குழந்தை பற்றிய சிறப்பு கண்ணோட்டம்
குழந்தைகள் செல்போன் வைத்து விளையாடுவது நன்மையா தீமையா! பற்றி சிறப்பு கண்ணோட்டம்
செல்போன் நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவு அவசியம் என்பதை முதலில் தெரிந்து அடுத்து குழந்தைகளின் உடலியல் உலகியல் விஷயங்கள் தான் பெறுவோம்.
அம்மா இறந்த செய்தி மகன் அறிந்து வந்து சேர்வதற்குள் அனைத்து காரியம் முடிந்து, மகன் கதறிய நிகழ்வு தனை பார்த்ததுண்டு.
திருமணமான தம்பதியர் அன்புள்ளம் கொண்ட இரு நெஞ்சங்களாக இருந்தும் , மனம்விட்டு பேசுவதற்கு இலாது , வாழாமல் பிரிந்து துயரத்தோடு வாழ்ந்த கதையும் கேட்டதுண்டு.
கல்வி , மருத்துவம் , வணிகம், தொழில் அனைத்திலும் தொடர்பு அதிகம் இல்லாத இளம் சமுதாயம் பின்தங்கிய நிலையும் அறிந்ததுண்டு இவை அனைத்தும் நடந்தது செல்போன் இல்லாத காலத்தில்.
ஆனால் இன்றோ கையிலே செல்போன் .. உலகம் நம் வசம் அதில் காணும் பரவசம் , எங்கும் , எதிலும் எவ்வகையிலும் ,எந்த உலகிலும் என்னால் சாதிக்க முடியும் என்று இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களுக்கும் உற்சாகத்தோடு எழும் நிலை கண்டோம். செல்போன் கைக்கு வந்தது முதல் காணும் யாவும் புதுமை காண்கின்றோம்.
நம் குழந்தைகள் ஒரு படி மேல் கலக்கலோ கலக்கல் ,அடடா ..அப்படி போடு! நான் யாரு தெரியும் இல்ல, எப்படி நம்ம கெத்து நான் யாரு கிங் லல என்று செல்போனில் விளையாடும் வீர சாகசம் மூக்கின் மேல் விரலை வைத்து தான் பார்க்கின்றோம்.
ஆனால் அதே குழந்தை.. அறிவுள்ள எவ்வளவோ நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து, அதிக அளவில் கேம் விளையாடுதல், தேவையற்ற விஷயங்கள் பார்ப்பது, சினிமா பார்த்தது சிந்தனை கெடுவது என செல்போனில் மூழ்கினால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பார்க்கின்றோம்.
மூளையின் மேலே உள்ள ஜவ்வு பகுதியில் செல்போனின் மைக்ரோ வேவ் எனப்படும் வெப்பம் தாக்கி...
கண் எரிச்சல் கண்களில் நீர் வடிதல் கண் சிவத்தல், தலைவலி , மூளை பாதிப்பு என ஸ்லோ பாய்சன் உடலில் மெல்ல மெல்ல எறும்பு ஊர்தல் போன்று உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சீர்கேடு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதே சமயத்தில் குழந்தைகளை வெளியே அனுப்பும் போதும் மிகவும் பாதுகாப்பு என்பது அவசியம்.
குழந்தைகளை வெளியே செல்வதால் ஏற்படக்கூடியஏற்படக்கூடிய தீமைகளைப் பற்றியும் கொஞ்சம் அலசுவோம்.
குழந்தைகள் கடத்தல் , நண்பர்களின் சகவாசம், சிறுபாலருக்கும் பாலியல் தொந்தரவுகள் , ட்ராஃபிக் பாதிப்பு என பாதுகாப்பின்மை அதிகமாக இருப்பதையும் பார்க்கின்றோம்.
அனைத்தையும் குறித்த விழிப்புணர்வு குழந்தைகளுக்கு புரிய வைத்தல், அறிய வைத்தல் அவசியம்.
அதே சமயத்தில் நன்மைகளும் பல உண்டு. குழந்தைகள் வெளியே சென்று வெளிஉலகத்தை பார்ப்பதால் ,
மன தைரியம், உலக நடப்புகள் , சொந்தபந்த உரையாடல், இயற்கையை ரசிக்கும் ரசனை, பேச்சுத்திறன், அறிவாற்றல் என அனைத்தும் தெரிந்து எதிர்காலத்தில் வாழ்வதற்குரிய வாழ்க்கைத்திறன் கிடைத்து வாழ்ந்து வாழ்க்கைக்குரிய அனைத்து சிறப்புகளும் பெற்ற இன்பம் தனை அடைவர்.
விட்டமின் இரும்புச்சத்து நிறைந்த பசுமையான கீரைகளில் எத்தனை பழுப்புகள் என்பதால் கீரையை உட்கொள்ளாமல் தவிர்க்கத்தான் முடியுமா !
அதுபோலதான் செல்போனில் தீயவை எனும் பழுப்புகள் சில இருந்தாலும் அவற்றை கலைந்து நல்ல தரமான தரவுகளை கண்டறிய செய்வது பெற்றோர்களின் கடமை ஆகட்டும் அதுவே கவனமாகட்டும்.
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், பணிவு அடக்கமும், பளிங்குபோல் மனமும் , தானம் செய்யும் சிவந்த கைகளும் , ஒப்பிலா நேர்மையும் ,திறன் படைக்கும் அறிவாற்றலும், சிந்திக்க வைக்கும் தெளிவாற்றலும் அனைத்து குழந்தைகளும் பெற்று இந்த மண்ணில் சாதனைகள் பல பெற்று, பூமித்தாய் பூரிப்போடு அகமகிழ பெருவாழ்வு வாழ்ந்து, வாழ்க்கையில் சிறப்பு காணட்டும்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha