ஆரத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மார்ச், 2019

கண்திருஷ்டி விலக ஆரத்தி சிறப்பு



ஆரத்தி எடுப்பதற்கான வழி முறைகள்



திருமண பந்தத்தில் கால் பதித்து -மழலையின் எச்சில் பட்டு எமை மறந்து தாய்மையின் சுவைதனிலே- கனிந்து உருகி  அனுபவத்தில் -ஆட்கொண்டு பழமாகி முதுமையின் படியேறி மலைத்து நின்று!தெய்வத்தின் அம்சமாக எமை நினைத்து -மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன் *


என வயதில் மூத்த பெண்மணிகள் ஆனந்தத்தோடு ஆலம் கரைத்து ஆரத்தி சுற்றுவதில் உள்ள சிறப்பினை காண்போமே..





திருமணம் எனும் பெரிய விசேஷம் ஆகட்டும் மற்ற எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் முடிந்தாலும் -ஆலம் கரைத்து ஆரத்தி எடுப்பது பொதுவாகவே நாம் செய்யக்கூடிய ஒரு சிறப்பு *

திருமணம் விரைவில் நடந்தேற சங்கடகரசதுர்த்தி விரதம்🌹🍀🌹👇👇


ஒரு அகன்ற தவளை சட்டியில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் பொடி சிறிது சுண்ணாம்பு சேர்த்து கரைத்து- நீர் சிவப்பாக மாறியதும் -அதன் மேலே வெற்றிலை வைத்து சூடம் ஏற்றி கண் திருஷ்டி எல்லாம் போக வேண்டும் என்பதற்காக ஆரத்தி சுற்றுகிறோம். என்பதுதான் ஆரத்தியின்  சிறப்பு *


முதல் சிறப்பு *
தெய்வத்திற்கு பிடித்தமான குங்குமத்தின் சிகப்பு நிறமாக ஆலத்தை கரைத்து
வழிவந்த குலம்* நற்பண்பு* அனைத்தும் என்றென்றும் நமக்குள்ளே ஐக்கியமாக வேண்டும் *என்பதற்காக வெற்றிலையின் மேல் சூடம் ஏற்றி ஆரத்தி சுற்றுகிறோம்.

சிறப்பு-2*
நல் மனம் -கல்மனம்
வன்மனம் -பொன்
மனம் -கெடு மனம்
என பலவகையான குணமுடையவர்கள் சூழலில் நடப்பதுதான் திருமணம் ,சுபநிகழ்ச்சிகள் . நல்ல மனமுடைய மனிதர்கள் நிறைந்த மனதோடு வாழ்த்தி
விட்டு போவார்கள் . அதே சமயத்தில் அறியாமல் தவறு செய்யும் மற்ற மனது உடையவர்கள் திருஷ்டி அனைத்தும் விலகுவதற்காக ஆரத்தி எடுப்பது  மிக மிக அவசியம் .

கல் உப்பினில்  செய்யக் கூடிய பரிகாரங்கள் 🌹🍀🙏🌹👇 👇
http://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html

எலுமிச்சை பழத்தில் ஐந்து விதமான பரிகாரங்கள்🌹🙏🙏🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/04/blog-post.html

சிறப்பு 3*

நம்மை சுற்றி நிலவக்கூடிய தோஷங்கள் விலகி- அனைவரும்

சூழ்ந்த சூழ்நிலையில் ஏற்படும் மாசுவில்  நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் -வாழ்க்கையில்  ஆரத்தி சுற்றுதல் சிறப்பு *


தெய்வத்திற்கு உகந்ததது தீயசக்தி நீக்கும் அது * நல்லோரைக் காக்குமது
இடித்து பொடி செய்து மேனியெங்கும் பூசுகையில் புத்துணர்ச்சி கொடுக்கும் அது*
வெள்ளிக்கிழமை வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்தால்
மகிமை பல அளிக்கும் அது *

என மஞ்சளில் மகத்துவத்தை புரிந்து கொண்டு தெய்வ காரியங்களுக்கு பயன்படுத்தி தெய்வத்தின் அருளை பெறலாம்.

எந்த சுபதினங்கள் வந்தாலும் மறக்காமல் ஆலத்தை பய பக்தியோடு கரைத்து
வயதில் மூத்த பெண்மணிகளின் கையால் ஆரத்தி சுற்றி
குடும்பத்தில் உள்ள கண்திருஷ்டியை விலக்கி வாழ்க்கையில் சிறப்பாக
வாழலாம்

வீடு மனை சொந்தமாக அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

10 புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.

📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde

Copy rights at balakshitha