ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி -தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் *
மூன்று உலகத்தையும் -ஆளுகின்ற எம்பெருமான் நாராயணன்*
ஆதிசேஷன் படுக்கையில்
பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாக*
வைகுண்ட வாசனாக *
ஷ்ருஷீ கேசனாக*
தசரதன்மைந்தனாக*
சீதா மனோகரனாக *
நரசிம்மவாகனாக*
வராக மூர்த்தியாக *
காட்சி தருகின்றார் .
உலக மக்களை காப்பாற்றுவதற்காகவும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும் ..
மகாவிஷ்ணு பலவிதமான அவதாரங்களை எடுக்கின்றார்.
தாம் அவதாரம் எடுப்பதற்கான காரணத்தை பற்றி தம்முடைய கிருஷ்ண அவதாரத்தில் மிக அழகாக அவரே எடுத்துரைக்கின்றார்..
யதா யதா தர்மஸ்ய
க்லானிர்பவதி பாரத
அப்யுத்தாநாம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம்*
எப்போதெல்லாம்
தர்மத்திற்கு குறைவு
வருகின்றதோ ..
எப்பொழுதெல்லாம் அதர்மத்தின் கை ஓங்குகிறதோ ..
அப்போதெல்லாம் கிருஷ்ணன் *ஆகிய நான் தோன்றுகின்றேன்.
அதர்மத்தை ஒடுக்கின்றேன் தர்மத்தை நிலைநாட்டுகின்றேன்
என்று பகவத் கீதையில் கூறுகின்றார்.
எதற்காக மகாவிஷ்ணு ராம அவதாரத்தில் தோன்றுகின்றார்!
தேவர்களையும் மனிதர்களையும் முனிவர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தி வந்த அகம்பாவம பிடித்த அசுரனாகிய ராவணனை அழிப்பதற்காக மகாவிஷ்ணு ராம அவதாரம்*
எடுக்கின்றார்.
ராவணனை. அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக்கொடுக்க ராமபிரான் அவதரித்த
ஒரு தினம் தான் ராம நவமி
எனநாம் அனைவரும் கொண்டாடுகின்றோம்*
தெய்வ தரிசனம் என்பது தெய்வ நம்முடைய மனதை ஆத்மார்த்தமாக தெய்வத்திடம் சமர்ப்பணம் செய்வது என்பதாகும் .
அப்படிப்பட்ட தெய்வமே இப்பூமியிலே ஸ்ரீ ராமனாக அவதரித்து தினமான பங்குனித் திங்கள் வளர்பிறை நவமியன்று
ஸ்ரீராம நவமி என கொண்டாடும் அந்த சுபதினத்தில் ஸ்ரீராமனின் கதைகளை
கேட்டும் ,மகிழ்ந்தும், நாராயணன் கோவிலுக்கு சென்று வழிபட்டு புண்ணியத்தை அடைவோமே*
Copyrighs at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக