குழந்தைகள் வளர்க்கும் முறை
குழந்தைகளை பெற்றோர்கள் வளர்க்கும் முறை பற்றி காண்பதற்கு முன் , பிறந்த மழலை முதன்முதலில் தன் தாயிடம் பேசும் மொழி பற்றிய சிறு கவிதை..
புதிய ஜனனம் சூரியோதயம் பிறந்தது - விடியல் பிறந்தது மலர்மலர்ந்ததோ,, புதிதாய் எனை காண , குரல்கள் சுற்றிலும் சூழ , புதிதாக ஜனனம் எடுத்தேனோ! கீச்சென்ற என் குரல் பூமிதனில் ஒலிக்கையிலே - உலகம் எனக்காகவே இப்போதுதான் பிறந்ததோ!
என் வரவை எதிர்பார்த்து அனைவரும் ஆனந்தமாய் வரவேற்க -யான் என்ன தவம் செய்தேனோ !குதூகலம் என்னுள் பொங்கிடவே பிஞ்சு கைகள் கால்களும் சிலம்பாட - கீச்சென்று நானோ குரல் எழுப்ப , அணைத்த கைகள் என் தாயின் கைகள் அன்றோ! இதமான சூடு , இன்பமான அரவணைப்புக்குள் நான் சிக்குண்டேன் சிக்குண்டேன் என் தாயே -என்ன தவம் செய்தேனோ!
உன் வயிற்றில் மழலை என உதித்ததற்கு நன்றி சொன்னேன் இறைவனுக்கு காலமெல்லாம்.. இந்த அன்பும் அரவணைப்பும் என்னுள் என்றென்றும் வேண்டும் என் தாயே - என்னுள் நீயும் உன்னுள் நானும் என இனிதே கலந்துவிட்டேன் என் தாயே!
என்னையே அறியாத வருடுகின்றேன் என் தாயின் கன்னத்திலே ..இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ!
புதிதாக ஜனனம் எடுத்த குழந்தையின் மனநிலை இப்படித்தான் இருக்குமோ- இதே மன நிலை ஒரு தாயின் மனமும் , தந்தையின் மனமும் அளவிட முடியாத ஆனந்தம் காணும் என்பது திண்ணம்.
பலவித கனவுகளோடு ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோர், குழந்தையை வளர்ப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும்.
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக நிச்சயம் இருக்க வேண்டும்.' ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பது பழமொழி. அந்த ஐந்து வயது என்பது பெற்றோர்களின் அரவணைப்பில் குழந்தைகள் இருக்கக்கூடிய பருவகாலம்.
அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் அறிவுரைகள் எதிர்காலத்தில் ஒரு நல்ல வழிகாட்டுதலாக குழந்தைகளுக்கு அமையும்.
அதற்கான வழிமுறைகள்...
1- குழந்தைகளுக்கு புன்னகையை சொல்லிக்கொடுங்கள் .
2 - காலை வணக்கத்தை சொல்லிக்கொடுங்கள்.
3 - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சொல்லக்கூடிய குலதெய்வ ஸ்லோகம்....
ஓம் கணபதியே நமஹ, ஓம் குலதேவதாயே நமஹா
ஓம் அதிர்ஷ்ட தேவதாயே நமஹா, ஓம் இஷ்ட தேவதாய நமஹா '
இந்த தினசரி சொல்லக்கூடிய குலதெய்வ ஸ்லோகம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க சொல்லிக்கொடுக்க , தெய்வத்தின் ஆசி கூடிக்கொண்டே போகும். இந்த ஸ்லோகம் தினமும் வழக்கத்திற்கு வந்தால், குழந்தைகள் அறிவில் படிப்பில் , விளையாட்டில் பழக்கவழக்கத்தில் மேலோங்கி இருப்பார்கள். தெய்வத்தின் அனைத்து ஆசிகளும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
4 - தானம் செய்வதை சொல்லிக் கொடுங்கள் .
5 - மரியாதை கொடுத்தல் பற்றி சொல்லிக் கொடுங்கள் .
6 - தினமும் இதிகாசங்கள் ஒழுக்கநெறிகதைகள் என, தினமும் ஒரு கதை கேட்கும் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.
7 - முக்கியமாக தைரியத்தை சொல்லிக் கொடுங்கள்.
8 - ஆயிரம் வேலை இருப்பினும் , குழந்தைகளை வாரம் ஒருமுறையேனும் வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
குழந்தைகளிடம் நிறைய கேள்வி கேளுங்கள். அதற்கான பதிலை பெறுவதில் ஆர்வம் காட்டுங்கள்.
9 - குழந்தைகளுக்கு பிடித்தமான கலையை கற்று கொடுத்து உற்சாகம் படுத்துங்கள்.
10 - அரைமணிநேரம் குழந்தைகளோடு குழந்தையாக உறவாடி மகிழுங்கள்.
எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அறிவாற்றலின் மேம்பட்டு அறநெறியில் பண்பட்டு , கலைகளிலே சீர்பெற்று, புகழேணியின் உச்சியில் உலகமே போற்றக்கூடிய குழந்தைகளாக வருவார்கள் .அதைப் பார்த்து பெருமையோடு மகிழக்கூடிய தருணம் கைக்கெட்டும் தொலைவிலே.
நன்றி🙏 பாலாக்க்ஷிதா🌹