சனி, 23 நவம்பர், 2019

குல தெய்வ வழிபாடு part -1


குலதெய்வ வழிபாடு திருமணம்




என்னுடைய வழி வந்த சொந்த பந்தங்கள் முன்னோர்கள் கருத்து தனை உள்வாங்கி எழுதுகின்ற எழுத்து என்றும் புனிதமே .

எமை எழுத வைத்த என் குலதெய்வம் பச்சை வாழை அம்மனுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.

வழிவழியாக நம்முடைய முன்னோர் காலத்தில் இருந்தே-

குலதெய்வத்தை வழிபடுவது என்பது வழக்கமாக நடந்து கொண்டு வருகின்ற ஒரு சம்பிரதாயம்்.

நம்முடைய குலதெய்வத்தைப் பற்றிநாம் வழிபடுவது எதற்காக என்பதன் முழு விளக்கத்தையும் நாம் காண்போம்..

ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் நம்மை காப்பாற்றும் என்பது ஏட்டில் எழுத்தில் எழுதப்பட்ட உண்மை . 

ஒரு மனிதனுக்கு ஏழு பிறப்பு உண்டு 

பிறக்கும் சன்னதிக்கும் அதே ஏழு பிறப்பு உண்டு.

 7 சந்ததிகள் கொண்டது ஒரு வம்சம் இந்த வம்சம் நலமாக வளமாக வாழ்ந்து முடிவடைய வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாடு.

 ஏழு பிறவி- ஏழு சந்ததியோடு பெருக்கினால் 49 ஜென்ம ஆண்டுகள். 

4+9 =13 இந்த கூட்டுத்தொகை கணக்கில் கொண்டு- ஒரு மனிதன் இறந்தால் உடலை விட்டு வெளியேறும் ஆத்மா -அமைதி பெற்று சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் -ஒரு மனிதன் இறந்தால் பதிமூன்றாம் நாள் கர்ம காரியங்கள் செய்கின்றோம். 

நம் முன்னோர்கள் ஆத்மா நம்மை எப்போதும் நிறைவோடு வாழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த குலதெய்வ வழிபாடு. 

வம்சம் வழியாக தொன்றுதொட்டு வந்த குலதெய்வத்தை நாம் வணங்கி குலதெய்வத்தை குளிர மகிழ வைக்க வேண்டும் என்பதால்தான்..

 முன்னோர்கள் வழி வழியாக வழிபட்டு வந்த குலதெய்வத்தை நாம் வணங்கி  

நம் முன்னோர்களின்ஆசியை மட்டுமின்றி  குலதெய்வத்தின் அருளையும் பெறுவதற்காக குலதெய்வ வழிபாடு செய்கின்றோம். 

தெய்வ வழிபாடு என்பது.. 


நம்முடையகஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என வேண்டுவது தெய்வ வழிபாடு . 

நம்முடைய வினைப்பயன்கள் அனைத்தும் விலக வேண்டும் என்பது தெய்வ வழிபாடு .

 நமக்கு செல்வங்கள் அனைத்தும் பெற்று வாழ்க்கையில் சிறப்போடு வாழ வேண்டும் என்பது தெய்வ வழிபாடு. 

தெய்வத்தின்அருளால் கிடைத்த இவை அனைத்தும் நிலைக்க வேண்டும் -வாழ்க்கையில் சிறப்பு அடைய வேண்டும் என்பதுதான் குலதெய்வ வழிபாடு. நம்முடைய முன்னோர்கள் ஆசி கிடைக்க வேண்டும் என்பது குலதெய்வ வழிபாடு .

 நம்முடைய வம்சம் தழைக்கவேண்டும் என்பது குலதெய்வ வழிபாடு.

 . ஒரு காரியம் ஜெயமாக வேண்டும் என்பது குலதெய்வ வழிபாடு. 

திருமணம் -நம்முடைய வாழ்க்கையிலே நடக்கக் கூடிய ஒரு அற்புதமான பந்தம் . 

நம்முடையவாழ்க்கை துணையோடு காலமெல்லாம் மகிழ்ச்சியோடு மலரக்கூடிய -வாழக் கூடிய அருமையான பந்தம் .

இல் துணையாள்- நல்துணையாளாக நம்முடைய வம்சம் வளர்வதற்கு..

சீர் உடையவளாக -காலமெல்லாம் பெண்கள் குலத்திற்கு பெருமை சேர்ப்பவளாக அமைய வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டி.. ஏற்படுத்துகின்ற ஒரு பந்தம் திருமண பந்தம் . 

வம்ச விருத்தி அடைவதற்கு நம்முடைய குலம் தழைப்பதற்கு -தமிழ் பண்பாடு குறையாது புகழோடு நிலைத்து நிற்பதற்கு- திருமணம் எனும் பந்தம் சிறப்பாக அமைந்தால் தான் வம்சம் விருத்தியாகும் . 


தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற எலுமிச்சை பழ தெய்வ வழிபாடு🙏🌹👇👇



அந்த திருமணம் ஜெயமாக -வம்சம் விருத்தி பெற -நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைப்பதற்கு குலதெய்வ வழிபாடு ஒரு அற்புதமான வழிபாடு.

 அதனால்தான் திருமணம் சுப நிகழ்ச்சிகள் கூடினால் முதல் பத்திரிக்கையை குல தெய்வத்திற்கு வைத்து பொங்கல் வைத்த பிறகு தான் அந்த கல்யாணத்துக்கான காரியங்களை தொடங்குகின்றோம். 

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை நம்முடைய குலதெய்வம் கோவிலில் போடுகின்றோம்.

நம் சொந்த பந்தம் அனைவரையும் அழைத்து -தாய்வீட்டு சீர் அளிக்க குலதெய்வத்தை மனதார வேண்டி தாய்மாமன் மடியில் -


குழந்தையை அமர வைத்து மொட்டை அடித்து காது குத்தி 'இது போன்ற வைபவம் வம்சம் வம்சமாக நம்முடைய குடும்பத்தில் தொடர வேண்டும்' என குலதெய்வத்தை வேண்டி -

சொந்தபந்தங்கள் அனைவருக்கும் வயிறார உணவு படைத்து குலதெய்வ காணிக்கையை செலுத்தி குலதெய்வத்தின் மனதை குளிர மகிழ வைக்கின்றோம்.  

நம்முடைய முன்னோர்கள் ஆசி கிடைப்பதற்கு.. நம்முடைய வம்சம் தழைப்பதற்கு .. ஒரு காரியம் ஜெயம் ஆவதற்கு.. 

இந்த மூன்று வேண்டுதலும் நமக்கு கிடைப்பதற்கு -குலதெய்வத்தை வணங்கி குலதெய்வத்தின் மனதை குளிர மகிழ வைத்தால் மட்டுமே- நாம் விரும்பும் அனைத்தும் சாத்தியம் ஆகும் . 

வாழ்க்கை என்றும் சுபமாக .. குல தெய்வத்தின் முகம் காண்கையிலே -நல்ல மனம் அமையும்.


குலதெய்வத்தின் புன்னகையை காண்கையிலே- பண்பு உயரும். இரு கை கூப்பி வணங்குகையிலே தடைகள் அனைத்தும் விலகும். பொங்கல் வைத்து பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும். நல்ல மனதோடு -பண்போடு -உயர்ந்த மனிதனாக வாழ்வதற்கு குலதெய்வ வழிபாடு நிச்சயம் வழி வகுக்கும்.


இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்.


திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

ஆர்டர் செய்தால் புத்தகங்கள் கொரியரில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்

நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2dsu4fde

சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கான யோகம் பெறுவதற்கான பத்து தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசான் kindle app ல் படித்து பயன் பெறவும்🙏🌹👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக