பூண்டு மிளகு சாம்பார்
உடல்வலி- சளி -சுரம் -பித்தம் -மயக்கம் வாய்க்கசப்பு அனைத்திற்கும் நிவாரணம் கொடுக்கக்கூடிய பூண்டு மிளகு சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் ..
ஐந்து பேர் சாப்பிடக் கூடிய அளவு முறை
துவரம் பருப்பு-1கப்
வெங்காயம் 2 பச்சை மிளகாய் 5 தக்காளி 1 நறுக்கி பூண்டு 10 பல்- சீரகம் ஒரு டீஸ்பூன்- வெந்தயம் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி அனைத்தையும் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும்.
வெந்த பருப்பை கரண்டியால் நன்றாக மசித்து- ஒரு கப் புளி தண்ணீர் அரை டீஸ்பூன் பெருங்காயப் பொடி- உப்பு -கறிவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கலாம்.
சிலருக்கு சாம்பார் கெட்டியாக பிடிக்கும் என்பதால் நம்முடைய விருப்பத்திற்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
சாம்பார் கொதித்ததும் அடுப்பை ஆப் செய்யலாம் .அருமையான பூண்டு மிளகு சாம்பார் ரெடி .
இந்த வாசனை வீடு முழுவதும் அப்படி ஒரு மணமாக இருக்கும் .சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட -அடுத்த ஒரு மணி நேரத்தில் நம் உடலுக்கு
நல்ல நிவாரணத்தை கொடுக்கக்கூடியது பூண்டு மிளகு சாம்பார் .
சமையல் செய்யும்போது ஒரு சின்ன குறிப்பு முறை ..
நாம் சமையல் செய்யும்போது அடிக்கடி வாயிலே குழம்பின் ருசியை கரண்டியால் கையால் குத்தி பார்க்கவேண்டும் ..
ஒரு பொருள் குறைந்தாலும் ருசி இருக்காது. உப்பு இல்லையா.. உப்புசேர்க்கலாம் .
காரம் இல்லையா.. பச்சைமிளகாய் 4 கட் செய்து போடலாம் .
அப்பொழுதும் ருசிஇல்லை என்றால் சிட்டிகை சர்க்கரை சேர்க்கலாம். குழம்பு பதம் அனைத்தும் நம்மிடம் தான் இருக்கின்றது. எது குறைவாக இருக்கின்றது என்பது நமக்கு நன்றாக தெரியும் .அதை தெரிந்து அந்தப் பொருளை சேர்த்தால் நாம் செய்யும் சமையல் அருமையாக சுவையாக அனைவரும் விரும்பி சாப்பிட ஏற்றவாறு அமையும்.
மணத்தோடு சமையல் செய்து மனமொன்றி பசியறிந்து குடும்பத்தோடு உணவு உண்டு வாழ்வில் பயனடைவோம்.
பூண்டின் மருத்துவ குணங்கள்🌺👇👇
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக