வியாழன், 30 செப்டம்பர், 2021

பெற்றவர்கள் இறந்து விட்டால் திதி கொடுப்பதற்கு முன்பாக விசேஷம் நடத்தலாமா!

 



தாய் தந்தை இறந்து விட்டால் அடுத்த ஒரு வருடத்திற்கு சுபநிகழ்ச்சிகள் செய்யலாமா என்பதற்கான விளக்கத்தைக் காண்போம்...


தாய் தந்தை ,உடன் பிறப்புகள், பங்காளிகள் , இறந்து விட்டால் ஒரு வருடத்திற்கு திதி கொடுக்கும் வரை  சுபநிகழ்ச்சிகள் செய்ய கூடாது.


ஊழ்வினைப் பயன் காரணமாக நாம் ஏற்கனவே பல துன்பங்கள் பிரச்சினைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  இந்நேரத்தில் தெரியாது நாம் செய்யும் காரியங்கள் கூட,  பாவத்தின் கணக்கில் போய் சேர்ந்து  விடும்.


நாம் ஏற்கனவே விசேஷத்துக்கு தேதி  குறித்து ஏற்பாடு செய்துவிட்டால் அதை நிறுத்த வேண்டியது இல்லை . ஆனால் எப்படி செய்யவேண்டும் என்று ஒரு நிர்ணயம் உண்டு.


இறந்தவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு,  இறந்தவரை நினைவு  கூர்ந்து,  சுபநிகழ்ச்சிகளை ஆரவாரம் ஆடம்பரம் இன்றி அமைதியாக செய்யுங்கள். அவ்வாறு நாம் செய்தால்  இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைந்து, புண்ணிய பலன்கள் பெறுவதற்கு  வழி வகுக்கும்.


சுபநிகழ்ச்சிகளை தவிர்க்கவும்



இறந்தவரின்  திதி  கொடுப்பதற்கு முன்பாக ,ஒரு வருடத்திற்குள்
அந்த குடும்பத்தில்  பிறந்த நாள் மற்றும் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் வந்தால் ...

 கோவில் , ஹோட்டல் சென்று  விசேஷம்  செய்வதை தவிர்க்கவும்.

வீட்டிலேயே மிக எளிமையாக அதே நேரத்தில் விருப்பமிருந்தால் ஐயர் வைத்துக்கூட வீட்டிலேயே விசேஷங்கள் செய்யலாம்.


பிறந்த பெண்ணிற்கு  மூன்று நாள் மட்டுமே கணக்கு என்று சொல்லி கேள்வி பட்டிருப்போம் . 

ஆனால் அது தவறான கருத்து.  தாய்வழி அண்ணன் அண்ணி, மாமா மாமி என்று சொந்தங்கள் இருந்தாலும் ஒரு வருடம் வரை அவர்களை  நினைவுகூர்ந்து, ஆடம்பரம் இன்றி விசேஷம் செய்யவும். அப்படி செய்தால் வரக்கூடிய கஷ்டம் தனை தவிர்க்கலாம்.

இறந்த ஆத்மாவிற்கு மரியாதை செலுத்துங்கள். அவர்களை அடிக்கடி  நினைவுகூறுங்கள்.


அவர்கள் நிச்சயம் நம் குலம் காப்பவர்கள் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு வழி வகுப்பார்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு நம் முன்னோர்களின் ஆசி கண்டிப்பாக நமக்கு வேண்டும்.


நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற்று,  நம்முடைய வாழ்க்கையில் சிறப்புகள் பல பெற்று  வாழ்வின் நிறைவை காண்போம்.

அமாவாசை என்றால் என்ன?

https://balakshitha.blogspot.com/2019/04/blog-post.html

Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக