Lakshmikubaerapooza லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Lakshmikubaerapooza லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 அக்டோபர், 2019

லஷ்மி குபேர பூஜை வழிபடும் முறை


 லஷ்மி குபேர பூஜை


செல்வத்துக்கு எல்லாம் அதிபதி குபேரன் அருள் நமக்கு கிடைத்தால் செல்வத்திற்கு அதிபதியாக நாமும் திகழலாம் .


அதுபோலவே மகாலட்சுமியின் பரிபூரண அருள் லட்சுமி கடாட்சம் இருந்தால் எப்போதும் வீட்டில் செல்வம் நிறைந்து இருக்கும்.

 மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைத்தாலே அஷ்ட லட்சுமிகளும் நம்முடைய வீட்டிலே வாசம் செய்து எல்லா அனுக்கிரகமும் கிடைக்கும் என்பதால்தான் இந்த லஷ்மி குபேர பூஜையை வழிபாடு செய்கின்றோம்.




வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த குபேர பூஜையைை வழிபட்டால் குடும்பத்தில்  செல்வம் பெருகும் . இந்த குபேர பூஜையை எப்படி வழிபட வேண்டும் எனும் முறைகளைப் பற்றி பார்க்கலாம்..

இந்த பூஜை   மாலை 6 மணிக்கு மேல் செய்யக்கூடிய பூஜை. எந்த ஒரு பூஜை செய்தாலும் கங்கா ஸ்நானம் செய்து முடித்தபின் ஆரம்பித்தல் நல்லது.

கங்கா ஸ்னானம் செய்யும் முறை..


ஸ்நானம் செய்யும் பொழுது ஒரு குவளை ஜலம் எடுத்து ஓம்' எனும் எழுத்தை மோதிர விரலால் எழுதி- நாம குளிக்கும் தண்ணீரை- கங்கை ஜலமாக நெனச்சு  தலையில ஸ்நானம் செய்யும் போது ரொம்ப விசேஷத்தை தரும் .அப்படி செய்யும்போது அந்த ஜலமானது கங்கை நீராகவே மாறிவிடும் ..அதுல நாம் ஸ்நானம் செய்யும்போது நம்ம உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் நம்ம மனசும் எந்தவித தீய நோக்கத்திற்கும் செல்லாமல் மனமானது புனிதமாக மாறுகின்றது.


பட்டுப் புடவை அல்லது மஞ்சள் சிகப்பு என தெய்வத்திற்கு உகந்த கலரில் புடவை கட்டிக்கொண்டு தலையில் மல்லிகை பூ- பொட்டு -சந்தனம் குங்குமம் என் மிகவும் தெய்வீகமான நிலையில் தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும் .


லட்சுமி குபேரர் படம் கடைகளில் கிடைக்கும். குபேர யந்திரத்தின் படமும் கடையில் வாங்கலாம் அல்லது வரைந்து கொள்ளலாம் .

 1 - ‌பூஜை ஆரம்பிக்கும் போது ஐந்து முக விளக்கை ஏற்றி கிழக்கு நோக்கி லக்ஷ்மி குபேரர் படத்தை வைத்து -மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

 2 - தலைவாழை இலை வைத்து தெய்வத்தின் பார்வைக்கு இடதுபுறமாக- நமது பார்வைக்கு வலது புறமாக தலைவாழை இலை இருக்க வேண்டும்.

 3 - நவதானியங்களை முதல்நாளே தயார் செய்து கொண்டு பூஜையின் போது ..
குபேர வழிபாட்டின் போது பூஜையில் வைக்கப்படும் நவதானியங்கள்.. 1- நெல் அல்லது அரிசி 2 -துவரை 3--உளுந்து 4 -பச்சைப் பயறு 5 - மொச்சை 6 - கோதுமை 7 - கொண்டைக்கடலை 8- எள் 9 - கொள்ளு Voice note

 நவதானியங்களை வாழை இலையில் நடுவிலே பரப்பி

 4- பித்தளை அல்லது வெள்ளி சொம்பில் நிறைவாக நீர் இட்டு -மஞ்சள்பொடி சேர்த்து மேலே மாவிலை கொத்து- அதற்கு மேல் பஞ்சோடு கொண்ட தேங்காய் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து மலர் கொண்டு அலங்கரித்து கலசத்தை ரெடி செய்து கொள்ள வேண்டும்.

 5 - வாழை இலையின் வலது புறத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு -வாழைப்பழம் தட்சணை வைக்க வேண்டும் .

 6- நமக்கு என்ன குறை இருந்தாலும் எல்லாமே நிவர்த்தியாக வேண்டும் என்று குலதெய்வத்தை முதலில் வேண்டிக் கொண்டு பின்னர் விநாயகப்பெருமானை ஆத்மார்த்தமாக வேண்டி லக்ஷ்மி குபேரரை‌ மனதால் நினைத்து பூஜை அறையை மிக அழகாக பூக்களால் அலங்கரித்து கொள்ள வேண்டும்.



 7 - அதற்கு பின்னர் குபேர எந்திரம் வரைதல் வேண்டும்.

குபேர மந்திரம் வரையும் முறை


ஒரு மரப்பலகையில் மஞ்சள் பூசி நான்குபுறமும் குங்குமம் வைத்து அதன் மேல் இந்த குபேர எந்திரம் வரைதல் வேண்டும்.

குபேர எந்திர கோலம் படத்தில் இருப்பதைப் போல கட்டம் குங்குமத்தால் வரைந்து- ஸ்ரீ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதி பச்சரிசி மாவால் எண்கள் எழுதி எண்களுக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து- உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்து- இந்த பூஜையை வழிபட வேண்டும் .


ஸ்ரீ என்னும் எழுத்தானது -கட்டத்தின் நான்கு பக்கத்திலும் மஞ்சள் பொடியால் எழுதவேண்டும் .


கட்டத்தில் உள்ள எண்களின் பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயம் வைக்கும் அளவிற்கு  கட்டத்தை பெரிதாக
 வரைந்து கொள்ளவும்.

பூக்களால் அர்ச்சனை செய்யும்போது கட்டத்தில் உள்ள எண்கள் கலையாத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


8 ‌- காய்ச்சிய பசும்பால் -கற்கண்டு
பாயாசம் பூஜையிலே வைத்து படைத்தல்

9 - குபேரனுக்கு உகந்த எண் ஐந்து ஒரு தட்டு நிறைய ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து -மனையிலே வடக்கு முகமாக அமர்ந்து-

இரு கைகளாலும்ஐந்து ரூபாய் நாணயங்களை அள்ளி எடுத்து மீண்டும் தட்டிலே போட்டு மீண்டும் அள்ளி அளகாபுரி அரசே போற்றி -என துவங்கும் குபேர பகவானின் 108 போற்றி சொல்லி முடிக்கும் வரை நாணயங்களை அள்ளி எடுத்து மீண்டும் தட்டில் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

 இப்படி செய்யும்போது நாணயத்தின் ஒலி எழும்பும் சத்தத்தினால் ஓசையிலே மகிழ்ச்சி கொண்டு பூஜையை குபேர பகவான் மிக மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார் என்பது ஐதீகம். 

மேலும் மகாலட்சுமி 108 துதிப்பாடல்கள நமக்குத் தெரிந்த சுலோகங்களும் படிக்கலாம்

10 - தீபாரதனையை காட்டி பூஜையை நிறைவு செய்யலாம் . பண வரவு உள்ள இடங்களில் அதாவது கல்லாப்பெட்டி -அலமாரி மேசை மற்றும் பூஜை அறையில் அந்த நாணயத்தை வைத்தால் பொருட்செல்வம் கூடி விரைவில் செல்வ கடாட்சம் பெருகும்.

சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app  டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇


பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து பத்மாவதி தாயார் முகம் பார்த்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பது பூஜைக்கு மேலும் சிறப்பை தரும்.

இந்த குபேர லக்ஷ்மி குபேர பூஜை வழிபாடு செய்யும் பொழுது- வாழை இலையில் வைக்கக்கூடிய நவதானியங்களை நம்முடைய வீட்டு தோட்டத்திலோ அல்லது தொட்டியிலோ தண்ணீர் தெளித்து வந்தால் அடுத்த சில நாட்களில் முளைத்து விடும்- அவ்வாறு முளைத்த செடிகளை பசுமாட்டிற்கு தீவனமாக கொடுத்துவிடலாம்.

இந்த வழிபாடு வாழ்க்கையில் சுபீட்சத்தை கொடுக்கும். எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு இந்த லக்ஷ்மி குபேர பூஜை வழிபாடு  சிறப்பாக செய்து வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

இந்த பூஜை செய்கின்ற போது இந்த பரிகாரத்தையும் செய்க..

வாழ்க்கையில் உயர்ந்த ஸ்தானம் அடைவதற்கு கல்லுப்பு பரிகாரம்🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html




Copy rights at balakshitha