புதன், 6 மார்ச், 2019

இனிது இனிது வாழ்க்கை இனிது*part-3


இனிதாக வாழ்வதற்கான நல்வழிகள்

இல் வாழ்க்கை *இனிதாக* இளமைக் காலம் சிறப்பாக வாழ்வதற்கான வழிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் ..


இளமைக் காலத்தில் திருமணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஒரு ஆண்மகனும் பெண் மகளும் அறிந்துகொள்ள வேண்டிய 5 நெறிமுறைகளில் பற்றி

முதலில் தெரிந்து கொள்ளலாம்..


1-பெரியவர்களை மதித்து போற்றி நடக்கணும் *

2-தெய்வத்தின் மீது பக்தி கொண்டு வணங்கனும் *

3-விருந்தினர்கள் வந்தால் இன்முகத்தோடு வரவேற்கனும்

4- சுற்றத்தாருக்கு உதவும் குணம் கண்டிப்பாக வேண்டும் *

5-தம்மையும் கொஞ்சம் கவனிச்சுக்க வேணும் *

இந்த பண்பாடுகளை அறிந்து நடந்து கொண்டால் இல்வாழ்க்கை இனிதாக இளமை காலம் சிறப்பாக இருக்கும்.
என்றும் இளமையோடு இருக்க அவ்வை பாட்டி கொஞ்சம் நினைவு படுத்தலாம் ..

தன்னலம் பாராது நீண்ட நாட்களுக்கு உயிர் வாழக்கூடிய  நெல்லிக்கனியை தன் ஆருயிர் நண்பன் ஆகிய அதிகமானுக்கு கொடுத்த அவ்வைப்பாட்டி* போல பிறருக்காக வாழும் நல்ல குணம் இருந்தாலே என்றும் இளமையோடு நன்றாக வாழலாம்.

அன்பும் அறனும் -உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது *
என வள்ளுவர் சொன்ன சொல்லை மறந்து போகாதீங்க..இளமை காலத்தில் இவ்வளவு கத்துக்க வேண்டியது இருக்கா !என
மலைத்தும் போகாதீங்க .

இனிது இனிது வாழ்க்கை
இனிதன்றோ part-2🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/06/part-2.html

என்றும் இளமையாக இருப்பதற்கு சிறந்த வழி ஒன்று இருக்குதுங்க..
இயற்கை உணவுகள் -நமக்காக எடுத்துக்கொள்வோம் அளவாக
யோகா பயிற்சி -ஒரு ஒரு தினமாக பேணி காப்போம் நம் உடல்வாகை
மஞ்சள் பூசி -முகம்
அழகாக  பூச்சூடி
பொட்டிட்டு - அழகாக
பட்டாடை உடுத்தி பண்பாக பொறுமையின் இலக்கணம்

நாமாக -இளமை போற்றிட வாழ்வோம் சிறப்பாக*


வாழ்க்கையின் ரகசியத்தை புரிந்து கொண்டு பெரியோர்களின் சொற்படி வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைவோம்.

Copyrighs at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக