தொழிலில் வெற்றி காண சுக்கிரன் வழிபாடு..
ஒரு தொழில் சிறப்பாக வளர சுக்கிரன் அருள் கிட்டினால் மட்டுமே உச்சத்திற்கு வர முடியும். ஜாதகத்தில் சுக்கிரன் ஆதிக்கம் அதிகமாக..
சுக்கிர வழிபாடு நல்ல பலன் தரும். சுக்கிரனுக்கு பிடித்தமான நாள் வெள்ளிக்கிழமை .பிடித்தமான நேரம் சுக்கிர ஓரை காலை 6-7 .
பிடித்தமான நிறம் வெண்மை
பிடித்தமான மலர்- மல்லிகைபூ
பிடித்தமான பிரசாதம்- ஏலம் பிஸ்தா முந்திரி பாதாம் கல்கண்டு வெண்பொங்கல்
பூஜை முறை..
அமாவாசை முடிந்து வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று காலை கங்கா ஸ்நானம் செய்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்..
சுக்கிர ஓரையிலே இந்த பூஜை நடத்துவது மிக உத்தமம் .
சுக்கிர ஓரையில் ஐந்து முக விளக்கை ஏற்றி -சுக்கிரனுக்கு பிடித்தமான மகாலட்சுமி படத்தை வைத்து மல்லிகை மலர் சூடி ..
நம்மால் முடியும் பிரசாதம் வைத்து படைத்தல் நல்ல பலன் உண்டு.
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்
மேற்கூறிய சுக்கிரனுடைய ஸ்லோகம் 27 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.
ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்துவர -தொழிலில் வெற்றி பெற்று வாழ்க்கை வளம் பெற்று குடும்பம் மகிழ்ச்சி பெற்று சுபம் சுபீட்சம் செல்வம் அனைத்தும் பெற்று வாழ்வினில் இனிமை காணலாம்.
27 ஏலக்காய் பச்சைக் கற்பூரம் கஸ்தூரி மஞ்சள் குங்குமம் இவற்றை வைத்து மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யலாம்.
ஏலக்காய் மாலையாக கோர்த்து மகாலட்சுமிக்கு சூடினால் செல்வ சுபிட்சம் காணலாம்.
இந்த அர்ச்சனை செய்த பச்சை கற்பூரம் கஸ்தூரி மஞ்சள் ஏலக்காய் பொடித்து குங்குமம் சேர்த்து பண பெட்டகம் அலுவலகம் இவற்றில் வைத்தார் நல்ல செல்வம் சேரும் . மகாலட்சுமி நிரந்தர வாசம் இருப்பாள்
சோதனை நீக்கி சுபீட்சத்தை தருவார் சுக்கிரபகவான். வளமான வாழ்வினை கொடுப்பவர் சுக்கிர பகவான். தொழில் முன்னேற்றத்தினை கொடுத்து செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையை அருள்பவர் சுக்கிரன் பகவான்.
வாழ்வில் சுபிட்சம் கொடுக்கும் கல் உப்பு பரிகாரம் 🙏🌹🍀🌹🍀🌹👇👇👇
என்பதை அறிந்து வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர வழிபாடு செய்த அவருடைய அருளை பெற்று வாழ்வினில் இனிது காண்க.
தொழிலில் வெற்றிபெற மேலும் சில வழித் தேடல்..
கண்களை மூடுக -ஒரு நிமிடம் சிந்திக்க -கட்டுரை இனிதென்றால் கருத்தினை பகிர்ந்து கொள்க..
புரிந்து கொள்க -அறிந்துகொள்க..
ஒரு செயல் ஆக்கம் மனதில் பட்டால் ஒரு அட்டவணை எடுத்துக் கொள்க. ஒன்று இரண்டு மூன்று என செயலாக்கத்தை அட்டவணைப்படுத்துக
முதலில் செய்ய வேண்டியது நல்ல நாள் பார்த்து தெய்வத்தை வணங்குக. குலதெய்வத்தை நினைத்து உண்டியலில் "முயற்சி நிறைவேற வேண்டும் "என வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உங்களால் முடிந்த ஒரு காணிக்கை செலுத்தி வருக ..
வெற்றிபெற்ற பிறகு அந்த காணிக்கை குலதெய்வத்திற்கு செலுத்தி விடுக.
அகலக்கால் வைக்காது படிப்படியாக முயற்சி செய்க.. சோதனை வந்தாலும் முயற்சியை கைவிடாது தெய்வத்தின் பிடி இறுக பற்றிக் கொள்க.
காலம் சிறிது தள்ளி சென்றாலும் வருந்தாதீர்.அமைதியாக அடுத்த படி ஏறுவதற்கு முயற்சி செய்க..
உங்களால் நிச்சயம் முடியும் ஏணிப்படியில் உச்சிதனில் சென்று வெற்றிக் கொடியை நாட்டுவீர்.
நல்ல சிந்தனை என்றும் வீண் போகாது. நல்ல செயல்கள் என்றும் வெற்றி நிச்சயம கொடுக்கும்.நல்ல எண்ணங்கள் என்றும் நன்மையே பயக்கும் .நல்வழி பாதை தெய்வத்தின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
விடாமுயற்சி சுபிட்சத்தை கொடுக்கும் .
சொந்த வீடு மனை வாங்குவதற்கான தெய்வீக வழிமுறைகள்🌹🍀👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
மனம் தளராதீர்.முயற்சி விடாதீர். பின்வாங்காதீர்- மெல்ல மெல்ல புகழ் ஏணிக்கு சென்று வெற்றிக் கொடியை நாட்டுவீர் .
ஆனந்தம் அடைந்து நற்பெயர் பெற்று -பல்லாண்டு பல்லாண்டு வாழ்வீர் வாழ்வீர்- வாழ்ந்து பயனை அடைவீர் -பெற்ற மனம் மகிழ ..பிள்ளைகள் உவகை காண.. குடும்பம் சீர் பெருக -வாழ்க வாழிய வாழிய வாழியவே.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக