ஒருமுறை சைதன்யர் என்ற ஞானி கோவிலுக்கு செல்கின்றார்..
ஒருவன் பகவத்கீதை படித்துக்கொண்டிருந்தான்.அவனை பார்த்த ஞானி- அவனுடைய ஆர்வத்தை பாராட்டி விட்டு நகர்கின்றார்..
அவருடைய கண்ணில் மற்றொருவன் தென்படுகின்றான். அவனுடைய கையிலும் பகவத்கீதை புத்தகம் இருந்தது..
ஆனால் அதில் ஒரு பக்கம் கூட அவன் புரட்ட வில்லை. அவனுடைய கைகள் பகவத்கீதையின் மேல்பாகத்தை தொட்டுக் கொண்டிருந்தது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..
அவனிடம் சைதன்யர் "ஏனப்பா கீதையை புரட்டாமல் இருக்கின்றாய் ஆனால் உன் கண்ணில் கண்ணீர் வழிகின்றது -என்ன காரணம்"என்று கேட்கின்றார் அதற்கு அந்த பக்தன் பதில் சொல்கின்றான்...
" சுவாமி எனக்கு கீதையில்- ஒரு பொருள் கூட விளங்க வில்லை.. இருப்பினும் இந்த புத்தகம் என்னுடைய கையில் இருக்கும் போது என்னுடைய மனமானது நேர்வழிப் பாதையில் செல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. என்னுடைய மனக்கண்ணில் முன்பாக கண்ணபிரான் தேரில் அமர்ந்து கொண்டு அர்ச்சுனனுக்கு ஞானோபதேசம் செய்யும் காட்சி தென்படுகின்றது . அது பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதால் என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது என்கின்றான் பக்தன்.
இதுதான் உண்மையான பக்தி ஆகும் இந்த பக்தியை அனைவரும் உணர்ந்துவிட்டால் மனமானது நல்வழி பாதையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.
பக்தி முக்தி பெற இனிதான 5 வழிகள்..
சிறப்பு- 1 மனதை ஒருநிலை படுத்துங்கள்.
சிறப்பு -2 காம குரோதத்தை விலக்குங்கள் .
சிறப்பு-3 பொருளின் மீது பற்று இல்லாது இருங்கள்.
சிறப்பு -4 மௌனத்தை கடைபிடியுங்கள்.
சிறப்பு- 5 நடப்பது அனைத்தும் அவன் செயலே -என நினையுங்கள்.
குபேர எந்திர கோலம் படத்தில் இருப்பதைப் போல கட்டம் குங்குமத்தால் வரைந்து- ஸ்ரீ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதி பச்சரிசி மாவால் எண்கள் எழுதி எண்களுக்கு பக்கத்தில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து- உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்து- இந்த பூஜையை வழிபட வேண்டும் .
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மங்கள லட்சுமியை போற்றி
ஓம் தீப லட்சுமியை போற்றி
ஓம் திருமகளே போற்றி
ஓம் அன்ன லட்சுமியை போற்றி
ஓம் கிருக லட்சுமியே போற்றி
ஓம் நாராயணி லட்சுமியே போற்றி
ஓம் நாயகி லக்ஷ்மியே போற்றி
ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி என சொல்லியவாறு உதிரிபூக்களால் -குபேர எந்திரத்தின் மேலே அர்ச்சனை மலர்களை தூவி வீட்டில் செல்வ கடாட்சம் பெருக வேண்டும் -என்று மனதார வேண்டி பூஜை செய்வது மிக மிக சிறந்தது.
குபேரனை வேண்டி தீபாரதனை காட்டி பூஜையை சிறப்பாக முடித்தபின் அடுத்த நாள் குபேர எந்திரத்தில் வைத்த நாணயங்களை எடுத்து பத்திரமாக வைத்து விட்டு ஈரத்துணி கொண்டு எந்திரம் வரையப்பட்ட பலகையை நன்றாக துடைத்துவிட்டு அந்த நாணயங்களை சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போடுவது சிறப்பு.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் தேவராஜபெருமாளின் பின்புறம் பஞ்சலோக பல்லிகளாக தங்க பல்லி வெள்ளி பல்லிகளை பக்தர்கள் தொட்டு வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையிலே சிறப்பை பெறலாம்.
அறியாது பிழை செய்தாலும் சாபத்திற்கு ஆளாக வேண்டும் என்று விதி இருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது ..விதியை மாற்றும் சக்தி உண்டா !என கேட்பின் தெய்வத்தின் நம் மீது நம்பிக்கை வைத்து- பாவத்திற்கு பரிகாரம் தேடினால் நிச்சயமாக முடியும் .அதே விதியை மாற்ற யாராலும் முடியாது என்று விட்டுவிட்டால்- துன்பத்தோடு உழன்று காலத்தை கழிப்பது தவிர வேறு வழி கிடையாது ..ஆனால் அந்த விதி பயனை மாற்றும் தீர்வை கண்டுபிடித்துவிட்டால் -இன்பத்தோடு உழன்று காலத்தை கழித்து இனிதான வாழ்க்கை வாழ்ந்து -வாழ்ந்த பயனை அடையலாம் அல்லவா!
நம் முன்னோர்கள் செய்த பாவம் நம்மையே சாரும் ..அறியாது பிழை செய்தாலும் அதற்கான பலனையும் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும் ..ஆனால் தெய்வத்தின் அருளால் பாவ விமோசனம் பெற்ற தெய்வீக பதவியை அடைந்த பஞ்சலோகம் பல்லிகளின் வரலாறு அறிவோமே..
சிருங்கி முனிவர்களின் இரண்டு பிள்ளைகளும் -கௌதம முனிவரின் சிஷ்யர்களாக தத்தம் பணிகளை சிரத்தையோடு -தம் கடமையை இனிதே செய்துவர -நடந்த ஒரு சிறு தவறினால் விபரீதம் நடந்ததுவே. ஒருநாள் பூஜைக்கு கொண்டுவந்த தீர்த்தத்திலே இறந்த பல்லிகள் கிடக்கக் கண்டு -கோபமுற்ற முனிவரோ கொடுத்தாரே சாபம் ஒன்று ..அடுத்த கணம் பல்லிகளாக உருமாறிய சிஷ்யர்களும்" அறியாது தவறு இழைத்தாலும் குற்றம் குற்றமே.. இருந்தாலும் பாவத்திற்கு விமோசனம் கொடும் ஐயா" என இருவரும் வேண்ட -முனிவரும் மனமிரங்கி "காஞ்சிபுரம் செல்க வரதராஜ பெருமாள் கோவிலில் மோட்சத்திற்கு வழி கிடைக்கும் "என்று கூற ..
சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇
பல்லிகளும் ஊர்ந்தவாறே காஞ்சிபுரம் சென்று வரதராஜ பெருமாளின் பாதம் தொட்டு பாப விமோச்சனம் தருமாறு வேண்டினரே.. மூலவர் பெருமாளும் காட்சி தந்து கிரக தோஷத்தினால் சாபம் பெற்ற சிஷ்யர்களுக்கு மோட்சத்தை அருள்கின்றார் ."உங்களுடைய சரீரம் எமக்கு பின்புறம் பஞ்சலோகத்தில் இருக்கப் பெற்று -என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் மிகுந்த பக்தியோடு உங்களையும் தொட்டு வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கையிலே சிறப்பை அடைவார்கள் "எனக் கூற -அதன்படி இன்றும் பஞ்சலோகத்திலே சிஷ்யர்கள் இருவரும் தங்க வெள்ளி பல்லிகளாக காட்சி தருகின்றனர். பெருமாளை தரிசித்து தங்க -வெள்ளி பல்லிகளையும் தொட்டு வணங்கி விதிப்பயனால் ஏற்படும் கிரக தோஷங்களை தெய்வீக அருளால் மாற்றி வாழ்க்கையில் சிறப்பை காணலாம்.
தோஷங்கள் கண்திருஷ்டி மனக்குழப்பம் அனைத்தும் விலகி வாழ்வினில் மகிழ்ச்சி நிலவ கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇
மிகவும் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள தெய்வீகமான பஞ்சலோக பல்லிகளை தொட்டு வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள் ..
சிறப்பு -1 ஜாதகத்தில் உள்ள கிரக தோஷம் அனைத்தும் நீங்கும் .
சிறப்பு- 2 துஷ்ட சக்திகள் விலகி புதிய தெம்பு கிடைக்கும் .
சிறப்பு -3 நம்முடைய உடல் -மனம் உயிர் அனைத்திற்கும் பாதுகாப்பு கவசம் அளிக்கும் .
சிறப்பு- 4 தொட்டு வணங்கும் போது தெய்வீக மின் அதிர்வலைகளானது நல்ல சிந்தனையை தூண்ட செய்யும்.
சிறப்பு- 5 தெய்வத்தின் அனுகிரகம் கிட்டும்.
என்பதை அறிந்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கு சென்று -மூலவர் தேவராஜ பெருமாளை தரிசித்து பின்புறம் உள்ள பஞ்சலோகத்தினால் ஆன தங்க பல்லியையும் வெள்ளி பல்லியையும் வணங்கி கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்
அத்தி வனத்திலே அஸ்வமேத யாகம் நடத்துவது பிரம்மனே -என அறிந்து தம்மை அழைக்காத ஏற்பாடு செய்தது தவறு அல்லவா! கோபமுற்றாள் சரஸ்வதி- எழுந்தாள் வேகவதி எனும் ஆறாக வளைந்து நெளிந்து ஓடி வருகின்றாள் யாகத்தை அழிப்பதற்கு ..என உணர்ந்த மூவுலகத்தையும் காக்கின்ற பெருமாளோ யாகத்தீயில் இருந்து எழுகின்றார்.
பெரும் ஆபத்திலிருந்து அஸ்வமேத யாகம் நடத்தும் பிரம்மனை காப்பாற்ற முடிவெடுத்தார் .
அடுத்த நிமிடம்.. வேகவதி ஆற்றின் குறுக்கே ஆனந்தமயமான பள்ளிகொண்ட பெருமாளாக சயன கோலத்தில் பெருமாளை கண்ட கலைமகள் ...
கோபம் தணிந்து தான் வந்த பாதையை மறந்து வேறு திசை திரும்புகின்றாள்.
சயன கோலத்தில் பெருமாள் அழகைக் கண்ட பிரம்மன் அந்த கண்ணுக்கினிய காட்சிதனை அனைவருமே கண்டுகளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
உடனே பிரம்மன் தன் யாகத்தை காத்த பெருமாளின் உருவம்தனை அத்தி வனத்திலே அத்திமரம் கொண்டு மிக அழகாக வடிவமைப்பதற்காக -வரவழைத்தார் தேவலோக சிற்பி தனை..
விஷ்வகர்மா எனும் அற்புதமான கலைஞரின் கலைவண்ணத்திலே - எம்பெருமான் அவதரித்தார் அத்திவரதர் ஆக எனும் அற்புத வரலாறே அத்தி வரதர் வரலாறு .
யாகதீயிலே உருவாகி -அலை புரண்டு ஓடி வரும் ஆற்றினிலே குளிர்வாகி -அத்திவரதர் எனும் திருநாமம் பெயராகி -அனந்த சரஸ் திருக்குளத்தினிலே ஐக்கியமாகி-
40 வருடத்திற்கு ஒருமுறையே காட்சி தருவேன் என்ற அசரீரி ஒளியாகி பக்தர்களின் மனதில் ஒன்றாகி விட்டார் அத்திவரதர் .
40 வருடத்திற்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து அத்தி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் -24 நாட்கள் சயனித்த கோலத்திலே-
24 நாட்கள் நின்ற கோலத்தில் என காட்சி தருகின்ற எம்பெருமானின் தரிசனம் காண கிடைக்காத பேரின்பம் .
அடுத்த 24 நாட்கள் சயனித்த கோலத்தில் என காட்சி தருகின்ற எம்பெருமானின் தரிசனம் கோடி கோடி புண்ணியம்
அனந்த சரஸ் திருக்குளத்தில் அத்திவரதருடைய திருமேனி யாருடைய பாதமும் பட்டு கலங்க படாத வண்ணம் சுற்றிலும் கம்பிகளால் மதில்சுவர் எழுப்பப்பட்டு இருக்கின்றது.
அந்த குளத்தின் அருகில் சென்று நிற்கின்ற அந்த நிமிடத்தில - நம்முடைய உடலும் மனமும் புனிதமாக அந்த அற்புதமான நிகழ்வு தன்னை நாம் அறிந்திடுவோம் அக்கணமே ..
அனைவருடைய வாழ்க்கையிலும் குளிர்ச்சி தந்து காத்து அருள்வாய் வெங்கடேசா பெருமானே கோவிந்தா பரந்தாமா கோவிந்தா என அழைத்து அகக்கண்ணால் இரண்டு மண்டபத்திலே...
ஒரு மண்டபம் நீராழி மண்டபத்தில் அடியிலே சயனக் கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதரை ஆனந்தமயமாக கண்டு ரசிப்பதற்கு பாக்கியம் கிடைப்பது என்பது அவன் அருள் பெற்றோர்களுக்கு சாத்தியமே.
நவராத்திரி விழாவில் மிக சிறப்பு அம்சம் 9 படிகள் கொண்ட கொலு.. எந்த விசேஷத்திலும் இல்லாத சிறப்பு .
ஐதீகமாக குலவழக்கத்தின்படி தொன்றுதொட்டு கொலுவைத்து படைப்பது என்பது உண்டு.. அதுபோல ஆர்வத்தின் காரணமாக கொலு அமைத்து வழிபாடு நடத்துவது என்பதும் சிறப்பு.
கொலு வைப்போர் நவராத்திரி ஒன்பது நாட்களும் - குழந்தைகள் -கன்னிப் பெண்கள் சுமங்கலிப் பெண்கள் என அனைவரையும் இல்லத்திற்கு அழைத்து தெய்வீக பாடல்கள் ஒலிக்க கொலுவை மிக அழகாக அலங்கரித்து - குழந்தைகள் பாட்டு பாடி நடனம் ஆடுவது -பிரசாதம் சுண்டல் செய்து படைத்து வழங்குவது தாம்பூலம் கொடுத்து பூஜையை சிறப்பாக செய்வது என மிக அழகாக மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இந்த விசேஷத்தை செய்வார்கள்.
அனைத்து அம்மன் கோவில்களிலும் கொலு வைத்து இந்த நவராத்திரி மிக அழகாக நடைபெறும்.
கொலுவின் முதல் படியில் ஓரறிவு கொண்ட-மரம் செடி கொடிகள் 2வது படி -சங்கு நத்தை ஆமை 3வது படி ஊர்வன 4 வது படி-பறப்பன 5வது படி --ஆடு மாடு சிங்கமென ஆறாவது படி -ஆறறிவு கொண்ட மனிதன் என ஏழாவது படி -ரிஷிகள் எட்டாவது படி -தேவர்கள் ஒன்பதாவது படி முடிவிலே தெய்வீக பொம்மைகள் என்பதே கொலுவின் சிறப்பான அமைப்பு கொண்ட அம்சமாகும்
ஒரு குழந்தை தன்னுடைய தாயின் அரவணைப்பில் மெல்ல மெல்ல அனைத்தும் கற்றுக் கொள்வது போல -ஒன்றுமறியாது தவறுகள் செய்கின்ற நம்மை நமக்கெல்லாம் தாயாகிய அம்பிகை அவள் படிப்படியாக முன்னேற்றம் கொடுத்து முடிவிலே தெய்வீக பாதையில் அழைத்துச்சென்று நமக்கெல்லாம் அருள் புரிகின்றாள் .
எனும் சிறப்பே நாம் அறிந்துகொள்ள கூடிய தத்துவம் ஆகும்.
வாழ்க்கையில் அனைத்து துன்பங்களையும் மறந்து -பக்தி ஒன்றையே மனம்நினைத்து ஆடம்பரத்தை தவிர்த்து -அம்மனின் அருள் கொண்ட பாடல்கள் பாடி ஆனந்த பரவசம் கொண்டு கோவில்களுக்கு சென்று அம்மன் முகம் கண்டு -கொலுவை தரிசித்து அவளையே சரணடைந்து இந்த ஒன்பது நாட்களும் அவள் புகழ் பாடி வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் சிறப்புகளையும் அடைந்து வாழ்க்கை பயனை அடைவோம்.
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா -திருமகள் மனம் நாடும் சீனிவாசா- நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா -மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா -உரைத்தது கீதை எனும் தத்துவமே -அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே .
நாராயணனின் இருப்பிடமே திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கட மலை
கோடி கோடி மக்கள் சென்று எம்பெருமானைத் தரிசித்து வணங்கி புண்ணிய மலை .ஏழு மலைகளை சுற்றி வந்து அந்த பெருமாளை தரிசிக்கும் புண்ணிய மலை.
நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீர்க்கும் புண்ணிய மலையும் திருவேங்கட மலையே. தரிசிக்கும்போது சாந்தமான ஒரு அமைதியை கொடுக்கும் ஒரு அற்புதமானமலை திருவேங்கட மலை .
கீழ்திருப்பதி மேல் திருப்பதி என புகழ் பெற்ற ஸ்தலமாக உருவாகி இருப்பது தனி சிறப்பு.
திருவேங்கட மலையில் கோவிந்தனுக்கு விரதமிருந்து கீழ்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு செல்கின்ற பொழுது மனம் முழுக்க முழுக்க நாராயணா நாராயணா என்று புண்ணிய நாமத்தை உச்சரித்துக் கொண்டே செல்கின்ற பக்தர்களை அன்போடு ஆட்் கொள்கின்றான் எம்பெருமான்.
குளிர்காற்றும் -மலையில் சூழலும் மலையின் இயற்கையின் அழகு கொண்ட மலைக்கு நாம் செல்லும்போது ...
நம் துன்பங்கள் அனைத்தும் விலகி புத்துணர்ச்சி பெற்ற மனிதனாக நம்மை மாற்றும் என்பது திருப்பதி மலையின் மகத்துவம் தனித்துவம் அதுவே நமக்கு எம்பெருமான் கொடுத்த மாபெரும் பாக்கியம்.
கோவிந்தனை நாம் தரிசிப்பது என்பது நாம் நம்முடைய வாழ்க்கையிலே பெற்ற ஒரு பெரிய வரமாகும் .கோவிந்தனை தரிசிக்கும் பொழுது ஏற்படும் அந்த இன்பமே என்றும் நிலையானது தெய்வீகமானது
மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.பரம கதியை கொடுக்கக் கூடியவன் நானே -என்ற அந்த புன்னகை நிறைந்த முகத்தோடு காட்சி தரும் எம்பெருமானின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது.
"வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் உம்முடைய பாதங்களை சரணம் "என சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பெருமாள் தரிசனம் கிடைத்ததை நினைத்து மனமோ பக்தியால் நிறைந்திருக்க..
கண்களில் இருந்து கண்ணீர் மல்க நின்று கொண்டிருக்கும் அந்த கணபொழுதுதான் இறைபக்தி என்பதாகும்.
எம்பெருமானுக்காக பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படும் விழா பிரம்மோற்சவ திருவிழா.
திருப்பதி தலத்தில் புரட்டாசி மாதம் 9 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த பிரம்மோற்சவத்தின் பொழுது-
ஹம்ச வாகனம் -சிம்ம வாகனம் அனுமந்த வாகனம் -புஷ்பவனம்
கருட வாகனம்- முத்துப்பந்தல் வாகனம் -ரிஷப வாகனம் என்று பல வாகனங்களில் வெங்கடேச பெருமாள் எழுந்தருளி காட்சி தருகின்றார்
அப்படிப்பட்ட தரிசனங்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும்.
குழந்தைகள் நல்ல அறிவாற்றல் பெற்று படிப்பதற்கு புதன் நவக்கிரக வழிபாடு
முத்து பந்தல்வாகனத்தில் சீனிவாச பெருமாள் காட்சி தருகின்ற போது முத்து எப்படி வெண்ணையாக உள்ளதோ அதுபோலவே பக்தர்களின் கூட்டமும் வெண்மையாக அதாவது தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார் .
அந்த பக்தர்களின் மனதை தான் நான் விரும்புகின்றேன் -என்று கூறுகின்றார் .
நல்ல மனதோடு- நல்ல பண்போடு -மனம் நிறைந்த பக்தியோடு -எனக்கு சாத்துகின்ற துளசிமாலையை எனக்கு மிகவும் பிடித்தமானது -அப்படிப்பட்ட தூய மனம் உடைய பக்தர்களே மனித பிறவியின் பயனை அடைந்து கடைசியில் தம்மை வந்து அடைவார்கள் -என்பதே பெருமானுடைய வாக்கு.
திருநாமம்
கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்தால் போதும் உடைந்த மனமும் உவகை கொண்டு எழுந்து விடும்
பகவத்கீதை
திரு கண்ணபிரான் திருவாய் மலர்ந்து அருளிய பகவத்கீதை நன்னெறி நூலை கண்ணால் பார்த்தாலே போதும்.. கவலை கொண்ட மனதில் புத்துணர்ச்சி புகுந்துவிடும் .
பக்தி
பக்தி எனும் சுவாசத்தை நுகர்ந்தாலே போதும் -சூரிய பலம் சந்திர பலம் சகல பலமும் கூடிவிடும் .
சகஸ்ரநாமம்
பெருமாளின் சகஸ்ரநாமம் எனும் இனிய கானத்தை கேட்டாலே போதும் சகல ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் பெற்ற பலன் கிடைத்துவிடும்.
மனம்
கண்ணனின் பாதத்தினை கரங்களால் தொட்டு வணங்க வேண்டும் என மனம் நினைத்தாலே போதும் நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் .
ஓம் வேங்கடேசாய
நம ஹ
என் கண்ணை நான் மறந்து -உன்னிரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு -நின் கண்ணால் புவியெலாம் நீயெனவே நான்கண்டு நிறைவு கொண்டேன் -கோவிந்தா எனக்கு மோட்சத்தை அருள்வாயே.
சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇
புரட்டாசி மாதம் சிறப்புக்குரிய மகாளய அமாவாசை அடுத்து பிரதமை தொடங்கி ஒன்பது நாள் அம்பிகையை நினைத்து வழிபட கூடிய ஒரு விசேஷமான தினம் தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாளும் அம்மனை மூன்று ரூபங்களாக பார்க்கிறோம்.
முதல் 3 நாள் துர்க்கையாக அதற்கு அடுத்த 3 நாள் மகாலட்சுமி ஆக அடுத்த 3 நாள் சரஸ்வதி ஆக மூன்று ரூபங்களில் அம்பாள் காட்சி தருகின்றாள்.மூன்று ரூபங்களில் காட்சி தரும் அவளே 9 ரூபங்களாகவும் இந்த நவராத்திரியில் பார்க்கலாம்.
மகேஸ்வரி- கௌமாரி -வராகி மகாலட்சுமி- வைஷ்ணவி இந்திராணி -சரஸ்வதி -நரசிம்ஹி சாமுண்டி என ஒன்பது ரூபங்களில் காட்சி தரும் அதே அம்பிகையே நூற்றியெட்டு திருநாமங்களாலும் நாம் இந்த நவராத்திரி பூஜையில் போற்றுகின்றோம் .
இப்படி பல ரூபங்களில் காட்சி தந்தாலும் சக்தி என்பவள் ஒன்றுதான் .அனைத்திற்கும் ஆதாரமான சக்தி என்பதும் ஒன்றுதான் .
இந்த பூமி கடல் காற்று அனைத்தும் தமக்குள் அடக்கமாக தாமே ஆதி பராசக்தியாக அன்னையின் அம்சமாக தாய்மையில் சிகரமாக இந்த பிரபஞ்சத்தையே ஆளக்கூடியவள்தான் அன்னையாய் திகழும் அம்பிகையே.
அம்பிகை பல ரூபங்களில் காட்சி தந்து- பல சுவாரசியமான விஷயங்கள் பெரியவர்கள் நிறைய சொல்லி இருந்தாலும் -ஒரே சக்தி ரூபம் கொண்டவள்தான் அம்பிகை. நம்முடைய உடம்பில் உறுப்புகள் பல இருந்தாலும் உடல் என்பது ஒன்றுதான் -மனம் என்பது ஒன்றுதான். இந்த மனமானது சக்தி சொரூபமான காட்சிதரும் அம்பிகையை சரணாகதி அடைந்து அவளுடைய அருளை முழுமையாக பெற வேண்டும் என்பதுதான் நவராத்திரியின் சிறப்பு.
அம்பிகையை சரணாகதி அடைந்து அவளுடைய அருளை பெறுவதற்கு நமக்கு பல நல்ல விஷயங்களையும் நல்வழி பாதையையும் அமைத்துக் கொடுப்பதுதான் இந்தநவராத்திரி வழிபாடு .
உடல் சோர்வை நீக்கி -அக இருளை நீக்கி உற்சாகம் கொண்டு தேவியின் திருநாமம் பாடி ஆனந்தத்தோடு நவராத்திரி விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் சிறப்புகள்..
வாழ்க்கையே மலர செய்திடுவாள்.
துன்பங்கள் அனைத்தும் நீக்கிடுவாள். மங்கலங்கள் பல அளித்திடுவாய் செல்வங்கள் சேர்த்திட கை கொடுப்பாள். அமைதி காத்து அருள்புரிவாள் அம்பிகையே.
இந்த நவராத்திரி எனும் இந்த ஒன்பது நாட்களிலும் விரதம் இருந்து நல்ல முறையில் வழிபட்டு- பல நல்ல விஷயங்கள் அறிந்து அவளுடைய அருளை பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
ஆனந்தத்தோடு விநாயகருக்கு புகழ்மாலை சூடுகின்ற பாடல் வரிகளின் விளக்கத்தை காண்போம்...
ஐந்து கரத்தனை உடையவனே! ஆனைமுகத்தனை கொண்டவனே! முழுமதியின் அரைவட்ட பிறை போன்ற அழகான வயிற்றினை கொண்டவனே -நந்திதேவர் பாசம் கொண்ட மகனாக திகழ்பவனே! ஞானமெனும் சிறந்த அறிவு படைத்தவனே -உமையே எம் மனதில் என்றென்றும் நினைத்து போற்றுகின்றேனே! எம்பெருமானே உமையே வணங்குகின்றேன்.
ஐந்து கரத்தினை உடையவன் ..
பக்தர்களுக்கு அபயம் அளிக்கின்ற கை ஒன்று- பகைவர்களை ஒடுக்க அங்குசம் ஏந்திய கையோ இரண்டு-தீயவரை அழிப்பதற்கு பாசக் கயிற்றினை பிடித்த கை மூன்று பிடித்தமான மோதகத்தையுடைய கையோ நான்கு -அமுதம் போன்ற திகட்டாத வாழ்வுதனை கொடுப்பதற்கு அமுத கலசம் ஏந்திய துதிக்கை ஐந்து- என மிக கம்பீரமான தோற்றத்தை உடையவனாக விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி அன்று ஒருமுறை பாடி ஒரு கணம் விநாயகரை நினைத்தாலே போதும் தீவினைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஆனந்தம் நிலைக்க செய்வான் கணபதியே.அன்றைய களிமண் பிள்ளையார் வைத்து படைப்தற்கான காரணத்தை அறிவோம்...
மனித பிறவி என்பது கடவுள் கொடுத்த வரமன்றோ! இனிதான இந்த பிறவிதனில் - நாம் அகங்காரம் ஆணவம் இன்றி எளிமை எனும் பண்பு கொண்டு நல்லொழுக்கம் ,இறை பக்தியோடு வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைந்து -முடிவில் மண்ணிலே இரண்டற கலந்து என்னோடு ஐக்கியமாகுங்கள். உங்கள் அனைவரையும் மோட்சத்திற்கு நான் அழைத்து செல்கின்றேன் எனும் தத்துவத்தை விநாயகப் பெருமான் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார்.
வீட்டிற்கு அழைத்து வரும் களிமண் பிள்ளையாரின் சிறப்பு அம்சங்கள்..
வீட்டில் செல்வவளம்- பொருளாதார சுபீட்சம் வாழ்க்கையில் நிலையாக தங்குவதற்கு வீட்டினில் படைப்பதற்கு அமர்ந்தபடி காட்சி தரும் விநாயகர் சிலை வாங்குவது மிக சிறப்பு.
தொழில் வளம் பெருகி நல்ல முன்னேற்றத்தை காண்பதற்கு நாம் தொழில் செய்யும் அலுவலகத்தில் படைப்பதற்கு நின்ற கோலத்திலே காட்சி தரும் பிள்ளையார் வாங்கி வழிபடுவது மிக சிறப்பு.
துன்பங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கை சுகம்பெற - காரிய சித்தி பெருக- நினைத்தது நிறைவேற இடதுபுறம் தும்பிக்கை திரும்பிய நிலையில் இருக்கும் பிள்ளையாரை வாங்கி வந்து விநாயக சதுர்த்தி அன்று வழிபடுவது மிக மிக சிறந்தது.
விநாயக சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையார் வைத்து வழிபட்டு சுபிட்சமான வாழ்க்கை பெற்று விநாயக பெருமான் அருள்தனை பெறுவோம்
திருமணத்தின்போது மாங்கல்யம் செய்வதற்கான ஐதிக முறைகள்🙏🌹👇👇👇
ஓம் ஸ்ரீ குல தேவதா நமஹ *தொன்று தொட்டு வரும் குல தெய்வத்திற்கு என் நமஸ்காரம்.
ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ* சிறுவயது முதலே நமக்கு பிடித்தமான தெய்வம் என்பது நம் மனதில் கண்டிப்பாக இருக்கும்.. முருகபெருமான்-ஏழுமலையான் அம்மன் அல்லது மற்ற தெய்வங்களாக இருந்தாலும் அந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்ற ஸ்லோகமே.. ஓம் ஸ்ரீ இஷ்ட தேவதா நமஹ.
ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ* நம் வாழ்வில் பல நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் எந்த தெய்வத்தை வணங்கையிலே நிகழ்வு நல்லதாக நடந்தது என நினைத்தால் அந்த தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொல்கின்ற ஸ்லோகமே.. ஓம் ஸ்ரீ அதிர்ஷ்ட தேவதா நமஹ.
இந்த ஸ்லோகம் தினம் நாம் சொல்லி வேண்டினால் குலதெய்வத்தை தினமும் வணங்கிட - சக்தி நிறைந்து- நம்முடைய குறைகள் அனைத்தும் நீங்கிவிடும் .
திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு 🌹🍀🙏👇
இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
விரும்பினால் .கொரியரில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்கு வரலட்சுமி பூஜை வழிபாடு
வாழ்க்கை சிறப்பதற்கு- மாங்கல்யம் நிலைப்பதற்கு -மனமெல்லாம் மகிழ்வதற்கு -மங்கலம் அமைவதற்கு -குலம் தழைப்பதற்கு இறைவனை வேண்டி வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்துப் படைப்பது சிறப்பு.
நோன்பு என்பது மிகவும் ஆச்சரியமாக -பரிசுத்தமாக -உடலும் மனமும் தெய்வத்தோடு ஒன்றி படைக்கக்கூடிய ஒரு நோன்பு விரதம்* எந்த ஒரு புனிதமான விசேஷ தினத்திலும் கலசம் வைத்து படைக்கும் போது அங்கே மகாலட்சுமி வந்து அமர்ந்து அருள் புரிகின்றாள்.
நோன்பு எடுக்கும் பெண்கள் திருமணத்தன்று கட்டுகின்ற பட்டுப்புடவை தழைதழைக்க
தலை நிறைய மல்லிகை சரம் நிறைய- நெற்றி நிறைய குங்குமத்தோடு- இந்த நோன்பு எடுத்தல் சிறப்பு.
வாழ்வில் வளம் பெற தினமும் சொல்லக்கூடிய குலதெய்வ வழிபாட்டு ஸ்லோகம் 🙏🌹🍀🌹🌹🌹👇👇👇👇👇http://balakshitha.blogspot.com/2019/08/blog-post.html
வாழ்வின் தலைவிதியை மாற்றக்கூடிய மூன்றாம் பிறை வழிபாடு 🌹🍀🌹🙏🌹👇http://balakshitha.blogspot.com/2020/07/blog-post_19.html
தெய்வீக சிறப்பு வாய்ந்த நோன்புக்கான கலசம் வைத்து சுமங்கலி பெண்கள் மனதால் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கும் முறையை பற்றி அறிவோமே ..
'தெள்ளத் தெளிகின்ற பால் போன்ற மனம் கொண்டு -மனம் முழுதும் நின் அகம் கொண்டு ஆழ்மனதில் நெய்யூற்றி ஏற்றுகின்ற தீபத்திலே -ஒளிர்கின்ற ஒளிதனிலே முழுதாக நிறை கொண்டு ஏற்றுக் கொண்டேன் என் மகளே' தீர்க்க சுமங்கலி பவ ' என உன் பார்வை உணர்த்தும் அம்மா "அதை நினைத்து நிகழ்கின்றேன் என் தாயே என ஆனந்தத்தோடு ஐந்து முக விளக்கேற்றி..
'வாழையடி வாழையாக குலம் தழைப்பதற்கு அருள்புரிவாயே என் தாயே ' என வேண்டி நுனி வாழை இலை அதாவது தலை வாழை இலை வைத்து ..
'அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று அன்னமிடும்
என் கைகளுக்கு -இல்லை என்று சொலாது அனைவருக்கும் மனமுவந்து அளிப்பதற்கு அளவில்லாத பொருளை கொடுப்பாயே என் தாயே' -என வேண்டி படி நிறைவாக வாழை இலை தனிலே வெண்மையான பூ போன்ற பச்சரிசி தனையிட்டு ..
வெள்ளி சொம்பு -பித்தளை சொம்பு அல்லது பஞ்சலோக சொம்பு என வசதிக்கேற்றவாறு சொம்பு தனிலே(நம்மை ஆழ்ந்து பார்க்கும் தேவியானவள் சொம்பின் தரம் பார்ப்பதை விட நம் மனதின் ஆழம் பார்ப்பவள் ஆகின்றாள் என அறிந்து ) அவளுக்கு பிடித்தமான வளாக..
கங்கை நீர் -காவிரி நீர் என புனிதமான நீர் போன்று என் வாழ்க்கையில் பாவங்கள் அனைத்தும் நீங்கி புனிதமான வாழ்க்கையாக அமைவதற்கு அருள் புரிவாயே என் தாயே- என வேண்டி சொம்பு நிறைய சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நீர் நிறைத்து ..
செல்வகடாட்சம் நிறைந்த வாழ்க்கை என்றும் நிலவ அருள் புரிவாயே என் தாயே என வேண்டி அதனுள் தங்க காசு - வெள்ளி காசு அல்லது ஒரு ரூபாய் நாணயம் அந்த நாணயத்தை சொம்புதனிலே இட்டு ..
மா என்றால் பசுமை- துன்பம் துயரம் ,கலக்கம் ,அவை அனைத்தும் நீங்கி மாவிலைபோன்று பசுமை நிறைந்த இனிமையான வாழ்க்கையை கொடுக்குமாறு அருள் புரிவாயே என் தாயே என வேண்டி மாவிலை 5 -9 அல்லது 11 இலைகளை கொண்ட குருத்தை- நீர் நிரம்பிய சொம்பில் இட்டு ..
மங்கல நிகழ்ச்சிக்கு தேங்காய்க்கு முதல் பங்குண்டு -தேன் போன்ற காய் தேங்காய் ..தேன் போன்ற தெய்வ தன்மை கொண்ட நீரை உள்ளடக்கி தேங்காயை சுற்றிலும் பஞ்சு கொண்டு கட்டி காப்பது போன்று ..
தெய்வ அம்சம் கொண்ட-புனிதமான வாழ்க்கையை கட்டிக் காக்கும் பொறுப்பை முழுமையாக ஏற்று வழி நடத்துகின்ற பாக்கியத்தை கொடுத்த என் தாயே - தேனினும் இனிதாக அதை நிறைவோடு செய்வதற்கு அருள்புரிவாயே அம்மா 'என வேண்டி
தேங்காய்க்கு மஞ்சள் குழைத்து பூசி குங்குமம் இட்டு மாவிலையின் மேல் தேங்காயை வைத்து ..
மகிழ்ச்சி -மணம் -வாசம் -அழகு நிறைந்த மல்லிகை மலரோடு வண்ண மலர்கள் கொண்ட மாலையை தேங்காயின் மேல் சாற்றி வழிபடுதலே நோன்பின் சிறப்பு.
செல்வ செழிப்பும் பெற்று வீடு மனை வாங்கும் யோகம் பெற 🙏🌹🍀🌹👇👇👇http://balakshitha.blogspot.com/2020/02/blog-post_28.html
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்பதால் ஒன்பது நூல் இழைகளால் ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் மங்களத்தின் அம்சமாக கலசத்தின் மேல்வைத்த படைத்து வலது கையில் அணிந்து கொள்வது மிக சிறப்பு..
கல் உப்பிலே 5 விதமானபரிகாரங்கள்
பார்த்து பயன்பெறுங்கள்🌹🍀🌹👇👇👇
சுமங்கலி பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்று குங்கும பஞ்சதசி பாமாலை பாடி குங்குமத்தால் அர்ச்சனை செய்து மகாலட்சுமியின் மனதை குளிர வைத்து அவளுடைய அனுக்கிரகம் பெற்று - பெரியவர்களின் வாழ்த்து பெற்று மகிழ்ந்து வேண்டிய பலனை அடைவோமே.
பிரபஞ்ச சக்தி கொண்ட திருமேனியனாய் காட்சி தரும்
முருக பெருமானை திரவியங்களால் அபிஷேகம் செய்கின்ற அற்புத காட்சியை
அனுதினமும் நாம் கண்டு மெய் உருகி வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள்*