பரிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 செப்டம்பர், 2020

பூமி பூஜை செய்யும் போது அவசியம் செய்யக்கூடிய கோ பூஜை

வாஸ்து நாளில் பூமி பூஜை செய்யும் போது அவசியம் செய்யக்கூடிய கோபூஜை




வீடு கட்டிப்பார் -திருமணம் பண்ணிப்பார் என்பது பெரியோர்கள் வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையே.


 ஒரு வீடு கட்டுவது என்பது பல போராட்டங்கள் சந்தித்து  முடிவில் நிறைவு காணுதல். மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு என்பது  வீட்டை கட்டியவர்களுக்கு புரியும்.

பலருக்கு வாழ்க்கையில் வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய லட்சியமாக இருக்கும் .

அதற்காகவே தம்முடைய உழைப்பை முழுவதுமாக கொடுத்து பணம் ஈட்டி சொந்தமாக மனையை வாங்கி விடுவார்கள். எதிர்காலத்தில் தாம் வசிப்பதற்கு கட்டக்கூடிய அந்த வீட்டில் மனையானது எப்படி இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை காண்போம்..

கட்டிடத்தின் அஸ்திவாரம் பலமாக அமைந்தால் கட்டிடம் உயர்ந்துகொண்டே போகும் .


அதுபோல தோஷம் எதுவும் இல்லாத மனையில்  வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தோம் என்றால் அந்த வீடு ஆயுள் முழுதும் -சுபிட்சம் ஒற்றுமை பொருளாதாரம் வம்சவிருத்தி என நம்முடைய தலைமுறைகள் வாழையடி வாழையாக வாழ்க்கையில்  சிறப்பாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.


 ஒரு மனை வாங்குதல் என்பது கூட பெரிய விஷயம் அன்று.. ஆனால் அந்த மனையில் வீடு கட்ட முடியாமல் பல வருடங்கள் அப்படியே தடைப்பட்டு இருப்பதும் பல இடங்களில் நிகழ்வதுண்டு.


 அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.. நாம் மனை வாங்கும் பொது வில்லங்கம் என்று இருக்கின்றதா என்பதை பார்த்து வாங்குவோம். ஆனால் நமக்கே தெரியாது.. நாம் பார்க்கும் மனை மனதிற்கு பிடித்து விட்டால்- பூமி தோஷம்  தெரியாது நாம் வாங்கி விடுவோம்.



 பல தலைமுறைகளுக்கு முன்னால் இதே பூமியை தாம் அடைய முடியாமல் ஆற்றாமையில் இறந்தவர் பலர் இருக்கலாம் .


 இந்த இடத்தை கொடுக்கின்றேன் என்று சொல்லி ஏமாற்றப்பட்டோர்- பங்காளிகளின் சாபம்- பெற்றோர்களின் பாவம் (தன் பிள்ளைகள் வயதான காலத்தில் சரிவர தம்மை கவனியாது விட்டுவிட்டால் அதனால் ஏற்படுகின்ற பாவம் பிள்ளைகளுக்கு வந்து சேரும் தோஷம்)  பெண்கள் தமக்கு என்று பெற்றவர்கள் சரிபாதியாக பிரிக்காது  மகனுக்கு கொடுத்து விட்டால் அதனால் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரமும் சாபமாக அமைந்து - அந்த தோஷங்கள் இருந்தாலும் வீடு கட்ட முடியாது தள்ளிப்போகலாம்.


 இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இப்படி நடந்திருந்தால் நமக்கு தெரியாது- நாம் அந்த மனையை வாங்கி விடுவோம். இப்படிப்பட்ட சூழல்கள் இருந்தாலும் வீடு கட்ட முடியாது தள்ளி போகும்.


ஆதலால் எப்பொழுது யார் சொந்தமாக மனை வாங்கினாலும் வீடுகட்ட தீர்மானித்து வாஸ்து நாளில் பூமி பூஜை போடும் போது கண்டிப்பாக இந்த கோமாதா பூஜையை அவசியம் செய்து விடவும்.


தாயானவள் பிள்ளைகளின் துயரை தான் சுமந்து உயிர்களை நல்வழி படுத்துகின்றாள். அதுபோல் தாய்க்கு அடுத்ததாக கோமாதா எனும் பசு மாட்டிற்கும் அதை சக்தி உண்டு .



மண்ணில் உள்ள தோஷத்தை போக்கி உயர்வை கொடுத்து வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு- கோமாதா பூஜை செய்வது மிகுந்த பலனைத் தரும்.

மனக்குழப்பம் கண்திருஷ்டி தோஷம் அனைத்தும் விலக கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇

https://youtu.be/0p5op0-Zjwk


 கிரகப்பிரவேசம் அன்று  கோ பூஜை செய்வது என்பது உத்தமம் .ஆனால் வாஸ்து நாள் அன்று பூமி பூஜை போடும்போது கோ பூஜை செய்வது என்பது பலருக்கு அறியாமல் இருக்கலாம்.


கோ பூஜை என்று முக்கியமாக செய்யக்கூடிய விஷயங்கள்..


வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வது மிக மிக உத்தமம்.


 பூமி பூஜை செய்யும் அன்று காலை 6 மணிக்கு கோ பூஜை செய்து விட்டால்  எப்படிப்பட்ட தோஷங்கள் இருப்பினும் விலகிவிடும் .


நாட்டுப்பசு என்பது இன்று ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். சாத்விக குணம் நமக்கு கிடைத்திட நாட்டு பசும்பால் சிறந்தது. புரதம் 2 சத்து நிறைந்து விட்ட அந்தப் பாலை அனைவரும் அருந்த நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர்கள்.



தமிழ் மரபு சார்ந்த தெய்வீகம் நிறைந்த நாட்டுப் பசுமாடு கிடைத்தால் மிகவும் உத்தமம்.


கன்றுடன் கூடிய பசு மாட்டின் காலடி, மண்ணின் அனைத்து இடங்களிலும் படுமாறு மனையைச் சுற்றி முழுவதுமாக அழைத்து வரவேண்டும். மனையில் உள்ள தோஷங்கள் விலகும்.

 மிகப் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பசு தன் தாகத்தை தணிப்பது  மிக மிக உத்தமம்.

 பசுவின் கால் குளம்புகளில் மனையில் புழுதி கிளம்ப -அந்த புழுதியில் ஈர பட்டுத்துண்டை  காட்டி ,மனைக்கு உரியவர்  போர்த்திக்கொண்டால் அனைத்து  தோஷங்களும் விலகி  விரைவில் வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.


மனை சுபிட்சம் பெறும் .விரைவில் வீடு கட்டும் சூழ்நிலை கிட்டும். கிரகப்பிரவேசம் இனிதே நடக்கும். சுபகாரியங்கள் வீட்டில் நடைபெறும். வீடு என்றும் ஒளி வீசும் தீபம் போன்று 

 எப்போதும் புதுப்பொலிவு பெற்று சிறப்பு பெறும்.

மேலும் படிக்கலாம்..

 சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha

வெள்ளி, 26 ஜூன், 2020

திருமணம் விரைவில் நடந்தேற - மாயவரம் திருமணஞ்சேரி திருக்கோயில்





திருமணம் விரைவில் நடக்க மாயவரம் திருமணஞ்சேரி திருக்கோவில்

 தேனூறும் ஐஞ்சவை  பழத்தினில் கிடைக்கும் சுவை போல - அன்பு பண்பு -பாசம் -கனிவு- கோபம்- தாபம் அனைத்திலும் கலந்து பசுமை அனைத்தும் பெற்று- வாழ்க்கை எனும் அனுபவ பாடத்தில்  பயிற்சி பெற்று மழலைகள் தோள் சாயும் மகிழ்ச்சி பெற்று- தோரணங்கள் தொங்கும் சுப நிகழ்ச்சிகள் பல பெற்று- செல்வங்கள் அள்ளி குவியும் சீரும் சிறப்பும் இனிதே பெற்று வாழ்வதற்கு..

 இளமை பருவத்தில் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்  மட்டுமே இத்தனை சிறப்புகளையும் பெற்று வாழ்க்கை இனிதாகும..

அந்த திருமணம்  விரைவில் நடப்பதற்கு நாம்  செல்லக்கூடிய வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்..


தோஷங்கள் விலகி திருமணம் நடக்க நாம் செல்லக்கூடிய மிக அற்புதமான ஒரு திருத்தலம் ..

 மாயவரத்தில் திருமணஞ்சேரி ..அங்கு கல்யாண சுந்தரர் மிக அழகாக எழுந்தருளி காட்சி தருகின்றார்.

நம்முடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப்போகும். தேவ தோஷம் -சர்ப்ப தோஷம்- அபிஷார தோஷம்-  பித்ரு தோஷம்- திருஷ்டி தோஷம் -பிரேத சாபம் என முன்ஜென்ம பாவ வினைக்கு ஏற்றவாறு கொண்ட நம்முடைய ஜாதக அமைப்பில் ஆறு வகையான தோஷங்களில் - ஏதாவது ஒரு தோஷம் இருந்தால் கூட திருமணம் தள்ளிப்போகும் வாய்ப்புண்டு..


எப்படிப்பட்ட தோஷங்கள் இருப்பின் திருமணஞ்சேரி கோவிலுக்கு ஒரு முறை சென்று முறைப்படி பரிகாரத்தை  செய்துவிட்டு வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் திருமணம் நிச்சயம் கைகூடும்.


நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சென்று -அங்கே குறிப்பிட்ட பூஜை சாமான்களை பெற்று - ஐந்து நெய்தீபம் ஏற்றி பரிகாரத்தை முடித்து அந்த திருத்தலத்தில் கொடுக்கும் மாலை -விபூதி மஞ்சள் குங்குமம் எலுமிச்சை பழம் வாங்கிக் கொண்டு வரவும் .

திருமணம் விரைவில் நடந்தேற வீட்டிலேயே மரப்பாச்சி பொம்மை வழிபாடு 🌹🍀🌹🙏🙏👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

திருமணம் விரைவில் நடந்தேற ஆலங்குடி குருபகவான்
 கோவில்🙏🙏🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_4.html

மறுநாள் திருமணத்திற்காக வேண்டுகின்ற மகனோ மகளோ கங்காஸ்நானம் (ஓம் என நீரிலே எழுதி  கங்கா நீராக நினைத்து) நீராடி திருத்தலத்தில் இருந்து கொண்டு வந்த எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி நினைத்த காரியம் ஜெயம் ஆக வேண்டி -கொண்டுவந்த மாலையை தன் கழுத்திலே அணிந்து -மஞ்சள் குங்குமம் விபூதியை நெற்றியில் நிறைத்து - எலுமிச்சைபழத்தை பிழிந்து குடிக்கவும் .

விரைவில் திருமணம் நடப்பதற்கு சங்கடஹர சதுர்த்தி விரதம்🙏🌹👇👇


பிறகு மாலைகளை ஒரு கவரில் சுற்றி துணிப்பையில் முடிந்து பத்திரமாக வைக்க வேண்டும். திருமணம் இனிதே முடிந்த பிறகு தம்பதி சமேதராய் திருமணஞ்சேரி சென்று அந்த ஆலயத்தில் சேர்த்து பரிகாரத்தை நிறைவு செய்யவும் .


தம்பதி சமேதரராய் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு இனிதே வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைகவே.

புத்தம் புதிதாய் பூத்த மலர் போல இனிப்பில் சிறந்த பழுத்த பழம் போல கனிவான சொல்லில் கட்டுப்பட்டு மயங்கும் மனம் போல -மங்கல இசை ஒளியான நாதம் போல - என்றென்றும் சிறப்பாய் தம்பதியர் வாழ்க்கையில் இனிமை கண்டு வாழிய வாழிய வாழியவே.

Copy rights at balakshitha

வியாழன், 4 ஜூன், 2020

திருமணம் நடக்க ஆலங்குடி குரு பகவான் கோவில்

திருமணம் விரைவில் கைகூட ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்வது நல்ல பலன் கிடைக்கும்.


ஒரு மலர் நன்றாக பூத்து மலர்ந்து  இருக்கும்போது- உரிய இடத்தில் சென்று சேர வேண்டும். அதுபோன்றுதான் இளமை என்பதும்.. மலருக்கு இணையானதே .

 நம்முடைய வாழ்க்கை என்னும் பயணத்தில் இளமையிலேயே திருமணம் எனும் அழகிய வட்டத்தில்   திருமணபந்தத்தில் இணைந்திட வேண்டும்.


 மலர் வாடிய பிறகோ  அல்லது இளமை வயது கடந்த பிறகோ உரிய  இடத்தில் சென்று சேர்வது என்பது பயனற்ற செயலுக்கு வித்தாகும்- என்பதை உணர்ந்து..

 பெண்ணுக்கு 20 வயதும் ஆணுக்கு 25 வயதும் நடக்கும்போதே வருடத்திற்கு முன்பாகவே திருமணத்திற்கு நிச்சயம் ஏற்பாட்டுக்கு  ஆயத்தமாவது அவசியம் .



 ஜாதக அமைப்பில் தோஷம் திருமணத்தடை -திருமணம் தள்ளிப் போவது கீழே  குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கோவில் சுற்றும் பரிகாரங்களை மேற்கொள்ளலாம

திருமணம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி விரைவில் கை கூட - ஆலங்குடியில் அமைந்துள்ள சுயம்பு வடிவில் காட்சித் தரும் ஆபத்காயேஸ்வரர்  திருக்கோவில் திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வரலாம். அங்கே குருபகவான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகின்றார்.

குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டாகும்.  .நல்ல அறிவாற்றல் அழகு -ஆயுள்- ஆரோக்கியம் அனைத்தும் கூடிய ஒரு வரனை அருள்கின்ற சக்தி குருபகவானுக்கு உண்டு. 16 செல்வங்களும் பெற்று வாழ்க்கையில் சிறப்புமிக்க ஒரு வாழ்க்கையை அருள்கின்ற சக்தி குரு பகவானுக்கு உண்டு.

திருமணம் விரைவில் கை கூட சங்கடகர சதுர்த்தி விரதம் 🙏🌹🌹🍀🌹👇👇👇👇


 குருபகவானின் பார்வை ஒரு ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே- அந்த ஜாதகம் சிறப்பான முறையில் திருமணம் கைகூடும்.  சாத்வீக குணம் குணம் கொண்டவர் குரு பகவான்.இனிப்பு என்றால் கொள்ளை பிரியம்கொண்டவர்.
கொண்டைகடலை தானியத்தை கண்டால் மகிழ்ந்து ஆசிகளை அள்ளி வழங்கும் குருபகவானுக்கு  திருமணத்திற்கு தடையை ஏற்படுத்தும் களத்திர தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி உண்டு.

 நல்ல உயரம் உயரத்திற்கேற்ற அழகோடு மிக பொலிவோடு திகழும் குரு பகவானின் பார்வை ஜாதகத்தில் பார்ப்பதற்கு- நாம் செய்யக்கூடிய பரிகாரத்தை காண்போம்.

திருமணம் விரைவில் நடப்பதற்கு வீட்டில் இருந்தவாறே மரப்பாச்சி பொம்மை வழிபாடு👩‍🦰👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

திருமணம் விரைவில் பிரம்ம முகூர்த்த வழிபாடு 🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/05/blog-post_29.html

 ஆலங்குடியில்  குருபகவான் தட்சிணாமூர்த்தியாக  அற்புத கோலத்தில்  காட்சி தருகின்றார்.


அன்பு எனும் பந்தம் புரிவதற்கு ஆனந்தம் என்னும் பெருவாழ்வு வாழ்ந்து- வாழ்க்கையை இனிது காண வருகை புரிந்து எமை மணம் முடிப்பாய் ஈசனே'  என அம்பிகை தவம் இருந்து பெருமானை கரம்பிடித்த அற்புதமான தலம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.



 வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்கு ஏற்ற நாள் ..அந்த கிழமையில் நல்ல நாள் பார்த்து அன்றைய தினத்திலே அந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கி வழிபடலாம். கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சாவூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் திருவாரூர்  மாவட்டத்தில் அமைந்துள்ளது -ஆலங்குடி .


திருமணம் இனிதே கைகூடி நடந்த
பிறகு தம்பதி சமேதராக திருத்தலத்திற்கு சென்று தட்சிணாமூர்த்திக்கு புதிய வஸ்திரம் சாற்றி வழிபட்டு பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஆலகால விஷத்தையே தாம் குடித்து தேவர்கள் அனைவரையும் காத்த தலம் என்பதால் ஆலங்குடி என பெயர் பெற்ற- எம்பெருமான் ஈசனின் திருத்தலமாகிய ஆலங்குடிக்கு சென்று தோஷங்கள் அனைத்தும் நீங்கி  சிறப்பாக திருமணம் நடைபெற்று வாழ்க்கையில் இனிது காண்க.

Copy rights at balakshitha




திங்கள், 1 ஜூன், 2020

திருமணம் நடக்க மரப்பாச்சி பொம்மை வழிபாடு



மரப்பாச்சி பொம்மை வழிபாடு திருமணம் ஆகாது ஒரு மகனோ மகளோ இருந்தால் அந்த வீட்டிலே கீழ்காணும் முறைப்படி மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.

விரைவில் திருமணம் கைகட சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇👇👇👇




 திருமணம் ஆகாது ஏதாவது ஒருவிதத்தில் திருமணம் தடைபடும் சமயத்தில் மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.  சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளுக்கு தெய்வீக சக்தி அதிகம் . அந்த பொம்மைகளுக்கு உயிர் உண்டு .அந்த பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்தால்  உடனே திருமணம் நிச்சயம் ஆகும்.

திருமணம் விரைவில் நடக்க ஆலங்குடி குரு பகவான் கோவில் பரிகாரம்🌺🍀👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_4.html

திருமணம் விரைவில் நடக்க பிரம்ம முகூர்த்த வழிபாடு 🌹🙏🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/05/blog-post_29.html

ஒரு திருமணத்தில் எப்படி  முறைப்படி திருமணம் நடக்கின்றதோ அதுபோலவே மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் நடத்த வேண்டும். ஆண் -பெண் என மரப்பாச்சி பொம்மைகள் கடைகளில் கிடைக்கும் . வாங்கிவந்து திருமணத்திற்கான மாதங்கள் சித்திரை- வைகாசி- ஆனி- ஆவணி கார்த்திகை- தை என  ஏதாவது ஒரு மாதத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

 அந்த மாதத்தில் நல்ல நாள் பார்த்து அந்த நாளிலே திருமணத்தை நடத்த வேண்டும். நம் குடும்பத்தில்  முக்கிய உறவினர்கள்  என ஒன்பது பேர் சேர்ந்து இந்த திருமணத்தை நடத்தலாம் .மிக அழகாக மரப்பாச்சி பொம்மைகளை மணமகன் மணமகள் ஆக அலங்கரித்து- வரிசைத் தட்டுக்கள் புடைசூழ மங்கல நிகழ்ச்சியாக இந்த திருமணத்தை நடத்த வேண்டும்.


 மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்து அனைவரும் ஆசியோடும் மரப்பாச்சி பொம்மையான மணமகன் -மரப்பாச்சி பொம்மையான மணமகளுக்கு தாலி கட்ட  திருமணத்தை நடத்தி- விருந்து படைக்க வேண்டும் .


 இவ்வாறு மிகவும் ஆத்மார்த்தமாக இந்த திருமணத்தை நடத்தினால் அடுத்து வரும் மூன்று மாதங்களில் அந்த வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும்.

திருமணம் விரைவில் கை கூட தெய்வீக வழிபாடுகள் மற்றும் பரிகார ஸ்தலங்கள் மின்னணு புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🌹🍀👇🌷🍀👇🌷

https://amzn.in/ibYVUJD


 திருமணம் நிச்சயம் ஆகும். சுபமாக திருமணம் நடந்து தம்பதிகள் சீரும் சிறப்புமாய் ஒற்றுமையோடு வாழ்வார்கள் .திருமணம் முடிந்ததும் சீதன பொருட்களோடு மரப்பாச்சி பொம்மைகளையும் வைத்து- புகுந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

 வாழ்வினில் இன்பம் மலர அனைவரும்  மகிழ்ச்சியோடு வாழ பழங்காலத்து சடங்கான- இந்த மரப்பாச்சி பொம்மைகளின் திருமணத்தை இனிதே நடத்தலாம். வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதற்கான மிகச்சிறந்த வழிபாடு இந்த மரப்பாச்சி பொம்மைகளின் திருமண வழிபாடு.

தங்கள் கருத்துகளை பதிவு செய்க

Copy rights at balakshitha


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

எலுமிச்சை பழத்தில் ஐந்து விதமான பரிகாரங்கள் part-1

கடவுள் படைத்த பழங்களில் அற்புதமான படைப்பு ராஜகனி என்று சொல்லக்கூடிய எலுமிச்சை பழம் .

தெய்வீகசக்தி கொண்ட பழம். தீயசக்திகளில் இருந்து நம்மை காக்க கூடியது.

பரிகாரம் -1


அம்பாளுக்கு உகந்த இந்த எலுமிச்சை பழத்தை வெள்ளிக்கிழமை தோறும் பூஜை அறையில் மஞ்சல் குங்குமம் வைத்து அன்னபூரணி அம்பாளின் மடியிலே சாற்றலாம் .

நம் குடும்பத்தில்எந்த வித துன்பமும் நிகழாத வண்ணம் நம்மை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசமாக எலுமிச்சைபழ காக்கும்.

எலுமிச்சை பழத்தில் செய்யக் கூடிய பரிகாரங்கள் part -2🌹🍀🌹🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/part-2.html

வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவிட கல்லுப்பு பரிகாரங்கள்🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html

எழுத்துக்கெல்லாம் முதன்மையாய்

வெளியே போக முடியாத சூழ்நிலையில் கூட -நாம் இந்த எலுமிச்சை பழத்தை மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்தால் ..

எந்த வித தீய சக்தியும் நம்மிடம் நெருங்காது .



எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி குங்குமத்தை வைத்து வீட்டின் அறிவுகாலில் இரண்டு புறமும் வைத்தால்  எதிர்மறை சக்திகள் மறைந்து வாழ்க்கை சுபிட்சம் கொடுக்கும்.


பரிகாரம்- 2


செவ்வாய்க்கிழமை -ஞாயிற்றுக்கிழமை திருஷ்டி சுற்ற ஏற்ற நாள். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்..

 ஆறு மணிக்கு மேல் அந்த பழத்தின் அடிப்பாகம் வெட்டுபடாது பார்த்து நான்காக வெட்டிக் கொண்டு.. அதில் குங்குமத்தை நிறைக்க வேண்டும்.


சுண்ணாம்பு படிகாரம் மஞ்சள் கலந்து செய்யப்பட்டது குங்குமம். இவை அனைத்தும் திருஷ்டி விலகுவதற்கான பொருள்- என்பதால் தெய்வீக சக்தி கொண்ட குங்குமத்தை எலுமிச்சை பழத்தில் இடுகின்றோம்.

 திருஷ்டி -தோஷம் -உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் பெரியவர்கள் இருந்தால் அவர்களை கிழக்கு முகமாக அமர வைத்து..


 அந்த எலுமிச்சம்பழத்தை என்ன குறை உள்ளதோ அவற்றை சொல்லி- கண் திருஷ்டி தோஷம் அனைத்தும் விலக வேண்டும் எனக்கூறி வலது புறம் மூன்று முறை இடது புறம் மூன்று முறை என நன்றாக சுற்றி மேலிருந்து கீழாக மூன்று முறை இறக்க வேண்டும்.

 பிறகு வெளியே எடுத்துச் சென்று கோலம் போடும் இடத்தில் நின்றுகொண்டு..


 அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு பாகத்தையும் நான்கு புறமுமாக எறிந்துவிட வேண்டும் நம் வீட்டில் உள்ளவர்களின் திருஷ்டி அனைத்தும் விலகிய மாற்றம் அடுத்த சில நாட்களில் தெரியும்.


ஒரு குடும்பம் சுபிட்சம் காண வேண்டும் எனில் தெய்வீக பொருட்கள் வீட்டினில் நிறைந்து இருக்க வேண்டும் -என்பதை உணர்ந்து எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்து வாழ்க்கையில் சிறப்பை காண்போம்.

Copy rights at balakshitha




வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

வீடு கட்டும் யோகம் பெற திருச்செந்தூர் தீர்த்த வழிபாடு


 
வீடு கட்டும் யோகம் பெற திருச்செந்தூர் கடல் தீர்த்தம் வழிபாடு

தெய்வ பிராப்தம்இருந்தால் மட்டுமே ஒருவருக்கு வீடு கட்டும்
யோகம் கிடைக்கும்.

முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு இளம்வயது கடந்த வயது எனும் வித்தியாசம் இன்றி அனைவரும் மனமுருக வேண்டினால் நினைத்த காரியத்தை இனிதாக முடிக்கலாம்.

 நினைத்தது யாவும் தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும். மனத்தூய்மையோடும்- உடல் தூய்மையோடும்  மனதார வேண்டி வழிபட்டால் நினைக்கும் அனைத்து காரியம் ஜெயமாகும்.

திருச்செந்தூர் கடல் தீர்த்த வழிபாடு



 அதற்கான ஒரு அற்புதமான திருத்தலம் தான் முருகப்பெருமானின் இரண்டாவது அறுபடை வீடான திருச்செந்தூர். நம் மனதில் உள்ள அகம்பாவம்  எனும் அசுரனை வென்ற அற்புதமான திருத்தலம்.
வீடு மனை நமக்கு சொந்தமாக அமையவில்லை என ஏங்குவோர்க்கு..

ஒருமுறை திருச்செந்தூர் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது தலமான திருச்செந்தூர் சென்று வந்தால் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் கிடைக்கும் என்பது திண்ணம்.

நினனத்த காரியமாக விரதம்இருக்கும் முறை🌹🍀🌹🍀👇👇👇

http://balakshitha.blogspot.com/2019/10/blog-post_15.html


கிருத்திகை அன்று எளிமையாக விரதம் இருக்கும் முறை 🌹🍀🌹🍀🌹👇👇👇👇

http://balakshitha.blogspot.com/2019/04/blog-post_7.html


 அந்த திருத்தலத்தில் புனித நீரில் நீராடி அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு முருகப்பெருமானின் பிரகாரத்தை ஒன்பது முறை வலம் வந்து வேண்டிக் கொண்டால் -சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனும் கனவு நிஜமாகும்.

திருச்செந்தூர் வற்றாத கடலின் தீர்த்தத்தில் இறையருள் நிரம்பி கிடைக்கின்றது .

அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் முருகப்பெருமானை நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என வேண்டி.. அந்த திருத்தலத்தை வலம் வருவது சிறப்பு.

கடல் தீர்த்தத்தை நாம் கட்டப்போகும் மனையிலோ அல்லது நாம் குடியிருக்கும் வாடகை வீட்டிலோ முழுவதும் தெளித்து வேண்டும்.

 அந்த புனித நீரின் சக்தியானது விரைவில் வீடு கட்டும் பாக்கியத்தை நமக்கு அருளசெய்யும் .

சொந்தமாக வீடு மனை அமைய 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் படித்து பயன்பெறுங்கள்1🙏🌹🍀🌹🍀👇👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



தொடர்ந்து 48 நாட்கள் தீபமேற்றி கந்தர்சஷ்டிகவசம் படிக்க நிச்சயம் பலன் விரைவில் கிடைக்கும். என்பதையும் மறவாது நிறைவேற்றுதல் நன்று .(ஓம் ஷண்முக பதயே நம என்னும் நாமத்தையும் தீபமேற்றி 108 முறை பாராயணம் செய்க)


தெய்வ சிந்தனை நிறைந்திருக்க மனதிலோ வேண்டிய காரியம் ஜெயமாக விநாயகப் பெருமானை முதல் வேண்டி அதன் பின்னே வேண்டுதலுக்கான தெய்வத்தை முன்னிறுத்தி-

அர்ச்சனைவழிபாடுகள் சிறப்பாக -உபவாசம் என்றும் முறையாக- கந்தசஷ்டி என  இருவேளையும் முருகன் புகழ் பாடி முறையான விரதம் இருப்பின் நினைத்த காரியம் நிறைவேற்றிய மகிழ்ச்சியில் நாம் இருக்க -ஆனந்தம் அடைந்த முருகனோ தம் பக்தனின் ஆசையை நிறைவேற்றி வேண்டிய பலனை அருள்வானே .


கந்தா சரணம் சரணம் சரணமபய்யா.

Copy rights at balakshitha

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சிறப்பான வாழ்க்கைக்கு உப்புக்கல் பரிகாரம் part-1

உப்புக்கல் பரிகாரம்
கல்உப்பின் சிறப்பு ..


சூரிய தேவனின் அனுக்கிரகம் பெற்று கடல் நீரில் இருந்து பிரிந்து- வடிவம் பெற்று திகழ்கின்ற உப்பிலே
பஞ்சபூத சக்திகளும் அடக்கம்.

 கல்உப்பு -மகாலட்சுமியின் ஸ்வரூபமே
மகா லட்சுமியின் அருளைப் பெற்று வாழ்வினில் சுபிட்சம் பெற -கல்லுப்பு அகல் தீபம் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு.

பெரும் பாறாங்கற்களை போன்ற பல துன்பங்கள் நிறைந்த நம் வாழ்க்கையிலே- அனைத்தையும் தவிடு பொடியாக்கி பனிபோல் கரைக்கின்ற சக்தி -உப்பு கல்லுக்கு உண்டு .

கடல் நீரிலே தோன்றி அனைத்து
கண் திருஷ்டிகளும்
தான் கொண்டு -மீண்டும் நீரில் கரைந்து ..

நம்மை கண் திருஷ்டி- தோஷம் -பிணி பயம் -பாவம் அனைத்திலிருந்தும் விடுபட்டு- எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி -தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவதற்கு உப்புக்கல் பரிகாரம் என்பது மிக சிறந்த ஒரு பரிகாரம்.




உப்புக்கல் பரிகாரம்

சிறப்பு 1- கண் திருஷ்டி விலக..

ஒரு குவளையில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி ..

வாசற்கால் தாண்டி -கோலம் போடுகின்ற தெரு வாசலுக்கு
 உட்புறமாக ஒரு மூலையில் வைத்துவிடவும்.

 மாலை ஆறு மணிக்கு மேல்- கண்திருஷ்டி கொண்டவரை
கிழக்கு முகமாக பார்த்தவாறு உட்கார வைத்து நம்முடைய இரு கைகளாலும் கல் உப்பை அள்ளிக் கொள்ளவும்..

வலது புறமாக மூன்று முறையும்- இடது புறமாக மூன்று முறையும் அனைத்து  திருஷ்டிகளும்  போக வேண்டுமென்று -மனதிலே நன்றாக நினைத்து - நன்றாக சுற்றி ..

கொண்டு சென்று வெளியிலே வைத்திருக்கும் அந்த குவளையில் உப்புக்கல்லை கொட்டவும்..

பிறகு மறுநாள் தெருவிலே எடுத்துச்சென்று கால் படாத இடத்தில் ஓரமாக ஊற்றி விடலாம் . கண் திருஷ்டிகள் அனைத்தும் விலக இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும் .

எலுமிச்சை பழத்தில் பரிகாரங்கள்🌹👇
http://balakshitha.blogspot.com/2020/04/part-2.html


சிறப்பு - 2  பாவ-தோஷங்கள் அனைத்தும் விலக..

வீட்டிலே தீயசக்திகளும் தோஷமும் அதிகமாகி எதிர்மறை சக்திகள் நிறைந்திருந்தால் அந்த வீட்டினிலே  ஏதாவது துன்பமான செய்திகள் அடிக்கடி நிகழும்..

அதை தவிர்ப்பதற்கு மாதத்திற்கு ஒரு முறை -ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு பிடி உப்பு போட்டு வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்தால்..

 தீய சக்திகளும் தோஷங்களும் விலகி தெய்வீக அம்சம் வீட்டிலும் நிறைந்து இருக்கும்- என்பதற்காக இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும்.


சிறப்பு-3 குடும்பத்தில் ஒற்றுமை நிலவ..

குடும்பத்தில் ஒற்றுமையோடு இருந்தால்தான் அந்தக் குடும்பம் சுபிட்சம் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும்.

என்றும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ ஒரு கிண்ணத்திலே கல்லுப்பைக் கொட்டி  கால்கள் படாத கதவுக்குபின்னால் வைத்தோமானால்  ஒற்றுமை பலப்படும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.

 சிறப்பு - 4 கெட்ட கனவுகள் விலக ..

தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு தூக்கம் வராது- அதனால் மன உளைச்சல் உண்டாகி  நிம்மதியின்றி இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் மிக சிறந்த ஒரு பரிகாரம்..

ஒரு கிண்ணத்திலே கல்லுப்பு கொட்டு நாம் படுத்து உறங்கும் அறையில் ஓரமாக வைத்தால்  கெட்ட கனவுகள் நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.


சிறப்பு-5‌  மகாலட்சுமியின்அருளைப் பெற்று செல்வச் சிறப்போடு வாழ்வதற்கு..

வெள்ளிக்கிழமை தோறும்  பித்தளை அல்லது செம்பு தாம்பாளம் தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து ..

அதன் மேல் கல்உப்பு பரப்பி  வைக்கவும். ஒரு  அகல்  எடுத்து மஞ்சள் குங்குமம் இட்டு -பஞ்சு திரி போட்டு -நல்லெண்ணெய் ஊற்றி  சுற்றிலும் மலர் வைத்து ..

தென்மேற்கு அல்லது வடகிழக்கு மூலையில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அகல் தீபம் ஏற்ற வேண்டும்.

 காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு ஏற்றுவது சிறப்பு.

 பௌர்ணமி அன்றும் இந்த தீபம் ஏற்றி வைக்கலாம் .

கோவிட்19 நோய் தொற்றில் இருந்து நம்மைகபாதுகாத்துக் கொள்ள கூடிய முக்கியமான உணவு முறைகள்

🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_15.html

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


வறுமை நீங்கி செல்வ கடாட்சம் பெறுவதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனை தரும்.மேலும் நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் படிப்படியாக ஜெயமாகும்.


சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அதற்கான பரிகார முறை அறிந்து அதன்படி செய்தோம் என்றால் நம்மிடம் இருக்கும் எதிர்மறைகள் மறைந்து நமக்கு சாதகமான சூழ்நிலை உண்டாக்கி தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது திண்ணம்.

மேலும் படிக்கலாம் ..

வாழ்க்கை சுபிட்சம் பெற்று வளம்பெற சூரிய நமஸ்கார வழிபாடு 🙏🌹🍀👇👇


வாழ்வினில் செல்வம் 
சேர்வதற்கு மூன்றாம் பிறை 
வழிபாடு🌹🍀🌹👇👇👇


Copy rights at balakshitha