ஞாயிறு, 10 நவம்பர், 2019

மகா அன்னாபிஷேகம் சிவனுக்கு மிக உகந்த தினம்


                                                        மகா அன்னாபிஷேகம்

அன்னை பராசக்ததி  பரமனிடத்திலே 'ஓரறிவு ஜீவனை சிறு பேழைக்குள் மறைத்து வைத்து' திருவிளையாடல் நாடகத்தை நடத்துகையில் -பேழையினுள்  சிற்றெரும்பு  ஒரு அன்ன பருக்கையை ஆனந்தமாய் சுவைத்து எம்மப்பன் பார்வையிலே எதுவுமே தப்பாது என உணர்த்திய நாளே மஹா அன்னாபிஷேகம்.

 சிவன்- பிரம்மனின் செருக்கை ஒடுக்க  ஒரு தலையை கொய்து விட அக்கபாலமோ  சிவனின் திருக்கரங்களை விட்டு அகலாது பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட- அந்தப் பாவத்திலிருந்து நீங்க கபாலத்தில் யார் இடும் அன்னம் நிறைகின்றதோ அன்று கபாலம் கைவிட்டுப் போகும் தோஷமும்  விலகும் என -சிவனோ பல இடம் சென்றும் நிறையாது போக முடியவிலே  காசிக்குச் சென்று அன்னபூரணி அன்னையவள் அன்னமிட  நிறைந்த கபாலமும் தோஷமும் விலகிய அற்புதமான நாளே மஹா அன்னாபிஷேகம் .

இன்றைய புனிதமான தினத்தில் நாம் மற்றவர்களின் வயிறு நிரம்பும்  அளவிற்கு அன்னமளித்தால் - நம்மிடம் உள்ள அனைத்து தோஷமும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து வளமும் பெறலாம் .

சந்திரனின் அழகை முழுதும் நாம் உள்வாங்கி வாழ்க்கையில் ஒளி பெற்று மகிழ்கின்ற  நாள் இன்று ...தட்சனின் சாபத்தால் சந்திரனோ ஒளி இழந்துபோக சிவனை நினைத்து விரதமிருந்து வேண்டி - மிகப் பிரகாசமாக சந்திரன் மீண்டும் ஒளி பெற்று இன்பமான நாளே மஹா அன்னாபிஷேகம்.



மகா அன்னாபிஷேக தரிசனம்

ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சந்திரனின்  ஒளி எழும்பும் வேலையிலே -சிவனுக்கு அன்னாபிஷேகம் .

சந்தனம்- விபூதி -மாப்பொடி- மஞ்சள் இளநீர் -கரும்புச்சாறு -பசும்பால் என முடிவிலே அன்னாபிஷேகத்தில் சிவன் காட்சி தர  பக்தி பரவசத்தில் கண்களும் பனிக்க நிற்கின்ற அற்புதமான நாளே மஹா அன்னாபிஷேகம்.

அன்னம் என்னும் அமுதத்தை  பரப்பிரம்மமாய் காட்சி தரும் சிவன் மேனி முழுவதும் பூசி அளவிலாத காய்கறி பொருட்கள் அலங்கரித்து பரம ஜோதியாய் காட்சி தரும் சிவலிங்கத்திற்கு ஆராதனை காட்டுகின்ற அற்புத நாளே மஹா அன்னாபிஷேகம்.

' ஓம் நமசிவாய ஓம் நமசிவாய' என தரிசிக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் பக்தியோடு கரகோஷம் எழுப்பக்கூடிய பொன்னான நாளே வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா அன்னாபிஷேகம்.

நோய் நொடிகளை -நம்முடைய பாவத்தை -தோஷத்தை- துன்பத்தை துயரத்தை -வறுமையை -நீக்கி இந்த சிவபெருமானின்  மகா அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் பெறுவோம்  மகிழ்வு காண்பார் என்பது திண்ணமே .


யஜூர் -வேதம்- ருத்ரம் -சமகம் என அனைத்து மந்திரங்களும் அந்நேரத்தின்போது  ஒலிக்கையில் நம் அறியாமையை நீங்கி 'அனைவரிடத்திலும் அன்பு கொண்டு தானதர்மங்கள் நிறைய செய்க' என உணர்த்துகின்றன அற்புத நாளே மஹா அன்னாபிஷேகம் .

ஆவுடையார்  மீதுள்ள அன்னம்- கடலில் நீர்வாழ் பிராணிகளுக்கும் மேல்பாகம் சாத்தப்பட்ட அன்னம்- பிரசாதமாக நமக்கும் வழங்குவதே ஐதீகம் .


குழந்தை பாக்கியம் வேண்டுவோர்
இந்த அன்னத்தை புசிக்க குழந்தை பாக்கியம் கிடைக்கும் .நோய்நொடி அகன்று உணவுப்பஞ்சம் இன்றி தோஷங்கள் விலகி வறுமை நீங்கி செல்வம் பெருகி அனைத்து வளமும் பெற்று மகிழ்ச்சியான  வாழலாம்.

அன்னாபிஷேகத்தில் கண்டு தரிசிப்போர் வாழ்க்கையில்..

நல்லதே நடக்கும்- நல்லதே நடக்கும்- நன்மையே பயக்கும் 
அகங்காரம் மறையும்
ஆணவம் தொலையும் 
அகம் மலரும் 
மனம் உவக்கும்
 தானம் பெருகும் 
அன்னதானம் பெருகும் 
கைகள் சிவக்கும்
 பாவம் தொலையும் 
புண்ணியம் கூடும் 
செல்வம் பெருகும் 
சிந்தை தெளியும் 
நற்பயன் விளையும்
 நினைத்தது கைகூடும்
 நீங்காத புகழ் நிறையும்
 உடல் பிணி அகலும்
 உள்ளம் மகிழும் 
வாழ்ந்த பயன் அனைத்தும் 
கிடைத்து முக்தி கிடைக்கும் 
இறைவன் அருள் கிட்டும் 

என்பதால் அனைவரும் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் மகா அன்னாபிஷேகம் கண்டு தரிசித்து பிரசாதம் பெற்று வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக