உடல் பலத்தினை பெறுவதற்கு கேழ்வரகு கூழ்
குளு குளு வெயில் என சொல்வாரும் உண்டோ ! சுட சுட மழை என வியப்பாரும் உண்டோ! இல்லை என சொல்வீரோ ! ஐயமும் கொள்வீரோ !
சிந்திப்போம் சில நிமிடம் வாருங்கள் குளுகுளு வெயில் என்னும் உண்மையை உயிர்ப்பிப்போம் வாருங்கள்.
கேழ்வரகு மாவு தனில் செய்த கெட்டியான கூழ் தனிலே, உடைந்த மணிலா பயிறு பிடிதனை எடுத்து உடைத்தனை சேர்த்தனை ,அதில் கொஞ்சம் தயிர் தனை ஊற்றினை அப்பப்பா! ருசி தனை முகந்து குடித்தனை
குளு குளு வெயிலுக்கு ருசித்து, கூழ் தனை குடித்து முழு திருப்தி தனை நாம் பெறுவோம். அதுமட்டுமா !
சிறிது பனைவெல்லம் வாய்தனில் கடித்துகொண்டால் ருசி தனை நீரே சொல்வீர் .அப்பப்பா!
உடலுக்கு ஆரோக்கியம் என்னவென்று அறிந்து கொண்டால் நம் வீட்டில் கேழ்வரகு கூழ்தனை குழந்தை முதல் பெரியவர் வரை மெனுகார்டில் முதலிடம் என்று போடுவீரோ!
இதுவன்றோ உண்மை! உடல் சோர்வு மூட்டு, கை கால், உடல் வலி என அலுப்போடு சொல்வோரும் தொடர்ந்து கேழ்வரகு கூழோடு மணிலா பனைவெல்லம் என ருசித்து உண்டால் போயே போச்சு எனும் மந்திரத்தை சொல்வார். கேட்டு மகிழ்வீரே.
உடல் பலமாகும் .உற்சாகம் உருவாகும். அனைத்து ஆற்றலும் பெற்று புதிய பலம்தனை நீர் பெருவீர் என்பதையும் அறிவீரே.
அடுத்த மெனு கார்ட் பகுதியில் சந்திப்போம் காத்திருப்பீர்.
உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு மிளகு சாம்பார்
https://balakshitha.blogspot.com/2020/04/blog-post_16.html
Copy rights at Balakshitha