வியாழன், 27 ஜூன், 2019

இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ part -4

திருமணம்

பிறவியில் சிறந்தது மனிதபிறவி *மனிதப் பிறவியில் பிறந்தவர்கள் நான்கு நெறிகளை கடைபிடிக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன..
கிரஹஸ்தம் -பிரம்மச்சரியம் வானப்பிரஸ்தம் -சந்நியாசம்
இதில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் படிதான் கிரஹஸ்தம்
அதாவது இல்லறம்.


ஒரு ஆண் மகனும் ஒரு பெண் மகளும் இல்லறத்தில் இணைகின்ற
 ஒரு பந்தம்தான் திருமணம் .
அக்னி சாட்சியாக அருந்ததி
பார்த்து- சப்தரிஷிகள்
வேத பிராமணர்கள்- உற்றார் உறவினர் -நண்பர்கள் சாட்சியாக வைத்து  மேளதாளத்தோடு மணமகன் -மணமகள் கழுத்தில் கட்டப்படும் புனிதமான தாலியுடன் கூடிய மஞ்சள் கயிற்றை தான் மாங்கல்யம் என்கின்றோம் ‌.இதன் பிறகே கணவன் மனைவி- என்ற அந்தஸ்தை பெற்று தம்பதிகளாக மாறுகின்றனர் .

இனிது இனிது வாழ்க்கை
இனிதன்றோ part -3🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_6.html

இனிது இனிது வாழ்க்கை
 இனிது அன்றோ part- 5🍀🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/part-4.html

மனைவி என்பவள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களை விட சிறந்தவள் ஆவாள்- என்று காயத்ரி மந்திரம் கூறுகின்றது. அவளுடைய கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் 9 இழைகளை கொண்டதாக அமைகின்றது .
அந்த ஒவ்வொரு இழையுமே   நமக்கு ஒரு கருத்தை சொல்கின்றது.


இழை (1) வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் .
(2 )மேன்மை உடையவளாய் திகழவேண்டும்.
(3) ஆற்றல் மிக்கவளாய் சிறக்க வேண்டும்.
(4) ‌ தூய்மை கொண்டவளாய் இருக்க வேண்டும்.
(5) ‌ தெய்வீக பக்தியோடு
(6) ‌ உத்தம குணங்களோடு
 (7) ‌விவேகத்தோடு
(8) ‌தன்னடக்கத்தோடு
 (9) ‌பொறுமையோடும் -ஒரு பெண்
திகழ வேண்டும் என்பதே- மாங்கல்யத்தின் இலக்கணம் ஆகும். அந்த மாங்கல்யமே மங்களத்தின் அடையாளமாக திகழ்கின்றது.

திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

திருமணம் நடைபெறும் பொழுது
வேத பிராமணர்கள் சொல்கின்ற மிக சிறப்பான ஸ்லோகம் இது..


மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுநா
 கண்டே பத்நாமி ஸுபகே
சஞ்சீவ சரதம் சதம்.

'நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி- உன் கழுத்தில் தாலியை முடிச்சு போடுகின்றேன்-சௌபாக்யவதியே * நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக என்னுடன் வாழ்வாயாக -என்று ஆண்டவன் அருளட்டும்' என்று கூறியவாறு மணமகளின் கழுத்தில் தாலியை கட்டுகின்றான் மணமகன்.



 அக்னிசாட்சியாக இப்படி மந்திரம சொல்லிமுறைப்படி மணமகன் -மண மகளுக்கு கட்டகின்ற  புனிதமான  மாங்கல்யம் நிலைத்து இருக்க வேண்டும்
என்றால் தெய்வத்தின் அருளானது நிறைந்து இருக்க வேண்டும்.தெய்வத்தின்
அனுகிரகம் கிடைத்தால்தான் -திருமணம்தங்கு தடையின்றி சிறப்பாகநடக்கும்.
அதனால்தான் வேத பிராமணர்கள் திருமணத்தின் போது கலச பூஜை -நவகிரக பூஜை நடத்துவர். கடவுளுடைய மனதை குளிர வைக்கக் கூடிய மகிழ்விக்க கூடிய சமஸ்கிருதசொற்கள் மந்திரத்தில் உண்டு .
ஹோம குண்டத்தை வளர்த்து நெய்வார்த்து நவ கிரக மந்திரம் வேத மந்திரங்கள் சொல்ல சொல்ல -அவை காற்றிலே கலந்து வானத்தை அடைந்து
வானத்தில் உள்ள தெய்வ சக்தியானது ஓமகுண்டத்திலே மீண்டும்
எழுந்து மணமக்களை வாழ்த்துகின்றது  என்பது ஒரு ஐதீகம் .

அப்படிப்பட்ட ஐதிகம் நிறைந்த திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர்
புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை
அடையவேண்டும்.

திருமணம் விரைவில் கைகூட
சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇



திருமணம் விரைவில் கை கூட..

பச்சை நிறத்து பைங்களி போற்றி இச்சைக் கிசைந்த இன்பே போற்றி குவளைக் கண்மலர் கொம்பே போற்றி -தவள வெண் நீற்றோன் தலைவி போற்றி -பவள வாய்மேற் பசுங்கொடி போற்றி *

என்ற மீனாட்சியின் 108 போற்றி பாடலை வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி -வடக்கு முகமாக மணையில் அமர்ந்து பாடி வர திருமணம் விரைவில் கைகூடும். கன்னிப்பெண்களுக்கு நல்ல மாங்கல்யம் அமையும். வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.

Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக