சுப நிகழ்ச்சிகள் முடிந்ததும் மறவாது செய்யக்கூடிய சம்பிரதாயம்
திருமணம் அழகான பந்தம். காலமெல்லாம் தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து மனமொத்து வாழ்ந்து....
பேறு பல பெற்று வாழ்க்கையில் தாம்பத்தியம் எனும் அழகான பந்தத்தை நிறைவுசெய்து , வாழ்வின் நிறைவை காணக்கூடிய பந்தம்.
அப்படி மனமொத்து வாழ்வதற்கு பெரியவர்கள் மறவாது செய்யக்கூடியது ஆரத்தி சுற்றுதல்.
ஆரத்தி சுற்றுதலில் இருவகை உண்டு.
1- ஆலம் கரைத்து கற்பூரத்தில் ஆரத்தி சுற்றுதல்
2 - பூசணிக்காய் திருஷ்டி சுற்றுதல்
இந்த இரண்டு திருஷ்டி சுற்றுதல்
முறைகளை, முறையோடு பின்பற்றினோம் என்றால்....
திருமணத்திற்கு பிறகு காலம் முழுவதும் தம்பதியர் ஒற்றுமை நிலைபெற்று மனமொத்த தம்பதியராய் வாழ்வர் .
திருமணம் மட்டுமல்லாது அனைத்து சுபநிகழ்ச்சிகள் செய்தாலும் அவசியம் இரண்டுவிதமான ஆரத்தி சுற்றுதல் கண்டிப்பாக செய்யவும்.
1- ஆலம் சுற்றுதல்
திருமண பந்தத்தில் கால் பதித்து -மழலையின் எச்சில் பட்டு எமை மறந்து தாய்மையின் சுவைதனிலே கனிந்து உருகி, அனுபவத்தில் -ஆட்கொண்டு பழமாகி ,முதுமையின் படியேறி மலைத்து நின்று, தெய்வத்தின் அம்சமாக எமை நினைத்து -மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன் .
இதுதான் வயதில் மூத்த பெண்மணிகளின் சிறப்பு.
அவர்கள் புதுமண தம்பதிகளுக்கு ஆனந்தத்தோடு ஆலம் கரைத்து ஆரத்தி சுற்ற வேண்டும்.
ஒரு அகன்ற தவளை சட்டியில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் பொடி சிறிது சுண்ணாம்பு சேர்த்து கரைத்து...
நீர் சிவப்பாக மாறியதும் -அதன் மேலே வெற்றிலை வைத்து சூடம் ஏற்றி கண் திருஷ்டி எல்லாம் போக வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஆலம் சுற்றவேண்டும்.
மணமக்கள் திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வரும் பொழுது ஆலம் கரைத்து ஆரத்தி சுற்றும் இந்த முறையை கையாள வேண்டும்
2 - பூசணிக்காய் திருஷ்டி சுற்றுதல்
கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது என்பது முழுக்க முழுக்க உண்மை.
திருமணம் , மஞ்சள் நீர், வீடு கிரகப்பிரவேசம் , அறுபதாம் திருமணம் சஷ்டி பூர்த்தி விழா என எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் செய்தாலும் நிகழ்ச்சிகள் முடிந்ததும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சேர்த்து உட்கார வைத்து இந்த பூசணிக்காயை திருஷ்டியாக சுற்றி தெருவிலே பூசணிக்காயை உடைக்க வேண்டும் .
பூசணிக்காய் திருஷ்டி கழித்தல் என்பது , கூட்டு குடும்பம் என்று நிம்மதியோடு மகிழ்ச்சியோடு ஒற்றுமையாக இருப்பதற்கு இந்த சம்பிரதாயம் ஒரு மிகச்சிறந்த வழிமுறை.
குடும்பத்தில் ஒற்றுமை என்றும் நிலையாக இருப்பதற்கு இந்த பூசணிக்காய் திருஷ்டி சுற்றுவது என்பது அவசியம்.
பூசணிக்காயின் மேல்பகுதியில் கட் செய்து எடுத்து அதில் குங்குமத்தை நிறைத்து, சில்லரை காசுகள் வைத்து பூசணியின் மேற்பகுதியை மூடிவிடவும்.
அதன்பின் கற்பூரத்தை வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் உட்கார வைத்து ...
வலது புறம் மூன்று, இடது புறம் மூன்று சுத்துக்கள் சுற்ற வேண்டும்.
குடும்பத்தில் உள்ள திருஷ்டிகள் அனைத்தும் போகவேண்டும் - என்று குலதெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டு ..
சுற்றி வெளியில் எடுத்துச் சென்று பூசணிக்காயை உடைக்கவும்.
பூசணிக்காய் உடைந்து சிதறுவது போல குடும்பத்தில் உள்ள திருஷ்டிகள் அனைத்தும் சிதறும் என்பது ஐதீகம்.
இந்த இரண்டு திருஷ்டி சுற்றுதல் மூலம், நம்முடைய கண் திருஷ்டிகள் விலகி ..
சுபநிகழ்ச்சிகள் மெருகேறும். உருவேறும்.
சந்ததிகள் தழைத்தோங்கும் .
செல்வங்கள் செழித்தோங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி என்றும் நிலைத்து நிற்கும்..
என்பதால் இந்த இரண்டு வகையான திருஷ்டி சுற்றுதல் முறைகளையும் திருமணம் முடிந்ததும் முதல் காரியமாக செய்து எதிர்காலம் சிறப்பாக வாழ்வதற்கு வழி வகுப்போம்.
திருமணத்தின் போது மிக முக்கியமாக செய்யக்கூடிய முகூர்த்தக்கால் நடும் விழாவின் சிறப்புகள் விளக்கங்கள் 🙏🌹👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha