சனி, 9 ஏப்ரல், 2022

 

ஓம் ஓம் நமச்சிவாய என்று சொல்கின்ற மந்திரத்தில் சிறப்பு..

புழு  மாறி -வண்ணத்துப் பூச்சியாகி-பூச்சி உருமாறி அழகிய  மான் ஆகி - மறைந்து மனிதப்பிறவி ஆகி சிரித்த மழலை தனை  நான் கண்டேன் 'ஓம் நமச்சிவாய 'எனும் நாமம் நாம் உரைக்க - உயர்வாகிய நிலைதனையே.

அதுபோல நம் சிந்தையில் 
'ஓம் நமச்சிவாய ' எனும் மந்திரத்தின் ஒலி உணர்கையில்.. மனம் பண்பட்டு படிப்படியாக உயர்நிலை நாம் பெற்று பிறவா நிலை பெற்று- என்றென்றும் தெய்வத்தோடு கலந்த உன்னத நிலை பெற்று  மனித பிறவியின் நிறை காண்போம். அதற்கு இந்த பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.

ஓம் சிவாய நமஹ எனும் திருநாமத்தை 108 முறை சொல்வது சிறப்பு .

திருநாமத்தை சொல்லும் போது முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி அமர்ந்து வடக்கு நோக்கி அமர்ந்து சிவபெருமானை மனதில் நிறுத்தி சொல்வது சிறப்பு.

இதனால் ஏற்படும் தெய்வீக பலன் தம்பதியரின் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும் .ஒற்றுமை பலப்படும் .மனச்சுமைகள் குறையும். வாழ்வினில் என்று தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.

 சிவ பார்வதி சொரூபம் சிந்தனையில் தெவிட்டாத பேரின்பம் -சிவசக்தி நடனம் சர்வ உலகமும் சர்வேஸ்வரன் இடத்தில் சங்கமம்- சந்தன வாசம் சகலமும் மறக்கவைக்கும் மனோபாவம்- நெய் உருகி ஒளி கொடுக்கும் சுடரொளியில்  மூச்சை அடக்கி சிவனிடத்தில் சித்தம் புகுந்து ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய எனும் அவன் நாமம் பாடி சிவன் அருளைப் பெறுவோம்.

சொந்தமாக வீடு கட்டும் யோகம் பெறுவதற்கான தெய்வீக வழிபாடுகள்


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக