வாஸ்து நாளில் பூமி பூஜை செய்யும் போது அவசியம் செய்யக்கூடிய கோபூஜை
வீடு கட்டிப்பார் -திருமணம் பண்ணிப்பார் என்பது பெரியோர்கள் வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையே.
ஒரு வீடு கட்டுவது என்பது பல போராட்டங்கள் சந்தித்து முடிவில் நிறைவு காணுதல். மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு என்பது வீட்டை கட்டியவர்களுக்கு புரியும்.
பலருக்கு வாழ்க்கையில் வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய லட்சியமாக இருக்கும் .
அதற்காகவே தம்முடைய உழைப்பை முழுவதுமாக கொடுத்து பணம் ஈட்டி சொந்தமாக மனையை வாங்கி விடுவார்கள். எதிர்காலத்தில் தாம் வசிப்பதற்கு கட்டக்கூடிய அந்த வீட்டில் மனையானது எப்படி இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை காண்போம்..
கட்டிடத்தின் அஸ்திவாரம் பலமாக அமைந்தால் கட்டிடம் உயர்ந்துகொண்டே போகும் .
அதுபோல தோஷம் எதுவும் இல்லாத மனையில் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தோம் என்றால் அந்த வீடு ஆயுள் முழுதும் -சுபிட்சம் ஒற்றுமை பொருளாதாரம் வம்சவிருத்தி என நம்முடைய தலைமுறைகள் வாழையடி வாழையாக வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.
ஒரு மனை வாங்குதல் என்பது கூட பெரிய விஷயம் அன்று.. ஆனால் அந்த மனையில் வீடு கட்ட முடியாமல் பல வருடங்கள் அப்படியே தடைப்பட்டு இருப்பதும் பல இடங்களில் நிகழ்வதுண்டு.
அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. நாம் மனை வாங்கும் பொது வில்லங்கம் என்று இருக்கின்றதா என்பதை பார்த்து வாங்குவோம். ஆனால் நமக்கே தெரியாது.. நாம் பார்க்கும் மனை மனதிற்கு பிடித்து விட்டால்- பூமி தோஷம் தெரியாது நாம் வாங்கி விடுவோம்.
பல தலைமுறைகளுக்கு முன்னால் இதே பூமியை தாம் அடைய முடியாமல் ஆற்றாமையில் இறந்தவர் பலர் இருக்கலாம் .
இந்த இடத்தை கொடுக்கின்றேன் என்று சொல்லி ஏமாற்றப்பட்டோர்- பங்காளிகளின் சாபம்- பெற்றோர்களின் பாவம் (தன் பிள்ளைகள் வயதான காலத்தில் சரிவர தம்மை கவனியாது விட்டுவிட்டால் அதனால் ஏற்படுகின்ற பாவம் பிள்ளைகளுக்கு வந்து சேரும் தோஷம்) பெண்கள் தமக்கு என்று பெற்றவர்கள் சரிபாதியாக பிரிக்காது மகனுக்கு கொடுத்து விட்டால் அதனால் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரமும் சாபமாக அமைந்து - அந்த தோஷங்கள் இருந்தாலும் வீடு கட்ட முடியாது தள்ளிப்போகலாம்.
இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இப்படி நடந்திருந்தால் நமக்கு தெரியாது- நாம் அந்த மனையை வாங்கி விடுவோம். இப்படிப்பட்ட சூழல்கள் இருந்தாலும் வீடு கட்ட முடியாது தள்ளி போகும்.
ஆதலால் எப்பொழுது யார் சொந்தமாக மனை வாங்கினாலும் வீடுகட்ட தீர்மானித்து வாஸ்து நாளில் பூமி பூஜை போடும் போது கண்டிப்பாக இந்த கோமாதா பூஜையை அவசியம் செய்து விடவும்.
தாயானவள் பிள்ளைகளின் துயரை தான் சுமந்து உயிர்களை நல்வழி படுத்துகின்றாள். அதுபோல் தாய்க்கு அடுத்ததாக கோமாதா எனும் பசு மாட்டிற்கும் அதை சக்தி உண்டு .
மண்ணில் உள்ள தோஷத்தை போக்கி உயர்வை கொடுத்து வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு- கோமாதா பூஜை செய்வது மிகுந்த பலனைத் தரும்.
மனக்குழப்பம் கண்திருஷ்டி தோஷம் அனைத்தும் விலக கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇
கிரகப்பிரவேசம் அன்று கோ பூஜை செய்வது என்பது உத்தமம் .ஆனால் வாஸ்து நாள் அன்று பூமி பூஜை போடும்போது கோ பூஜை செய்வது என்பது பலருக்கு அறியாமல் இருக்கலாம்.
கோ பூஜை என்று முக்கியமாக செய்யக்கூடிய விஷயங்கள்..
வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வது மிக மிக உத்தமம்.
பூமி பூஜை செய்யும் அன்று காலை 6 மணிக்கு கோ பூஜை செய்து விட்டால் எப்படிப்பட்ட தோஷங்கள் இருப்பினும் விலகிவிடும் .
நாட்டுப்பசு என்பது இன்று ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். சாத்விக குணம் நமக்கு கிடைத்திட நாட்டு பசும்பால் சிறந்தது. புரதம் 2 சத்து நிறைந்து விட்ட அந்தப் பாலை அனைவரும் அருந்த நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர்கள்.
தமிழ் மரபு சார்ந்த தெய்வீகம் நிறைந்த நாட்டுப் பசுமாடு கிடைத்தால் மிகவும் உத்தமம்.
கன்றுடன் கூடிய பசு மாட்டின் காலடி, மண்ணின் அனைத்து இடங்களிலும் படுமாறு மனையைச் சுற்றி முழுவதுமாக அழைத்து வரவேண்டும். மனையில் உள்ள தோஷங்கள் விலகும்.
மிகப் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பசு தன் தாகத்தை தணிப்பது மிக மிக உத்தமம்.
பசுவின் கால் குளம்புகளில் மனையில் புழுதி கிளம்ப -அந்த புழுதியில் ஈர பட்டுத்துண்டை காட்டி ,மனைக்கு உரியவர் போர்த்திக்கொண்டால் அனைத்து தோஷங்களும் விலகி விரைவில் வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.
மனை சுபிட்சம் பெறும் .விரைவில் வீடு கட்டும் சூழ்நிலை கிட்டும். கிரகப்பிரவேசம் இனிதே நடக்கும். சுபகாரியங்கள் வீட்டில் நடைபெறும். வீடு என்றும் ஒளி வீசும் தீபம் போன்று
எப்போதும் புதுப்பொலிவு பெற்று சிறப்பு பெறும்.
மேலும் படிக்கலாம்..
சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html
வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at balakshitha