சனி, 9 ஏப்ரல், 2022

 

சித்தம் சிவமானால் சிந்தை தெளிவாகி கவனம் நிலையாகி மேகம் கலைந்தாகி , செயல்கள் நிலையாகி நிலவின் ஒளி தனை நாம் பெறலாம்.

குரங்கிலிருந்து வந்தவன்தான் மனிதன்.  மனம் ஒரு குரங்கு... எனும் வாக்கியம்  அறிந்தோம் , வளர்ந்தோம் எவ்வளவு பெரிய உண்மை .

மனம் என்னும் குரங்கு அடிக்கடி தாவுகையில் கவனச் சிதறல்கள்‌ வருகிறது  . அதற்கான காரணத்தை முதலில் உள் உணர்ந்தால் தெளிவதற்கு ஒரு வழி பிறக்கும்.

1- குடும்ப பொறுப்பின் சுமை அதிகமானால்..

2- வேலை செய்யும் இடங்களில் வேலைப்பளு அதிகமானால்

3-  உடல்நிலை குறைபாடு ஓடிவந்துதொற்றி கொண்டால்

4-  சுற்றியிருக்கும்  உறவுகள் சொந்தத்தை  விட்டு சற்றே விலகி போனால்.

5- கடன்  சுமைகள் அனைத்தும் முதுகில்  உல்லாச பயணம் செய்தால்..
கவன சிதறல்கள் ஏற்படுவது இயற்கை

இவை அனைத்தும் இல்லாது நிம்மதியான வாழ்க்கை பெற  வேண்டும்.  என் செய்வது !

தெய்வத்தின் கருதனில் நினைவகமுடல் (நினைவு+அகம்+உடல்) அனைத்தும் தஞ்சம் புகுந்து, அதில் எழும் நாதத்தில்  இனிது காண்க


 காணும் யோகாசனம் பயிற்சி மேற்கொண்டால் இது சாதகமாகும்.

வாசல் (மனம்) அழகு பெற புள்ளி வைத்தால் மட்டும் போதாது.  அழகிய கோலம் போடுவதும் சிறப்பு அன்றோ!

கவன சிதறல்கள் தடுப்பதற்கு என் செய்வது!  என்பதற்கு அடியேன் விளக்கம் இதுவே.

1- தியாகம் என்ற பெயரில் தாமே குடும்ப சுமை சுமப்பதை விடுத்து அனைவருக்கும் பொறுப்புதனை  பகிர்க.

2-  உங்களுக்கு பிடித்தமான திறமைக்கேற்ற வேலை தனை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெற்று மகிழ்ச்சி காண்க .

3- ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் நிலை சீராக வைத்து கொள்வதில் கவனம் செலுத்துக.

4-  அளவு கடந்த பாசம் உள்ளுக்குள் வைத்து அளவோடு பழகி சொந்தத்தின் இனிது கண்டு அதில் முழுமை பெறுக.

5- கடன் வாங்குவதை விடுத்து  இருப்பு நிலையை அறிந்து உழைப்பின் ஊதியம்படி வாழ்வுதனை மேற்கோள்க.

  இவை அனைத்தும் உள்வாங்கி  கவன சிதறல்களுக்கு  விடைகொடுத்து இருக்கும் நிலைதனை மகிழ்வோடு ஏற்று,  சிந்தைக்கு தெளிவு கொடுத்து.

வாழ்க்கை என்னும் பயணத்தில் இனிதே நடந்து,  ஆங்காங்கே இறைவனோடு அளவலாவி   வாழ்கின்ற வாழ்வுதனில்  உற்சாகம் கொண்டால் இனிது இனிது வாழ்க்கை என்றும்  இனிதன்றோ!


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக