அமாவாசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமாவாசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 செப்டம்பர், 2021

பெற்றவர்கள் இறந்து விட்டால் திதி கொடுப்பதற்கு முன்பாக விசேஷம் நடத்தலாமா!

 



தாய் தந்தை இறந்து விட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு சுபநிகழ்ச்சிகள் செய்யலாமா என்பதற்கான விளக்கத்தைக் காண்போம்...


தாய் தந்தை ,உடன் பிறப்புகள், பங்காளிகள் , இறந்து விட்டால் ஒரு வருடத்திற்கு திதி கொடுக்கும் வரை  சுபநிகழ்ச்சிகள் செய்ய கூடாது.


ஊழ்வினைப் பயன் காரணமாக நாம் ஏற்கனவே பல துன்பங்கள் பிரச்சினைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  இந்நேரத்தில் தெரியாது நாம் செய்யும் காரியங்கள் கூட,  பாவத்தின் கணக்கில் போய் சேர்ந்து  விடும்.


நாம் ஏற்கனவே விசேஷத்துக்கு தேதி  குறித்து ஏற்பாடு செய்துவிட்டால் அதை நிறுத்த வேண்டியது இல்லை . ஆனால் எப்படி செய்யவேண்டும் என்று ஒரு நிர்ணயம் உண்டு.


இறந்தவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு,  இறந்தவரை நினைவு  கூர்ந்து,  சுபநிகழ்ச்சிகளை ஆரவாரம் ஆடம்பரம் இன்றி அமைதியாக செய்யுங்கள். அவ்வாறு நாம் செய்தால்  இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்து, புண்ணிய பலன்கள் பெறுவதற்கு  வழி வகுக்கும்.


சுபநிகழ்ச்சிகளை தவிர்க்கவும்



இறந்தவரின்  திதி  கொடுப்பதற்கு முன்பாக ,ஒரு வருடத்திற்குள்
அந்த குடும்பத்தில்  பிறந்த நாள் மற்றும் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் வந்தால் ...

 கோவில் , ஹோட்டல் சென்று  விசேஷம்  செய்வதை தவிர்க்கவும்.

வீட்டிலேயே மிக எளிமையாக அதே நேரத்தில் விருப்பமிருந்தால் ஐயர் வைத்துக்கூட வீட்டிலேயே விசேஷங்கள் செய்யலாம்.


பிறந்த பெண்ணிற்கு  மூன்று நாள் மட்டுமே கணக்கு என்று சொல்லி கேள்வி பட்டிருப்போம் . 

ஆனால் அது தவறான கருத்து.  தாய்வழி அண்ணன் அண்ணி, மாமா மாமி என்று சொந்தங்கள் இருந்தாலும் ஒரு வருடம் வரை அவர்களை  நினைவுகூர்ந்து, ஆடம்பரம் இன்றி விசேஷம் செய்யவும். அப்படி செய்தால் வரக்கூடிய கஷ்டம் தனை தவிர்க்கலாம்.

இறந்த ஆத்மாவிற்கு மரியாதை செலுத்துங்கள். அவர்களை அடிக்கடி  நினைவுகூறுங்கள்.


அவர்கள் நிச்சயம் நம் குலம் காப்பவர்கள் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு வழி வகுப்பார்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு நம் முன்னோர்களின் ஆசி கண்டிப்பாக நமக்கு வேண்டும்.


நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற்று,  நம்முடைய வாழ்க்கையில் சிறப்புகள் பல பெற்று  வாழ்வின் நிறைவை காண்போம்.

அமாவாசை என்றால் என்ன?

https://balakshitha.blogspot.com/2019/04/blog-post.html

Copy rights at Balakshitha


வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஆடி அமாவாசை

 

ஆடி அமாவாசை

8-8-2021   ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி அமாவாசை



எளிமையான முறையில் விரதம் இருக்கும் முறை

அமாவாசை என்பது நம் முன்னோர்களை நினைத்து விரதம் இருக்கக்கூடிய நாள். நம் முன்னோர்களின் ஆசி, குல தெய்வத்தின் சக்தி -அனைத்தும் இந்த ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்தால் நமக்கு கிடைக்கும்.

எளிமையான முறையில் விரதம் இருப்பது எப்படி என்பதை காண்போம்...

8-8-2021  ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி அமாவாசை.

முதல் தினமாகிய சனிக்கிழமை அன்று இரவு முதல் விரதம் ஆரம்பிப்பது நல்லது.

சனிக்கிழமை இரவு மூதாதையரை நினைத்து மனதார நினைத்து எளிதில் எளிய சிற்றுண்டி எடுத்துக்கொள்ளலாம்.

மறுநாள் காலை ஸ்நானம்  செய்தவுடன், சூரிய பகவானை வணங்க வேண்டும் .

பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுங்கள். கால் படாத இடத்தில் எள்ளும் தண்ணீரும் தெளித்தால் மூதாதையர்களின் ஆசி முழுமையாக நமக்குக் கிடைக்கும் .

இவை அனைத்தும் காலையில் நாம் மிக மிக முக்கியமாக செய்ய வேண்டும்.

முடிந்தவரை 12 மணிக்குள் அதாவது 12 மணியிலிருந்து1.30 மணி வரை எமகண்டம் என்பதால் 12 மணிக்குள் விளக்கேற்றி  வாழை இலை போட்டு படைத்து காகத்திற்கு சாதம் வைத்து விடுங்கள்.

வாழைக்காய் முருங்கைக்காய் பூசணி கீரை வகைகள் காய்கறி வகைகள் மிக முக்கியமாக சேர்த்துக்கொள்ளுங்கள். வடை பாயாசம் படைப்பது நல்லது.

நம் முன்னோருக்கு பிடித்தமான காய்கறிகள் வைத்தும் படைக்கலாம். அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு உயிரினத்திற்கும் கண்டிப்பாக அன்னமிட வேண்டும்.

கால பைரவரை வணங்குங்கள்

அன்றைய தினத்தில் காலபைரவரை வணங்குதல் மிகவும் நல்லது. கால பைரவரின் வாகனமான நாய்க்கு  பிஸ்கட் வாங்கி  கொடுக்கலாம் .

ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யலாம். ஆடு மாடு போன்ற உயிரினங்களுக்கு அன்னம் கொடுக்கலாம்.

நம் முன்னோர்கள் ஆசி  கிடைத்தால் நம்முடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் .குலம் தழைக்கும். செல்வ சிறப்பு உண்டாகும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு கண்டிப்பாக முன்னோர் ஆசி தேவை .

மிக புனிதமான முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடிய இந்த சிறப்பான நாளில்,   முன்னோர்களை வேண்டி ஆடி அமாவாசையில் நிறைவோடு படைப்போம்.


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


Copy rights at Balakshitha

வியாழன், 8 ஜூலை, 2021

அமாவாசை அன்று நினைக்கக்கூடிய மகான்

 பட்டினத்தார் வரிகள் 



பட்டினத்தார் பாடல் வரிகளை  இறந்த ஆத்மாவை  நினைக்கும் தினமாகிய  அமாவாசையான  அன்று பாடி அறிந்து புரிந்து  புண்ணியத்தை யாம்  பெறுவோம்.


கல்லா பிழையும் கருதாபிழையும் கசிந்துருகி -நில்லாப் பிழையும் நினையா பிழையும்,

நின்னெஞ்செழுத்தை - சொல்லாப் பிழையும், துதியா பிழையும்

 தொழா பிழையும் -எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய்- கச்சியேகம்பனே


 தெரிந்து பிழை செய்தேனோ! தெரியாமல் பிழை செய்தேனோ! நினைத்து நினைத்து கசிந்து உருகுகின்றேன் -அறியேனே 

தில்லை அம்பலத்தவனே!

நினைவில் நின்ற பிழை செய்தேனோ! நினைவே இல்லாது‌ பிழை செய்தேனோ !அனைத்தும் அறியேனே அம்பலத்தவனே - 

சிவாயநம

 எனும் ஐந்தெழுத்தை சொல்லாத பிழை செய்தேனோ! கைகூப்பி வணங்காத பிழை செய்தேனோ! மனதாலும் நினைக்காத பிழை  செய்தேனோ! எல்லாப் பிழையும் பொறுத்து எமை  காத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.


இந்த  பட்டினத்தாரின் பாடல் வரிகள் நம் வாழ்க்கையிலும் இருந்திருக்கலாம்.


 ஜீவ சமாதி அடைந்த பட்டினத்தார் பாடல் வரிகளை நினைத்து  'நமச்சிவாய' என்னும் ஐந்தெழுத்து சொல் இதனை மனம் உருகி, மனம் உவந்து ,மெய்மறந்து, மெய்கனிந்து ,தெய்வ மணம் கமழ்ந்து சொல்லி சொல்லி நாஇனித்து  நமச்சிவாயத்துள்  ஐக்கியமாகி மனிதனாய்  பிறந்த பயனை அடைவோம்.


ஜீவ சமாதி அடைந்தமகான்களின் அபரீத சக்தி,  இறந்த மூதாதையரை நினைத்து வழிபட கூடிய சிறப்புவாய்ந்த  அமாவாசை தினத்தன்று அதிகம் நமக்கு கிடைக்கும் .இந்த நாளில் மகான்களை நினைத்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். 

ஓம் சிவாய நமஹ ‌


அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் ஏற்படக்கூடிய நன்மைகள் 🙏🙏🙏🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/08/blog-post_31.html

.கோபம் எனும் இருள் விலகட்டும் அறியாமை எனும் பொருள் விளங்கட்டும். கற்ற கல்வி கை கொடுக்கட்டும். செல்வக் களஞ்சியம் நிறைவாகட்டும். பெற்ற மனம் கனிவா கட்டும் .பிள்ளை மனம் சிந்து பாடட்டும் தெய்வ அருள் உருவாகி,மலராகி மகிழ்வாகி  மனிதப் பிறவியின் பயனை அடைகவே.

தமிழ் மீது பற்று உள்ளவர்களுக்கு 

ஒரு அன்பான வேண்டுகோள்🙏

 நீங்கள் வீட்டில் திருமணம் செய்யவேண்டிய பிள்ளையோ பெண்களோ  இருந்தால் உங்கள் மனமார்ந்த நிறைவான ஒரு விஷயம் செய்யலாம் .🌹


திருமணத்தின் போது வரும் விருந்தினருக்கு அன்பளிப்பாக புத்தகம் அளியுங்கள்🌹


குறைந்தசெலவில்_புத்தகம்அன்பளிப்பு 

நற் கருத்துக்களை நம்மால் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினோம் எனும் மகிழ்ச்சியான மன நிறைவு தங்களுக்கு நிச்சயம் உண்டாகும்.🍀🌹


தம்பதிகள் வாழ்வினில் வழிநடத்தக் கூடிய  16  விதமான அறிவுரைகள் கொண்ட அழகிய புத்தகம்.🙏

Cell- 8124152666


புதன், 24 ஜூன், 2020

மன குழப்பங்கள் தீர அமாவாசை வழிபாடு


அமாவாசை வழிபாடு

முன்பாவ வினைகள் சாபங்கள் நமக்கு அனுகூலமாக மாற்ற முடியுமா! நிச்சயமாக முடியும். தெய்வத்தின் அருள்  இருந்தால் நிச்சயமாக முடியும்.

 முன் ஜென்ம பாவ வினைகள் சாபங்கள் அனுபவிப்பது என்பது காலத்தின் கட்டாயம் .அதனால் நாம் அடையும் துன்பங்கள்  வலிகள் வேதனைகள் ஏராளம். பெரியவர்கள் மற்றவர்கள் ஆறுதல் அளித்தாலும்- வலிகளின் ஆழத்தை  நாம் உணர்கையிலே - கண்ணீர் துளிகளின் எண்ணிக்கை நமக்கு மட்டும்தான் தெரியும் .

யாரை குறை கூறி என்ன பயன்! வாழ்க்கை என்பது நம் கையில் -அதை ஏற்பது என்பது காலத்தின் கட்டாயமே..

அந்த வாழ்வினில் ஏற்படும்  துன்பங்களை நமக்கு அனுகூலமாக மாற்றி அதனால் பெறக்கூடிய பலன்கள் நமக்கு உரியதாக இனிதாக வாழ்க்கை  வாழ்ந்து - சிறப்பான வளர்ச்சி கண்டு சிந்தையில் தெளிவு கொண்டு வாழ்வின் பயனை அடைவதற்கான மிக அருமையான அற்புதமான தெய்வீக வழிபாடு என்ன என்பதை காண்போம்.

தெய்வங்கள் சக்தி மிக அதிகமாக கிடைத்திடும் நாள்தான் அமாவாசை.


அன்றைய தினத்திலே இந்த மங்கல தீர்த்த வழிபாடு என்பது -அமாவாசை அன்று செய்யக்கூடிய மிக அருமையாக வழிபாடு.

அமாவாசை அன்று நாம் வரவேற்கக் கூடிய தெய்வங்களின் சக்திதனை காண்போம்..


ஒன்பது அம்சங்களாக காட்சி தருகின்ற அம்பாளின் ஆசி பெறும் நாள்தான் அமாவாசை .

நம்முடைய குலதெய்வ சக்தியின் வீரியம் நிறைந்திருக்கும் நாள்தான் அமாவாசை.

ஆஞ்சநேயர்  பிறந்தநாள் தான் பூரண அமாவாசை .அதனால் அன்றைய தினத்திலே நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் அனுமனை நினைத்து வணங்கினால் நிச்சயம் நிறைவேறும். ஹனுமனின் அருள் பெற்று  நமக்கெல்லாம் நல்லது செய்கின்ற அற்புதமான தினமே அமாவாசை.

முன்னோர்கள் அனைவரும் நம்மை தேடி வந்து ஆசிபுரிந்து வாழ்த்துகின்ற நாள்தான் மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய அமாவாசை .

சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து  10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

அன்றைய தினத்தில் நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் தீர்வதற்கு மனக்குழப்பங்கள் தெளிவதற்கு வாழ்வில் வளம் பெறுவதற்கு- பெற்ற செல்வங்கள் அனைத்தும் செழித்து வளர்வதற்கு- அமாவாசை தினத்தில்நாம் செய்யக் கூடிய மிக முக்கியமான மங்கல தண்ணீர் தெளிக்கும் வழிபாடு பற்றி காண்போம்

 ஒரு செப்பு அல்லது வெள்ளி சொம்புக்கு  தெய்வத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த சொம்பிலே  நீர் நிறைத்து - அமாவாசை அன்று  கீழ்க்காணும் பொருட்களை சேர்க்கலாம் ..

ஏலக்காய்- 2- பச்சை கற்பூரம்- துளசி வேப்பிலை- எலுமிச்சை பழம் சில துளிகள்- கற்பூரவள்ளி- கிராம்பு விரலிமஞ்சள்-பன்னீர் -சிறிது உப்பு கல் சேர்க்க வேண்டும்.

மகாலட்சுமியின் வாசம் நிறைந்த ஏலக்காய்- பெருமாளின் சுவாசம் கொண்ட துளசி -ராஜ கனி எலுமிச்சை பழத்துளிகள் தோஷம் நீக்கும் உப்புக்கல் சேர்த்து .

மேலும் வாசம் நிறைந்த அனைத்து பொருட்களும் சேர்த்து -காலையில் பூஜை அறையை அலங்கரித்து விளக்கேற்றி இந்த மங்கல
 நீரை வைக்கவும்.

அமாவாசை அன்று செய்யக்கூடிய வேப்பெண்ணை தீப வழிபாடு🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_23.html

அமாவாசை அன்று வழிபடும் முறைகள் 🌹🍀🌹🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/04/blog-post.html

மாலை அந்த மங்கல நீரை வீடு முழுவதும் தெளித்து வீட்டில் உள்ள அனைவரும் தெளித்துக் கொண்டால் வீடு எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி லட்சுமி கடாட்சமாய் -மங்கல நிகழ்வுகள்- மங்கல வார்த்தைகள் மங்கல நினைவுகள்- மங்கல ஆசிகள் என அனைத்தும் நாம் பெறலாம்..

 என்பதை அறிந்து அமாவாசை அன்று இவ்வாறு செய்து அதற்கான அற்புத பலனை பெறுவோம்.


ஆன்மீகபலன் சேர்ந்து அறிவியல் பூர்வமாக அறியவேண்டிய மிக முக்கியமான விஷயம் ..

உறவுகளில் விரிசல்- மன உளைச்சல் போன்ற சூழ்நிலை இருந்தால் - நாம் நம்மை முழுமையாக மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம் .நம்முடைய மனதில் உள்ள குறைகளை வெளிக்காட்டாது வார்த்தைகளை அதிகம் பேசாது அமைதி காத்து- நம்முடைய உறவுகளின் விரிசலுக்கான  வலிகளை நாம் உணர்ந்து அதற்கு வித்தாக மருந்திட்டு ..

இடைவிடாது தெய்வத்தின் பாதம் பணிந்து -கந்த சஷ்டி கவசம்  தனை செவ்வாய் -வெள்ளி கிழமை  படித்து வர படிப்படியாக நம்முடைய மனக் குறை தீர்ந்து காலம் நமக்கு ஏற்றதாக கனிந்து  நேரம் கைகூடி வரும் .

வாழ்க்கை என்றும் இனிதாக வாழ்ந்து அந்த வாழ்க்கையில்  நன்னெறிகளை  கடைப்பிடித்து மிக அற்புதமான வாழ்க்கையாக வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைவோம்.

Copy rights at balakshitha

வியாழன், 23 ஜனவரி, 2020

அமாவாசை அன்று கல்லுப்பு வேப்பெண்ணெய் தீப வழிபாடு



நம் முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடிய அற்புதமான வழிபாடு அமாவாசை வழிபாடு .

தை - மாசி-புரட்டாசி அன்று மாதத்தில் வரக்கூடிய அம்மாவாசை மிக சக்தி வாய்ந்தது ..நம் முன்னோர்களை நினைத்து திதி கொடுப்பது- என்பது அனைவரும் அறிந்ததே.‌.

வீட்டில் இருக்கும் பெண்கள் மிக முக்கியமாக அன்றைய தினத்திலே இந்த வேப்பெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி- தெய்வீக சக்தி நிறைந்த வாழ்க்கை வளம் பெற்று சிறப்பை காணலாம்.


 வழிபாட்டு முறை..
அமாவாசை அன்று வழக்கம் போல் நம் முன்னோர்களின் ஆசி வேண்டி படையல் செய்து படைத்த பிறகு..

மாலை நேரத்தில் செய்யக்கூடிய கல்லுப்பு வேப்பெண்ணை அகல் தீப வழிபாடு ..


மாலை ஆறு மணிக்கு விளக்கேற்றிய பிறகு - தாம்பாளத் தட்டில் மஞ்சல் குங்குமம் வைத்து கல் உப்பினை நிறைத்து தட்டில் மேல்-

 ஒரு பெரிய அகல் வைத்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு வேப்பெண்ணை ஊற்றி பஞ்சு கொண்ட திரி கொண்டு விளக்கேற்றி..

 நம் குல தெய்வத்தை முன்னோர்களை நினைத்து வாழ்க்கை வளம் பெற்று சிறப்பாக அமைவதற்கு வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டும் -என மனதார வேண்டிக்கொண்டு ..


அந்ததீபத்தை எடுத்துக்கொண்டு- வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் மிக பொறுமையோடு சுற்றி வந்து வைக்க வேண்டும் .
(கிழக்கு பக்கம் பார்த்தவாறு தீபம் இருக்கவேண்டும்)

தீபம் முழுமையாக எரிந்த பிறகு அணைந்துவிடும். மறுநாள் காலையில் -அரசங் குச்சி வேப்பங்குச்சி அனைத்தும் கொண்ட ஓமசமந்தி எனகடைகளில் கிடைக்கும். அவற்றை முன்பே வாங்கி வைத்துக் கொள்ளவும் .

வீட்டின் பின்புறம் ஒரு சட்டியில் ஹோமசமந்தியை ஒரு சிறு கற்பூரம் வைத்து ஏற்றி -அது நன்றாக எரிகின்ற போது அதில் தீபம் ஏற்றிய தட்டில் உள்ள கல்லுப்புக்களை கொட்டவேண்டும்.

(அல்லது) வெளியே  ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து -அதில் கல்உப்பை கொட்டி வெளியே கால் படாத இடத்தில் போட்டு வைத்தால் நம் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர் மறை சக்திகளும் மறைந்து நமக்கு சாதகமாக பலன்கள் அனைத்தும் நிறைவேறும்.

நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள்
முழுமையாக அழிந்துவிடும். அதன் பிறகு தலைகுளித்து வீட்டை சுத்தப்படுத்தி விளக்கேற்றி தலைவாசல்  துடைத்து மஞ்சளிட்டு தீபம் ஏற்றுதல் சிறப்பு.


நம்முடைய வாழ்க்கையில் உள்ள கண் திருஷ்டிகள் நமக்கு துன்பத்தை தரக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் சிறப்பான ஒரு நல்ல முன்னேற்றத்தை நாம் காணலாம்.


கல்லுப்பு வேப்பெண்ணை தீப வழிபாட்டின் சிறப்பு..

சிறப்பு -1வேப்ப மரத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய் -தெய்வீக சக்தி என்றும் நிறைந்திருக்கும்.

 சிறப்பு -2 வேப்பெண்ணையில் உள்ள மணமானது நம்முடைய சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கக்கூடியது .

சிறப்பு 3நம்முடைய உடம்பில் இருக்கும் பிணிகளை அகற்றக் கூடியது.

சிறப்பு -4  மனதிலே உள்ள தேவையில்லாத பயத்தினை போக்கி
ஒரு புத்துணர்ச்சியை கொடுக்க கூடிய சக்தி வேப்பெண்ணை தீபத்திற்கு உண்டு .

சிறப்பு -5 கண் திருஷ்டி என்று சொல்லக்கூடிய திருஷ்டிகள் ஏவல் சூனியம் அனைத்தும் விலக இந்த வேப்பெண்ணை கல்லுப்பு தீபம் ஏற்றுதல் மிக சிறப்பு

நம்முடைய வாழ்க்கையில் துன்பத்தை விலக்கி குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு அபரித சக்தி இந்த வேப்பெண்ணை தீபத்திலே உண்டு என்பதை அறிந்து அமாவாசை அன்றும் தீபம் ஏற்றி வாழ்க்கையில் வளத்தை காண்போம்.

Copy rights at balakshitha

புதன், 5 ஜூன், 2019

அமாவாசை அதிசயம்



அமாவாசை அன்று திருக்கடையூரில் நடந்த அதிசயம்

அழகு முகத்தவள்
 ஆனந்தம் தருகின்றாள்*
கருணைப் பார்வையிலே
கலக்கத்தை நீக்குகின்றாள்*
 மூக்குத்தி ஜொலிப்பினிலே
 அக இருளை நீக்குகின்றாள்*
உதட்டு  சிரிப்பினிலே
 உலகையெல்லாம் காக்கின்றாள்* மஞ்சள் மகிமை தனில்
 மங்களத்தை அளிக்கின்றாள்* குங்குமம் குறையாமல்
அள்ளி தந்து மகிழ்கின்றாள்*

 அனைத்தும் அறிந்தவர் நாம் என்றால் நமக்கும் மேலே ஆட்சி செய்வது
 அவள் அன்றோ!


அவளுடைய திருவிளையாடல் திருக்கடையூரில் அரங்கேறியஅதிசயத்தை காண்போமே....


 திருக்கடையூர் அபிராமி
தேரினிலே  பவனி வர..
 அபிராமி பட்டரோ
ஆனந்த கூத்தாட..
 தமக்கும் இதில் பங்குண்டோ!
நிலவாக காட்சிதரும்
 அணிகலனோ ஐயமுற ..
ஒளியின்றி உலகேது?
அம்பிகையின் புன்சிரிப்பால் வான்மதியும் அகம் மகிழ.. "அணிகலனும் நிலவான
காரணத்தை அறிவாயோ!
முழு கதையும் கவிதை தனில் வடிப்பதற்கு வழியுண்டோ "
 மேளமோ- தாளமிட
கேட்பீரே -நாதஸ்வரத்தின்
 இசை தனையே..

அம்பிகையின் மேல் கொண்ட
 அளவு கடந்த பக்தியினால்
பட்டரின் பிதற்றல் கேட்டு சோழமன்னன் சரபோஜியோ
" தேய்பிறை திதி
இன்று மதிகாணா -பட்டர்
 தலை கொய்க" என புணர
அதை கேட்ட பட்டரோ
  மனம் கலங்கி  உரி மேலே
நெஞ்சுருக கவிபாட ..
இது என்ன விந்தையடி!
 என் தோழி -காத்தருளும் அம்பிகையின் அணிகலனோ
நிலவாக வானத்திலே*


தம்மை நம்பி வரும் பக்தர்களை சோதனை கொடுப்பாளேயன்றி என்று அம்மையவள் ஒருபோதும் கைவிட மாட்டாள்* என்பதற்கு திருக்கடையூரிலே நடந்த உண்மை சம்பவம் காட்சியன்றோ!

இன்றும் திருக்கடையூரிலே
 தை அமாவாசையன்று
 மிக கோலாகலமாக திருவிழா வண்ணத்தில் அம்பாள்
 மிக அழகாக  ஜொலிகின்றாள்.

அம்மனின் அருள் பெற ஐந்து வழிமுறைகளை காண்போமே..

சிறப்பு -1*   புதிய மலர்- நல்லெண்ணெய் புதிய திரி - புதிய பச்சரிசி கோலம்
புதிய ஜலம் கொண்டுதினமும் விளக்கேற்றுதல் (காலை 4 30 to 6 மணி) அல்லது(மாலை 5 to 6 )_சுபிட்சம் பெற*

சிறப்பு-  2  வெள்ளி தோறும் பித்தளை சொம்பு நீர் நிறைத்து -மஞ்சள் இட்டு  ஒரு ரூபாய் நாணயம் இட்டு மலர் வைத்து  மங்கல அலங்காரம் .
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ*

சிறப்பு-  3  வெள்ளி தோறும் தெருவாசல் பூஜை அறை என வேப்பிலையின் மணம் கமழ  _தோஷ நிவர்த்தி*

 சிறப்பு-  4  அம்மனுக்கு பிடித்தமான பச்சரிசி பொங்கல் இனிப்பு செய்து விசேஷ நாட்களில்  படைத்தல். செல்வம்  பெற*

 சிறப்பு-  5   ஐந்து சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் மஞ்சள் குங்குமம் ஜாக்கெட் பிட் வசதிக்கேற்ப தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுதல் _தீர்க்க சுமங்கலி பவ*


மனதில் உள்ள
இருளினை நீக்கி*
 சிந்தையில் நல்ல
பண்பினை விதைத்து *
ஆற்றல் எனும்
அருளினை அளித்து*
 மனித பிறவியில்
வாழ்ந்தேன் *எனும்
பெருமையை கொடுப்பாயே
 என் தாயே* நின் பாதமே சரணம் சரணம் சரணமம்மா.

வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியான வாழ்வு பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம்🌹🍀🌹👇👇👇


Copy rights at Balakshitha


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அமாவாசை நமக்கு நாமே நீதிபதி


அமாவாசை ‌ அன்று செய்யகூடிய வழிபாட்டு முறைகள்


வாழ்வது என்பது பெரிதல்ல - வாழ்ந்தேன் 
என்பது பெரிதன்றோ!
நல்லது செய்வது என்றும் நன்று*
அதையும் இன்றே செய்வது நன்றன்றோ*
எனக்கு நானே நீதிபதி *
மனதறிந்து துரோகம் செய்வது நன்றல்ல 
மனசாட்சிக்கு மதிப்பளிப்பது என்றும் நன்றே* என கோட்பாடுகள் பல கொண்டு வாழ்ந்தாலும் நான் யார்! எனும் கேள்வியை மாதத்திற்கு ஒரு முறையாவது

நாம் நம்மையே கேட்பதற்கு அறிவுறுத்தும் ஒரு முக்கியமான தினமே அமாவாசை

மனக்குழப்பங்கள் தீர மங்கல தண்ணீர்க

பெற்றவர்கள் இல்லை என்றால் நாம்  ஏது!
பெற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்புக்கு ஈடேது!
நம்மை வளர்ப்பதற்கு அவர்கள் பட்ட சிரமத்திற்கு இணையேது !
நம் கண்ணெதிரே இருக்கும்போது அலட்சியமாக இருந்துவிட்டு மறைந்த பின்னே விழுந்து விழுந்து நினைப்பதிலே  பலன் எது!


என்பதை முதலில் புரிந்து கொண்டு இருக்கும்போது - போற்றி இறந்த பின்னே
வணங்கி புண்ணியத்தை அடையலாம் .

பெற்றவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் ஆத்மாக்களுக்கு பிரிவேது -செயலில் நல்லது செய்யின் ஆனந்தம் கொண்டு தவறுகள் செய்யின்- அருகில் இலாது ஆத்மாக்கள் பரிதவிக்கும் பட்சத்தில் - தெய்வத்தின் அனுகிரகத்த்தோடு நம் மனதில்* நம் இல்லத்தில்* நிறைந்து நாம் செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரு அற்புதமான தினம் அமாவாசை.


அன்றைய தினத்திலே தாய் வழி உறவின் அம்சமே -சந்திரன் *தந்தை வழி உறவின்- அம்சமே சூரியன்* என இரு உறவுகளும் சேர்கையில்அதாவது சூரியனும் சந்திரனும் -ஒரே நேர்க்கோட்டில் சேருகையில் அத்தினமே அமாவாசை *


அந்த நேரத்தில் இரு வழி ஆத்மாக்களின் சக்திகளோடு தெய்வ சக்தியும் ஒன்று சேரும் போது நம்முடைய மூளையில் சில மாற்றங்கள் நிகழ்கிறது .
அந்த விசேஷமான பூரண அமாவாசை அன்று அந்த ஆத்மாக்களை நாம் வணங்கி பித்ருக்களின் வாழ்த்துக்களை பெரும் பொழுது நாம் செய்த தவறுகள் விலகி *மனம் புனிதமாகி *வாழ்வின் வழிமுறைகளை நமக்கு வழிகாட்டி படிப்படியாக வாழ்ந்தேன் 'என்பது பெரிதன்றோ எனும் தத்துவத்தை
அறிகின்றோம்.

கல்லுப்பு பரிகாரம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள🙏🌹🍀👇👇



அமாவாசை அன்று நாம்செய்யவேண்டி சிறப்பு*
1*அமாவாசைதினத்தன்று அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கையிலே தோஷம் -பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.

2* அமாவாசை தினத்திலே ஆத்மாக்களை நினைத்து வணங்கையிலே
துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும்.

3* அமாவாசை தினத்திலே காகத்திற்கு உணவு வைத்து உண்ணுகையில்
பிதுர்களின் மனம் சாந்தி பெற்று சந்ததிகள் வாழ்வு சிறப்பு பெறும் .

4* அமாவாசை தினத்திலே மஞ்சள் -காவி -சந்தன பொன்னிறம் -போன்ற உடை அணிகையிலே 'நமக்கு நாமே நீதிபதி ' எனும் தத்துவத்தின் உண்மை புரிந்து விடும்.

குழந்தை பிறக்கும் போது மகிழ்ந்து நல்ல முத்துக்களாக *
நாம் ஒளிரும் பொழுது நெகிழ்ந்து நாம் நம் ஆத்மாக்களை அன்போடு நினைக்கையிலே நம்மை மனமுவந்து வாழ்த்தி* ஆனந்தப்படும்
ஆத்மாக்களுக்கு அமாவாசையன்று நினைத்து வழிபட்டு 
வாழ்க்கைப் பயனை அடைவோம்.

மேலும் படிக்கலாம்..

சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha