணர்ச்சி கிடைத்திட,   இந்த தை மாதம் அனைவருக்கும் புத்துணர்ச்சி பெற்ற மாதமாக , எழுச்சி பெறும் மாதமாக , வெற்றிபெறும் மாதமாக தெய்வத்தின் அருள் பெற்ற  வருடமாக அமையட்டும்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹




திங்கள், 10 ஜனவரி, 2022

திருப்பாவை பாசுரம் பாடல் - 27

 ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம்  பாடல் -  27



கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்;

எதிரிகளை அடக்கி தீமைகளை ஓடுக்கி  வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே!  நின் புகழ் பாடி  உன்  அருள் பெற வேண்டி நிற்கும் எங்களை காக்க வைக்காது எம்பெருமானே நீ  எழுந்திராய் ! என்று மார்கழி மாத குளிரில் பாவை நோன்பிருந்து தன் தோழியர்‌படை சூழ  எழுப்புகின்றாள் கோதை.


 'அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது . கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. அணிகலன்கள் மட்டும் போதாது பலவண்ண புத்தாடைகளும்  சேர்த்து சீர்  கொடுப்பாயாக ' என்று பாடி அழைக்கின்றாள். 


பொருள் இன்றி வாழ முடியுமா!  செல்வம் இன்றி வாழ்க்கை சிறப்பு பெறாது  ஆதலால் செல்வ செழிப்பும் தாங்கள் பெற வேண்டும் என்று  தம்முடைய 27ஆம் பாசுரத்தில் பொருட் செல்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடுகிறாள் ஆண்டாள்.

பரந்தாமா! எம்பெருமானே ! நீர் எங்களுக்கு காட்சி தந்து விட்டால் போதும்.   நாங்கள் விரதத்தை நிறைவு செய்வோம். தோழிகளோடு கூட்டமாய்  அளவில்லா மகிழ்ச்சியுடன் நெய் வழிய பால்சோறு உண்போம் என்று பாடி கண்ணனை அழைக்கின்றாள்  கோதை.


மார்கழி நோன்பின கிரீடமாய் அமைகின்றது ஆண்டாளின் 27ஆம் பாசுரமான இந்தப் பாடல். இன்றைய கூடாரவல்லி வைபவம் பார்க்க கோடி ஆனந்தம் . பெருமாள் கோவில் ஆண்டாள் தரிசனம் காணக் கிடைக்காத பேரின்பம்.


  ஆண்டாள் பாவை நோன்பில் புத்தாடை ஆபரணம் சீர் தந்து நீர் வந்து காட்சி தர .‌உனக்கு நெய் வழியும் பால் அன்னம் அக்காரவடிசல் என்னும் தேவலோகஅன்னம் நெய்வேத்தியம் படைப்போம் என‌ ஆண்டாள் பெருமானே வேண்டுகின்றாள்.


அவனுடைய வேண்டுதலை ஏற்று பெருமாள் கண்விழித்து எழுகின்றார் அதுவே இன்றைய நாள்.


 பாவை நோன்பு முடிந்ததும் நோன்பின் பலன் ஆண்டாள் ரங்கநாதரோடு  ஐக்கியமாகிவிட்டாள்.



 ஆனால் அவளுடைய கடமையை செய்ய முடியாது போக‌ அதைக் கேள்விப்பட்ட  ராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணனாக  பிறந்த வீட்டு சீர் அக்காரவடிசல்  வெண்ணயோடு  சேர்த்து கள்ளழகருக்கு சமர்ப்பித்து ஆண்டாளின் வேண்டுதலை நிறைவு செய்கின்றார்.  ஆண்டாள் அண்ணா என்று ராமானுஜரின் அழைக்கும் பாக்கியத்தைப் பெற்றார்‌.


அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது .தெய்வீக பேரானந்தத்தை உணர்வது என்பது மற்றவர்கள் சொல்லி உணர வைத்தலை விட ,  தாமே உணர்ந்து ஆன்மீகத்தில் மூழ்கி , தெய்வத்தை  அகத் கண்ணாரக் கண்டு,  மெய் உருகி காணும் பரவசத்தை அனைவரும் பெற வேண்டும் அப்போதுதான் மனித பிறவியின் வாழ்க்கை நிறைவடையும்.




அந்த நினைவு கூறும் விதமே  கூடாரவல்லி திருவிழா திருமணம் கைகூடும் .பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். குழப்பமான மனம் தெளிவாகும். செல்வ செழிப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறக்கும் என்பது இன்றைய தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று ஆண்டாள் பெருமாளின் தரிசனம் காண்போர்க்கு கிட்டும்.


 பெருமாள் ஆலயம் செல்க.. பதினாறு செல்வங்களும் பெற்று மாங்கல்ய பாக்கியம் நிலைக்க பெற்று  வாழ்க்கையின் சிறப்பு பெற்று  வாழ்க வாழ்கவே. பெருமாளின் அருள் பெற்று வாழ்வினில் பிறந்த பயனை நிறைவான மகிழ்ச்சி காண்கவே.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha



ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல்- 26

 

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம்பாடல் -  26



மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துன்பாஞ்சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவேசாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரகோல விளக்கே கொடியே விதானமேஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட பரந்தாமா! நீலக்கல் நிறத்தை கொண்டவனே‌‌!   பெரிய கடலில் ஆலிலையில் அழகாய் மிதப்பவனே!

மங்கல இசையில் இறைவனை வரவேற்று இசைந்தே மகிழும்  பெரியவர்கள் கடைப்பிடித்து வரும் மார்கழி நோன்பு இருந்து  கண்ணனை
அழைக்கின்றோம்.  அன்று உலகமே அசரவைக்கும் நாத ஒளியும் , வெண்ணிறம் கொண்ட பால் சாதம் போன்ற பாஞ்சசன்யம் எனும் வலம்புரி சங்கு முழங்க.. பெரிய முரசுகள் ஒலிக்க , பெரியவர்கள் படைசூழ,  மங்கள தீபங்கள் சுடர் விட்டு எரிய,  உன் திருப்புகழ் பறைசாற்றும் கொடிகளும் அசைந்தாட , எங்களுக்கு காட்சிதர எம்பெருமானே நீ எழுந்திராய்!

இந்த நோன்பு இனிதே நடைபெற இடமளித்து  அருள்வாயே எங்கள் கண்ணா!  என்று கண்ணனை  அழைக்கின்றாள்  கோதை.

ஒரு நோன்புக்கு மிக முக்கியத்துவம் இருக்கும் இடம்  தெய்வீக இடமாக அமையவேண்டும். என்பதை தன்னுடைய பாடல் மூலமாக நமக்கு அறிவுறுத்துகின்றாள்‌  கோதை.

பாஞ்சசன்யம் எனும் சங்கு கடலில்  கிடைக்கக்கூடிய மிக அரிய வகை சங்கு என்பதை அறிவீரோ!   ஆனால் எளிதில் கிடைக்க படாத மகத்துவம் கொண்டது. ஆயிரம் இடம்புரி சங்கின்  சங்கமத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும்.

திருமாலின் கையிலிருக்கும் வலம்புரி  சங்கிற்கு , பிரணவ மந்திரத்தின் ஒளிற  வாழ்க்கைக்கு பிரகாசம் கொடுக்கக்கூடிய சக்தி, செல்வ செழிப்பு வாழ்க்கையில் நிம்மதி பெறக்கூடிய  அனைத்து  சக்திகளும் உண்டு. அவை அனைத்தும்  நாம் பெற வேண்டுமா!



அந்த மகிழ்ச்சி தரக்கூடிய வலம்புரி சங்கு பூஜை அறையில் வைத்து வழிபடுவோர் வாழ்க்கை என்றும் சுபிட்சம்  தரும். தெய்வீக இடமாக அமைவதற்கு இதுவே ஒரு சிறந்த சாதனம்  என்பதை இந்த திருப்பாவையில்  மிக அழுத்தமாகவே  பாடுகின்றாள் ஆண்டாள்.

  வலம்புரி சங்கின் ஸ்ரீ ஓம் என்ற ஓங்கார சமுத்திரத்தில் நாம் கரைந்து விட்டால் துன்பமேது ! துயரமேது! தோல்விதான்  ஏது!  என்றும் வாழ்க்கை ஜெயமே என்பதுதான் இந்த வலம்புரி சங்கின் மகத்துவம். என்பதைத் தெளிவு படுத்துகின்றாள் ஆண்டாள்.

எம்பெருமானாகிய  கண்ணன் நம்மை விரும்புகின்றானா!  தெரியாது! ‌ நமக்கு அந்த ஆராய்ச்சியும் தேவையில்லை ...நாம் கண்ணனை விரும்புவோம் .கண்ணனை மட்டுமே விரும்புவோம் .  எத்தனை முறை அழைத்தும் வேண்டியும் செவிசாய்க்காது  சோதனை மட்டுமே தருகின்றான் என்று சோர்ந்து விடாதீர்.  ‌



 நாளை நிச்சயம் வருவான்  . திருப்பாவை ஆழ்ந்து படிக்கப் படிக்க  கோதைஅவளுக்கு காட்சி தந்து ஆட்கொண்ட  எம்பெருமான் , நமக்கும் செவிசாய்ப்பான்.   அவன் கைகளில் வீற்றிருக்கும் பாஞ்யசன்யம் எனும் சங்காக நான் ஆகவேண்டும் எனும் ஆழம் மனதில் வேரூன்ற, அடுத்த கணம்‌ நாம் பெருமானின் கையிலே வீற்றிருக்கும்   தெய்வீக சங்காக ,  செய்த பாவங்கள் கரைந்து,  கோடி புண்ணிய பலன்கள் அனைத்தும்  பெற்றவனாக ,  இதுபோதும் இப்பிறவி ! இனியேது மறு பிறவி.. எனும் உவகை கொண்டு வாழ்ந்து வாழ்வின் இனிதான பயனை  நிறைவு செய்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

வெள்ளி, 7 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் 23

 ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் 23


மாரிமலைமுழஞ்சில்மன்னிக்கிடத்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறிமூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டுபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடையசீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்தகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடலின் விளக்கம்

இந்தப் பாடலை சிங்கத்திற்கு இணையாக கண்ணனை ஒப்பிட்டுப் பாடுகின்றாள்.  ஆண்டாள் மழைக்காலம் மிகப்பெரிய மலை. அதில் ஒரு குகை .  அந்த குகைக்குள்  காட்டுக்கு அரசன் எனும் பெருமை கொண்ட சிங்கம் விழித்து எழுந்து கண்களில் நெருப்பு பொறி பறக்க நாற்புறமும் பிடரி மயிர் சிலிர்த்து எழுந்து நடமாடி நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையோடு மிகப்பெரிய கர்ஜனை செய்தவாறு வெளியே வருகின்றது.  அதேபோன்று காயாம்பூ நிறத்தை உடைய எங்கள் கண்ணா நீ விழித்தெழாய்!

நீயும் வீரநடை போட்டு கோவிலை விட்டு வெளியே வருக . எங்களுக்கு அருள் செய்க.  மிக அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அரியாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்ததற்கான காரணத்தை அறிந்து கோரிக்கைகளை பரிசீலனை செய்து எங்களுக்கு அருள் செய்க.

 வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள் செய்வாயாக என்று  கண்ணனை வேண்டி அழைக்கின்றாள்  கோதை.

இங்கு சிங்கத்திற்கு நிகரான கண்ணா!  என  ஒப்பிட்டு  வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றாள் ஆண்டாள்.



அதிகாலை துயிலெழுந்து மார்கழிமாத குளிர் பொழுதில் நீராடி பாவை நோன்பு இருத்தல் என்பது மிக பெரிய கடினம் எனினும் ஆண்டாள் மாதம் முழுதும் ஆயர்பாடி பெண்களையும் தினம் அழைத்து  நோன்பு  மேற்கொண்டு கண்ணனை அழைக்கின்றாள்.

வீரம், விவேகம், முயற்சி ,உழைப்பு ,பக்தி அனைத்தும் சேர்ந்தால்தான் லட்சியம் வெற்றி பெறும் . சிங்கத்திற்கு இணையான கண்ணனுக்கும் இப்படிப்பட்ட செயல்கள் மிகவும் பிடிக்கும். அவனுடைய அருள் நமக்கு கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றாள். 

வீரமும் விவேகமும் கொண்டு வாழ்பவனுக்கு இறைவனின் அருள் நிச்சயம் உண்டு என்று திருப்பாவை 23 ஆம்  பாசுரத்தில் பறைசாற்றுகின்றாள்  கோதை.



சூரியன் உயிர்த்தெழுந்த காலைப் பொழுதில் ,  துணை பற்றியபடி மங்கையவள் நிற்க ,  உன் மகன் எங்கே!  என தெருவழியே சென்ற மலர்விழியாள் (காதலி) கவிபாட ...என் வயிற்று சிங்க குகையில் (கருவறையில்)  இருந்து வெளியேறிய என் மகன் எங்கே இருப்பான் ! போர்க்களத்தில் சென்று பார் சிங்கமாய் சீறிப் பாய்ந்து எதிரிகளை வீழ்த்தி கொண்டிருப்பான் என பெருமையோடு சொன்ன மாதர்குல பெண்ணை பற்றிய வீர வரலாறு சங்ககால இலக்கியத்தில் நான் படித்ததுண்டு. அதுவன்றோ வீரம்! அதுவன்றோ தமிழரின் பண்பாடு! அவ்வழியில் வந்த நாம் வீர நடை போட்டு உழைப்பு எனும் வாளேந்தி  எதிரி எனும் சோதனைகளை முறியடித்து நெஞ்சை நிமிர்த்தி இறைவனை வழிபட்டால் உய்யுருகி மெய்யுருகி   வாழ்த்தி அருள்புரிவான் எம்பெருமான் நாராயணன் என்பது திண்ணம்.



நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



புதன், 5 ஜனவரி, 2022

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல்- 21

 ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 21



ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் விளக்கம்

ஆண்டாள் பாவை நோன்பிருந்து கண்ணனை அழைக்கின்றாள் .

இல்லை என்று சொல்லாது  கொடுக்கும் வள்ளலை போல  மடிதனில் பொங்கி நிரம்பி வழியும் அமுதமெனும் பால் சுரந்து நமக்கெல்லாம் வழங்கும்  பசுக்களின் தலைவனாய் விளங்கும் நந்தகோபாலனே! எழுந்திராய்!

கள்ளம் கபடம் இல்லாத பால்போன்ற வெண்மனதோடு இருந்தால் மட்டும் போதாது.‌. கொடுத்து உதவும் குணமும் இருந்தால் மட்டுமே ...

நமக்கு தலைவனான நாராயணனின் குழலில் இருந்து வரும் நாதம் எனும் அருளைப் பெற முடியும் என்று எவ்வளவு அழகாக தன்னுடைய திருப்பாவையில் தெளிவுபடுத்துகின்றாள்  ஆண்டாள்!

வேதங்கள் அனைத்தும் உமை  போற்றும்.  வலிமை உடையவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் ஒளிசுடரே! துயில் எழுவாயாக! என்று பாடி அழைக்கின்றாள் கோதை.



எதிர்ப்பவர்கள்  வலிமைதனை  தான் இழந்து அடுத்த கணம் வீழ்வார்கள் உன் காலடியில்...  நாங்களும் உன் மீது வைத்த அன்பினால்  நின்  திருப்புகழ் பாடி வெளியே காத்திருக்கின்றோம் அறியாயோ!  எம்பெருமானே  எழுந்திராய்! என்று கண்ணனை அழைக்கின்றாள்.

ஆஹா ! ஆண்டாள் தன்னுடைய திரு பாசுரத்தில் கண்ணனை எப்படியெல்லாம் புகழ்மாலை பாடி எழுப்புகின்றாள். அவளுடைய திருவாயில் மலரும் வாழ்த்து பாடல்கள் கண்ணனை எழுப்பச் செய்யுமா !

அன்று தாம் கட்டிய மாலைதனை தானே  சூடி கண்ணாடி முன்பு அழகு பார்த்து , அதே மாலைதனை  கண்ணனுக்கும்  சூடி அழகு பார்த்தவள் கோதை .

கட்டிய மாலையில் அன்பாய் அமர்ந்த அவளின் ஒரு திருமுடி தனில் அன்று  கண்ணனையே கட்டிப் போட்டவள் அன்றோ கோதை ! அப்பொழுது விழுந்தவன்தான் கண்ணன்  இன்னும் எழுந்திருக்க வில்லை என்பதை அறியாது  எழுப்புகின்றாள் கோதை.

பொங்கி வரும் பால் போன்று கள்ளம் கபடம் இல்லாத மனம் வேண்டும் கொடுத்து உதவும் குணம் வேண்டும் ஆணவம் விடுத்து அன்போடு கண்ணனை கட்டிப் போடுங்கள்.  கண்டிப்பாக வருவான் என்று இந்தப் பாடலில் பாசுரத்தில் ஆண்டாள் பாடுகின்றாள்.



இந்த பாசுரத்தில் இருந்து  ஒரு துளி சிந்தனை சிதறலாக .....

பத்து ரூபாய் வரவு தனில்  ஒரு ரூபாய் உளமறிந்து  உவகையோடு  இல்லை என வருந்தும் எளியவர்க்கு  நீ அளித்தால் ...  அதே உவகையோடு பத்து ரூபாய் பத்தாயிரம் ரூபாய் என செல்வத்தோடு செல்வமாய் பதினாறு செல்வங்களும் தான் பெற்று , சிறந்த வாழ்க்கை பயன்  அடைவதற்கு வழி செய்வான் எம்பெருமானே.

அதிகாலை துயிலெழுந்து ,பக்தி என்னும் வைராக்கியம் வைத்து, அன்பு எனும் பாசுரம் பாடி , எம்பெருமானே ! நின் பாதம் சரணம் ! என வழிபட்டால் ஆண்டாளின் அன்புக்கு கட்டுப்பட்டு காட்சியளித்த  கண்ணனவன் நம் இல்லத்திலும்  கண்டிப்பாக எழுந்திருப்பான் . நமக்கும் காட்சி தருவான் .ஆசி கொடுப்பான் அருள்புரிவான் .

அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை பாடி  எம்பெருமானை அழைத்து மார்கழி சிறப்பை நிறைவுபடுத்தி பிறந்த பயனை பூர்த்தி செய்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha


ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல் 22

 ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 22



அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை  பூப்போசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?சதிங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம் 



பரந்த பூமி தனை ஆட்சி செய்யும் எம்மைப் போல் சிறந்த வீரர்கள் எவர் உண்டு ! என தம்பட்டம் அடித்தவரும் உன் பள்ளிகொண்ட கட்டிலைச் சுற்றி சத்சங்கம் வந்த பக்தர்கள் போல் காட்சிதர  கண்ணா ஏன் இன்னும் எழுந்திராய்! என  கண்ணனை எழுப்புகிறாள் கோதை.


கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போல, தாமரைப்பூ மெதுவாக மலர்வது போல, உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழித்து எழுந்திராய்


அழகிய சந்திரனும், பிரகாசமான சூரியனும் உதித்தது போல, உன்னிரு  கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே! எங்கள் பாடல் உன் காதில் விழவில்லையோ! 


எம்பெருமானே! பாவை நோன்பிருந்து விரதம் மேற்கொண்டு உமை காண்பதற்காக வந்திருக்கும் எங்களை காண எழுந்திராய் ! என்று ஆண்டாள் தன் திருப்பாவையில் பாசுரம் பாடி அழைக்கின்றாள்‌ ஆண்டாள்.


 எம்பெருமான் நாராயணன் கண்ணனை நினைத்து வழிபட்டால் நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் கருகும் சாம்பலாகும் கரைந்து ஓடிவிடும் என்று இந்த பாசுரத்தில் சற்று அழுத்தமாகவே முன்மொழிகின்றாள்  கோதை.




 நம்முடைய வாழ்க்கையில் நல்லதும் வரலாம் - கெட்டதும் வரலாம், வரவும் வரலாம்- இழப்பும் வரலாம் தெய்வம் துணை இருக்கலாம் சோதித்துப் பார்க்கலாம் தளராதே .மனம் தளராதே. துயரங்கள் மனதை ஆட்கொள்ளும் சூழ்நிலை வரலாம் . தளர்வு வரலாம் ..சற்று ஓய்வெடு. ஓய்வெடுக்கும்  நேரத்தில் கண்ணீர் சிந்தும் நிலைமை வரலாம் .அதனால் தவறில்லை . அழுதால் தான் மனம் லேசாகும் . தெளிவு கிடைக்கும்.  புரிதல் கிடைக்கும்.  அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வழி பிறக்கும்.

 வாழ்வை புரிந்து கொள் .மனதில் தெளிவுபடுத்து .கண்ணீரை துடைத்து விடு .வாழும் வரை மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் அதற்கு எம்பெருமான் துணை வேண்டும்.  முன்ஜென்ம கர்ம வினைகள் சாபங்கள் அனைத்தும் கருகி சாம்பலாக.. அதற்கு கண்ணனை வழிபடுங்கள் என்கின்றது திருப்பாவை


 மார்கழி மாதம் அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை பாடல்பாடி, எம்பெருமான் வெங்கடாஜலபதியின் நாமத்தை ஜபித்து  முடியாவிட்டால் இசையில் கேட்டு  நம்முடைய பாவங்களை கரைத்து புண்ணிய பலன்களை நிறைய ஏற்று இந்த பூமியில் பிறந்ததற்கான மனிதப் பிறவியின் வாழ்ந்த பயனை  நிறைவு செய்வோம்.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha



திங்கள், 3 ஜனவரி, 2022

திருப்பாவை பாசுரம் பாடல் -20

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 20



முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே!துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குள் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.



பொருள் விளக்கம்


நமக்கு துயர் வந்தால் யாரை அழைப்போம்!  பரமனை அழைப்போம். அதற்காகத்தான்  முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் வருவதற்கு முன்பாக ஓடிவந்து துயரம் தீர்க்கும் பெருமானே! நீ எழுந்திருப்பாயாக!  என்று ஆண்டாள் தன் பாசுரத்தில் பாடுகின்றாள்.

கலியுக தெய்வமே! நேர்மை தவறாத எம்பெருமானே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தை கொடுத்து வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூய மனம் உடையவனே! துயில் எழுவாயாக.

கண்ணனையும் நப்பின்னையையும் மாறிமாறி  பாடி அழைக்கின்றாள் தன்  திருப்பாசுரத்தில்  ஆண்டாள்.  ஏன் அப்படி அழைக்கின்றாள்!


பாசுரம் படிப்போர் நெஞ்சம் நெகிழ்ந்து மகிழ்ந்து  கமழ்ந்து உருகி  வேண்டும் என்றா! அல்ல..மாதவனை மட்டும் புகழ்ந்தால் நப்பின்னைக்கு  கோபம் வந்தால் என்ன ஆவது ..காரியமே கெட்டுவிடும் என்று ஐயத்தின் காரணமா! அல்ல அல்ல...


அம்மையின் கடைக்கண் பார்வை பட்டால் தான் கண்ணன் அசைவான்  துயில் எழுவான், தம் முகம் காண்பான் நோன்பு விரதம் வெற்றி பெறும் எனும் காரணமே உண்மை என்று கூறும் விதமாக திருப்பாவையில் மேலும் நப்பின்னையின் மேல் புகழ்மாலை தொடுக்கின்றாள்  ஆண்டாள்.


பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தானங்களும், பவளச் செவ்வாய் மலர  சிற்றிடையில் அழகூட்டும் எங்கள் நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக.

எங்களுக்கு விசிறியும், கண்ணாடியும்  உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்து இந்த பாவை நோன்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பாயாக  என்று நப்பின்னையை அழைக்கிறாள் ஆண்டாள்.

 நப்பின்னையிடம் விசிறியும் கண்ணாடியும் ஏன் கேட்கிறாள் ஆண்டாள் !அதற்கும் பொருள் கண்டு ஆனந்தம் கொள்வோம்..




தனக்காக‌ என  இலாது மற்றவர்களுக்கு காற்று எனும் தென்றலை பகிர்ந்து மற்றவரின் மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக  அமைவது விசிறி.

நாம் சுயநலமின்றி நம் சுற்றியிருக்கும் மற்றவரின் நலன் கருதி வாழ்தலே பிறந்த பயனின் சிறப்பு என்பதை எடுத்துக் கூறும் வகையில் விசிறியில் கேட்கின்றாள்.

நம்முடைய பிரதிபலிப்பை காட்டும் கண்ணாடி நம்மை மட்டுமல்ல... நம் மனதையும் சேர்த்து பிரதிபலிக்கும்.

கண்ணாடி பார்த்தல் எதற்காக!  நம்முடைய அகத்தில் உள்ள குறைகளை நாம் அறிந்துகொண்டு அதை மாற்றி நற்குணங்கள் பெற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது கண்ணாடி.

அதனால்தான் நிலை வாசலில் கண்ணாடியை வைக்கின்றோம். மங்கல பொருட்களில்  கண்ணாடி இருக்கவேண்டியது ஐதீகம் என்கின்றோம்.  நாம் மட்டும் அல்லாது கண்ணாடியை பார்க்கும் அனைவரும் தன்னுடைய பிரதிபலிப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது கண்ணாடி. அதனால்தான் ஆண்டாள் விசிறயுடன் சேர்த்து கண்ணாடியும்  தருமாறு நப்பின்னையிடம் வேண்டுகின்றாள்.
அது சரி விசிறி கண்ணாடி கேட்கின்றான் கண்ணனையும் சேர்த்து அல்லவா கேட்கின்றான் இது நியாயமா என்ற ஐயம் எழுகின்றதா!

கண்ணனாக , வைகுண்ட வாசனாக சீனிவாசனாக , மாதவனாக கோவிந்தனாக  ஆக பல காட்சிகள் தருபவன் எம்பெருமான் நாராயணன். கண்ணன் நப்பின்னைக்கு  மட்டும் சொந்தமல்ல நம் அனைவருக்கும் சொந்தமானவன் .


 நம் குறையை தீர்த்து அருள்பவன் என்பதை உலகுக்கு அருள் வதற்காக ஆண்டாள்விசிரி,  கண்ணாடியுடன் , கண்ணனையும் எங்களிடம் தருவாயாக என்று வேண்டுகின்றாள்.

அன்று  பாவை நோன்பு விரதமிருந்து கண்ணனை  கோதையவள் வேண்ட மகிழ்ச்சியோடு ஆட்கொண்டான் எம்பெருமான் நாராயணன்.

நாமும் மார்கழி மாதம் பாவை நோன்பு மேற்கொண்டு,  தினம் ஒரு பாசுரம் பாடி எம்பெருமான் நாராயணனை  நம் இல்லத்திற்கு அழைத்து நம்முடைய குறைகளை பகிர்ந்தால், வரும் தை மாதம் நம் குறைகள் அனைத்தும் விலகி  மகிழ்ச்சி நிறைந்த மாதமாக நம்மையும் ஆட்கொண்டு  மோட்சம் எனும்  அளவிலா பேரின்பம் தருவான் கோவிந்தன் என்பதால் தினமும் விளக்கேற்றி திருப்பாவை பாடி திவ்யகடாட்சம் நாம் பெறுவோம்.

ஓம் நமோ நாராயணா உன் பாதமே போற்றி போற்றி போற்றி.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


Copy rights at Balakshitha

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 19

 

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 19



குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.


பொருள் விளக்கம்

பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில் , தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகின்ற  கண்ணனை  எழுப்புகின்றாள்  ஆண்டாள். மனைவி சுகம்தனில்   உறக்கம் மேவிட ,மனைவி நப்பின்னை மூலமாக தூது விடுகின்றாள்.


குத்து  விளக்குகள் எரிய, யானைத் தந்தத்தினால்  ஆன கட்டிலின்  மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை அணிந்த கண்ணா ! நீ எங்களுடன் பேசுவாயாக . 



கண்ணனோ  ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறான்.  ஆண்டாள் பாவைப் பெண்களோடு கோரிக்கை எழுப்ப நிற்பது கண்டு , அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம். 


உடனே நப்பின்னை பால் தன்னுடைய திருப்பாவை பாடலை கொடுக்கின்றாள் ஆண்டாள்.


மை பூசிய அழகிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனை நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்பாததற்கு காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு சரியானதா? தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்!


 அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும். கண்ணனை உறக்கத்திலிருந்து எழுப்புவாயாக என்று பாடுகின்றாள்.


இந்தப் பாடலிலும் கணவன் மனைவியின் பேச்சு கேட்டு நடப்பதே வாழ்க்கைக்கு இனிமை தரும் என்ற உணர்த்துகின்ற பாசுரமாய் அமைகிறது.




திருமணம் எனும் பந்தத்திற்குள்  உருவாகும் அழகான மலர் தான்தாம்பத்யம். கணவன் மனைவி அன்னியோன்யம் என்பது தாம்பத்யத்தின் பரிமாணம்.

அந்த பந்தம் என்றும் நிலைக்க வேண்டும் என தம்பதியர் சேர்ந்து உறுதி செய்து  நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்ந்த வாழ்க்கை பயனை அடைகவே.


மலர் மலர்ந்தால் இறைவனுக்கும் மங்கலம் நிறைந்தால் குடும்பத்திற்கும் மாசற்ற மனம் நிறைந்தால் மகிழ்ச்சிக்கும் ,குணம் நிறைந்தால் குலத்திற்கும் ,கைகள் பணித்தால் ஈகைக்கும் வித்திட்டு கடமையில் கண்ணாக வாழ்ந்து , வாழ்ந்த பயனை அடைந்து  வாழ்வினில் இனிது காண்போம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha





திங்கள், 27 டிசம்பர், 2021

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் -12

 ஆண்டாளின் திருப்பாவை








 பாசுரம் பாடல் -12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்லதாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


மார்கழி  பாவை நோன்பு இருக்க இளங்காலை குளிரினில் , திருப்பாசுரம் பாடி ஒவ்வொரு இல்லத்திலும் சென்று தோழியரை எழுப்புகின்றாள்‌ கோதை. ஒரு தோழியின் இல்லத்து  வாசல் முழுதும், பால் சுரந்து தரையில் கொட்டிக் கிடக்கின்றது . கீழே பாலின் குளிர்ச்சி மேலே பனியின் குளிர்ச்சி தனை தன் இனிய பாசுரத்தில் பாடியவாறு தோழியை அழைக்கும் அழகு தனை கேளீரோ!



பாடலின் பொருள்...

கன்றின் கரு அறிந்து  மடியின் பால்தனை அங்கும் இங்கும் சிதறி ஓட  அலைபாயும்  எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே!

கீழே சில் எனும் பாலின் குளிர்ச்சி மேலே உடல் நடுங்கும் பனியின் குளிர்ச்சி தனில் நாங்களோ பால் சேறுதனில்  வெளியே காத்திருக்க  குரல் கேட்காது இன்னும் உறக்கம்  ஏனோ! எழுந்து வெளியே வருவாயாக என்று   தன் தோழிக்கு குரல் கொடுக்கின்றாள் கோதை.


சீதையை சிறைப்படுத்த இராவணன் பால் கோபம் கொண்டு ராம அவதாரம் எடுத்த எங்கள் பரந்தாமன் நாராயணனின்  புகழ் நாங்களோ பாடி கொண்டிருக்க ...நீயோ எதுவும் பேசாது எதைப்பற்றியும் கவலைப்படாது இன்னும் உறங்குவது ஏனோ! எழுந்து வெளியே வருவாயடி ! என தன் தோழியை பாடி  அழைக்கின்றாள் கோதை .

நம்முடைய அறிவை அகக் கண்ணைத் திறப்பதற்கு திறவுகோலாய் அமைவது திருப்பாசுரம்...

ராவணன் பால்  கோபம் கொண்டு.‌..என்று இந்தப் பாசுரத்தில் கோதை குறிப்பிடுவது ஏன்! ராமனின் முகம் கோபம் கொண்டு நாம் பார்த்ததுண்டா!

நாடாள்வேன் -காடாள்வேன்* இரண்டு நிலைகளிலும் ராமரின் முகம் மலர்ந்தே  இருந்தது .எப்போதும் ராமரின் முகம் தாமரை மலர் போன்று மலர்ந்தே இருக்கும் என்கின்றது கம்ப ராமாயணம்.

ராமனின் கோபம் என்று சொன்னால் அது தவறு என்று சொல்வதற்கு,   தோழி விரைந்து எழுந்து வருவாள் என்பதற்காக திருப்பாசுரத்தில்  'சினத்தினால் தென் இலங்கை  கோமானை' என ராமனைப் பற்றி அப்படி சொன்னாளோ! என்ற ஒரு சந்தேகம் எழுகின்றது.

ஒரு தவறு , அநியாயம் நேர்ந்தால் ஏற்படும் கோபம் கொள்வதை தவிர்த்து நிதானமாக தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர கோபமும் ஆர்ப்பாட்டமும் கூடாது எனும் கருத்தினை மனதில் வைத்து,  நினைத்த காரியம் இனிதாக முடிய அதிகாலை துயிலெழுந்து திருப்பாவை நோன்பிருந்து திருப்பாசுரம் தினம் பாடி அகமகிழ்வோம் . வாழ்வில் வாழ்ந்த பயனில்  நிறைவு காண்போம்

விதி என்பது  நம் வசம் கொண்டு  ஏற்றுக்கொண்டு அதன் வழியில் நாம் சென்று .. அகமும் முகமும் சமநிலை கொண்டு நேர்வழிப் பாதையில் நடந்து சென்று மதி வசத்தால் விடை கண்டு வெற்றிவாகை சூடுவோம். சங்கு சக்கர கையில் ஏந்தி  அற்புதமாய் காட்சி தரும் எம்பெருமான் நாராயணனின் ஆசியும் அருளும் நாம்  பெறுவோம்.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha




ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 13

 

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 13




புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய்.


பாடலின் பொருள் விளக்கம்


தவறு எது சரி எது என்பதை ..சரி பார்த்து கொடுக்கக்கூடிய எம்பெருமான் நாராயணனே பறவையாய் வந்து பகாசுரனினின்‌ வாயைப் பிளந்தார். கொடிய குணம் படைத்த ராவணனின் தலையைக் கிள்ளி எறிந்தார்

அப்படிப்பட்ட மகா புருஷனை வேண்டி  பாவை நோன்பு இருக்க நாங்கள் அனைவரும் வந்து விட்டோம் உறக்கம் ஏனடி தோழி!  எழுந்து எங்களோடு வருவாயாக.. என்று   நினைவுபடுத்துகின்றாள்  கோதை.



குரு (வியாழன்) ‌மறைந்து சுக்கிரன்(வெள்ளி) உச்சிக்கு வந்த பிறகும் ஏன் இந்த உறக்கம் !  பறவைகள் ‌கீச்சிடும் ஒலிதனையும் நீ கேட்கவில்லையோ! பூப்போன்ற மானின் கண்களை பெற்றவளே.. குளிர்தனில் நீராடும் சுகம்தனை  அறியாது இன்னும் உறக்கம் ஏனோ ! உடனே எழுந்து நீராட வருவாய் என்று ஆவலோடு பாவை நோன்பிற்காக தன் தோழியை அழைக்கின்றாள் கோதை.


சோம்பலை விடுத்து  கபடு தனத்தை விடுத்து,  எங்களுடன் கலப்பதற்கு எழுந்து வருவாயே  ! என்று தன் தோழியரை அழைக்கின்றாள்.


ஆண்டாளுக்கு திருப்பாசுரம் சொல்லிக் கொடுத்தது யார் ! சாட்சாத் எம்பெருமான் நாராயணனே. நாராயணனை மனதில் நினைத்து விட்டால் அவன் புகழ் பாட மனதில் தோன்றிவிட்டால்  மாதம் மும்மாரி சுரக்கும் மழைபோல ...பா‌டல்கள் தானாகவே ஊற்றெடுக்கும்.


அப்படித்தான் ஆண்டாளும் எம்பெருமானை  கை பிடிப்பதற்காக பாவை நோன்பு மேற்கொள்கின்றாள். திருப்பாசுரம் எனும் அமுதத்தை முன்மொழிகின்றாள்.  


அமுதம் என்றால் என்ன! பதினாறு செல்வங்களும் நாம் பெறுதல் என்பது அமுதம் என்று பொருள்படும் . அந்த அமுதமானது….

ஆர்வம் இருந்தால் தான் கிடைக்கும். பக்தி எழுந்தால் தான் கிடைக்கும் .முயற்சி செய்தால் தான் கிடைக்கும். அதிகாலை அழகான காலை பொழுது, அருகினில் இருக்கும் கோவிலில் பாடல்களின் ஒலியின் நாதம் , உடல் நடுங்கும் குளிரின் சுகம் அதனால் ஏற்படும் மன எழுச்சி கண்டு ஆத்மார்த்தமாய் நாராயணனை நினைத்து தினமும் திருப்பாவை பாடி அமுதம்தனை முழுமையாக நாம் பெறலாம்.

மார்கழி மாதம் இந்தப் பாடலை நாமும் பாட நம்முடைய வாழ்க்கையில் அனைத்து வளமும் பெற்று, நினைத்த காரியங்கள் ஜெயமாகி, மனதில் மகிழ்வுரும் காரியங்கள் அனைத்தும் சித்தி பெற்று, அளவில்லா செல்வங்களொடு  எம்பெருமானின் அருள் பெற்று மோட்சத்தை அடையும் நிலை பெறுவோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

செவ்வாய், 21 டிசம்பர், 2021

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் - 7

 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல் -  7


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ! பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச  நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ ! நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ !தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.


பொருள் விளக்கம் 


ஆனைச்சாத்தன் எனும் வலியன் குருவிகளின்  கீச் கீச் என்ற அழகிய குரல்தனை தோழியரே தங்களுக்கு கேட்கவில்லையா! அவை தம் இனிய துணையோடு பேசும் சத்தமும் கேட்காது ஏன் இந்த தூக்கம் ! எழுந்து வாரீர் தோழியரே!  என்று தம்முடைய தோழிகளை பாவை நோன்புக்கு அதிகாலை நீராட  அழைக்கின்றாள் கோதை.


அறிவில்லாதவளே ! என  செல்லமாக கடிந்து கெண்டு மேலும் தொடர்கின்றாள்...


  வாசனை மிக்க கூந்தலைக் கொண்ட ஆயர்குடி பெண்கள் மத்தால் தயிர் கடைந்து  எழுப்பும் ஓசை தனை கேட்கவில்லையா ! அவர்கள் தம் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும்,  ஆமைத்தாலியும் 

அசைந்தாடும் அழகான  ஒலி சத்தமும் தங்கள் காதில் விழவில்லையா!


'எல்லோருக்கும்  தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற ' என்று தோழியரை  அதை அழைக்கின்றாள் கோதை.


இந்த பாசுரத்தில் நாராயணனான  கேசவன் என்று கோதை குறிப்பிடும் அந்த சொல்லுக்கு மிக அழகான ஆத்மார்த்தமான புகழ் உண்டு ..



 யாருக்கும் சொல்லாத ரகசியத்தை நாராயணனே நேரில் வந்து ராமானுஜரின் காதில் ஓதி  'நீ மட்டும் விண்ணுலகம் சென்று  மோட்சம் பெருக' என்று கூற ராமானுஜரோ ...


நான் விண்ணுலகம் சென்று  மோட்சம் பெறாவிடினும்,  உலக மக்கள் அனைவரும் இந்த மந்திரத்தை பெற்று உலக நன்மை அடைய வேண்டும் என்று சொல்லி கோவில் கோபுரம் உச்சிதனில்  அனைவரையும் அழைத்து அழகாய் சொன்ன மந்திரம் இது 

'ஓம் நமோ நாராயணாய நமஹ'


மார்கழி மாதத்தில் தினமும் இந்த மந்திரத்தை 108 முறை பாராயணம் படிப்பார் வாழ்வினில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவர் என்பதனையே


நாராயணனாகிய கேசவன் என்று சொல்லி தோழியரை  அழைப்பு விடுக்கின்றாள் கோதை. 


இந்த அற்புத மந்திரம் நாம் அறிந்து நம்  உதடுகளோ  'ஓம் நமோ நாராயணாய நமஹ '  என  வேதம் ஓத ,  மனமோ ஆனந்த கீர்த்தனையில் அளவளாவ, ஆனந்தப் பெருக்கில் நம்மையே அறியாமல் கண்களில் கண்ணீர் உருண்டோட இதுவே ஆனந்தம் . இதுவே ஆன்மீகம். இதுவே ஆத்மார்த்தம். இதுவே பிறவிப்பயன்.  இதுவே மோட்சத்திற்கான வழி.


மார்கழி பொழுது பெருமாளின் ஆலயம் செல்க. வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நாராயணனை ஆண்டாள் நாச்சியாரோடு  சேவித்து 'உம்முடைய பாதங்களே சரணம் "என சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பெருமாள் தரிசனம் கிடைத்ததை நினைத்து மனமோ பக்தியால் நிறைந்திருக்க..


கண்களில் இருந்து கண்ணீர் மல்க இதுவல்லவோ ஆனந்தம் என்று  நின்று கொண்டிருக்கும் அந்த கணபொழுதுதான் இறைபக்தி என்பதாகும். 


அந்த இனிய தருணத்தை அனைவரும் பெற்று  தெய்வத்தின் அருளும் ஆசியும் பெற்று பிறந்த பயனின் நிறைவு காண்போம்


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா




செவ்வாய், 17 டிசம்பர், 2019

திருப்பாவை பாசுரம் - 2 பாடலும் பொருள் சிறப்புகளும்



திருப்பாவை  பாசுரம் -   2

வையத்து வாழ்வீர்காள் ! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி  நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் - மலரிட்டு நாம் முடியோம் - செய்யாதது  செய்யோம்  தீக்குறளை சென்றா தோம் ! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்






திருப்பாவை பாடலின் உள்ள பொருளின் சிறப்புகள்..


சிறப்பு - 1

மார்கழி மாத -பாவை நோன்பு விரத முறை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என பொற்கொடியாள் ஆண்டாள் மிக அன்போடு தோழியர்க்கு  அழைப்பு விடுக்கின்றாள்..

கண்ணுக்கு இனியன் பரந்தாமனை அடைவதற்கு -உணவிலே மட்டுமன்றி மனதையும் கட்டிப்போட வேண்டும்.

இந்த மார்கழி மாதத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பே குளிர்ந்த நீரால் நீராடி மனதாலும் உடலாலும் புனிதமாக வேண்டும்  -என்பதே நோன்புக்கு சிறப்பு என கூறி தோழியரை அழைக்கின்றாள்- நம் கோதை.

 சிறப்பு -2

பசு தரும் பாலின் சுவையோ- பால் தரும் நெய்யின் ‌சுவையோ விரதத்திற்கு பலன் தராது- என நாவின் சுவையை அடக்கி விரதம் இருந்தால் பரமனிடம் இருந்து  பலன் அனைத்தும் நாம் பெறலாம்- என கூறி தோழியரை அழைக்கின்றாள்  நம் கோதை .

சிறப்பு - 3

மனதிற்கு அலங்காரம்  தேவையன்று தீய செயல்களை மனதில் நினைக்காது -தீய சொற்களை பேசாது - தீய காட்சிகளை பார்க்காது பிறரைப் பற்றி தவறாக கோல் சொல்லாது நடத்தலே இயற்கையான நம் மனதிற்கு அழகன்றோ!

அதுபோன்று பரந்தாமனை கண்ணால் காணும் இந்த கண்களுக்கு  மை இடுவது தேவையென்று- கூந்தலிலே மலர் அலங்காரம் தேவையன்று..


புனிதமான உடலாலும்- ஆடம்பரம் அலங்காரம் எதுவுமின்றி பரந்தாமன் அடைவதற்கு நோன்பு இருக்க வாரீரோ - எனக்கு அழைப்பு விடுக்கின்றாள்.

 சிறப்பு -4 ‌
ஆடம்பரம் அலங்காரம் எதுவுமின்றி தூய  மனதோடு ஏழையர்க்கும் பக்தர்களுக்கும் தர்மம் செய்தலே  நோன்புக்கு மிக மிக சிறப்பு- எனக்கூறி தோழியர்க்கு   தம்மோடு நோன்பிருக்க வருமாறு அழைப்பு விடுக்கின்றாள்  நம் கோதை.

 சிறப்பு - 5

நல்ல நெஞ்சம் கொண்டு- நல்ல நினைவு கொண்டு -நல்ல சொற்கள் கொண்டு மார்கழி 30 நாட்களும் விரதம் இருந்தால் பரந்தாமன் நம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிடுவான்.


நம் மனதில் நிறைந்து இருப்பான் நினைக்கும் செயல் அனைத்தும் நிகழ்த்திடுவான். வாழ்க்கையில் மகிழ்ச்சி கொடுத்திடுவான்  என்பது திண்ணம்.  

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

திங்கள், 16 டிசம்பர், 2019

திருப்பாவை பாசுரம் -1 பாடல்களும் விளக்கங்களும்

ஆண்டாள்

திருப்பாவை பாடல் - 1



 

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் -சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


பாடலில் உள்ள பொருளின்  சிறப்புகள் ..

சிறப்பு-1 ‌ மார்கழி மாதம் முழுமையான மிக அழகான நிலவின் ஒளி பேசுகின்ற சிறப்பான நன்னாள் இதுவே .

 சிறப்பு- 2  சிறப்பு மிகுந்த ஆயர்பாடியில் வசிக்கும் கன்னியர்களுக்கு செல்வ சிறுமிகளுக்கும்.. ஆண்டாளின் அன்போடு அழைக்க கூடிய அழைப்பு இதுவே.

 சிறப்பு- 3 கூர்மையான வேல்கொண்டு நம்மை அனைவரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அரிதான தொழில் செய்யும் நந்தகோபன் -அழகிய கண்களை கொண்டவளாய் யசோதா பிராட்டி அவர்களின் சிங்கம் போன்ற வீர மகனாக- கரிய நிறம் கொண்டவரான -சிவந்த கண்களை உடையவனாக- சூரியனை போன்ற பிரகாசமான முகத்தை உடையவன் நாராயணனின் அம்சமாகிய கண்ணபிரான்  அருள்  தருவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றான் அவனை நாம் புகழ்ந்து பாடுகையில் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்பதை அறிந்து அனைவரும் எம்மோடு சேர்ந்து நோன்பிருக்க வாரீரோ -என ஆண்டாள் அன்போடு அனைவரையும் அழைக்கின்ற அழைப்பு இதுவே.

சிறப்பு -4 ‌பாவையே கேளீரே.. இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் நினைத்துகொண்டு பாடுகிறாள்.. 'நாராயணனே பறை தருவான் 'என்ற வாசகம் 108 திருப்பதிகளிலே   108வது திருப்பதியான வைகுண்டத்தில் வசிக்கக்கூடிய நாராயணனை நினைத்து  -நாம் இந்த மார்கழி மாதத்தில் புண்ணிய தினங்களாக இந்த 30 நாட்களும் நினைத்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் முயற்சித்து  கிடைக்கும் ‌

  சிறப்பு- 5
  தினமும் ஒரு  திருப்பாவை இந்த பாடலை பக்தியோடு படித்து நல்ல சிந்தனைகளை மனதில் வைத்து நல்ல பாதையிலே நடந்து சென்றால்- செயலாற்றினால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனோடு கலந்து முக்தியை அடையலாம் என்பது திண்ணமே.