அமாவாசை வழிபாடு
முன்பாவ வினைகள் சாபங்கள் நமக்கு அனுகூலமாக மாற்ற முடியுமா! நிச்சயமாக முடியும். தெய்வத்தின் அருள் இருந்தால் நிச்சயமாக முடியும்.
முன் ஜென்ம பாவ வினைகள் சாபங்கள் அனுபவிப்பது என்பது காலத்தின் கட்டாயம் .அதனால் நாம் அடையும் துன்பங்கள் வலிகள் வேதனைகள் ஏராளம். பெரியவர்கள் மற்றவர்கள் ஆறுதல் அளித்தாலும்- வலிகளின் ஆழத்தை நாம் உணர்கையிலே - கண்ணீர் துளிகளின் எண்ணிக்கை நமக்கு மட்டும்தான் தெரியும் .
யாரை குறை கூறி என்ன பயன்! வாழ்க்கை என்பது நம் கையில் -அதை ஏற்பது என்பது காலத்தின் கட்டாயமே..
அந்த வாழ்வினில் ஏற்படும் துன்பங்களை நமக்கு அனுகூலமாக மாற்றி அதனால் பெறக்கூடிய பலன்கள் நமக்கு உரியதாக இனிதாக வாழ்க்கை வாழ்ந்து - சிறப்பான வளர்ச்சி கண்டு சிந்தையில் தெளிவு கொண்டு வாழ்வின் பயனை அடைவதற்கான மிக அருமையான அற்புதமான தெய்வீக வழிபாடு என்ன என்பதை காண்போம்.
தெய்வங்கள் சக்தி மிக அதிகமாக கிடைத்திடும் நாள்தான் அமாவாசை.
அன்றைய தினத்திலே இந்த மங்கல தீர்த்த வழிபாடு என்பது -அமாவாசை அன்று செய்யக்கூடிய மிக அருமையாக வழிபாடு.
அமாவாசை அன்று நாம் வரவேற்கக் கூடிய தெய்வங்களின் சக்திதனை காண்போம்..
ஒன்பது அம்சங்களாக காட்சி தருகின்ற அம்பாளின் ஆசி பெறும் நாள்தான் அமாவாசை .
நம்முடைய குலதெய்வ சக்தியின் வீரியம் நிறைந்திருக்கும் நாள்தான் அமாவாசை.
ஆஞ்சநேயர் பிறந்தநாள் தான் பூரண அமாவாசை .அதனால் அன்றைய தினத்திலே நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் அனுமனை நினைத்து வணங்கினால் நிச்சயம் நிறைவேறும். ஹனுமனின் அருள் பெற்று நமக்கெல்லாம் நல்லது செய்கின்ற அற்புதமான தினமே அமாவாசை.
முன்னோர்கள் அனைவரும் நம்மை தேடி வந்து ஆசிபுரிந்து வாழ்த்துகின்ற நாள்தான் மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய அமாவாசை .
சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து 10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
அன்றைய தினத்தில் நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் தீர்வதற்கு மனக்குழப்பங்கள் தெளிவதற்கு வாழ்வில் வளம் பெறுவதற்கு- பெற்ற செல்வங்கள் அனைத்தும் செழித்து வளர்வதற்கு- அமாவாசை தினத்தில்நாம் செய்யக் கூடிய மிக முக்கியமான மங்கல தண்ணீர் தெளிக்கும் வழிபாடு பற்றி காண்போம்
ஒரு செப்பு அல்லது வெள்ளி சொம்புக்கு தெய்வத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த சொம்பிலே நீர் நிறைத்து - அமாவாசை அன்று கீழ்க்காணும் பொருட்களை சேர்க்கலாம் ..
ஏலக்காய்- 2- பச்சை கற்பூரம்- துளசி வேப்பிலை- எலுமிச்சை பழம் சில துளிகள்- கற்பூரவள்ளி- கிராம்பு விரலிமஞ்சள்-பன்னீர் -சிறிது உப்பு கல் சேர்க்க வேண்டும்.
மகாலட்சுமியின் வாசம் நிறைந்த ஏலக்காய்- பெருமாளின் சுவாசம் கொண்ட துளசி -ராஜ கனி எலுமிச்சை பழத்துளிகள் தோஷம் நீக்கும் உப்புக்கல் சேர்த்து .
மேலும் வாசம் நிறைந்த அனைத்து பொருட்களும் சேர்த்து -காலையில் பூஜை அறையை அலங்கரித்து விளக்கேற்றி இந்த மங்கல
நீரை வைக்கவும்.
அமாவாசை அன்று செய்யக்கூடிய வேப்பெண்ணை தீப வழிபாடு🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_23.html
அமாவாசை அன்று வழிபடும் முறைகள் 🌹🍀🌹🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/04/blog-post.html
மாலை அந்த மங்கல நீரை வீடு முழுவதும் தெளித்து வீட்டில் உள்ள அனைவரும் தெளித்துக் கொண்டால் வீடு எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி லட்சுமி கடாட்சமாய் -மங்கல நிகழ்வுகள்- மங்கல வார்த்தைகள் மங்கல நினைவுகள்- மங்கல ஆசிகள் என அனைத்தும் நாம் பெறலாம்..
என்பதை அறிந்து அமாவாசை அன்று இவ்வாறு செய்து அதற்கான அற்புத பலனை பெறுவோம்.
ஆன்மீகபலன் சேர்ந்து அறிவியல் பூர்வமாக அறியவேண்டிய மிக முக்கியமான விஷயம் ..
உறவுகளில் விரிசல்- மன உளைச்சல் போன்ற சூழ்நிலை இருந்தால் - நாம் நம்மை முழுமையாக மாற்றிக் கொள்வது மிக மிக அவசியம் .நம்முடைய மனதில் உள்ள குறைகளை வெளிக்காட்டாது வார்த்தைகளை அதிகம் பேசாது அமைதி காத்து- நம்முடைய உறவுகளின் விரிசலுக்கான வலிகளை நாம் உணர்ந்து அதற்கு வித்தாக மருந்திட்டு ..
இடைவிடாது தெய்வத்தின் பாதம் பணிந்து -கந்த சஷ்டி கவசம் தனை செவ்வாய் -வெள்ளி கிழமை படித்து வர படிப்படியாக நம்முடைய மனக் குறை தீர்ந்து காலம் நமக்கு ஏற்றதாக கனிந்து நேரம் கைகூடி வரும் .
வாழ்க்கை என்றும் இனிதாக வாழ்ந்து அந்த வாழ்க்கையில் நன்னெறிகளை கடைப்பிடித்து மிக அற்புதமான வாழ்க்கையாக வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைவோம்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக