Balakshitha Blog is a creative educational platform founded by Balakshitha Latha Kumar, dedicated to spreading positivity, wisdom, and cultural values among children and families. This blog is a beautiful blend of Anmeegam (spiritual insights), health and wellness tips, fireless cooking ideas, samaiyal tipsTamil cultural treasures, and fun learning resources for kids.Read our posts, feel inspired, and Share your thoughts and light up our Balakshitha community. Thank you 🙏
சூரிய தேவனின் அனுக்கிரகம் பெற்று கடல் நீரில் இருந்து பிரிந்து- வடிவம் பெற்று திகழ்கின்ற உப்பிலே
பஞ்சபூத சக்திகளும் அடக்கம்.
கல்உப்பு -மகாலட்சுமியின் ஸ்வரூபமே
மகா லட்சுமியின் அருளைப் பெற்று வாழ்வினில் சுபிட்சம் பெற -கல்லுப்பு அகல் தீபம் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு.
பெரும் பாறாங்கற்களை போன்ற பல துன்பங்கள் நிறைந்த நம் வாழ்க்கையிலே- அனைத்தையும் தவிடு பொடியாக்கி பனிபோல் கரைக்கின்ற சக்தி -உப்பு கல்லுக்கு உண்டு .
கடல் நீரிலே தோன்றி அனைத்து
கண் திருஷ்டிகளும்
தான் கொண்டு -மீண்டும் நீரில் கரைந்து ..
நம்மை கண் திருஷ்டி- தோஷம் -பிணி பயம் -பாவம் அனைத்திலிருந்தும் விடுபட்டு- எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி -தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவதற்கு உப்புக்கல் பரிகாரம் என்பது மிக சிறந்த ஒரு பரிகாரம்.
உப்புக்கல் பரிகாரம்
சிறப்பு 1- கண் திருஷ்டி விலக..
ஒரு குவளையில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி ..
வாசற்கால் தாண்டி -கோலம் போடுகின்ற தெரு வாசலுக்கு
உட்புறமாக ஒரு மூலையில் வைத்துவிடவும்.
மாலை ஆறு மணிக்கு மேல்- கண்திருஷ்டி கொண்டவரை
கிழக்கு முகமாக பார்த்தவாறு உட்கார வைத்து நம்முடைய இரு கைகளாலும் கல் உப்பை அள்ளிக் கொள்ளவும்..
வலது புறமாக மூன்று முறையும்- இடது புறமாக மூன்று முறையும் அனைத்து திருஷ்டிகளும் போக வேண்டுமென்று -மனதிலே நன்றாக நினைத்து - நன்றாக சுற்றி ..
கொண்டு சென்று வெளியிலே வைத்திருக்கும் அந்த குவளையில் உப்புக்கல்லை கொட்டவும்..
பிறகு மறுநாள் தெருவிலே எடுத்துச்சென்று கால் படாத இடத்தில் ஓரமாக ஊற்றி விடலாம் . கண் திருஷ்டிகள் அனைத்தும் விலக இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும் .
வீட்டிலே தீயசக்திகளும் தோஷமும் அதிகமாகி எதிர்மறை சக்திகள் நிறைந்திருந்தால் அந்த வீட்டினிலே ஏதாவது துன்பமான செய்திகள் அடிக்கடி நிகழும்..
அதை தவிர்ப்பதற்கு மாதத்திற்கு ஒரு முறை -ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு பிடி உப்பு போட்டு வீடு முழுவதும் துடைத்து சுத்தம் செய்தால்..
தீய சக்திகளும் தோஷங்களும் விலகி தெய்வீக அம்சம் வீட்டிலும் நிறைந்து இருக்கும்- என்பதற்காக இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும்.
சிறப்பு-3 குடும்பத்தில் ஒற்றுமை நிலவ..
குடும்பத்தில் ஒற்றுமையோடு இருந்தால்தான் அந்தக் குடும்பம் சுபிட்சம் பெற்று வாழ்க்கையில் சிறப்பாக இருக்கும்.
என்றும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ ஒரு கிண்ணத்திலே கல்லுப்பைக் கொட்டி கால்கள் படாத கதவுக்குபின்னால் வைத்தோமானால் ஒற்றுமை பலப்படும் வாரத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.
சிறப்பு - 4 கெட்ட கனவுகள் விலக ..
தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு தூக்கம் வராது- அதனால் மன உளைச்சல் உண்டாகி நிம்மதியின்றி இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் மிக சிறந்த ஒரு பரிகாரம்..
ஒரு கிண்ணத்திலே கல்லுப்பு கொட்டு நாம் படுத்து உறங்கும் அறையில் ஓரமாக வைத்தால் கெட்ட கனவுகள் நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
சிறப்பு-5 மகாலட்சுமியின்அருளைப் பெற்று செல்வச் சிறப்போடு வாழ்வதற்கு..
வெள்ளிக்கிழமை தோறும் பித்தளை அல்லது செம்பு தாம்பாளம் தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து ..
அதன் மேல் கல்உப்பு பரப்பி வைக்கவும். ஒரு அகல் எடுத்து மஞ்சள் குங்குமம் இட்டு -பஞ்சு திரி போட்டு -நல்லெண்ணெய் ஊற்றி சுற்றிலும் மலர் வைத்து ..
தென்மேற்கு அல்லது வடகிழக்கு மூலையில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அகல் தீபம் ஏற்ற வேண்டும்.
காலை 6 மணிக்கு அல்லது மாலை 6 மணிக்கு ஏற்றுவது சிறப்பு.
பௌர்ணமி அன்றும் இந்த தீபம் ஏற்றி வைக்கலாம் .
கோவிட்19 நோய் தொற்றில் இருந்து நம்மைகபாதுகாத்துக் கொள்ள கூடிய முக்கியமான உணவு முறைகள்
வறுமை நீங்கி செல்வ கடாட்சம் பெறுவதற்கு இந்த பரிகாரம் நல்ல பலனை தரும்.மேலும் நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் படிப்படியாக ஜெயமாகும்.
சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு அதற்கான பரிகார முறை அறிந்து அதன்படி செய்தோம் என்றால் நம்மிடம் இருக்கும் எதிர்மறைகள் மறைந்து நமக்கு சாதகமான சூழ்நிலை உண்டாக்கி தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது திண்ணம்.
மேலும் படிக்கலாம் ..
வாழ்க்கை சுபிட்சம் பெற்று வளம்பெற சூரிய நமஸ்கார வழிபாடு 🙏🌹🍀👇👇
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely. உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்! அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள் 💭 Comment செய்யுங்கள் 🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்