வியாழன், 12 ஆகஸ்ட், 2021

குடும்பம் எனும் நந்தவனத்தில் part-3


குடும்பம் எனும் நந்தவனத்தில் part 3



மகாலஷ்மியின் தெய்வீக முத்திரை 

என்னுடைய குடும்பம் அழகான நந்தவனம். பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை .அம்மா, அப்பா, தங்கை, அண்ணன் என்னுடைய சொந்தங்கள்.

வேலைக்கு செல்கின்றேன் .தினமும் காலை போனால் ,மாலை வரை வேலை. அலுத்து வருகின்றேன். வேலை சுமை.

வீட்டில் வந்தால் அம்மா எனக்கு அன்போடு தான் காப்பி கொண்டுவந்து கொடுக்கின்றார்.
தங்கை ஆசையோடு ஓடி வந்து பக்கத்தில் அமர்கின்றாள்.
எனக்காக அப்பா வேகமாக சென்று காற்று விசிறியை தட்டுகிறார்.

இருந்தாலும் எனக்கு மன அமைதி இல்லை .சந்தோசம் இல்லை. எதிர்பார்ப்பு.. என்னிடத்தில் தேவை என்பதற்காக நம்மிடத்தில் அன்பு வைக்கின்றார்கள்.

அடுத்து ஏதாவது கேட்பதற்காக   இந்த அன்போ! என என் மனம் சொல்கின்றது .வாழ்க்கை வெறுத்துப் போகின்றது. நிம்மதி இல்லை .

இது என் மகள் வீட்டிற்கு அழைத்து வந்த தோழியின் புலம்பல் ..மேலும் அவளுடைய பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது...

நான் நினைப்பது தவறு தான். எனக்கு தெரிகின்றது. இருந்தாலும் குடும்ப சுமை ...என்னை மீறிய வெறுப்பு மனவலி .

திருமணத்தை நினைத்தால் அதைவிட பயம். இப்படித்தானே வாழ்க்கை இருக்கும் .அங்கு சென்றாலும் மாமியார் மாமனார் நாத்தனார் அவர்களுக்கான காலமெல்லாம் உழைத்து உழைத்து.. என்ன வாழ்க்கை இது ! அலுத்துக் கொள்கின்றாள்.

இதையெல்லாம் நினைத்தால் திருமணமே  வேண்டாம் என தோன்றுகின்றது. விரக்தியோடு சிரிக்கின்றாள் அந்த இளம் தளிர்.

நடுத்தர குடும்பம் .சிறுவயதிலிருந்து வாழ்வில் கஷ்டங்கள் நிறைய பார்த்து எதிர்காலத்தை நினைத்து பயப்படுகின்றாள்.

இது பெண்களுக்கு மட்டும் நடக்கக் கூடிய விஷயம் அல்ல... ஒரு இளைஞனுக்கும் மன ரீதியாக ஏற்படக் கூடிய விஷயம் .  இதற்கான மன தெளிவு பெறுவதற்கான பதிலை அவள் என்னிடம் எதிர்பார்க்கின்றாள்.

ஒரே ஒரு நிமிடம் அவளிடம் பேசினேன். அவளிடம் நான் பேசிய பதிவுகள் அவளுக்கு மட்டுமல்ல. இந்த சூழலில் உள்ள அனைவருக்கும் பகிர்கின்றேன்.

" காலை முதல் இரவு வரை வேலை சுமை என்று மனதில் பாரத்தை சுமந்து ஓடுகின்ற உன் உடலுக்கு ஒரு நிமிடம் ஓய்வு கொடு ..

அந்த ஒரு நிமிடம் உன்னை சுற்றி யாரும் கிடையாது. மூச்சை நன்றாக இழுத்து வெளியேற்றும் பொழுது உன்னுடைய மனதிற்கு ஒரு இதம்.. ஒரு நிம்மதி.. ஒரு ஆனந்தம் .

மகாலட்சுமி தாமரை முத்திரை

இந்த சமயத்தில் கைகளை மார்புக்கு மேலே குவித்து தாமரை மலர் இருப்பது போன்றும் நன்றாக அகல விரித்துகொள்.

எங்கிருந்து வந்தது இந்த ஆனந்தம் சந்தோஷம் ...உமை மீறிய ஒரு புன்னகை பிறக்கும் .அந்த சமயத்தில் உன்னுடைய உள்மனம் இவ்வாறு சொல்கின்றது...

" நான் யார்! இந்த வீட்டில் குடும்ப தலைவி. தெய்வத்திற்கு அடுத்த பதவி எனக்கு  என்பது எவ்வளவு மிகப்பெரிய பெருமிதம். சில நேரங்களில் இன்பம் தாங்கும் இதயம் துன்பத்தையும் தாங்க தானே வேண்டும். இதிலும் ஒரு சுகம் உண்டு ...

அதோ... எனக்காக ஒரு அழகிய ஏணி . மெல்லமெல்ல முயற்சி செய்து ஒரு நாள் ஏணிபடியின்  உச்சிதனை தொட்டு விடுவேன். அதுவரை  மனமே எனக்கு உற்சாகத்தை கொடு "

என்பதை சொல்லிவிட்டு அடுத்த ஒரு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு உன் வேலையை தொடங்கு .

நிச்சயம் உன் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும்.

ஆனந்தம் இருக்கும்.புன்னகை இருக்கும். குடும்ப சூழல் இதமாக இருக்கும். குடும்பத்தில் பாசம் பற்று அனைத்தும் உண்டாகி  ,திருமணம் இனிதாக நடந்து குழந்தை செல்வங்களோடு  வாழ்வாய். எதிர்காலத்தில் புகழ்  ஏணியில் உச்சிதனில்  நின்று புன்னகையோடு பார்க்கும்போது...

அனைவரும் பார்த்து பெருமையோடு பெருமிதத்தோடு கைகளை தட்டுவார்கள் .அதில் நானும் ஒருத்தியாக நின்று கைகளை மகிழ்ச்சியோடு தட்டுவேன் "



நான் சொன்னதை ஐந்து வருடமாக கடைபிடிக்கின்றாள்.

இன்று குடும்ப தலைவியாக ... ஒரு குழந்தைக்கு தாயாக ...நல்ல அந்தஸ்து பெற்ற   பெண்ணாக ..  தன்னுடைய பதவியில் பெரிய போஸ்டிங் இருக்கும் பெண்மணியாக திகழ்கின்றாள்.

இதற்கு வயது கிடையாது. யார் வேண்டுமானாலும் மகாலட்சுமியின் தெய்வீக முத்திரையான இந்தப் பயிற்சியை செய்யலாம் . நீங்கள் அனைவரும் தினமும் ஒருமுறை என தினந்தோறும் செய்து பாருங்கள். நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

பெண் ஆண் இருவரும் குடும்பத்தின் இரு கண்கள் .ஒரு குடும்பத் தலைவனும் தலைவியும் உற்சாகமாய் இருந்தால் மட்டுமே, குடும்பத்தை முன்னேற்றத்துடன் கொண்டுவந்து ஆலம் விழுதுகள் போல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை கருத்தில் கொண்டு இந்த பயிற்சியை தினந்தோறும் செய்து வாழ்க்கையில் வெற்றி காணுங்கள்

இதில் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டால் எழுதிய எழுத்திற்கு நிறைவு காண்பேன்.🙏


Copy rights at Balakshitha

குடும்பம் எனும் நந்தவனத்தில்..

part -1


கணவன் மனைவி அன்பு என்பது...🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2021/08/part-1.html


குடும்பம் எனும் நந்தவனத்தில் part -2 



ஒரு பெண்ணுக்கு பெற்றோர் செய்யக்கூடிய முதல் கடமை 🌹🍀🌹👇👇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக